ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பு மீதான தாக்குதலை வெற்றி - அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு

Go down

கொழும்பு மீதான தாக்குதலை வெற்றி - அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு Empty கொழும்பு மீதான தாக்குதலை வெற்றி - அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு

Post by Admin Mon Feb 23, 2009 3:49 am

`வான்புலிகள்' தற்கொலைப்படையின் விமானங்கள் குண்டு வீச்சு
கொழும்பு மீதான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினோம்
அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு


கொழும்பு மீதான தாக்குதலை வெற்றி - அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு Sri

கொழும்பில் விமான தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவைச் சேர்ந்த `வான் கரும்புலிகள்' என்றும், இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர்.

இறுதிக்கட்டப் போர்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்ச கட்டப் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள், தற்போது முல்லைத் தீவு மாவட்டத்தில் 100 ச.கி.மீட்டர் சுற்றளவுக்குள்தான் இருக்கிறார்கள் என்றும், விரைவில் முல்லைத் தீவு மாவட்டத்தையும் கைப்பற்றி விடுவோம் என்றும் ராணுவம் அறிவித்தது.

மேலும், விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளம் அனைத்தையும் கைப்பற்றி விட்டதாகவும், இனிமேல் அவர்களால் விமான தாக்குதல் நடத்த முடியாது என்றும் ராணுவம் கடந்த மாதம் அறிவித்தது.

அதிர்ச்சி வைத்தியம்

இந்த நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் விடுதலைப்புலிகள் 2 சிறிய விமானங்களில் சென்று கொழும்பு நகரில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் இலங்கை ராணுவமும், அரசாங்கமும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.

இலங்கை விமானப்படை தலைமையகம் மீதும், காட்டுநாயகா விமானப்படை தளம் மீதும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 54 பேர் படுகாயம் அடைந்தனர். விமானப்படை தலைமையகத்தை தாக்க வைத்த குறி தவறி, அதன் எதிரே உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடம் மீது குண்டு விழுந்தது. இதில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

அந்த 2 குட்டி விமானங்களையும் சுட்டு வீழ்த்தி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

தற்கொலைப்படை `வான் கரும்புலிகள்'

ஆனால் அந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும், மரணத்தை தழுவப்போகிறோம் என்று தெரிந்தே, தற்கொலைப்படையினர் சென்று தாக்கியதாகவும், அந்த விமானங்கள் திரும்பி வருவதற்காக அனுப்படவில்லை என்றும், குண்டுகளுடன் விழுந்து வெடிக்கவே அனுப்பப்பட்டன என்றும் விடுதலைப்புலிகளின் இணையதளம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவித்து இருப்பதாவது:-

``இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வான்படை தலைமையகம் மீதும், காட்டு நாயகாவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் (தற்கொலைப்படை பிரிவினர்) வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தேசிய விருது

வான்படை தலைமையகமும், காட்டுநாயகா வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்கள் ஆகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக் கணக்கில் கொல்லப்படுவதற்கு இந்த தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான்புலிகளின் கரும்புலிகளான கர்னல் ரூபன், லெப்டினண்ட் கர்னல் சிரித்திரன் ஆகியோரின் திறமையான வீரச் செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் `நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும், இந்த 2 மாவீரர்களுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச் சாவைத் தழுவிக் கொண்ட இரு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

பிரபாகரனுடன் சந்திப்பு

கொழும்பில் விமான தாக்குதல் நடத்திய 2 வான் கரும்புலிகளும், தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன்னர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டு சென்றனர்.

இவ்வாறு விடுதலைப்புலிகளின் தமிழ்நெட் டாட்காம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூபன், சிரித்திரன் ஆகிய இருவரும் புறப்படுவதற்கு முன்னர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கொழும்பு மீதான தாக்குதலை வெற்றி - அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு Empty Re: கொழும்பு மீதான தாக்குதலை வெற்றி - அரச விடுதலைப்புலிகள் அறிவிப்பு

Post by Admin Mon Feb 23, 2009 3:50 am

அரசு ஒப்புதல்

இலங்கை அரசாங்கமும் இந்த தாக்குதல் தற்கொலை தாக்குதல்தான் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்டதில் செயல் இழந்த நிலையில் உள்ள ஒரு குட்டி விமானத்தில் ஏராளமான சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் (280 பவுண்டுக்கும் மேல்) இருந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

``விமானத்தின் உடைந்த பாகங்களைக் கொண்டு பார்க்கும்போது அவை சாதாரண கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஏராளமான வெடிபொருள்களைக் கொண்டு வந்துள்ளன'' என்று ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா கூறினார்.

கொழும்பில் பலத்த பாதுகாப்பு

விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது. அங்கு இறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன. சில விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஹாங்காங் புறப்பட வேண்டிய விமானம், 12.25 மணிக்கு பாங்காக் புறப்பட வேண்டிய விமானம், 2.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

காட்டுநாயக விமானப்படை தளம் மூடப்பட்டு, அங்கிருந்த போர் விமானங்கள் இரத்மலானை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் கொழும்பு நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முரண்பட்ட தகவல்கள்

விடுதலைப்புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து உள்ளது. தாக்குதலில் 2 பேர் பலியானதாக கூறிய அரசாங்கம் 5 பேர் பலியானதாக நேற்று அறிவித்தது.

ஜனக நானயக்கரா என்ற ராணுவ அதிகாரி, தாக்குதல் நடத்திய ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், இன்னொரு விமானம் விமானப்படை தலைமையகம் எதிரே உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடம் மீது விழுந்து வெடித்துச் சிதறியதாகவும் தெரிவித்தார். ஆனால் இன்னொரு ராணுவ அதிகாரி கூறுகையில், ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு விமானம் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்தார்.

வெற்றிகரமாக

ஆனால் தங்களது தற்கொலைப்படையின் `வான் கரும்புலிகள்' தாக்குதலை வெற்றிகரமாக முடித்ததாக விடுதலைபுலிகள் தெரிவித்து உள்ளனர்.

தாக்குதல் நடத்த வந்த விடுதலைப்புலிகளின் 2 விமானங்களும் கொழும்பில் நீண்ட நேரம் தாழ்வாகப் பறந்து தாக்குதலை நடத்தியதாகவும், கொழும்பு நகரமே வெடிகுண்டு சத்தத்தால் அதிர்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நேரில் பார்த்தவர்

2 விமானங்களும் புதுக்குடியிருப்பில் இருந்து கிளம்பி, ரேடார் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காக கிளிநொச்சி, மன்னார், மாங்குளம் வழியாக கொழும்புக்கு வந்ததாக தெரிய வந்துள்ளது.

``நானும், எனது நண்பரும் உயரமான கட்டிடத்தின் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டு இருந்தோம். அப்போது மிகவும் ஆபத்தான நிலையில் எங்கு செல்கிறோம் என்று தெரியாதபடி வானத்தில் பயங்கர சத்தத்துடன் டார்ச் லைட் வெளிச்சத்தில் சென்றன'' என்று நேரில் பார்த்த ஜெயந்தா டி.சில்வா என்பவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் பைலட்டுகள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று இருக்க வேண்டும் என்று வர்த்தக விமானங்களை ஓட்டும் பைலட்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை: விடுதலைப் புலிகள்
»  தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கும் திட்டம்!
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» விடுதலைப்புலிகள் மீதான தடை: வழக்கை விரைந்து நடத்த ஐகோர்ட்டில் வைகோ கோரிக்கை
» விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum