Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?
2 posters
Page 1 of 1
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?
மனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணதன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. உலகில், வருடத்திற்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் மரணமடைகிறார்கள். இந்தியாவில் 25 லட்சத்திற்கு அதிகமான புற்றுநோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலைகளை அதிகரிக்கும் அநேக காரணங்கள் அடையாளங் காணப்பட்டுவிட்டன. அறிகுறிகளும் முழுமையாக உணரப்பட்டுவிட்டன. அதனால் தொடக்க நிலையிலே கண்டறிந்தால் பெரும்பாலான புற்றுநோய்களை வென்று நீண்ட காலம் வாழலாம்.
மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
சுய பரிசோதனை:
சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கண்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்துவரவேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, நுனி விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.
கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்துகொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்க்கட்டிகள் தோன்றி மறையும். அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்துவிடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுய மார்பக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
இத்தகைய சுயபரிசோதனை முறைகளை கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கைப் பாடத்திட்டமாக பயிற்றுவிக்கவேண்டும். இந்த பரிசோதனைக்கு வசதியாக பெண்களின் குளியல் அறைகளில் கண்ணாடிகள் வைப்பது நல்லது.
நவீன பரிசோதனை:
சுய பரிசோதனையில் அறிகுறிகள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், 40 வயது ஆகிவிட்டாலே பெண்கள் ‘மேமோகிராம்’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏன்என்றால் மார்பக புற்றுநோய் அறிகுறிகளை வெளிக்காட்டாமலே தோன்றி, உடலின் பல பகுதிகளுக்கு படரும் தன்மைகொண்டது. அதனால் மிகச் சிறிய அளவில் புற்றுநோய் கட்டி இருந்தாலும், மிக துல்லியமாக டிஜிட்டல் மேமோகிராம் கண்டுபிடித்துவிடும். இது சில நிமிடங்களில் எளிதாக முடிந்துவிடும் பரிசோதனை. அப்போதே ஸ்கிரீனில் பார்த்து மார்பக புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். இது வலி இல்லாதது. மிக நவீனமானது. எளிதானது.
பரிசோதனையின்போது கட்டிகள் போன்று ஏதாவது தென்பட்டால், அடுத்து ‘எப்.என்.ஏ.சி’ (பைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி) பரிசோதனை மூலம், அது புற்றுநோய்க்கானதுதானா– அல்லது வேறு விதமான கட்டியா என்று பார்க்கவேண்டும். இந்த பரிசோதனையில் மார்பக புற்றுநோய்தான் என்று உறுதியாகும் பட்சத்தில், ‘பெட்– ஸ்கேன்’ மூலம் எந்த பகுதிகளில், எந்தந்த அளவுக்கு படர்ந்திருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கு தக்கபடியான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். பிற்காலத்தில் நோய் எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை கண்டறியவும் இந்த ஸ்கேன் அவசியமாகிறது. இளம் வயதில் பெண்களின் மார்பகங்கள் அடர்த்தியாக இருக்கும். அப்போது நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிய வேண்டும் என்றால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படும்.
முன்பெல்லாம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நோயால்தான் மரணமடைவார்கள். இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. விரைவாக கண்டறிந்து, தரமான சிகிச்சையை மேற்கொண்டு அதிக காலம் வாழ்கிறார்கள். அதனால் புற்றுநோயை கண்டு பயம்கொள்ளவேண்டாம்.
Re: பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?
சேர்க்க வேண்டிய உணவுகள்:
தவறான உணவுப் பழக்கமும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது. முறையான உணவுகளை உண்டால் புற்றுநோயை பெருமளவு தடுக்கலாம்.
தவிடு நீக்காத தானியங்கள், ஆடை நீக்கிய பால், தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள், மீன், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும்.
பெரும்பாலான காய்கறி, பழங்களில் பூச்சி மருந்துகள் கலந்திருக்கின்றன. அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப்பொருட்களை உண்ணுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் வாங்கிய பழம், காய்கறிகளை அரை மணிநேரம் உப்பு கலந்த நீரில் முக்கிவைத்துவிட்டு, வேகமாக பாயும் பைப் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்துங்கள்.
முழு கோதுமை ரொட்டி, முழு கோதுமை ஆட்டா மாவு போன்றவைகளில் தவிடு கலந்திருக்கும். அவற்றை அதிகம் பயன்படுத்துங்கள்.
நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். அவை எளிதாக ஜீரணமாகி, உடலில் இருக்கும் விஷதன்மைகளை வெளியேற்றும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தியும் நார்சத்துக்கு இருக்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும் உணவுகள் புற்றுநோயை தடுக்கும். கேரட், பீட்ருட், ஆரஞ்சு, பப்பாளி, குடை மிளகாய் போன்றவைகளில் அந்த சத்து இருக்கிறது. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அதை பருகலாம்.
சோயாபீன், சோயா மில்க் இரண்டிற்கும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
முறையான உணவுகள் உண்பதோடு தினசரி உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
இதை படிக்கும் பலரும், ‘முற்காலத்தில் இந்த அளவுக்கு புற்று நோய் இல்லையே?’ என்று கேட்பார்கள். முற்காலத்திலும் இருந்தது. அப்போது என்ன நோய் என்று கண்டுபிடிக்கப்படாமலே ஏராளமானவர்கள் இறந்தார்கள். இப்போது நவீன பரிசோதனைகள் மூலம், தொடக்கத்திலே எளிதாக கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடிகிறது. அதனால் மார்பக புற்றுநோயை பற்றி பயம்கொள்ளாமல் சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கண்டறிய தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதுபோல், பெண்களே உங்கள் மார்பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தைரியமாக பரிசோதனை மூலம் உறுதி செய்யுங்கள்.
டாக்டர் பியூலா இம்மானுவேல், (ரேடியாலஜிஸ்ட்)
தவறான உணவுப் பழக்கமும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது. முறையான உணவுகளை உண்டால் புற்றுநோயை பெருமளவு தடுக்கலாம்.
தவிடு நீக்காத தானியங்கள், ஆடை நீக்கிய பால், தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள், மீன், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும்.
பெரும்பாலான காய்கறி, பழங்களில் பூச்சி மருந்துகள் கலந்திருக்கின்றன. அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப்பொருட்களை உண்ணுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் வாங்கிய பழம், காய்கறிகளை அரை மணிநேரம் உப்பு கலந்த நீரில் முக்கிவைத்துவிட்டு, வேகமாக பாயும் பைப் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்துங்கள்.
முழு கோதுமை ரொட்டி, முழு கோதுமை ஆட்டா மாவு போன்றவைகளில் தவிடு கலந்திருக்கும். அவற்றை அதிகம் பயன்படுத்துங்கள்.
நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். அவை எளிதாக ஜீரணமாகி, உடலில் இருக்கும் விஷதன்மைகளை வெளியேற்றும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தியும் நார்சத்துக்கு இருக்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும் உணவுகள் புற்றுநோயை தடுக்கும். கேரட், பீட்ருட், ஆரஞ்சு, பப்பாளி, குடை மிளகாய் போன்றவைகளில் அந்த சத்து இருக்கிறது. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அதை பருகலாம்.
சோயாபீன், சோயா மில்க் இரண்டிற்கும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
முறையான உணவுகள் உண்பதோடு தினசரி உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
இதை படிக்கும் பலரும், ‘முற்காலத்தில் இந்த அளவுக்கு புற்று நோய் இல்லையே?’ என்று கேட்பார்கள். முற்காலத்திலும் இருந்தது. அப்போது என்ன நோய் என்று கண்டுபிடிக்கப்படாமலே ஏராளமானவர்கள் இறந்தார்கள். இப்போது நவீன பரிசோதனைகள் மூலம், தொடக்கத்திலே எளிதாக கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடிகிறது. அதனால் மார்பக புற்றுநோயை பற்றி பயம்கொள்ளாமல் சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கண்டறிய தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதுபோல், பெண்களே உங்கள் மார்பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தைரியமாக பரிசோதனை மூலம் உறுதி செய்யுங்கள்.
டாக்டர் பியூலா இம்மானுவேல், (ரேடியாலஜிஸ்ட்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?
யாரை எல்லாம் மார்பக புற்று நோய் தாக்கலாம்?
* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.
* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.
* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்
* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
* தாய்ப்பால் புகட்டாதவர்கள்
* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்
* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்
* கருப்பையை நீக்கியவர்கள்
* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்
* உடல் குண்டானவர்கள்..
ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!
* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.
* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.
* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்
* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
* தாய்ப்பால் புகட்டாதவர்கள்
* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்
* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்
* கருப்பையை நீக்கியவர்கள்
* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்
* உடல் குண்டானவர்கள்..
ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?
அறிகுறிகள்:
* மார்பகத்தில் காணப்படும் கட்டி.
* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)
* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.
* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.
* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.
* மார்பகத்தில் குழிவிழுதல்.
* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.
* மார்பகத்தில் வலி தோன்றுதல்.
* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.
* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
* மார்பகத்தில் காணப்படும் கட்டி.
* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)
* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.
* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.
* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.
* மார்பகத்தில் குழிவிழுதல்.
* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.
* மார்பகத்தில் வலி தோன்றுதல்.
* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.
* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?
» மார்பக புற்றுநோய் வர காரணங்கள்
» 'மல்டி விற்றமின்' மத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!
» மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது..
» மார்பக புற்றுநோய் வர காரணங்கள்
» 'மல்டி விற்றமின்' மத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!
» மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|