Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்
2 posters
Page 1 of 1
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்
செட்டிநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல் ஊர் காரைக்குடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திங்கள் மகநாள் தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவில் பங்குபெறாத சொற்பொழிவாளர்களோ, தமிழ் அறிஞர்களோ இல்லை எனும் அளவிற்கு காரைக்குடி கம்பன் விழா சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான கழனிவாசல் குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இடையே போர் நடைபெற்றபோது கழனி வாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாக குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோவில் ஏழகப் பெருமாள் என்று இப்போதும் வழங்கப்படுகிறது.
காரைக்குடி பெயர் எப்படி வந்தது?
உலகத்திலேயே முதன்முதலாக மொழியைத் தெய்வமாக்கிக் கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவியவரான கம்பன் அடிபொடி சா.கணேசனுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த்தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
தமிழ்த்தாய் கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோடி கொடுத்த கொடைஞன் வள்ளல் அழகப்பர் உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.
காரைக்குடி எனப் பெயர் பெற்று விளங்கும் இவ்வூர் காரைச்செடி மிக்கமையால் வந்த பெயராகும். காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் காரைக்குடி எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
தமிழ்த்தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கம்பன் அடிபொடி சா.கணேசனின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 23-4-1975 அன்று தமிழ்த்தாய் கோவிலுக்கு கால்கோள் விழா நடந்தது. பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிபொடி சா.கணேசனும், சிற்ப கலா சாகரம் ம.வைத்திய நாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோவிலின் இறுதிக்கட்டப்பணிக்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெருமுயற்சியால் தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிப்பணிகள் நிறைவேறின. பிறகு கருணாநிதியால் தமிழ்த்தாய் கோவில் 16-4-1993 அன்று திறக்கப்பட்டு தொடர்ந்து தமிழ் வழிபாடு நிகழ்ந்து வருகிறது.
காரைக்குடி பெயர் எப்படி வந்தது?
உலகத்திலேயே முதன்முதலாக மொழியைத் தெய்வமாக்கிக் கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவியவரான கம்பன் அடிபொடி சா.கணேசனுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த்தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
தமிழ்த்தாய் கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோடி கொடுத்த கொடைஞன் வள்ளல் அழகப்பர் உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.
காரைக்குடி எனப் பெயர் பெற்று விளங்கும் இவ்வூர் காரைச்செடி மிக்கமையால் வந்த பெயராகும். காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் காரைக்குடி எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
தமிழ்த்தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கம்பன் அடிபொடி சா.கணேசனின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 23-4-1975 அன்று தமிழ்த்தாய் கோவிலுக்கு கால்கோள் விழா நடந்தது. பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிபொடி சா.கணேசனும், சிற்ப கலா சாகரம் ம.வைத்திய நாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோவிலின் இறுதிக்கட்டப்பணிக்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெருமுயற்சியால் தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிப்பணிகள் நிறைவேறின. பிறகு கருணாநிதியால் தமிழ்த்தாய் கோவில் 16-4-1993 அன்று திறக்கப்பட்டு தொடர்ந்து தமிழ் வழிபாடு நிகழ்ந்து வருகிறது.
Re: தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்
திருக்கோவில் அமைப்பு
தமிழ்த்தாய் கோவில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணிமண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது. மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறுநிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்து காணப்படுகிறது. தமிழ்த்தாய் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வடகீழ் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய் கோவிலின் நுழை வாயிலின் முன் ஓலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.
தமிழ்த்தாயின் திருவுருவ அமைதி
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி யளிக்கின்றாள். வலது முன்கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்ராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக் கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறு, இடதுகால் மடிந்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த் தாயின் கால்களைச்சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன என்று ம.வைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.
வழிபாட்டு நெறிமுறைகள்
மலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேயே படைக்கப்பெறும். ஒவ் வொரு மாதமும் முதல்நாள் திருவுருங்கட்கு எண்ணெய் சார்த்தித் திரு நீராட்டுச் செய்யப் பெறும்.
மூர்த்திக்கட்கு திருநீராட்டு செய்யும்போது அதற்கென்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப்பெறும்.)
தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருங் கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.
மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் எங்கமில்லாத தமிழ்த்தாய் கோவிலை வெங்கா தலைமையிலான கம்பன் அற நிலை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறது. இந்தக் கோவில் தமிழுக்கும், தமிழகத்துக்கும் என்றும் சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.
தமிழ்த்தாய் கோவில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணிமண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது. மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறுநிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்து காணப்படுகிறது. தமிழ்த்தாய் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வடகீழ் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய் கோவிலின் நுழை வாயிலின் முன் ஓலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.
தமிழ்த்தாயின் திருவுருவ அமைதி
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி யளிக்கின்றாள். வலது முன்கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்ராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக் கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறு, இடதுகால் மடிந்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த் தாயின் கால்களைச்சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன என்று ம.வைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.
வழிபாட்டு நெறிமுறைகள்
மலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேயே படைக்கப்பெறும். ஒவ் வொரு மாதமும் முதல்நாள் திருவுருங்கட்கு எண்ணெய் சார்த்தித் திரு நீராட்டுச் செய்யப் பெறும்.
மூர்த்திக்கட்கு திருநீராட்டு செய்யும்போது அதற்கென்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப்பெறும்.)
தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருங் கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.
மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் எங்கமில்லாத தமிழ்த்தாய் கோவிலை வெங்கா தலைமையிலான கம்பன் அற நிலை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறது. இந்தக் கோவில் தமிழுக்கும், தமிழகத்துக்கும் என்றும் சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.
Re: தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்
நல்ல இருந்தது
பயனுள்ள தகவல்கள்
பயனுள்ள தகவல்கள்
Rajeswar- Guest
Re: தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்
why not post a picture of Thamil Thaai..
prabas- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 26/02/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காரைக்குடி தமிழ்த்தாய் கோயில்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» தமிழ்த்தாய்
» தமிழ்த்தாய் வாழ்த்து
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» தமிழ்த்தாய்
» தமிழ்த்தாய் வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|