ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

5 posters

Go down

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Empty பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

Post by சிவா Fri Sep 12, 2014 4:49 pm

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Non-Communicable-Diseases

‘‘அடடா, பத்தாங்கிளாஸ் படிக்குதுன்னாங்க... ஆனா, அந்த ஹீரோயின் தளதளன்னு காலேஜ் பொண்ணு மாதிரி இருக்குப்பா!’’ - இப்போதெல்லாம் நம்மிடையே அடிக்கடி எழுகிறது இந்த கமென்ட். நடிகைகள் மட்டுமல்ல... பதின்ம வயதின் தொடக்கத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவிகள் பலரும் இப்போது இருபதுக்கு மேல் வயதைச் சொல்லும்படி இருக்கிறார்கள். அப்போதைக்கு அந்த அதீத வளர்ச்சி சுற்றியிருப்பவர்களால் பாராட்டப்படுகிறது. இதனால் அந்தந்த பெண்களுக்கும் அதில் பெருமை வந்துவிடுகிறது.


ஆனால், ‘‘நிஜத்தில் இப்படிப்பட்ட வளர்ச்சி, பெண்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து உயிருக்கே உலை வைக்கும்’’ என அதிர்ச்சி தருகிறார் கௌசல்யா நாதன். சென்னையைச் சேர்ந்த ‘லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்’ நிபுணர் இவர். ‘‘பொதுவாக அடுத்தவரிடமிருந்து நம்மைத் தொற்றிக் கொள்ளாமல், நமது உடல் உறுப்புகள் காலத்தால் பழுதாவதால் வரும் நோய்களை என்.சி.டி (Non Communicable Diseases) என்போம். மாரடைப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, கேன்சர் போன்றவை எல்லாம் அப்படிப்பட்டவைதான்.

உலக அளவில் 40 வயதுக்குள்ளாகவே என்.சி.டி நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நோய்களால் நிகழும் இறப்பு, 52 சதவீதம். அதிலும் உடலை சீக்கிரமே முதிர்ச்சி அடைய வைக்கும் உடல் பருமனும், கொலஸ்ட்ரால் பிரச்னையும் ஆண்களை விட பெண்களிடம்தான் அதிகம்’’ என அடிப்படைகளை விளக்கும் டாக்டர் கௌசல்யா, வயதாவதை முடிந்தவரை தள்ளிப் போடும் ‘ஆன்டி ஏஜிங்’ நிபுணரும் கூட. இந்தியாவில் இளைஞர்களிடம் உள்ள ‘இளவயது வயோதிகம்’ குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார் இவர்.

‘‘வளர்ச்சி என்பதற்கும் முதிர்ச்சி என்பதற்கும் வித்தியாசம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 13 வயதில் ஒரு பெண் 20 வயது மாதிரி தெரியும்போது, நாம் அதை பாஸிட்டிவாகப் பார்க்கிறோம். 9 வயதில் பெண்கள் பருவமடைந்து விடுவதைக் கூட இயல்பாக எடுத்துகொள்ளத் துவங்கி விட்டோம். ஆனால், அந்தப் பெண் 20 வயதில் எப்படி இருப்பாள் என சிந்திக்கத் தவறுகிறோம். உண்மையில் நம் உடலின் உள்ளுறுப்புகளுக்குத்தான் முதலில் வயதாகிறது. அது 3, 4 ஆண்டுகள் கழித்தே வெளித்தோற்றத்தில் பிரதிபலிக்கிறது.

எனவே, நம் கண்ணால் 20 வயது என்று மதிப்பிடக் கூடிய பெண், உள் உறுப்புகளின் அடிப்படையில் இன்னும் கூட ‘முதியவளாகி’ப் போயிருக்கலாம். பிற்காலத்தில் இது உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி எனப்படும் கருப்பை பிரச்னை, டைப் 2 டயபடீஸ், சுவாசக் கோளாறுகள், இதய நோய்கள் என ஏகப்பட்ட பிரச்னைகளைக் கொண்டு வரலாம். கருப்பை சீக்கிரமே வயோதிகமடைந்து, பிள்ளைப் பேறு கூட இல்லாமல் போகலாம்.

‘சரி, சில பெண்கள் சீக்கிரமே வளர்ந்து விடுகிறார்கள்... அதற்கு என்ன செய்வது?’ எனத் தப்பித்துக் கொள்ள முடியாது. இது ஒன்றும் ஜெனிட்டிக் பிரச்னையோ நோய்த் தொற்றோ அல்ல. முழுக்க முழுக்க நம்முடைய அறியாமையால் நாமே உருவாக்கிக்கொள்கிற பிரச்னை. ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் உடன்வரக் கூடிய கொழுப்பு செல்கள், 5 வயதுக்குள்ளாகவே உருவாகிவிடுகின்றன. நம்மூர் தாய்மார்கள், குழந்தை கொழுகொழுவென்றிருந்தால்தான் ஆரோக்கியம் என நினைத்து, கண்டதையும் திணித்து அந்த கொழுப்பு செல்களை அதிகமாக்கிவிடுகிறார்கள்.

சமீபத்தில் நான் சந்தித்த ஒரு டீன் ஏஜ் பெண் அவள்... உடல் பருமன் அவளின் முதல் பிரச்னை. தன் அம்மாவையே எதிரியாகப் பார்ப்பது இரண்டாம் பிரச்னை. காரணம் ஒன்றே ஒன்றுதான்... தோற்றத்தில் அவளை விட அவள் அம்மா இளமையாகத் தெரிகிறார். ‘யாரு... உங்க அக்காவா?’ என்ற விசாரிப்புகள் அவளை மன அழுத்தத்துக்கே தள்ளியிருக்கின்றன. மேலே நாம் சொன்ன உடல் பிரச்னைகளோடு, இம்மாதிரியான உளவியல் பிரச்னைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மாதிரியான அம்மா - பெண்கள் இன்று காணுமிடமெல்லாம் பெருகிவிட்டார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அந்தக் கால வளர்ப்பு முறைக்கும் இந்தக் கால வளர்ப்பு முறைக்கும் உள்ள வித்தியாசமே! வெளிநாட்டு மக்கள் இங்கு வந்து செட்டில் ஆனால் கூட அவர்களின் உணவுப் பழக்கத்தை விட்டுவிட்டு, இங்குள்ள இட்லி, தோசையை சாப்பிடப் பழகிக் கொள்கிறார்கள். காரணம், அவர்களின் உணவுகள் இங்கே ஃப்ரெஷ்ஷாக கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இந்த ஊர் சூழலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதில் நிச்சயம் இருக்காது.

ஆனால், நம் ஊர் குழந்தைகளைப் பாருங்கள்... இங்கே கிடைக்காத - கிடைத்தாலும் ஆரோக்கியமில்லாத - நம் தட்பவெப்பத்துக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற ஃபாரீன் உணவுகளுக்குத்தான் அடிமையாகிக் கிடக்கிறார்கள். வளரும் காலத்திலும் பெண் குழந்தைகளிடம், ‘உனக்கு படிப்புதான் எல்லாமே’ என்று சொல்லி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். உடல் உழைப்பு இல்லை... சின்னச் சின்ன வீட்டு வேலைகள் கூட செய்வதில்லை. புத்தகமே கதியாகக் கிடப்பதும், போரடிக்கும்போது ஃப்ரிட்ஜைத் திறந்து எதையாவது மேய்வதும் அவர்களின் வழக்கமாகிறது. இதனால் திருமண வயதில் உடல் பருமன் வந்து சேருகிறது. அப்போது அதே அம்மா அப்பா, ‘வரனே அமையவில்லை... உடம்பைக் குறை’ என்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கேள்வி எழுப்பும் கௌசல்யா, இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகத் தரும் டிப்ஸ்கள்தான் ஹைலைட்...

‘‘பெண்கள் எல்லோருக்கும் ‘தான் அழகாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருக்கும். அது அவர்களின் பிறப்புரிமை. இதில் கூச்சப்படவோ குற்ற உணர்வு கொள்ளவோ எதுவுமில்லை. அழகுக்காக பெண் குழந்தைகள் எதைச் செய்தாலும் பெற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அது வெளிப்புற ஆபரணங்களையும் க்ரீம்களையும் வாங்கிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான டயட், தேவையான உடற்பயிற்சியைத் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அழகு உள்ளிருந்து வெளிப்படும். உள்ளிருந்து வெளிப்படும் அழகுக்குப் பெயர்தான் ஆரோக்கியம். குழந்தை வெகு குண்டாக இருப்பதும், சீக்கிரமே நெடுநெடுவென வளர்வதும், விரைவில் பருவமடைவதும் வளர்ச்சியல்ல... முதுமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் கௌசல்யா அக்கறையோடு!

[thanks]தினகரன்[/thanks]


பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Empty Re: பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

Post by M.Saranya Fri Sep 12, 2014 5:13 pm

நல்ல பதிவு.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Empty Re: பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

Post by krishnaamma Fri Sep 12, 2014 5:27 pm

//‘‘பெண்கள் எல்லோருக்கும் ‘தான் அழகாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருக்கும். அது அவர்களின் பிறப்புரிமை. இதில் கூச்சப்படவோ குற்ற உணர்வு கொள்ளவோ எதுவுமில்லை. அழகுக்காக பெண் குழந்தைகள் எதைச் செய்தாலும் பெற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அது வெளிப்புற ஆபரணங்களையும் க்ரீம்களையும் வாங்கிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான டயட், தேவையான உடற்பயிற்சியைத் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அழகு உள்ளிருந்து வெளிப்படும். உள்ளிருந்து வெளிப்படும் அழகுக்குப் பெயர்தான் ஆரோக்கியம். குழந்தை வெகு குண்டாக இருப்பதும், சீக்கிரமே நெடுநெடுவென வளர்வதும், விரைவில் பருவமடைவதும் வளர்ச்சியல்ல... முதுமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் கௌசல்யா அக்கறையோடு!//

நல்ல இருக்கு அவங்க டிப்ஸ் புன்னகை நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Empty Re: பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

Post by ஜாஹீதாபானு Fri Sep 12, 2014 5:48 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Empty Re: பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

Post by T.N.Balasubramanian Fri Sep 12, 2014 6:41 pm

நல்ல பதிவு .
கடைசி பத்தி ,சிந்தித்து செயல்படுத்தவேண்டிய ஒன்று .
நன்றி கௌசல்யா /சிவா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Empty Re: பெண்களைத் தாக்கும் புது ஆபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum