Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமர காவியம்: திரை விமர்சனம்
3 posters
Page 1 of 1
'அமர காவியம்' திரைப்படத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பீடு!
அமர காவியம்: திரை விமர்சனம்
நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம்.. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.. என எதிர்பார்ப்புகளுடனும், ‘படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர்’ என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமர காவியம். புதிய இயக்குநர் ஜீவா சங்கரின் இந்த படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா?
பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா.
காதல் பறவைகளின் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிறது. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை.
படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்துக் காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன.
நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு நாயகன் தீ வைக்கிறான். நெருப்பு பற்றியெரியும்போது அதே வீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுகிறார்கள். இப்படிப் பல காட்சிகள் நம்பகத்தன்மை பற்றிய கவலையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை.
கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிஜமாக நடந்ததா, இல்லையா என்பது படத்துக்கு முக்கியம் இல்லை. படத்தில் அது வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது.
கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை.
சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். எப்போதும் ஒரே விதமான இறுக்கத்துடன் முகத்தைக் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.
மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.
மைனா, கும்கி போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமய்யாவை உப்பு இல்லாத ஊறுகாய்போல பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. ‘ஏதேதோ எண்ணம் வந்து’ பாடல் மனதில் நிற்கிறது.
முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார். இருவரும் ஒருவரே என்பதுதான் நகைமுரண்.
பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா.
காதல் பறவைகளின் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிறது. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை.
படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்துக் காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன.
நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு நாயகன் தீ வைக்கிறான். நெருப்பு பற்றியெரியும்போது அதே வீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுகிறார்கள். இப்படிப் பல காட்சிகள் நம்பகத்தன்மை பற்றிய கவலையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை.
கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிஜமாக நடந்ததா, இல்லையா என்பது படத்துக்கு முக்கியம் இல்லை. படத்தில் அது வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது.
கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை.
சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். எப்போதும் ஒரே விதமான இறுக்கத்துடன் முகத்தைக் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.
மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.
மைனா, கும்கி போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமய்யாவை உப்பு இல்லாத ஊறுகாய்போல பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. ‘ஏதேதோ எண்ணம் வந்து’ பாடல் மனதில் நிற்கிறது.
முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார். இருவரும் ஒருவரே என்பதுதான் நகைமுரண்.
‘காவியம்’ என்ற பெயரைத் தாங்கி வந்திருப்பதாலோ என்னவோ.. நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக்கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது ‘அமர காவியம்’.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அமர காவியம்: திரை விமர்சனம்
அமர காவியம் - விகடன் சினிமா விமர்சனம்
காதலும், காதல் நிமித்தமும், பிரிதலும் அதன் நிமித்தம் உயிர் துறத்தலுமான 'எய்ட்டீஸ்’ கால காதல் காவியம்!
நண்பனின் காதலைச் சொல்லப்போன சந்தர்ப்பத்தில் மியா (அறிமுகம்) மீது காதல் கொள்கிறார் சத்யா. பலப்பல காரணங்கள் சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள் பெற்றோர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் சத்யா. காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது, கோபதாபங்கள் வெடிக்கின்றன. அடுத்தடுத்து சத்யா எடுக்கும் அதிர்ச்சி முடிவுகளே... படம்!
தகவல் தொடர்பே இல்லாத 80-களில், அன்றைய காதலர்களின் ரகசியக் கொண்டாட்டங்களையும், பிரிவு வேதனைகளையும் மென்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். காதலுக்கு நண்பர்கள், பெற்றோர் மட்டுமே எதிரி அல்ல... தகவல் தொடர்பின்மை யும்தான் என்பதைச் சொன்ன விதம் கிளாஸ்.
'ஹீரோ’ சத்யா... அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்கும்போது எத்தனை சந்தோஷ மின்னல்கள் முகத்தில் தெறிக்க வேண்டும்!? சின்ன சிரிப்பைத் தவிர, மற்ற உணர்வுகள் வருவேனா என்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் ஃபிலிம் சத்யா!
நாயகி மியாவுக்கு படம் அட்டகாச கிரீட்டிங் கார்டு! குறும்பு கொப்பளிக்கும் கண்கள், க்யூட் ஸ்வீட் ரியாக்ஷன்கள் எனக் கவிதை வாசிக்குது பொண்ணு.
மெதுமெதுவாக நகரும் காட்சிகள், திருப்பமே இல்லாத திரைக்கதை எனப் படம் முற்பாதியில் ஸ்லோமோஷன் சினிமா. காதலர்கள் இடையிலான சிக்கலுக்கு அவர்களின் 'பொசஸிவ்’ குணமும்கூட காரணமாக இருக்கலாம் என்பதை பிற்பாதி வசனங்களிலும் காட்சிகளிலும் இயல்பாக விவரித்திருக்கிறார்கள். 'அவன் உன்னைக் காதலிக்கிறான்னா, நீ ஏன் நாம காதலிக்கிறதை இன்னும் அவன்கிட்ட சொல்லலை? நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்துட்டு நீயும் காதலிக்கிறேனு தப்பாப் புரிஞ்சுப்பான்ல’ என சத்யா, மியாவிடம் குமுறும் இடம் ஓர் உதாரணம்.
இசைக்கருவிகளை காதல் கருவிகளாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'தாகம் தீர...’, 'மௌனம் பேசும்...’ பாடல்களிலும் படம் நெடுகிலும் பின்னணி இசையில் அத்தனை காதல். ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் ஊட்டி ஜில்லிப்பு... நம் விழிகளில்!
80-களின் காதல் கதையைக் களமாகக் கொண்டவர்கள், இன்னும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளைப் பிடித்திருக்க வேண்டாமா? எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான்? அமரகாவியம் என்று டைட்டில் வைத்ததற்காகவே, அப்படி ஒரு திகீர் கிளைமாக்ஸ்போல!
'எய்ட்டீஸ்’ இளைஞர்களுக்கு படம் 'அமரகாவியமா’க இருக்கலாம்!
- விகடன் விமர்சனக் குழு
காதலும், காதல் நிமித்தமும், பிரிதலும் அதன் நிமித்தம் உயிர் துறத்தலுமான 'எய்ட்டீஸ்’ கால காதல் காவியம்!
நண்பனின் காதலைச் சொல்லப்போன சந்தர்ப்பத்தில் மியா (அறிமுகம்) மீது காதல் கொள்கிறார் சத்யா. பலப்பல காரணங்கள் சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள் பெற்றோர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் சத்யா. காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது, கோபதாபங்கள் வெடிக்கின்றன. அடுத்தடுத்து சத்யா எடுக்கும் அதிர்ச்சி முடிவுகளே... படம்!
தகவல் தொடர்பே இல்லாத 80-களில், அன்றைய காதலர்களின் ரகசியக் கொண்டாட்டங்களையும், பிரிவு வேதனைகளையும் மென்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். காதலுக்கு நண்பர்கள், பெற்றோர் மட்டுமே எதிரி அல்ல... தகவல் தொடர்பின்மை யும்தான் என்பதைச் சொன்ன விதம் கிளாஸ்.
'ஹீரோ’ சத்யா... அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்கும்போது எத்தனை சந்தோஷ மின்னல்கள் முகத்தில் தெறிக்க வேண்டும்!? சின்ன சிரிப்பைத் தவிர, மற்ற உணர்வுகள் வருவேனா என்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் ஃபிலிம் சத்யா!
நாயகி மியாவுக்கு படம் அட்டகாச கிரீட்டிங் கார்டு! குறும்பு கொப்பளிக்கும் கண்கள், க்யூட் ஸ்வீட் ரியாக்ஷன்கள் எனக் கவிதை வாசிக்குது பொண்ணு.
மெதுமெதுவாக நகரும் காட்சிகள், திருப்பமே இல்லாத திரைக்கதை எனப் படம் முற்பாதியில் ஸ்லோமோஷன் சினிமா. காதலர்கள் இடையிலான சிக்கலுக்கு அவர்களின் 'பொசஸிவ்’ குணமும்கூட காரணமாக இருக்கலாம் என்பதை பிற்பாதி வசனங்களிலும் காட்சிகளிலும் இயல்பாக விவரித்திருக்கிறார்கள். 'அவன் உன்னைக் காதலிக்கிறான்னா, நீ ஏன் நாம காதலிக்கிறதை இன்னும் அவன்கிட்ட சொல்லலை? நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்துட்டு நீயும் காதலிக்கிறேனு தப்பாப் புரிஞ்சுப்பான்ல’ என சத்யா, மியாவிடம் குமுறும் இடம் ஓர் உதாரணம்.
இசைக்கருவிகளை காதல் கருவிகளாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'தாகம் தீர...’, 'மௌனம் பேசும்...’ பாடல்களிலும் படம் நெடுகிலும் பின்னணி இசையில் அத்தனை காதல். ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் ஊட்டி ஜில்லிப்பு... நம் விழிகளில்!
80-களின் காதல் கதையைக் களமாகக் கொண்டவர்கள், இன்னும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளைப் பிடித்திருக்க வேண்டாமா? எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான்? அமரகாவியம் என்று டைட்டில் வைத்ததற்காகவே, அப்படி ஒரு திகீர் கிளைமாக்ஸ்போல!
'எய்ட்டீஸ்’ இளைஞர்களுக்கு படம் 'அமரகாவியமா’க இருக்கலாம்!
- விகடன் விமர்சனக் குழு
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» யா யா - திரை விமர்சனம்!
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திரை விமர்சனம்: ஜோ
» மஹா திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஜோ
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திரை விமர்சனம்: ஜோ
» மஹா திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஜோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|