Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
+6
ராஜா
T.N.Balasubramanian
அசுரன்
M.Saranya
krishnaamma
தமிழ்நேசன்1981
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
அமெரிக்காவில் க்ரீன்கார்டு வாங்கி செட்டிலாகி இருக்கிறார் நடிகர் நெப்போலியன். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு, சென்னைக்கு வந்து விஜயகாந்தை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பைத் தொடர்ந்து தே.மு.தி.க-வில் நெப்போலியன் சேரப் போகிறார் என்ற பரபரப்பு.
''திடீரென விஜயகாந்த்தை சந்தித்துள்ளீர்களே? இதற்கு அரசியல் முக்கியத்துவம் உண்டா?''
''அண்ணன் விஜயகாந்த்துக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாங்க. சிகிச்சை முடிஞ்சு திரும்பும்போது ஏர்போர்ட்ல வீல்சேர்ல முகத்தை மூடிக்கிட்டு வீட்டுக்குப் போனார்னு கேள்விப்பட்டுப் பதறிப் போயிட்டேன். அமெரிக்காவுல இருந்து உடனே கிளம்பறதுக்கு முயற்சி பண்ணினேன். இங்கே இருக்குறவங்களிடம் விசாரிச்சேன். 'இப்போதைக்கு அவர் யாரையும் சந்திக்கறது இல்லை. ரெஸ்ட்ல இருக்கார். அதனால அப்புறமா கிளம்பி வாங்க’னு சொன்னாங்க. எனக்கும் அவருக்கும் இருக்குற உறவு ஒண்ணா பொறந்த அண்ணன் தம்பியைவிட உசந்தது. நடிகர் சங்கத்துல ஆறுவருஷங்கள் தலைவரா விஜயகாந்த் இருந்தப்போ நான் துணைத் தலைவரா இருந்தேன். தினசரி நடிகர் சங்கத்துக்கு நானும் அவரும் தவறாம வந்திடுவோம். நிறைய விஷயங்களை மனம்விட்டு நிறைய பேசியிருக்கோம். அவரோட கள்ளங்கபடம் இல்லாத மனசு பாசம் எல்லாம் என் ஞாபகத்துக்குவர அப்படியே கண் கலங்கிட்டேன். கடந்த 29-ம் தேதி சென்னை வந்தவுடனே, மறுநாள் 'வீட்டுக்கு வரட்டுமா?’னு போன்ல கேட்டேன். 'இன்னிக்கு வேணாம் பிஸியோ தெரபி செய்யறதுக்கு டாக்டர்கிட்டே போகணும். அப்புறமா வாங்க’னு சொன்னாங்க. கடந்த 31-ம் தேதி அண்ணனை அவரோட ஆபீஸ்ல சந்திச்சு பேசிக்கொண்டு இருந்தேன். சினிமா, நடிகர் சங்கம் இப்படி நிறைய விஷயங்கள் பேசினோம். நாங்கள் சார்ந்து இருக்கிற அரசியல் கட்சிகள் வேறு; எங்களுடைய சகோதர பாசம் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் நாங்கள் இல்லை''
''இனி முழுக்கவே அமெரிக்காதானா?''
''நான் பெத்தப்பிள்ளைக்காக வாழறதுன்னு முடிவெடுத்தேன். என் மகன் தனுஷ§க்கு மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற நோய் இருக்கு. தமிழில் 'தசைச் சிதைவு நோய்’னு சொல்வாங்க. எந்த டாக்டராலும் குணப்படுத்த முடியாத கொடுமையானது. தனுஷோட லைஃப் ஸ்டையிலுக்கு அமெரிக்காவோட க்ளைமேட்தான் செட்டாகும். தமிழ்நாட்ல இருக்குறவங்க இந்த மாதிரி நோயாளிகளைத் தவறான கண்ணோட்டத்துல பார்ப்பாங்க. ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி விநோதமா பார்ப்பாங்க. ஆனா, அமெரிக்காவில் இதுமாதிரி நோயாளிகளுக்குத்தான் முன்னுரிமை, இலவச சிகிச்சை, தனியாக ஸ்பெஷல் ஸ்கூல்னு எல்லா உதவியையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கு. என் மகன் மாதிரி வியாதி உள்ளவங்க தமிழ்நாட்ல யாரும் கஷ்டப்படக் கூடாதுனு திருநெல்வேலி பக்கத்துல 'ஜீவன் பவுண்டேஷன்’ சார்பா மஸ்குலர் டிஸ்ட்ரபி ரிசர்ச் சென்டர்’ கட்டியிருக்கேன். அங்கே வருகிற நோயாளிகளுக்கு டாக்டர்கள் பீஸ், ட்ரீட்மென்ட் எல்லாமே இலவசம்தான். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தளபதி ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியில் மஸ்குலர் டிஸ்ரபி வியாதிக்கு என்று மருத்துவமனை ஆரம்பித்தேன். நோயாளிகளுக்கு ஸ்பெஷலான வீல்சேர் கொடுத்தேன். அதில் இருந்தபடியே பாடம் படிக்கலாம். வகுப்பறைக்குச் செல்லலாம், அதிலேயே பாத்ரூம், டாய்லெட் போகலாம்.''
''இப்போது நடிகர் சங்கத்தில் நடந்துவரும் பிரச்னைகள் பற்றி கேள்விப்பட்டீர்களா?''
''கடன்ல மூழ்கிக் கிடந்த சங்கத்தை மீட்க விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி நாங்கள் எல்லாம் முயற்சித்தோம். சிங்கப்பூர், மலேசியா போய் கஷ்டப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அதிலே கிடைச்ச பணத்தைக்கொண்டு சங்கக் கடனை அடைச்சு நடிகர் சங்க நிலத்தைப் பறிபோகாமப் பாதுகாத்தோம். அது இப்போது இடிஞ்சுபோய் தரைமட்டமா நிற்பதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த்தைச் சந்திச்சப்பகூட சங்கத்தோட கட்டடம் இடிஞ்சுபோய் கிடப்பதைப் பார்த்து அண்ணன் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டார்.
சென்னைக்கு வருகிற வெளியூர் நாடகக் கலைஞர்கள் தங்களோட கவலைகளை மறந்து அங்கேதான் ஒண்ணா உட்காந்து பேசுவாங்க. அவங்க இப்போ இடமில்லாம தவிக்கிறாங்க. சமீபத்துல நடந்த 61-வது நடிகர் சங்கப் பொதுக்குழுவுல சரத்குமார், விஷால் எல்லாம் புதுசா பில்டிங் கட்டப் போறதா சொல்லி இருக்காங்க. பார்ப்போம்.''
''உங்கள் மாமா ராமஜெயம் விவகாரத்தில் குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லையே?''
''என்னோட சின்ன மாமா ராமஜெயம் இறந்துபோய் ரெண்டு வருஷம் கடந்துவிட்டது. இன்னும் ஏன் குற்றவாளையை கண்டுபிடிக்க முடியலைனு தெரியல. வருத்தமாத்தான் இருக்கு.''
''அழகிரி, ஸ்டாலின் இருவரையும் எப்போது சந்திக்கப் போகிறீர்கள்?''
''நான் சென்னைவந்து ஒரு வாரம் ஆகிறது. தளபதி ஸ்டாலினை இன்னும் சந்திக்கலை. அண்ணன் அழகிரியைச் சந்திக்க 7-ம் தேதி மதுரைக்குப் போகிறேன். அஞ்சு வருஷம் டெல்லியிலே அண்ணன்கூட ஒண்ணா இருந்தோம். மதுரைக்கு அடிக்கடி போவேன். அண்ணன் அமெரிக்கா வந்தபோது நான் அவரோடுதான் இருந்தேன். 'பார்லிமென்ட் தேர்தல் முடிந்தபிறகு அமெரிக்க வருவேன்’ என்று சொன்னார். அதற்குள்தான் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவிட்டன.''
''தி.மு.க-வில் இருந்து குஷ்பு திடீரென்று விலகியது பற்றி?''
''சினிமா கலைஞர்கள் தி.மு.க-வுக்கு அவசியம் என்பதை உணரவேண்டும். என்கூட அஞ்சு படத்திலே குஷ்பு ஹீரோயினா நடிச்சிருக்காங்க. எனக்கு அவங்களோட நடிப்பும் பழகும் தன்மையும் ரொம்ப பிடிக்கும். குஷ்பு கட்சியைவிட்டுப் போனது எனக்கு மிகப் பெரிய வருத்தம்.''
- எம்.குணா
''திடீரென விஜயகாந்த்தை சந்தித்துள்ளீர்களே? இதற்கு அரசியல் முக்கியத்துவம் உண்டா?''
''அண்ணன் விஜயகாந்த்துக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாங்க. சிகிச்சை முடிஞ்சு திரும்பும்போது ஏர்போர்ட்ல வீல்சேர்ல முகத்தை மூடிக்கிட்டு வீட்டுக்குப் போனார்னு கேள்விப்பட்டுப் பதறிப் போயிட்டேன். அமெரிக்காவுல இருந்து உடனே கிளம்பறதுக்கு முயற்சி பண்ணினேன். இங்கே இருக்குறவங்களிடம் விசாரிச்சேன். 'இப்போதைக்கு அவர் யாரையும் சந்திக்கறது இல்லை. ரெஸ்ட்ல இருக்கார். அதனால அப்புறமா கிளம்பி வாங்க’னு சொன்னாங்க. எனக்கும் அவருக்கும் இருக்குற உறவு ஒண்ணா பொறந்த அண்ணன் தம்பியைவிட உசந்தது. நடிகர் சங்கத்துல ஆறுவருஷங்கள் தலைவரா விஜயகாந்த் இருந்தப்போ நான் துணைத் தலைவரா இருந்தேன். தினசரி நடிகர் சங்கத்துக்கு நானும் அவரும் தவறாம வந்திடுவோம். நிறைய விஷயங்களை மனம்விட்டு நிறைய பேசியிருக்கோம். அவரோட கள்ளங்கபடம் இல்லாத மனசு பாசம் எல்லாம் என் ஞாபகத்துக்குவர அப்படியே கண் கலங்கிட்டேன். கடந்த 29-ம் தேதி சென்னை வந்தவுடனே, மறுநாள் 'வீட்டுக்கு வரட்டுமா?’னு போன்ல கேட்டேன். 'இன்னிக்கு வேணாம் பிஸியோ தெரபி செய்யறதுக்கு டாக்டர்கிட்டே போகணும். அப்புறமா வாங்க’னு சொன்னாங்க. கடந்த 31-ம் தேதி அண்ணனை அவரோட ஆபீஸ்ல சந்திச்சு பேசிக்கொண்டு இருந்தேன். சினிமா, நடிகர் சங்கம் இப்படி நிறைய விஷயங்கள் பேசினோம். நாங்கள் சார்ந்து இருக்கிற அரசியல் கட்சிகள் வேறு; எங்களுடைய சகோதர பாசம் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் நாங்கள் இல்லை''
''இனி முழுக்கவே அமெரிக்காதானா?''
''நான் பெத்தப்பிள்ளைக்காக வாழறதுன்னு முடிவெடுத்தேன். என் மகன் தனுஷ§க்கு மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற நோய் இருக்கு. தமிழில் 'தசைச் சிதைவு நோய்’னு சொல்வாங்க. எந்த டாக்டராலும் குணப்படுத்த முடியாத கொடுமையானது. தனுஷோட லைஃப் ஸ்டையிலுக்கு அமெரிக்காவோட க்ளைமேட்தான் செட்டாகும். தமிழ்நாட்ல இருக்குறவங்க இந்த மாதிரி நோயாளிகளைத் தவறான கண்ணோட்டத்துல பார்ப்பாங்க. ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி விநோதமா பார்ப்பாங்க. ஆனா, அமெரிக்காவில் இதுமாதிரி நோயாளிகளுக்குத்தான் முன்னுரிமை, இலவச சிகிச்சை, தனியாக ஸ்பெஷல் ஸ்கூல்னு எல்லா உதவியையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கு. என் மகன் மாதிரி வியாதி உள்ளவங்க தமிழ்நாட்ல யாரும் கஷ்டப்படக் கூடாதுனு திருநெல்வேலி பக்கத்துல 'ஜீவன் பவுண்டேஷன்’ சார்பா மஸ்குலர் டிஸ்ட்ரபி ரிசர்ச் சென்டர்’ கட்டியிருக்கேன். அங்கே வருகிற நோயாளிகளுக்கு டாக்டர்கள் பீஸ், ட்ரீட்மென்ட் எல்லாமே இலவசம்தான். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தளபதி ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியில் மஸ்குலர் டிஸ்ரபி வியாதிக்கு என்று மருத்துவமனை ஆரம்பித்தேன். நோயாளிகளுக்கு ஸ்பெஷலான வீல்சேர் கொடுத்தேன். அதில் இருந்தபடியே பாடம் படிக்கலாம். வகுப்பறைக்குச் செல்லலாம், அதிலேயே பாத்ரூம், டாய்லெட் போகலாம்.''
''இப்போது நடிகர் சங்கத்தில் நடந்துவரும் பிரச்னைகள் பற்றி கேள்விப்பட்டீர்களா?''
''கடன்ல மூழ்கிக் கிடந்த சங்கத்தை மீட்க விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி நாங்கள் எல்லாம் முயற்சித்தோம். சிங்கப்பூர், மலேசியா போய் கஷ்டப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அதிலே கிடைச்ச பணத்தைக்கொண்டு சங்கக் கடனை அடைச்சு நடிகர் சங்க நிலத்தைப் பறிபோகாமப் பாதுகாத்தோம். அது இப்போது இடிஞ்சுபோய் தரைமட்டமா நிற்பதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த்தைச் சந்திச்சப்பகூட சங்கத்தோட கட்டடம் இடிஞ்சுபோய் கிடப்பதைப் பார்த்து அண்ணன் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டார்.
சென்னைக்கு வருகிற வெளியூர் நாடகக் கலைஞர்கள் தங்களோட கவலைகளை மறந்து அங்கேதான் ஒண்ணா உட்காந்து பேசுவாங்க. அவங்க இப்போ இடமில்லாம தவிக்கிறாங்க. சமீபத்துல நடந்த 61-வது நடிகர் சங்கப் பொதுக்குழுவுல சரத்குமார், விஷால் எல்லாம் புதுசா பில்டிங் கட்டப் போறதா சொல்லி இருக்காங்க. பார்ப்போம்.''
''உங்கள் மாமா ராமஜெயம் விவகாரத்தில் குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லையே?''
''என்னோட சின்ன மாமா ராமஜெயம் இறந்துபோய் ரெண்டு வருஷம் கடந்துவிட்டது. இன்னும் ஏன் குற்றவாளையை கண்டுபிடிக்க முடியலைனு தெரியல. வருத்தமாத்தான் இருக்கு.''
''அழகிரி, ஸ்டாலின் இருவரையும் எப்போது சந்திக்கப் போகிறீர்கள்?''
''நான் சென்னைவந்து ஒரு வாரம் ஆகிறது. தளபதி ஸ்டாலினை இன்னும் சந்திக்கலை. அண்ணன் அழகிரியைச் சந்திக்க 7-ம் தேதி மதுரைக்குப் போகிறேன். அஞ்சு வருஷம் டெல்லியிலே அண்ணன்கூட ஒண்ணா இருந்தோம். மதுரைக்கு அடிக்கடி போவேன். அண்ணன் அமெரிக்கா வந்தபோது நான் அவரோடுதான் இருந்தேன். 'பார்லிமென்ட் தேர்தல் முடிந்தபிறகு அமெரிக்க வருவேன்’ என்று சொன்னார். அதற்குள்தான் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவிட்டன.''
''தி.மு.க-வில் இருந்து குஷ்பு திடீரென்று விலகியது பற்றி?''
''சினிமா கலைஞர்கள் தி.மு.க-வுக்கு அவசியம் என்பதை உணரவேண்டும். என்கூட அஞ்சு படத்திலே குஷ்பு ஹீரோயினா நடிச்சிருக்காங்க. எனக்கு அவங்களோட நடிப்பும் பழகும் தன்மையும் ரொம்ப பிடிக்கும். குஷ்பு கட்சியைவிட்டுப் போனது எனக்கு மிகப் பெரிய வருத்தம்.''
- எம்.குணா
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், ஏன் தலைவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் போய் treatement எடுக்கிறார்கள்? எவ்வளவோ பேர் நம் நாட்டுக்கு treatement க்கு வரும்போது?????????????
மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படி செய்யலாமா? நம் நாட்டில் இல்லாத வசதிகளா? ? ?
மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படி செய்யலாமா? நம் நாட்டில் இல்லாத வசதிகளா? ? ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
இந்த வகை நோய்க்கு அமெரிக்க நாட்டில் சிறந்த மருத்துவ வசதி உள்ளது
அதுவுமின்றி அன்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வித்யாசமாக பார்க்கும் வழக்கம் அங்கு இல்லை.
அதுதான் காரணம் .
அதுவுமின்றி அன்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வித்யாசமாக பார்க்கும் வழக்கம் அங்கு இல்லை.
அதுதான் காரணம் .
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
மேற்கோள் செய்த பதிவு: 1085416M.Saranya wrote:இந்த வகை நோய்க்கு அமெரிக்க நாட்டில் சிறந்த மருத்துவ வசதி உள்ளது
அதுவுமின்றி அன்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வித்யாசமாக பார்க்கும் வழக்கம் அங்கு இல்லை.
அதுதான் காரணம் .
நான் நெப்போலியன் பையனுக்கு சொல்லலை, விஜய்காந்தை சொன்னேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
மேற்கோள் செய்த பதிவு: 1085392krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், ஏன் தலைவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் போய் treatement எடுக்கிறார்கள்? எவ்வளவோ பேர் நம் நாட்டுக்கு treatement க்கு வரும்போது?????????????
மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படி செய்யலாமா? நம் நாட்டில் இல்லாத வசதிகளா? ? ?
இந்த தசை சிதைவு வியாதிக்கு இந்தியாவில் மருந்தே கிடையாது அம்மா! இதுபோன்று எனது சித்தப்பா மகனுக்கும் வந்தது. சிறு குழந்தையான அவன் கால்கள் வளைஞ்சி நடக்க ஆரம்பிச்சான். பிறகு நடக்க முடியாத நிலை தான். இன்று அவன் இல்லை. - பெங்களூரில் இது குறித்து ஏதோ ஆராய்ச்சி சென்டர் தான் இருக்கு, பூரணமாக குணமாக எந்த மருந்து ம் இதற்கு இல்லை.
நெப்போலியன் நெல்லையிலும் ஆயிரம் விளக்கிலும் இதற்கென ஆரம்பித்த முயற்சிகள் அனைத்து மூடிமறைக்கப்பட்டது நாட்டு மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். இந்த நோய் அவங்க குடும்பங்களுக்கு வந்தால் தான் அதன் அருமை தெரியும். நல்ல மனிதர் நெப்போலியன் தன் மகனுக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் வந்திருந்தால் அவர்களால் அமெரிக்கா செல்ல முடியுமா என்று உயர்ந்த நோக்குடன் இங்கு சென்டர்களை ஆரம்பித்திருக்கிறார். மிகவும் பாராட்டப்பட வேன்டிய விசயம். செய்தித்தாள்கள் எதைஎதையோ போடுறானுங்க பேப்பரில் இதை போடவேயில்லை.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
அசுரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085392krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், ஏன் தலைவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் போய் treatement எடுக்கிறார்கள்? எவ்வளவோ பேர் நம் நாட்டுக்கு treatement க்கு வரும்போது?????????????
மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படி செய்யலாமா? நம் நாட்டில் இல்லாத வசதிகளா? ? ?
இந்த தசை சிதைவு வியாதிக்கு இந்தியாவில் மருந்தே கிடையாது அம்மா! இதுபோன்று எனது சித்தப்பா மகனுக்கும் வந்தது. சிறு குழந்தையான அவன் கால்கள் வளைஞ்சி நடக்க ஆரம்பிச்சான். பிறகு நடக்க முடியாத நிலை தான். இன்று அவன் இல்லை. - பெங்களூரில் இது குறித்து ஏதோ ஆராய்ச்சி சென்டர் தான் இருக்கு, பூரணமாக குணமாக எந்த மருந்து ம் இதற்கு இல்லை.
நெப்போலியன் நெல்லையிலும் ஆயிரம் விளக்கிலும் இதற்கென ஆரம்பித்த முயற்சிகள் அனைத்து மூடிமறைக்கப்பட்டது நாட்டு மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். இந்த நோய் அவங்க குடும்பங்களுக்கு வந்தால் தான் அதன் அருமை தெரியும். நல்ல மனிதர் நெப்போலியன் தன் மகனுக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் வந்திருந்தால் அவர்களால் அமெரிக்கா செல்ல முடியுமா என்று உயர்ந்த நோக்குடன் இங்கு சென்டர்களை ஆரம்பித்திருக்கிறார். மிகவும் பாராட்டப்பட வேன்டிய விசயம். செய்தித்தாள்கள் எதைஎதையோ போடுறானுங்க பேப்பரில் இதை போடவேயில்லை.
நான் இப்போ தான் நெப்போலியன் பற்றி படித்தேன். அவர் செய்த எதுவுமே வெளி இல் தெரியலை........இதை எல்லாம் பேப்பரில் போடாதது ரொம்ப அநியாயம் தான்
ஆனால் நான் கேட்டது விஜயகாந்தை பற்றி................இங்கு கர்நாடகா விலும்ஒருவர் அம்பரீஷ் என்று அவரும் அங்கு .சிங்கப்பூர் ..........போய் தான் treatement எடுத்தார். அவரும் இவரைப்போலவே நடிகர் இப்போ அரசியல்வாதி........அது தான் கேட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
நல்லது செய்தவர்கள் யார் ஆயினும் , ஜாதி ,மதம் ,குலம்,கோத்திரம் பாராது போற்றப் படவேண்டியவர்களே .
அந்த வகையில் , நெப்போலியன் போற்றப்படவேண்டியவரே .
[b]ஒவ்வொரு கட்சியிலும்[/b] , பல்வேறு காரணங்களுக்குகாக ,சிலர் முன்னிலை அடைவதை தலைமை விரும்புவதில்லை .
ரமணியன்
அந்த வகையில் , நெப்போலியன் போற்றப்படவேண்டியவரே .
[b]ஒவ்வொரு கட்சியிலும்[/b] , பல்வேறு காரணங்களுக்குகாக ,சிலர் முன்னிலை அடைவதை தலைமை விரும்புவதில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
krishnaamma wrote:ஆனால் நான் கேட்டது விஜயகாந்தை பற்றி................இங்கு கர்நாடகா விலும்ஒருவர் அம்பரீஷ் என்று அவரும் அங்கு .சிங்கப்பூர் ..........போய் தான் treatement எடுத்தார். அவரும் இவரைப்போலவே நடிகர் இப்போ அரசியல்வாதி........அது தான் கேட்டேன்
உள்ளூரில் சிகிச்கை பண்ணிக்கொண்டால் அனைத்து விபரங்களும் விலாவாரியாக வெளியே தெரிந்துவிடுமே அந்த பயம் தான்.
ஒரு சில வருடங்களுக்கு முன் அப்ப முன்னணியில் இருந்த ஒரு நடிகை இப்படி தானா மருத்துவமனைக்கு சென்று அது பெரிய செய்தியாக ஆகியது
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
ஒருவேளை சிங்கப்பூர் மலேஷியா பார்டர்ல பிரச்சினை இருந்திருக்குமோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
மேற்கோள் செய்த பதிவு: 1085606யினியவன் wrote:ஒருவேளை சிங்கப்பூர் மலேஷியா பார்டர்ல பிரச்சினை இருந்திருக்குமோ?
அப்படி இருந்தா நம்மள கூப்பிடாம போக மாட்டரே தல (ஏன்னா அவருக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கோ) அங்குள்ளவங்க தஸ்சு, புஸ்னு இங்கிலீஸ் பேசினா நம்ம ஆளு நாக்க துருத்தி காமிப்பாரு..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நினைத்து நினைத்து பார்த்தேன்...
» விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக
» விஜயகாந்த்தை திமுக தேடுவதால், ஜெயலலிதாவை சந்திக்கிறார் வடிவேலு?
» நெப்போலியன் மர்மம்!
» நினைத்து நினைத்து பார்த்தேன்...
» விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக
» விஜயகாந்த்தை திமுக தேடுவதால், ஜெயலலிதாவை சந்திக்கிறார் வடிவேலு?
» நெப்போலியன் மர்மம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|