Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
3 posters
Page 1 of 1
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
மதுரை, ஆக 22 - முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் வருகையையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிகிறார்கள்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணையாகும். இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் 5 மாவட்ட பாசன விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆரம்ப காலத்தில் 152 அடியாக இருந்தது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் 142 அடியாகவும், 136 அடியாகவும் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சட்டத்தின் வாயிலாக போராட்டம் நடத்தி டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மத்திய அரசுடன் போராடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டத்தின் வாயிலாக பெற்றுத் தந்துள்ளார். அவரது துணிச்சல் மிக்க நடவடிக்கையை பாராட்டி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா மதுரை ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானத்தில் நடக்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழாவை நடத்துவது பொருத்தமானது என்று விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்து இந்த பாராட்டு விழாவை இன்று நடத்துகிறார்கள். மதுரை ரிங் ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. இந்த விழாவிற்காக மஸ்தான்பட்டி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை, மக்கள் அமரும் வகையில் பந்தலுடன் கூடிய திடல், சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு விழா நடைபெறும் ரிங் ரோடு மஸ்தான்பட்டி மேடைக்கு வருகிறார். விழா சரியாக 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவிற்கு கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் வெ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மான குழு தலைவர் இரா. அருள்பிரகாசம் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம், நத்தம் இரா. விஸ்வநாதன், செல்லூர் கே. ராஜூ, எஸ். கோகுல இந்திரா, எஸ். சுந்தர்ராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். மதுரைவீரன், விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பனையூர் அ. அழகுசேர்வை, அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்துகிறார். இறுதியாக வைகை - கிருதுமால் நதி பாசன பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ஆலாத்தூர் கே. கோவிந்தன் நன்றி கூறுகிறார்.
இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். மேலும் விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் குடும்பம், குடும்பமாக வந்து கலந்து கொள்கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா மதுரை வருவதையொட்டி மதுரை ரிங் ரோடு பகுதி மற்றும் மைதான பகுதிகள் மின்னொளியில் பிரகாசிக்கிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக மதுரை வரும் முதல்வரை வரவேற்று மதுரை நகரில் 5 இடங்களில் ராட்சத பலூன்கள் விண்ணில் பறக்க விடப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானம் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை மற்றும் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றமும், கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு பகுதி முழுவதும் வண்ண வண்ண தோரணங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், பேனர்களும், முதல்வரின் கட்அவுட்டுகளும், ஆர்ச்சுகளும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை வரவேற்க மதுரை மக்கள் எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல்வர் வருகையை அதிமுகவினர் ஒலிபெருக்கி மூலம் மதுரை நகர் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணையாகும். இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் 5 மாவட்ட பாசன விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆரம்ப காலத்தில் 152 அடியாக இருந்தது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் 142 அடியாகவும், 136 அடியாகவும் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சட்டத்தின் வாயிலாக போராட்டம் நடத்தி டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மத்திய அரசுடன் போராடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டத்தின் வாயிலாக பெற்றுத் தந்துள்ளார். அவரது துணிச்சல் மிக்க நடவடிக்கையை பாராட்டி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா மதுரை ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானத்தில் நடக்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழாவை நடத்துவது பொருத்தமானது என்று விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்து இந்த பாராட்டு விழாவை இன்று நடத்துகிறார்கள். மதுரை ரிங் ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. இந்த விழாவிற்காக மஸ்தான்பட்டி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை, மக்கள் அமரும் வகையில் பந்தலுடன் கூடிய திடல், சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு விழா நடைபெறும் ரிங் ரோடு மஸ்தான்பட்டி மேடைக்கு வருகிறார். விழா சரியாக 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவிற்கு கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் வெ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மான குழு தலைவர் இரா. அருள்பிரகாசம் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம், நத்தம் இரா. விஸ்வநாதன், செல்லூர் கே. ராஜூ, எஸ். கோகுல இந்திரா, எஸ். சுந்தர்ராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். மதுரைவீரன், விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பனையூர் அ. அழகுசேர்வை, அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்துகிறார். இறுதியாக வைகை - கிருதுமால் நதி பாசன பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ஆலாத்தூர் கே. கோவிந்தன் நன்றி கூறுகிறார்.
இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். மேலும் விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் குடும்பம், குடும்பமாக வந்து கலந்து கொள்கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா மதுரை வருவதையொட்டி மதுரை ரிங் ரோடு பகுதி மற்றும் மைதான பகுதிகள் மின்னொளியில் பிரகாசிக்கிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக மதுரை வரும் முதல்வரை வரவேற்று மதுரை நகரில் 5 இடங்களில் ராட்சத பலூன்கள் விண்ணில் பறக்க விடப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானம் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை மற்றும் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றமும், கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு பகுதி முழுவதும் வண்ண வண்ண தோரணங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், பேனர்களும், முதல்வரின் கட்அவுட்டுகளும், ஆர்ச்சுகளும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை வரவேற்க மதுரை மக்கள் எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல்வர் வருகையை அதிமுகவினர் ஒலிபெருக்கி மூலம் மதுரை நகர் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிய முதல்வர்
மதுரை, ஆக. 22 - அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது 13 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மக்கள் தலைவராக இருக்கும் ஒருவர் தன் மக்களை பற்றி சிந்திக்கக்கூடாது. நாட்டு மக்களைப்பற்றிதான் அவர்கள் சிந்திக்க வேண்டும். தலைவர்களுக்கு வாரிசுகள் இருக்கக்கூடாது என்று ஒரு கிரேக்க பேரறிஞர் கூறியிருக்கிறார். அப்போதுதான் அவர்களால் மக்கள் தொண்டை செவ்வனே செய்ய முடியும். அந்த அடிப்படையில் தமிழக மக்களுக்கு தன்னையே அர்ப்பணம் செய்தவர் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற கொள்கையை பின்பற்றி திறம்பட ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி நாள்தோறும் அவர் சிந்தித்து வருகிறார். அந்த சிந்தனையில் உருவான திட்டங்கள் பலப்பல.
தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திருக்கோயில் அன்னதான திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் என்று மக்களுக்காக பல திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் வாயில்லா ஜீவன்களையும் மறக்கவில்லை. அந்த அடிப்படையில் அவர் கொண்டுவந்த ஒப்பற்ற திட்டம்தான் யானைகள் நலவாழ்வுத்திட்டம். இப்படி முந்தைய ஆட்சியில் பல புரட்சி திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போதைய ஆட்சியில் மேலும் பல திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திறன் வேலை வாய்ப்பு திட்டம். இப்படி அவரின் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயிகள் நலனில் பெரும் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச்செய்த பெருமை முதல்வரையே சேரும். இது அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அவரே கூறியிருக்கிறார். அடுத்து அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது.
கேரளாவின் கொட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதிலும் மகத்தான வெற்றி பெற்றார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த வழக்கில் கேரள மாநில அரசை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மீண்டும் அனுமதி அளித்தது. அதன்படி சமீபத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஷட்டர்கள் இறக்கப்பட்டுள்ளன. இப்படி காவிரி பிரச்சினயாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி. விவசாயிகளுக்காக போராடி அதில் மகத்தான வெற்றி கண்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்னும் ஒரு விஷயத்தில்தான் அவருக்கு வெற்றிக்கனி கிடைக்க வேண்டும். அதுதான் கச்சத்தீவு பிரச்சினையாகும். கச்சத்தீவையும் முதல்வர் மீட்டுவிட்டால் அவரது புகழை எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
மதுரை, ஆக. 22 - அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது 13 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மக்கள் தலைவராக இருக்கும் ஒருவர் தன் மக்களை பற்றி சிந்திக்கக்கூடாது. நாட்டு மக்களைப்பற்றிதான் அவர்கள் சிந்திக்க வேண்டும். தலைவர்களுக்கு வாரிசுகள் இருக்கக்கூடாது என்று ஒரு கிரேக்க பேரறிஞர் கூறியிருக்கிறார். அப்போதுதான் அவர்களால் மக்கள் தொண்டை செவ்வனே செய்ய முடியும். அந்த அடிப்படையில் தமிழக மக்களுக்கு தன்னையே அர்ப்பணம் செய்தவர் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற கொள்கையை பின்பற்றி திறம்பட ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி நாள்தோறும் அவர் சிந்தித்து வருகிறார். அந்த சிந்தனையில் உருவான திட்டங்கள் பலப்பல.
தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திருக்கோயில் அன்னதான திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் என்று மக்களுக்காக பல திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் வாயில்லா ஜீவன்களையும் மறக்கவில்லை. அந்த அடிப்படையில் அவர் கொண்டுவந்த ஒப்பற்ற திட்டம்தான் யானைகள் நலவாழ்வுத்திட்டம். இப்படி முந்தைய ஆட்சியில் பல புரட்சி திட்டங்களை கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போதைய ஆட்சியில் மேலும் பல திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திறன் வேலை வாய்ப்பு திட்டம். இப்படி அவரின் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயிகள் நலனில் பெரும் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச்செய்த பெருமை முதல்வரையே சேரும். இது அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அவரே கூறியிருக்கிறார். அடுத்து அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது.
கேரளாவின் கொட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதிலும் மகத்தான வெற்றி பெற்றார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த வழக்கில் கேரள மாநில அரசை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மீண்டும் அனுமதி அளித்தது. அதன்படி சமீபத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஷட்டர்கள் இறக்கப்பட்டுள்ளன. இப்படி காவிரி பிரச்சினயாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி. விவசாயிகளுக்காக போராடி அதில் மகத்தான வெற்றி கண்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்னும் ஒரு விஷயத்தில்தான் அவருக்கு வெற்றிக்கனி கிடைக்க வேண்டும். அதுதான் கச்சத்தீவு பிரச்சினையாகும். கச்சத்தீவையும் முதல்வர் மீட்டுவிட்டால் அவரது புகழை எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
நல்லது செய்து மக்களை அவை அடைந்தால் நிச்சயம் பெருமை படுவோம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
நம்ம அதாவது எங்க மாமா அங்கள் தலைமையில தான் அந்த நிகழ்ச்சி நடக்குதாம். போன வாரமே மாமா அங்கள் சிறப்பு விமானத்துல சென்னை போயிருக்காரு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» இடஒதுக்கீடு-ஜெயலலிதாவுக்கு வன்னியர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா
» "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
» விஜயகாந்த்-ஜெ படங்கள் : முதல்வர் பதவி ஏற்பு விழா.முதல் முறையாக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஒரே விழாவில் சந்திப்பு...
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
» "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
» விஜயகாந்த்-ஜெ படங்கள் : முதல்வர் பதவி ஏற்பு விழா.முதல் முறையாக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஒரே விழாவில் சந்திப்பு...
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|