Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பாதை சீராகிறது!
4 posters
Page 1 of 1
ஒரு பாதை சீராகிறது!
குபேர், புவனா தம்பதியினரைப் பார்த்து, எல்லாருமே ஆச்சரியப்பட்டனர்.
'விழுந்து விழுந்து காதலிச்சு, போராடி ஜெயிச்சு, கல்யாணம் செய்தவங்க கூட, இவங்களப் போல, வாழுற மாதிரி தெரியலயே... பெத்தவங்க பாத்து, இணைச்சு வச்ச தம்பதிங்கன்னா, நம்பவா முடியுது...'
'புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியில்ல, ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாவே இருக்காங்க...' என, அந்த தெருவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லி, வியந்தனர்.
இப்படி ஊரார் மெச்சவும், பொறாமையினால் புழுங்கிக் தவிக்கும் வகையில் தான், குபேர், புவனா தம்பதியினர், வாழ்ந்து வந்தனர்.
அம்மன் தரிசனம் முடித்து, பிரகாரத்தை சுற்றி வந்த புவனா, அங்கிருந்த விஸ்தாரமான புன்னை மர நிழலில் வந்து அமர்ந்தாள்.
''அடடே ஆச்சரியமாயிருக்கே... என்ன புவனா கோவிலுக்கெல்லாம் வந்திருக்கே,'' என்று, நக்கல் குரலில் கேட்டுக் கொண்டே, அருகில் வந்து அமர்ந்தாள் பக்கத்து தெரு தேவி.
அவளைப் பார்த்து, புன்னகை செய்த புவனா, ''வெளில வந்து போறதுக்கு, எங்கக்கா நேரமிருக்கு... வீட்டு வேலைக்கே நேரம் போதல,'' என்றாள் சலிப்புடன்.
''பெண் ஜென்மங்கன்னாலே, ஜென்மத்துக்கும் வீட்டு வேலைங்க இருந்துட்டே தான் இருக்கும். அதுல கொஞ்சம் நேரம் ஒதுக்கித்தான், இது போல வந்து போகணும்,'' என்றாள் தேவி.
பிரகாரத்தை சுற்றுபவர்களை, ஒருமுறை வேடிக்கை பார்த்து விட்டு, தேவியை நோக்கி, மையமாக சிரித்தாள் புவனா.
''சரி புவனா, நான் கிளம்புறேன்; நாள மறுநாள் கல்யாணத்துக்கு வருவே இல்ல... அங்க பாப்போம்.''
''கல்யாணமா யாருக்கு?''
''என்ன கேள்விடி இது? உன் சின்ன மாமனார் மக கல்யாணம் நாள மறுநாள் திருப்பரங்குன்றத்துல நடக்க இருக்குது... நீ என்னமோ எதுவுமே தெரியாதது மாதிரி யாருக்கு கல்யாணங்குறே... ஏன் நீ பத்திரிகையையே பாக்கலயா?'' என்று கேட்டாள்.
''பாக்கலக்கா,'' என்றாள் சன்னமான குரலில் புவனா.
ஆச்சரியமாக பார்த்த தேவி, ''என்னடி இது ஆச்சரியமா இருக்கு. நாள மறுநா கல்யாணத்துக்கு இன்னமுமா பத்திரிகை தராம இருக்காங்க?''
''தந்திருப்பாங்க, நான் பாக்காம இருந்திட்டேன் போலிருக்கு,'' என்று, சமாளிக்க முயன்றாள் புவனா.
''அதெப்படி புவனா... கல்யாணத்தில முக்கியமான உறவே நீங்க தான்; பெண்ணோட பெரியப்பா, உன் மாமனார். நீ பத்திரிகையையே
பாக்கலன்னாக் கூட, கல்யாணப் பேச்சு வந்திருக்குமே... கல்யாணத்துக்கு போறத பத்தி பேசியிருப்பாங்களே!''
''என் காது பட ஒண்ணும் பேசிக்கலக்கா.''
''உன் புருஷன், கல்யாணப் பெண்ணுக்கு அண்ணன் முறை; அவன் கூடவா, இதுவரை ஒண்ணுஞ் சொல்லாம இருக்கான்?''என்று கேட்டாள் தேவி.
''சொல்லலக்கா.''
''நல்ல குடும்பமா இருக்கே,'' என்று சலிப்புடன் கூறியவள், புவனாவை ஆழ்ந்து பார்த்தாள்.
அவள் இப்படிக் கூறியது, 'சுருக்'கென்று, நெஞ்சில் குத்தியது போல் இருந்தது புவனாவிற்கு.
'இவ்வளவு முக்கியமான கல்யாணத்தப் பத்தி, இதுவர நம்மட்ட யாரும் எதுவுமே கூறலன்னா என்ன அர்த்தம்... எல்லாரும் என்ன அலட்சியம் செய்கிறாங்கன்னு தானே அர்த்தம்...'என்று நினைத்தவளுக்கு, தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டார் மீது கோபம் வந்தது.
''சரி புவனா, போன மாதம், கனகு மாமா பேத்தியோட, மஞ்சள் நீராட்டு விழாவுல, உங்க வீட்டு ஆளுக யாரையும் காணோமே,'' என்று கேட்டபடி, அவளையே ஊன்றிப் பார்த்தாள் தேவி.
'மஞ்சள் நீராட்டு விழாவுக்கென்று, வீட்லருந்து யாருமே போனதாக நினைவு இல்லயே...'என்று நினைத்தாள்.
''புவனா, நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே... நம்ப சொந்த பந்தங்களோட வீட்டு விசேஷங்களுக்கு, உங்க வீட்டுலருந்து யாரும் வந்து போனதாகவே தெரியலயே... ஏன், நீங்க யாரோட விசேஷங்களுக்கும் போறதே இல்லியா?''என்று கேட்டாள்.
''அப்படி ஒண்ணும் இல்லக்கா.''
''சரி பாக்கலாம்... திருப்பரங்குன்றம் கல்யாணத்துக்கு உங்க வீட்ல இருந்து யார் யார் வரீங்கன்னு.''
குரலில் தென்பட்ட கிண்டல், அம்பாய் வந்து புவனாவின் இதயத்தைக் குத்தியது.
யோசித்துப் பார்த்தாள் புவனா. அவள் திருமணம் நடந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலக்கட்டத்தில், ஏதோ ஒன்றிரண்டு விழாக்களில் கலந்து கொண்டதாய் தான் நினைவுக்கு வருகிறதே தவிர. மற்ற வீட்டினரைப் போன்று, அடிக்கடி உறவினர் வீடுகளுக்குப் போனதோ, உறவினர் வீட்டு விழாக்களில், குடும்பத்தோடு கலந்து கொண்டதோ இல்லை என்று தான் பட்டது.
இந்த உண்மையை, ஓர் அவமானமாக உணர்ந்தாள்.
அண்டை வீட்டு ஜனங்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக உறவினர், தெரிந்தவர் வீட்டு விசேஷங்கள் என, அமர்க்களமாகப் புறப்பட்டுப் போவர். அதை வேடிக்கை பார்த்ததுண்டு. ஆனால், தன் குடும்பத்தாரும் ஏன் இப்படியெல்லாம் போகவில்லை என்று நினைத்துப் பார்த்ததில்லை.
இப்போது, தேவி கேட்ட பிறகு, அது ஒரு கேள்வியாக மனதுக்குள் எழுந்தது.
''சரிக்கா கல்யாண வீட்ல பாக்கலாம்; நேரமாச்சு வர்றேன்,'' என்றபடி கிளம்பிய புவனாவின் அடிமனதில் புயல்!
''பாக்கலாம்... பாக்கலாம்...'' என்று, நக்கலாகக் கூறிய, தேவியும் கிளம்பினாள்.
''என்னங்க... உங்க சித்தப்பா மகளுக்குக் கல்யாணமாமே?'' என்று, கேட்டாள் புவனா.
''ஆமா, சொல்லிக்கிட்டாங்க,'' என்றான் குபேர் அலட்சியமாக.
''என்னது! சொல்லிக்கிட்டாங்களா... அப்ப உங்க சித்தப்பா வந்து பத்திரிகை தரலியா?'' என்று கேட்டாள்.
''இல்ல.''
''ஏன்?''
மவுனமாக இருந்தான் குபேர்.
''என்னங்க, இது அநியாயம்... நீங்க இல்லாம உங்க தங்கச்சிக்கு கல்யாணமா?''
''அழைச்சால்ல போக முடியும்!''
''அவங்க, ஏங்க அழைக்கலே?''
மவுனமாக இருந்தான் குபேர்.
''அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம், உறவினர் வீடு, தெரிஞ்சவங்க வீடுன்னு பங்ஷனுக்கு அடிக்கடி வெளியில போய்ட்டு வர்றாங்க. ஆனா, நம்ப வீட்ல மட்டும் ஏங்க எங்கயுமே போறதில்ல?'' என்று, எரிச்சலையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு கேட்டாள்.
''இத உன் மாமனார் கிட்டப் போய்க் கேளு; உறவையும், நட்பையும் அண்ட விடாம கத்திரிச்சு போடுறது, அவர் தான்.''
''என்னங்க, இப்படிச் சொல்றீங்க?''
''உண்மை தான் புவனா. அப்பாவுக்குக் காசு தான் கடவுள்; சொத்தும், பத்தும் தான், உறவும், நட்பும். உறவினரோடு ஒட்டிப் பழகிட்டா பணங்காசுக்கு வேட்டுன்னு நினைக்கிறவர். எங்க சித்தப்பா, அவங்க பையன் படிக்கிறதுக்கு கொஞ்சம் பண உதவி கேட்டாரு. உடனே, இது மாதிரி உதவி கேட்டு, அவரு வந்துறக் கூடாதுன்னு, வம்புச் சண்டை போட்டு, பேச்சு வார்த்தையே, இல்லாம செய்துட்டார். மீறி வந்தப்ப, அவமானப்படுத்தி விரட்டிட்டார். அப்புறம் எப்படி, அவங்க கல்யாண பத்திரிகை வெப்பாங்க... நம்ப கல்யாணத்துக்கும் சித்தப்பாவையோ, அத்தைமார்களையோ அழைக்கவே இல்ல. அதுபோல உறவுகளையும், நட்புகளையும் கூட வெட்டி விட்டுட்டார். அப்புறம் யார் வருவாங்க... சொத்தையும், பணத்தையும் தான் நமக்கு குவிச்சு வச்சிருக்கார்,'' என்றான் ஏக்கத்துடன் குபேர்.
''மாமாவோட இந்த நடவடிக்கைய நீங்க சரின்னு ஏத்துக்கிறீங்களா?'' என்று கேட்டாள்.
''இது தப்புன்னு எனக்கு தெரியுது புவனா; நானும் சொல்லிப் பாத்தேன். ஏன், சண்ட கூட போட்டுப் பாத்துட்டேன். கேட்க மாட்டேன்கிறார்.''
ஒரு நிமிடம் யோசனை பண்ணிய புவனா, ''சரி வாங்க. நாம்ப சேர்ந்து போய், இதப் பத்தி அவருகிட்ட பேசுவோம்,''என்றாள் அழுத்தமான குரலில்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமனார் அருகில் வந்த புவனா, ''மாமா, நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றாள்.
கணவன், மனைவி இருவரும் இணைந்து வந்து நின்ற தோரணயைப் பார்த்து, யோசனையுடன், ''சொல்லுமா என்ன விஷயம்,'' என்று கேட்டார்.
''மாமா... உங்களுக்கு வேணா, எந்த சொந்த பந்தமும் தேவையில்லாம இருக்கலாம்; ஆனா, எங்களுக்கு உறவுகளும், நட்புகளும் வேணும் மாமா. உங்களப் போல ஒண்டியா இருக்க எங்களுக்கு பிடிக்கல. அதனால, நாள மறுநாள் நடக்கப் போகிற உங்க தம்பி மக கல்யாணத்துக்கு, நாங்க ரெண்டு பேரும், பிள்ளைகளோட கலந்துக்க போறோம். அவங்க பத்திரிகை தரலேன்னாலும் பரவால்ல, நாங்க உறவுகளை இழக்கத் தயாராய் இல்லே,'' என்று கூறியவளை இடைமறித்த நமச்சிவாயம், ''ஓ... அவ்வளவு தூரம், வந்துட்டீங்களா... ரொம்பச் சந்தோஷம். ஆனா, அங்கே நீங்க போனா, அதுக்குப் பின்னாடி, இந்த வீட்ல கால் வைக்கக் கூடாது; சொத்துல, கால் காசுகூடத் தர மாட்டேன்,'' என்றார் கடுமையான குரலில்.
''ரொம்பச் சந்தோஷம் மாமா. கல்யாணத்துக்குப் போறதுக்கு முன்னாடி, வேற வீடு பாத்துட்டு போயிடுறோம். உங்க சொத்தும், பணமும் உங்ககிட்டயே இருக்கட்டும். காசு, பணத்த எப்ப வேணா, யாரு வேணும்ன்னாலும் சம்பாதிக்க முடியும். ஆனா, இழந்து போன உறவுகளையும், நட்புக்களையும் அவ்வளவு சுலபமா மறுபடியும் சம்பாதிச்சிட முடியாது. உறவுகளோட உறவாடவும், நட்புக்களோட நேசம் பாராட்டவும் தான், நாங்க விரும்புறோம். இப்படி ஒத்தைப் பனைமரம் போல, அத்துவானக்காட்டுக்குள்ளே நின்னு தவிக்கிற தவிப்பை நாங்க விரும்பலே. உங்க மகன் சொல்லியே கேட்காத நீங்க, நான் சொல்லியா கேட்டுறப் போறீங்க?'' என்றாள்.
மருமகள் பேசுவதை கதவோரம் நின்னு கேட்டுக் கொண்டிருந்த நமச்சிவாயத்தின் மனைவி, ''குபேர்... என் கொழுந்தன் மக கல்யாணத்துக்கு நானும் வர்றேம்ப்பா. உங்களோட என்னையும் கூட்டிட்டு போங்க,'' என்றாள்.
''சரிம்மா, நாம எல்லாரும் சந்தோஷமா கல்யாணத்துக்கு போய்ட்டு வரலாம். நம்மள பாத்தா, அவங்க சந்தோஷத்தோட வரவேற்பாங்க,'' என்றான், உற்சாகக் குரலில் குபேர்.
மனைவி, மகன், மருமகள் மூவரும் ஒன்றாக இணைந்து விட்டதை உணர்ந்த நமச்சிவாயம், முதன் முதலாக தான் தணித்து நிற்பதை போல், உணர்ந்தார்.
'இவங்க எல்லாரும் போன பிறகு, இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும் எப்படி இருப்பது...இளமை முறுக்கில எவருமே தேவையில்ல, பணம் மட்டும் இருந்தா போதும்ன்னு நெனச்சது தவறாகிப் போச்சே...' என்று, மனதிற்குள் வருந்தத் தொடங்கினார்.
'யாருக்காக உறவ மறுத்து, நட்பை வெறுத்து, பணமாய் குவிச்சாரோ, அவங்களே இப்போ பணம் வேணாம்; உறவு தான் வேணும்ன்னு சொல்லி, புறப்படும் போது, அந்திம காலத்தில், நான் மட்டும் பணத்த மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்றது...' என்று நினைத்தவர், ''குபேர்... நானும் வர்றேன்ப்பா; எல்லாரும் சேந்தே கல்யாணத்துக்குப் போகலாம்,'' என்றார் சற்றே கூச்சத்துடன்.
அனைவரும் திரும்பி, அவரை வியப்புடன் பார்த்து, மகிழ்ந்தனர்.
ஒரு தப்பை, எதிர்ப்பினால் மட்டுமே சரிசெய்ய முடியும்; இங்கே, இப்போது, சரி செய்யப்பட்டதைப் போல.
உமாகல்யாணி
'விழுந்து விழுந்து காதலிச்சு, போராடி ஜெயிச்சு, கல்யாணம் செய்தவங்க கூட, இவங்களப் போல, வாழுற மாதிரி தெரியலயே... பெத்தவங்க பாத்து, இணைச்சு வச்ச தம்பதிங்கன்னா, நம்பவா முடியுது...'
'புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியில்ல, ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாவே இருக்காங்க...' என, அந்த தெருவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லி, வியந்தனர்.
இப்படி ஊரார் மெச்சவும், பொறாமையினால் புழுங்கிக் தவிக்கும் வகையில் தான், குபேர், புவனா தம்பதியினர், வாழ்ந்து வந்தனர்.
அம்மன் தரிசனம் முடித்து, பிரகாரத்தை சுற்றி வந்த புவனா, அங்கிருந்த விஸ்தாரமான புன்னை மர நிழலில் வந்து அமர்ந்தாள்.
''அடடே ஆச்சரியமாயிருக்கே... என்ன புவனா கோவிலுக்கெல்லாம் வந்திருக்கே,'' என்று, நக்கல் குரலில் கேட்டுக் கொண்டே, அருகில் வந்து அமர்ந்தாள் பக்கத்து தெரு தேவி.
அவளைப் பார்த்து, புன்னகை செய்த புவனா, ''வெளில வந்து போறதுக்கு, எங்கக்கா நேரமிருக்கு... வீட்டு வேலைக்கே நேரம் போதல,'' என்றாள் சலிப்புடன்.
''பெண் ஜென்மங்கன்னாலே, ஜென்மத்துக்கும் வீட்டு வேலைங்க இருந்துட்டே தான் இருக்கும். அதுல கொஞ்சம் நேரம் ஒதுக்கித்தான், இது போல வந்து போகணும்,'' என்றாள் தேவி.
பிரகாரத்தை சுற்றுபவர்களை, ஒருமுறை வேடிக்கை பார்த்து விட்டு, தேவியை நோக்கி, மையமாக சிரித்தாள் புவனா.
''சரி புவனா, நான் கிளம்புறேன்; நாள மறுநாள் கல்யாணத்துக்கு வருவே இல்ல... அங்க பாப்போம்.''
''கல்யாணமா யாருக்கு?''
''என்ன கேள்விடி இது? உன் சின்ன மாமனார் மக கல்யாணம் நாள மறுநாள் திருப்பரங்குன்றத்துல நடக்க இருக்குது... நீ என்னமோ எதுவுமே தெரியாதது மாதிரி யாருக்கு கல்யாணங்குறே... ஏன் நீ பத்திரிகையையே பாக்கலயா?'' என்று கேட்டாள்.
''பாக்கலக்கா,'' என்றாள் சன்னமான குரலில் புவனா.
ஆச்சரியமாக பார்த்த தேவி, ''என்னடி இது ஆச்சரியமா இருக்கு. நாள மறுநா கல்யாணத்துக்கு இன்னமுமா பத்திரிகை தராம இருக்காங்க?''
''தந்திருப்பாங்க, நான் பாக்காம இருந்திட்டேன் போலிருக்கு,'' என்று, சமாளிக்க முயன்றாள் புவனா.
''அதெப்படி புவனா... கல்யாணத்தில முக்கியமான உறவே நீங்க தான்; பெண்ணோட பெரியப்பா, உன் மாமனார். நீ பத்திரிகையையே
பாக்கலன்னாக் கூட, கல்யாணப் பேச்சு வந்திருக்குமே... கல்யாணத்துக்கு போறத பத்தி பேசியிருப்பாங்களே!''
''என் காது பட ஒண்ணும் பேசிக்கலக்கா.''
''உன் புருஷன், கல்யாணப் பெண்ணுக்கு அண்ணன் முறை; அவன் கூடவா, இதுவரை ஒண்ணுஞ் சொல்லாம இருக்கான்?''என்று கேட்டாள் தேவி.
''சொல்லலக்கா.''
''நல்ல குடும்பமா இருக்கே,'' என்று சலிப்புடன் கூறியவள், புவனாவை ஆழ்ந்து பார்த்தாள்.
அவள் இப்படிக் கூறியது, 'சுருக்'கென்று, நெஞ்சில் குத்தியது போல் இருந்தது புவனாவிற்கு.
'இவ்வளவு முக்கியமான கல்யாணத்தப் பத்தி, இதுவர நம்மட்ட யாரும் எதுவுமே கூறலன்னா என்ன அர்த்தம்... எல்லாரும் என்ன அலட்சியம் செய்கிறாங்கன்னு தானே அர்த்தம்...'என்று நினைத்தவளுக்கு, தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டார் மீது கோபம் வந்தது.
''சரி புவனா, போன மாதம், கனகு மாமா பேத்தியோட, மஞ்சள் நீராட்டு விழாவுல, உங்க வீட்டு ஆளுக யாரையும் காணோமே,'' என்று கேட்டபடி, அவளையே ஊன்றிப் பார்த்தாள் தேவி.
'மஞ்சள் நீராட்டு விழாவுக்கென்று, வீட்லருந்து யாருமே போனதாக நினைவு இல்லயே...'என்று நினைத்தாள்.
''புவனா, நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே... நம்ப சொந்த பந்தங்களோட வீட்டு விசேஷங்களுக்கு, உங்க வீட்டுலருந்து யாரும் வந்து போனதாகவே தெரியலயே... ஏன், நீங்க யாரோட விசேஷங்களுக்கும் போறதே இல்லியா?''என்று கேட்டாள்.
''அப்படி ஒண்ணும் இல்லக்கா.''
''சரி பாக்கலாம்... திருப்பரங்குன்றம் கல்யாணத்துக்கு உங்க வீட்ல இருந்து யார் யார் வரீங்கன்னு.''
குரலில் தென்பட்ட கிண்டல், அம்பாய் வந்து புவனாவின் இதயத்தைக் குத்தியது.
யோசித்துப் பார்த்தாள் புவனா. அவள் திருமணம் நடந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலக்கட்டத்தில், ஏதோ ஒன்றிரண்டு விழாக்களில் கலந்து கொண்டதாய் தான் நினைவுக்கு வருகிறதே தவிர. மற்ற வீட்டினரைப் போன்று, அடிக்கடி உறவினர் வீடுகளுக்குப் போனதோ, உறவினர் வீட்டு விழாக்களில், குடும்பத்தோடு கலந்து கொண்டதோ இல்லை என்று தான் பட்டது.
இந்த உண்மையை, ஓர் அவமானமாக உணர்ந்தாள்.
அண்டை வீட்டு ஜனங்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக உறவினர், தெரிந்தவர் வீட்டு விசேஷங்கள் என, அமர்க்களமாகப் புறப்பட்டுப் போவர். அதை வேடிக்கை பார்த்ததுண்டு. ஆனால், தன் குடும்பத்தாரும் ஏன் இப்படியெல்லாம் போகவில்லை என்று நினைத்துப் பார்த்ததில்லை.
இப்போது, தேவி கேட்ட பிறகு, அது ஒரு கேள்வியாக மனதுக்குள் எழுந்தது.
''சரிக்கா கல்யாண வீட்ல பாக்கலாம்; நேரமாச்சு வர்றேன்,'' என்றபடி கிளம்பிய புவனாவின் அடிமனதில் புயல்!
''பாக்கலாம்... பாக்கலாம்...'' என்று, நக்கலாகக் கூறிய, தேவியும் கிளம்பினாள்.
''என்னங்க... உங்க சித்தப்பா மகளுக்குக் கல்யாணமாமே?'' என்று, கேட்டாள் புவனா.
''ஆமா, சொல்லிக்கிட்டாங்க,'' என்றான் குபேர் அலட்சியமாக.
''என்னது! சொல்லிக்கிட்டாங்களா... அப்ப உங்க சித்தப்பா வந்து பத்திரிகை தரலியா?'' என்று கேட்டாள்.
''இல்ல.''
''ஏன்?''
மவுனமாக இருந்தான் குபேர்.
''என்னங்க, இது அநியாயம்... நீங்க இல்லாம உங்க தங்கச்சிக்கு கல்யாணமா?''
''அழைச்சால்ல போக முடியும்!''
''அவங்க, ஏங்க அழைக்கலே?''
மவுனமாக இருந்தான் குபேர்.
''அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம், உறவினர் வீடு, தெரிஞ்சவங்க வீடுன்னு பங்ஷனுக்கு அடிக்கடி வெளியில போய்ட்டு வர்றாங்க. ஆனா, நம்ப வீட்ல மட்டும் ஏங்க எங்கயுமே போறதில்ல?'' என்று, எரிச்சலையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு கேட்டாள்.
''இத உன் மாமனார் கிட்டப் போய்க் கேளு; உறவையும், நட்பையும் அண்ட விடாம கத்திரிச்சு போடுறது, அவர் தான்.''
''என்னங்க, இப்படிச் சொல்றீங்க?''
''உண்மை தான் புவனா. அப்பாவுக்குக் காசு தான் கடவுள்; சொத்தும், பத்தும் தான், உறவும், நட்பும். உறவினரோடு ஒட்டிப் பழகிட்டா பணங்காசுக்கு வேட்டுன்னு நினைக்கிறவர். எங்க சித்தப்பா, அவங்க பையன் படிக்கிறதுக்கு கொஞ்சம் பண உதவி கேட்டாரு. உடனே, இது மாதிரி உதவி கேட்டு, அவரு வந்துறக் கூடாதுன்னு, வம்புச் சண்டை போட்டு, பேச்சு வார்த்தையே, இல்லாம செய்துட்டார். மீறி வந்தப்ப, அவமானப்படுத்தி விரட்டிட்டார். அப்புறம் எப்படி, அவங்க கல்யாண பத்திரிகை வெப்பாங்க... நம்ப கல்யாணத்துக்கும் சித்தப்பாவையோ, அத்தைமார்களையோ அழைக்கவே இல்ல. அதுபோல உறவுகளையும், நட்புகளையும் கூட வெட்டி விட்டுட்டார். அப்புறம் யார் வருவாங்க... சொத்தையும், பணத்தையும் தான் நமக்கு குவிச்சு வச்சிருக்கார்,'' என்றான் ஏக்கத்துடன் குபேர்.
''மாமாவோட இந்த நடவடிக்கைய நீங்க சரின்னு ஏத்துக்கிறீங்களா?'' என்று கேட்டாள்.
''இது தப்புன்னு எனக்கு தெரியுது புவனா; நானும் சொல்லிப் பாத்தேன். ஏன், சண்ட கூட போட்டுப் பாத்துட்டேன். கேட்க மாட்டேன்கிறார்.''
ஒரு நிமிடம் யோசனை பண்ணிய புவனா, ''சரி வாங்க. நாம்ப சேர்ந்து போய், இதப் பத்தி அவருகிட்ட பேசுவோம்,''என்றாள் அழுத்தமான குரலில்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமனார் அருகில் வந்த புவனா, ''மாமா, நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றாள்.
கணவன், மனைவி இருவரும் இணைந்து வந்து நின்ற தோரணயைப் பார்த்து, யோசனையுடன், ''சொல்லுமா என்ன விஷயம்,'' என்று கேட்டார்.
''மாமா... உங்களுக்கு வேணா, எந்த சொந்த பந்தமும் தேவையில்லாம இருக்கலாம்; ஆனா, எங்களுக்கு உறவுகளும், நட்புகளும் வேணும் மாமா. உங்களப் போல ஒண்டியா இருக்க எங்களுக்கு பிடிக்கல. அதனால, நாள மறுநாள் நடக்கப் போகிற உங்க தம்பி மக கல்யாணத்துக்கு, நாங்க ரெண்டு பேரும், பிள்ளைகளோட கலந்துக்க போறோம். அவங்க பத்திரிகை தரலேன்னாலும் பரவால்ல, நாங்க உறவுகளை இழக்கத் தயாராய் இல்லே,'' என்று கூறியவளை இடைமறித்த நமச்சிவாயம், ''ஓ... அவ்வளவு தூரம், வந்துட்டீங்களா... ரொம்பச் சந்தோஷம். ஆனா, அங்கே நீங்க போனா, அதுக்குப் பின்னாடி, இந்த வீட்ல கால் வைக்கக் கூடாது; சொத்துல, கால் காசுகூடத் தர மாட்டேன்,'' என்றார் கடுமையான குரலில்.
''ரொம்பச் சந்தோஷம் மாமா. கல்யாணத்துக்குப் போறதுக்கு முன்னாடி, வேற வீடு பாத்துட்டு போயிடுறோம். உங்க சொத்தும், பணமும் உங்ககிட்டயே இருக்கட்டும். காசு, பணத்த எப்ப வேணா, யாரு வேணும்ன்னாலும் சம்பாதிக்க முடியும். ஆனா, இழந்து போன உறவுகளையும், நட்புக்களையும் அவ்வளவு சுலபமா மறுபடியும் சம்பாதிச்சிட முடியாது. உறவுகளோட உறவாடவும், நட்புக்களோட நேசம் பாராட்டவும் தான், நாங்க விரும்புறோம். இப்படி ஒத்தைப் பனைமரம் போல, அத்துவானக்காட்டுக்குள்ளே நின்னு தவிக்கிற தவிப்பை நாங்க விரும்பலே. உங்க மகன் சொல்லியே கேட்காத நீங்க, நான் சொல்லியா கேட்டுறப் போறீங்க?'' என்றாள்.
மருமகள் பேசுவதை கதவோரம் நின்னு கேட்டுக் கொண்டிருந்த நமச்சிவாயத்தின் மனைவி, ''குபேர்... என் கொழுந்தன் மக கல்யாணத்துக்கு நானும் வர்றேம்ப்பா. உங்களோட என்னையும் கூட்டிட்டு போங்க,'' என்றாள்.
''சரிம்மா, நாம எல்லாரும் சந்தோஷமா கல்யாணத்துக்கு போய்ட்டு வரலாம். நம்மள பாத்தா, அவங்க சந்தோஷத்தோட வரவேற்பாங்க,'' என்றான், உற்சாகக் குரலில் குபேர்.
மனைவி, மகன், மருமகள் மூவரும் ஒன்றாக இணைந்து விட்டதை உணர்ந்த நமச்சிவாயம், முதன் முதலாக தான் தணித்து நிற்பதை போல், உணர்ந்தார்.
'இவங்க எல்லாரும் போன பிறகு, இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும் எப்படி இருப்பது...இளமை முறுக்கில எவருமே தேவையில்ல, பணம் மட்டும் இருந்தா போதும்ன்னு நெனச்சது தவறாகிப் போச்சே...' என்று, மனதிற்குள் வருந்தத் தொடங்கினார்.
'யாருக்காக உறவ மறுத்து, நட்பை வெறுத்து, பணமாய் குவிச்சாரோ, அவங்களே இப்போ பணம் வேணாம்; உறவு தான் வேணும்ன்னு சொல்லி, புறப்படும் போது, அந்திம காலத்தில், நான் மட்டும் பணத்த மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்றது...' என்று நினைத்தவர், ''குபேர்... நானும் வர்றேன்ப்பா; எல்லாரும் சேந்தே கல்யாணத்துக்குப் போகலாம்,'' என்றார் சற்றே கூச்சத்துடன்.
அனைவரும் திரும்பி, அவரை வியப்புடன் பார்த்து, மகிழ்ந்தனர்.
ஒரு தப்பை, எதிர்ப்பினால் மட்டுமே சரிசெய்ய முடியும்; இங்கே, இப்போது, சரி செய்யப்பட்டதைப் போல.
உமாகல்யாணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஒரு பாதை சீராகிறது!
ஒரு தப்பை, எதிர்ப்பினால் மட்டுமே சரிசெய்ய முடியும்; இங்கே, இப்போது, சரி செய்யப்பட்டதைப் போல. wrote:
சூப்பர்
நல்ல கதை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஒரு பாதை சீராகிறது!
அருமையான கதை....பகிர்வுக்கு மிக்க நன்றி...
Priyamudan_Priyan- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 14/04/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
» என் பாதை சத்தியத்தின் பாதை: நரேந்திர மோடி
» எகிப்தில் நிலை சீராகிறது; இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
» பாதை
» சுவனத்துப் பாதை
» என் பாதை சத்தியத்தின் பாதை: நரேந்திர மோடி
» எகிப்தில் நிலை சீராகிறது; இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
» பாதை
» சுவனத்துப் பாதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|