Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
Page 1 of 1
புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
புத்தகம் போற்றுதும் விமர்சனம்
நூல் : புத்தகம் போற்றுதும்
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை.
எழுத்தாக்கம்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் 636001
பேச 9790231240
மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com
வலைப்பூ www.kavivanam.blogspot.com
பக்கம் : 224 பக்கங்கள்
விலை : ரூ. 150 /-
வெளியீடு : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17
தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.
எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.
ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.
“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.
தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.
நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார். “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.
50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.
குறிப்பு ; மதுரை புத்தகத் திருவிழாவில் அறிவுக்கடல் பதிப்பகம் கடை எண் 148 இல் புத்தகம் போற்றுதும் நூல் கிடைக்கும் . .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் : புத்தகம் போற்றுதும்
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை.
எழுத்தாக்கம்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் 636001
பேச 9790231240
மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com
வலைப்பூ www.kavivanam.blogspot.com
பக்கம் : 224 பக்கங்கள்
விலை : ரூ. 150 /-
வெளியீடு : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17
தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.
எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.
ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.
“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.
தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.
நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார். “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.
50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.
குறிப்பு ; மதுரை புத்தகத் திருவிழாவில் அறிவுக்கடல் பதிப்பகம் கடை எண் 148 இல் புத்தகம் போற்றுதும் நூல் கிடைக்கும் . .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|