ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்

Go down

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் Empty இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்

Post by சிவா Fri Aug 08, 2014 1:51 am

புதுடெல்லி:  குழந்தைகள் காணாமல்போனால் பெற்றோருக்கு ஏற்படும் பதைபதைப்பு அதனை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போவதாகவும், இதில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்றும் கூறி அதிரவைக்கிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின்  புள்ளிவிவர ஆவணங்கள்.

இந்தியாவில் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆண்டுக்கு 1.70 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக்கேட்ட உச்ச நீதிமன்றம் கடும் கோபமடைந்து, இப்பிரச்னையில் அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, தற்போது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்பொழுதும் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், 2011 முதல் 2014 ஆம் ஆண்டு ஜூன் வரை 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும்,  சராசரியாக ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணங்கள் கூறும் தகவல் அதிர வைப்பதாக உள்ளது. அதாவது இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாது காணாமல் போகும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் என்றும், காணாமல் போகும் குழந்தைகளில் 45 சதவீதம் பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இதனால் அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது பிச்சை எடுக்க தள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதால் இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், குழந்தைகள் அதிகம் காணாமல் போகும் மிக மோசமான மாநிலமாக மகாராஷ்ட்ரா திகழ்கிறது. இங்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 50,000 க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மத்தியபிரதேசம், டெல்லி மற்றும் ஆந்திராவில் 25,000 க்கும் குறைவான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

இதில் கவலையளிக்கக் கூடிய விஷயம் இந்த மாநிலங்கள் அனைத்திலுமே சிறுவர்களை விட பெண் குழந்தைகளே அதிக அளவில் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்ட்ராவை எடுத்துக்கொண்டால்,  இங்கு ஆண்டொன்றுக்கு 10,000 க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இது சிறுவர்களை காட்டிலும் மிக அதிகமாகும். ஆந்திராவில் 11,625 பெண் குழந்தைகளும், 6,915 சிறுவர்களும், அதேப்போன்று மத்தியபிரதேசத்தில் 15,000க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 9,000 சிறுவர்களும், டெல்லியில் 10,581 பெண் குழந்தைகளும், 9,367 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த நிலை என்றால், அண்டை நாடான பாகிஸ்தானில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 3,000 குழந்தைகள் காணாமல் போவதாக அந்நாட்டு அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை நெருக்கம் அதிகம்தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 குழந்தைகள் மட்டுமே காணாமல் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum