ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையிலே இனிமை காண முடியுமா?

2 posters

Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by சிவா Sat Feb 21, 2009 11:50 am

மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்திருப்பதுதான் உலக இயல்பு. அப்படி வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று குறிப்பிடலாம். இதிலிருந்து, மாறுபட்டு தனிமை விரும்பிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். தனிமை என்பது எல்லாவற்றையும் விடுத்து தனித்து இருப்பதாகும். ஒருவர் தனித்து இருக்கிறார் என்றால் அதற்கு தகுந்த முறையான ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வாறு காரணத்துடன் தனித்து இருக்கும் நபர் அந்த தனிமையை தற்காலிகமாகவும் கொண்டிருக்க வேண்டும். இப்படி இல்லாமல் எப்போதும் தொடர்ந்து ஒருவர் எந்த காரணமும் காரியமும் இன்றி தனித்து இருந்தால் அது ஒரு மனநோயாகும்.

எப்போதும் தனித்து இருப்பதோ அல்லது தனித்து இருக்க முயற்சிப்பதோ தவறானதாகும். அப்படி இருப்பவர்களை இனம் கண்டறிந்து அவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது அவசியம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். எல்லோருமே தனித்திருக்க, எவரையும் சார்ந்தில்லாமல் தனிமையிலிருக்க ஆரம்பித்தால் உலகம் எப்படி இருக்கும்?

மனிதன் மட்டுமில்லை அனைத்து உயிர்களுமே தனித்து வாழ முடியாது. ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால்தான் உயிர் வாழ்வது என்பது நிச்சயமான ஒன்றாக இருக்க முடியும். இது தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் யாவருக்கும் பொதுவானதாகும். ஆக, எப்போதும் ஒருவர் தொடர்ந்து தனித்து இருக்கிறார் அல்லது இருக்க முயற்சிக்கிறார் என்றால் அவர் ஏதோ ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே பொருளாகும். மனிதன் மட்டுமில்லை எல்லா உயிர்களுமே தனித்து வாழ முடியாது என்று சொல்வதற்கு காரணம், அவரவர்களின் தேவைகளை அவரவர்கள் மட்டுமே திருப்திப்படுத்திவிட முடியாது என்கின்ற ஒரு உலக பொதுத்தன்மை இருக்கின்றபொழுது யார் தனித்திருக்க, தனித்தியங்க முடியும்?

பல பணிகளுக்கு இடையில், பல மனிதர்களுக்கு மத்தியில், பல சூழ்நிலைகளுக்கு மத்தியில் உழல்கின்ற மனிதர்களுக்கு அவ்வப்போது தங்களை தளர்த்திக்கொள்ள சிறு சிறு அவகாசம் மட்டுமே கொண்ட தற்காலிகமான தனிமை தேவை. அந்த தற்காலிகமான தனிமையையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், தனது சோர்வுகளை அகற்றிக் கொள்ளவும் மனிதன் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஆக்கப்பூர்வமான தனிமை என்று பெயர். உலகத்தலைவர்களில் பலர் ஏன் சராசரி மனிதர்களிடம்கூட இந்த தற்காலிக தனிமை கொள்ளும் பழக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த தற்காலிகமான தனிமை கொள்ளும் பழக்கம் அவசியமானதும்கூட. இந்த தற்காலிகமான தனிமை இல்லையெனில் தீவிர உணர்வுவயப்பட்ட நிலையில், மன அழுத்தம் அதிகரித்த நிலையில், மன இறுக்கம் கொண்டிருக்கும் நிலையில் மனிதன் தொடர்ந்து இருக்க வேண்டியவனாகிவிடுவான். இவற்றை எல்லாம் போக்கும் விதமாக தற்காலிகமான தனிமை அவ்வப்போது மனிதர்களுக்கு அவசியம் தேவைதான்.

ஆக்கப்பூர்வமாகவும் இல்லாமல், தற்காலிகமாகவும் இல்லாமல், காரண காரியமின்றியும் தனிமை கொள்ள விரும்புபவர்கள் தீவிர மனநோயாளிகள் மட்டுமில்லை. அவர்கள் உலக சகஜ வாழ்க்கையிலிருந்து தங்களை வெளியேற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்புபவர் களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்கள் சுவாரசியமாக பேச மாட்டார்கள். பழக மறுப்பார்கள். மொத்தத்தில் வாழ்க்கையை விட்டேத்தியாகத்தான் கொள்வார்கள். இவர்களால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இருக்காது. இவர்கள் தீவிர மனநல சிகிச்சைக்கு ஆட்பட வேண்டியவர்கள்.

தனிமை வேறு, ரிசர்வ் டைப் என்பது வேறு. ரிசர்வ் டைப் என்பவர்கள் தனது தேவைக்காக மட்டுமே பிறரிடம் பேசும், பழகும் தன்மை கொண்டவர்கள். ஆனால் தனித்திருக்க விரும்புபவர்கள் தங்கள் தேவைக்காகக்கூட மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பமாட்டார்கள். தனிமை ஒரு தண்டனை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். அதனால்தான் குற்றவாளிகளை சமூகத்திலிருந்து தனித்திருக்க கட்டாயப்படுத்தி சிறையிலடைக்கிறார்கள். ஆகவே, தனிமையில் ஒருபோதும் இனிமை காண முடியவே முடியாது என்பதே நிஜம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty Re: தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by Guest Thu Jul 02, 2009 7:22 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty Re: தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by ரூபன் Thu Jul 02, 2009 8:26 pm

"தனிமை ஒரு தண்டனை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்."
அழுகை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty Re: தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by Guest Thu Jul 02, 2009 8:28 pm

நானும் தனிமையில்தான் இ௫ந்தேன் ஈகரையில் சே௫ம் முன்பு வரை
avatar
Guest
Guest


Back to top Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty Re: தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by ரூபன் Thu Jul 02, 2009 8:32 pm

சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty Re: தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by Guest Thu Jul 02, 2009 8:35 pm

ruban1 wrote:சியர்ஸ்

ரூபன்சார் நீங்க பிசியான கேப்ல சண்ட சச்சரவெல்லாம் வந்து இப்ப ஒ௫ வழியா

முடிஞ்சிட்டு
avatar
Guest
Guest


Back to top Go down

தனிமையிலே இனிமை காண முடியுமா? Empty Re: தனிமையிலே இனிமை காண முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum