ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

3 posters

Go down

மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Jul 03, 2014 10:55 pm

மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



இயக்கம் : திரு. N.இராகவன் !
தயாரிப்பு; திரு. N.லிங்குசாமி !

நடிப்பு : விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் !



*****
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிக நல்ல படம். மஞ்சப்பை கொண்டு செல்வது வழக்கொழிந்து நெகிழிப்பையில் வாங்கி வரும் காலம் இது. அது போல அரிய பொக்கிசங்களான தாத்தாக்களை மதிக்காத காலம் இது. இந்தப்படம் பார்த்தால் தாத்தாக்களின் மீதான மதிப்பு கூடும் என்று அறுதியிட்டு கூறலாம்.

இந்தப்படத்தின் மையக்கரு, முதியோரை மதிக்க வேண்டும் என்பதே. கிராமத்து மனிதர்கள் வெள்ளந்தியாக இருக்கிறார்கள். ஆனால் நகரத்து மனிதர்கள் இயந்திரமாகி விட்டார்கள். குறிப்பாக அடுக்காக வீடுகளில் வீடுகள் அருகே அருகே இருந்தாலும் மனிதர்களின் மனது தூரமாகி விட்டது. யாரும் யாருடனும் பேசுவது இல்லை . தாத்தாவாக வரும் (இராஜ்கிரண்) இந்த படத்தில் நடிக்கவே இல்லை. தாத்தாவாகவே வாழ்ந்து உள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணம். அதில் ஒரு முதற்காரணம் திரு. ராஜ்கிரண்.

வேறு பிரபல நடிகர் நடித்து இருந்தால் அதிக நடிப்பு காட்டி சொதப்பி இருப்பார்கள். ஆனால் ராஜ்கிரண் மிக இயல்பாக அதிகம் பேசாமல் நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி.

படத்தின் இயக்குனர் திரு. இராகவன் அவர்களும், படத்தின் தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் மதுரையில் உள்ள மதுரை கோட்ஸ் தொழிலாளர் நல பள்ளியில் பயின்ற மாணவர்கள். இவர்களுக்கு பாராட்டு விழாவை இவர்களது ஆசிரியர் பொன். சந்திரசேகரன் அவர்கள் முன்னின்று நடத்தினார். விழாவிற்கு சென்று இருந்தேன். இயக்குனர் திரு. இராகவன் அவர்கள் ஏற்புரையில் பேசும் போது என் வெற்றி தனிமனித வெற்றி அல்ல. கூட்டு வெற்றி. மானசீக குரு இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரித்த இயக்குனர் திரு. லிங்கசாமி, திரு. ராஜ்கிரண் என அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு, என்னை உருவாக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள் குறிப்பாக
என் தம்பி என் அண்ணன் போல வழிநடத்தியவர் என்றார். கடைசியாக எட்டு வருடங்கள் எனக்கு பொறுமையாக சோறு போட்ட மனைவிக்கு நன்றி என்ற போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.பாராட்டு விழாவில் பொன்னாடைப் போர்த்தி பாராட்டி வந்தேன்

தாத்தா பேரன் உறவு பற்றி இவ்வளவு விரிவாக விளக்கிய படம் மஞ்சப்பை மட்டும் தான். இந்தப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் அவரவர் தாத்தா நினைவு வரும் என்று உறுதி கூறலாம். எனக்கு என்னை உருவாக்கிய செதுக்கிய என்னுடைய தாய்வழி தாத்தா திரு. செல்லையா நினைவிற்கு வந்தார்கள். அவர் ஒரு விடுதலை போராட்ட வீரர். எனக்கு இன்றுவரை எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. நான் ஒழுக்கமாக வாழக் காரணம் அவர் வளர்த்த வளர்ப்பு .என்னுடைய தாத்தா என்னை நெறிப்படுத்தி வளர்த்தவர். அவரைப்பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்தது இந்தப்படம். இது தான் இயக்குனரின் வெற்றி. திரு. ராஜ்கிரணின் வெற்றி.

கதாநாயகன் விமல் நன்றாக நடித்து உள்ளார். காதலி தாத்தாவை ஊருக்கு அனுப்பி விடு என்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் உடன் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் இவரோ காதலி சொன்ன போதும் தாத்தாவை ஊருக்கு அனுப்ப மறுக்கிறார். காதலை விட பாசத்தை பெரிதாக மதிக்கிறார். தாத்தா மனிதநேயத்தோடு வாழ்கிறார். கடற்கரையில் அயல்நாட்டு பெண்ணிடம் வம்பு செய்யும் ரவுடிகளை தாக்குகிறார். அந்தப்பெண்ணின் கணவர் தான் அமெரிக்காவிற்கு சென்று வர உரிமை வழங்கும் அதிகாரி. அவர் பின்பு தாத்தாவின் பேரனுக்கு உதவுகிறார். உதவி செய்து வாழ் வேண்டும் என்று உணர்த்துகிறார்.

காதலித்து திருமணம் செய்ததால் இருதரப்பு பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்பட்ட, தனிமையில் அடுக்ககத்தில் வாழும் இணையர் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறார் தாத்தா. கர்ப்பிணியாகிவிட்ட பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துகிறார். ஆதரவற்றோர் விடுதி மாணவ மாணவியரை வரவழைத்து கோலாகலமாக வளைகாப்பு நடத்தும் போது அந்த இணையர் மட்டுமன்றி படம் பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தான் இயக்குனரின் வெற்றி.

பெண்கள் ஆபாசமாக உடை அணிய வேண்டாம். நமது தமிழ்ப்பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதையும் படத்தில் வலியுறுத்துகிறார். மதுரையிலிருந்து திரைஉலகம் சென்று வெற்றிக்கொடி நாட்டிய பிரபலங்களின் வரிசையில் மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்குனர் இராகவன் அவர்களும், தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் இடம்பிடித்து விட்டார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.



.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by விமந்தனி Thu Jul 03, 2014 11:24 pm

படம் நன்றாகத்தான் இருக்கிறது.
முடிவு...? அதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.


மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Jul 04, 2014 8:15 am

ஆம் சோகமான முடிவுதான் ,ஆனால் எச்சரிக்கை செய்யும் முடிவு
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by பாலாஜி Fri Jul 04, 2014 11:29 am

நல்ல படம் ...

நன்றி பதிவுக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Jul 04, 2014 9:29 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum