ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு

Go down

 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Empty மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு

Post by சிவா Thu 21 Aug 2014 - 6:55



விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்தது. இந்த முறை கேல்ரத்னா விருதுக்கு யாரையும் பரிந்துரைப்பதில்லை என்று முடிவு செய்த தேர்வு கமிட்டி, அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஸ்குவாஷ் வீராங்கனை அனகா அலங்காமணி, குத்துச்சண்டை வீரர் ஜெய் பக்வான் உள்பட 15 பேரை தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. விருதுப்பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இதற்கிடையே, அர்ஜூனா விருதுக்கு 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியவரான இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் கசிந்தது. இதனை கேள்விப்பட்டதும் கொதித்து போன மனோஜ்குமார், என் மீது எந்தவிதமான ஊக்கமருந்து புகாரும் கிடையாது. அர்ஜூனா விருதுக்கு நான் தகுதியானவன், எனது பெயரை விடுவித்தது தவறு என்று போர்க்கொடி தூக்கினார்.

இதையடுத்து மனோஜ்குமாரின் பெயரை விருது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது சகோதரர் மத்திய விளையாட்டு செயலாளரை சந்தித்து பேசினார். சர்ச்சை கிளம்பியதன் எதிரொலியாக விருது கமிட்டியினர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) ரைடக்டர் ஜெனரல் ஜிஜி தாம்சனும் இந்த கமிட்டியில் ஒருவர். மேற்கொண்டு 7 வீரர், வீராங்கனைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருது பட்டியலில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மனோஜ்குமார், தனக்கு நிவாரணம் கிடைக்க கோர்ட்டு படிக்கட்டு ஏற முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக மனோஜ்குமார் நேற்று கூறியதாவது:-

எனது மூத்த சகோதரர் கடந்த 13-ந்தேதி மத்திய விளையாட்டு செயலாளர் அஜித் ஷரனை சந்தித்து பேசினார். அப்போது, நான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவன் என்று விளையாட்டு அமைச்சகம் தவறாக நினைத்து விட்டதாக விளையாட்டு செயலாளர் எனது சகோதரரிடம் ஒப்புக்கொண்டார். அடுத்து நடைபெறும் விருதுக்கான மறுஆய்வு பட்டியலில் எனது பெயர் கூடுதலாக சேர்க்கப்படும் என்று அவர் எனது சகோதரரிடம் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி ‘சாய்’ ரைடக்டர் ஜெனரலும் மறுநாள் என்னை அழைத்து பேசி, அர்ஜூனா விருது பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதாக உறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இப்போது அவர்கள் பின்வாங்கி விட்டனர். ஆசிய விளையாட்டுக்கான அணித்தேர்வு பயிற்சி முகாம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையால் நான் மனஅழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறேன்.

முதலில், நான் ஊக்கமருந்தில் சிக்கியவன் என்று தவறாக கூறி எனது பெயரை கெடுத்தனர். அடுத்து எனக்கு அளித்த வாக்குறுதியை மீறி நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். இது என்னை அவமதிப்பதாகும்.

இவ்வாறு மனோஜ்குமார் கூறினார்.

மனோஜ்குமாரின் சகோதரரும், பயிற்சியாளருமான ராஜேஷ்குமார் கூறுகையில், ‘எனது சகோதரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரை இது போன்று நடத்தினால், பிறகு எப்படி அவர்களுக்கு மேலும் வெற்றிகளை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் வரும்? எங்களுக்கு நீதி கிடைக்க விரைவில் சண்டிகார் ஐகோர்ட்டில் மத்திய விளையாட்டு அமைச்சகம் மீதுவழக்கு தொடருவோம். அதற்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வோம்.

இப்போது இல்லாவிட்டாலும் மனோஜ்குமாருக்கு பிறகு விருது கிடைக்கும் என்று தாம்சன் கூறுகிறார். அது எப்படி முடியும்? மனோஜ்குமார், 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். ஆனால் அடுத்த ஆண்டு அர்ஜூனா விருது தேர்வின் போது இவரது இச்சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஏனெனில் அர்ஜூனா விருதுக்கு கடைசி 4 ஆண்டு செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இதன்படி அடுத்த ஆண்டு விருதின் போது 2011-ம் ஆண்டில் இருந்து வீரர்களின் சாதனை விவரங்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்’ என்றார்.

[thanks]மாலைமலர்[/thanks]


 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» எதியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி ஏன்?-பரத்வாஜ் அறிக்கை
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
» ஆ.ராசா மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு
» மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum