ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்!

Go down

இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்! Empty இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்!

Post by சிவா Fri Sep 12, 2014 2:32 am


ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்திய - ஆஸ்திரேலிய உறவில் மிகப்பெரிய திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1955-இல் இந்தோனேஷியாவிலுள்ள பாண்டூங் நகரில் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதைய ஆஸ்திரேலியப் பிரதமர் ராபர்ட் மென்சீஸ் எடுத்த முடிவு, பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதுமுதல், ஆஸ்திரேலியாவுடனான தொடர்பை இந்தியா வலுப்படுத்திக் கொள்ளவோ, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆஸ்திரேலியாவின் நிறவெறிக் கொள்கை, சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை, இந்திய அணு ஆயுத சோதனைக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்ப்பு, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் தடுத்து விட்டன.

இப்போது ஆஸ்திரேலியாவும் மாறிவிட்டது. இந்தியாவும் மாறி விட்டிருக்கிறது. நீர் மேலாண்மை; பேரிடர் தடுப்பு; மனித வள மேம்பாட்டு ஆராய்ச்சி; உயர்கல்வி; கடற்கொள்ளைத் தடுப்பு; இணையவழிக் குற்றங்கள் (சைபர் கிரைம்) தடுப்பு, பாதுகாப்பு; தீவிரவாத எதிர்ப்பு என்று இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயல்படப் பல பொதுப் பிரச்னைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் இப்போது 1,700 கோடி டாலர்கள். அது கணிசமாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம்.

இந்தியா மீதான ஆஸ்திரேலியாவின் இப்போதைய அக்கறைக்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியா அளிக்கக்கூடிய மிகப்பெரிய சந்தையும்தான் முக்கியமான காரணங்களாக இருக்கக்கூடும். புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, உலகளாவிய அளவில் அணுசக்தி மின்சாரத் தயாரிப்பு குறைந்து விட்டிருப்பதால், யுரேனியத்திற்கான தேவையும் குறைந்துவிட்டிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கனிமவள உற்பத்தியாளர்களின் பார்வையை இந்தியாவை நோக்கித் திரும்பச் செய்திருக்கிறது.

தற்போது 20 சிறிய அணு உலைகள்தான் இந்தியாவில் செயல்படுகின்றன. நமது மொத்த மின்சார உற்பத்தியில் வெறும் 2 சதவீதம்தான் அணு உலை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2032-க்குள் மேலும் 30 அணு உலைகள் நிறுவி 63,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்கிற அரசின் இலக்கை எட்ட வேண்டுமானால், இந்தியாவுக்கும் யுரேனியத்தின் தேவை இருக்கிறது. அதனால், ஆஸ்திரேலியப் பிரதமர் இந்திய விஜயத்திற்கான முக்கியக் காரணம், அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதுதான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பிரதமர் டோனி அபோட்டின் விஜயத்திற்குப் பின்னால் வியாபார நோக்கம் மட்டுமல்லாமல் சர்வதேச அரசியலும் இருக்கிறது. சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி உலகிலுள்ள எல்லா நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் பொருளாதார ரீதியாக சீனாவைப் பகைத்துக் கொள்ள முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. சீனாவுக்கு எதிராக இல்லாவிட்டாலும், சீனாவின் மேலாதிக்கம் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதத்தில் ஆசியாவின் ஏனைய பொருளாதாரங்கள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்பது அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் அந்தரங்க விருப்பம்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் விஜயமும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டின் இந்திய விஜயமும் ஜப்பான் - இந்தியா - ஆஸ்திரேலியா என்கிற பலமான மூவர் கூட்டணிக்கு வழிகோலுமானால், அதுவேகூட சீனா மேலாதிக்கம் செலுத்தவிடாமல் தடுக்கக்கூடும் என்பது சர்வதேச எண்ணவோட்டமாக இருக்கிறது.

முன்னாள் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதுபோல, "தென் கொரியாவின் சோல், சீனாவின் ஷாங்காய், ஜப்பானின் டோக்கியோவைவிட, ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கும், இந்தியாவின் சென்னைக்கும் இடையேயான நட்புறவும், தொடர்பும், நெருக்கமும் அதிகம்' என்பது உண்மையான கூற்று.

மக்களாட்சி, ஆங்கில மொழிப் பயன்பாடு, வர்த்தகத் தொடர்பு, கல்வி நிலையங்களுக்கு இடையேயான தொடர்பு, எல்லாவற்றிற்கும் மேலாக கிரிக்கெட் விளையாட்டு என்று இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர ஒற்றுமைகள் ஏராளம்.

ராஜீவ் காந்திக்குப் பிறகு, 28 ஆண்டுகள் கழித்துப் பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 உச்சி மாநாட்டிற்காக விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அவரது விஜயம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என்று நம்பலாம்!

தினமணி


இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்! Empty Re: இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்!

Post by சிவா Fri Sep 12, 2014 2:34 am

இந்த ஒத்துழைப்பு எதற்காக?

ஆஸ்திரேலியாவுடனான உறவில் ஒரு முக்கியமான அத்தியாயம் கடந்த வாரம் எழுதப்பட்டிருக்கிறது. அமைதி நோக்கத்தில், மின்சாரம் தயாரிப்பதற்காக அணுசக்தியைப் பயன்படுத்தும் இந்தியாவுக்கு, தேவைப்படும் மூலப்பொருளை வழங்குவதை உறுதி செய்யும் ஒப்பந்தந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டின் வருகையின்போது, இந்திய அணு மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் மூலப்பொருளைக் கொடுப்பதற்கும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது அணு மின்நிலையங்களுக்கான மூலப்பொருள் தொடர்பான விஷயம்போலத் தோன்றலாம். ஆனால், சர்வதேச அரங்கில் அரசியல் காய்நகர்த்தல்களில் ஒன்றுதான் இது என்பதே உண்மை. சீனாவும் இந்தியாவும் ஆசியாவில் இப்போது வளர்ந்துவரும் பெரிய நாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. சீனாவுடன் இணக்கமான உறவை வைத்துக்கொள்ளவே ஜப்பானும் இந்தியாவும் விரும்பினாலும், எல்லைப் பகுதிகள் தொடர்பாக ஏற்படும் கருத்து வேற்றுமைகளால் அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்படுகின்றன. சீனாவுடன் உறவு வைத்திருந்தாலும் ராணுவரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அந்நாடு வலுவடைவதை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே, சீனாவுக்கு எதிரான அணியை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவின் கண்ஜாடைக்குப் பிறகுதான் ஆஸ்திரேலியப் பிரதமர் இந்தியா வந்திருக்கிறார்.

1998-ல் பொக்ரானில் அணுகுண்டை வெடித்து இந்தியா சோதனை நடத்தியதை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்தது. “அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணமோ அதில் போட்டியிடும் எண்ணமோ இல்லை” என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்த பிறகே 2005-ல் அணுசக்தியை மக்களுடைய நன்மைக்குப் பயன்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார் என்று முன்வந்து ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் அதன்பின்னர் நீக்கப்பட்டன. இப்போது ஆஸ்திரேலியா, மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்திக்குத் தேவைப் படும் மூலப்பொருளை வழங்கத் தயார் என்று முன்வந்துள்ளது.

சுனாமியால் ஜப்பானின் புகுஷிமா அணு மின்நிலையம் கடுமையாகச் சேதம் அடைந்து கதிரியக்கம் வெளிப்பட ஆரம்பித்ததை அடுத்து, ‘அணு மின்நிலையங்கள் வேண்டாம்’ என்ற குரல்கள் உலகம் முழுக்க வலுத்துவருகின்றன. இதனால் ஆஸ்திரேலியாவின் யுரேனியத்துக்குக் கேட்பு குறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு யுரேனியம்தான் பெரும் வருவாயை ஈட்டித்தந்தது. இப்போது நாட்டின் வருமானத்தைப்

பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் யுரேனியத்தை விற்க ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது. அணு மின்சாரம் தயாரிப்பில் உதவுவதாக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, மோடியிடம் வாக்குறுதி தந்திருப்பதையும் மறந்துவிடலாகாது. அணு மின்நிலையங்கள் குறித்து உலகம் முழுக்க அச்சம் நிலவினாலும் இந்தியாவால் அவற்றைக் கைவிட முடியாத அளவுக்கு இங்கே மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவேதான், இந்தியாவுக்குச் சாதகமானவர்களிடம் இருந்து அணு மின்சாரத் தயாரிப்புக்கான ஒத்துழைப்பைப் பெறுவதில் மோடி தீவிரம் காட்டுகிறார்.

அணு மின்சாரத் தயாரிப்புக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளை நம்பியிருக்கிறது இந்தியா. கனநீர் அணு உலைகளை ரஷ்யா அளித்திருக்கிறது. மென்நீர் அணுஉலைகளையும் விரைவு அணுப்பெருக்க ஈனுலைகளையும் மேற்கத்திய நாடுகள் வழங்கியிருக்கின்றன. அணுகுண்டு தயாரிக்கும் எண்ணம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்ததுடன் சுய கட்டுப்

பாட்டுடன் நடந்துகொள்வதாலும் சர்வதேச அணுவிசை முகமையின் ஆய்வுகளுக்குக் கட்டுப்படத் தயார் என்று முன்னரே அறிவித்துவிட்டபடியாலும் இப்போது மோடிக்கு வேலை எளிதாகிவிட்டது.

ஆனால், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணுமின் நிலையங்களைப் படிப்படியாக மூடிவருவதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அணு மின்நிலையத்தில் கதிரியக்க அபாயம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; விபத்து, தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும், அணுஉலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கு இடம் தேட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இந்த ஒப்பந்தங்களால் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?

தி இந்து


இந்திய - ஆஸ்திரேலிய உறவு வலுப்பெறட்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் !
» இம்ரான் கான் அவுட், ஷேபாஸ் ஷெரீப் உள்ளே :இந்திய பாகிஸ்தான் உறவு எப்படி இருக்கும்?
» ஆஸ்திரேலிய இணையதளத்தில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் இல்லாத இந்திய வரைபடம்
» இந்திய முறைப்படி வளைகாப்பு நடத்திய ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல்
» போபால் தீர்ப்பால் இந்திய உறவு பாதிக்காது: அமெரிக்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum