ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:40 am

10 குழந்தைகள் உள்பட மேலும் 40 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்களா? அதிர்ச்சி தகவல்கள்

9 பேரை காணவில்லை

சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த 28–ந் தேதி நடந்த கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 36 தொழிலாளர்கள் உள்பட 72 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் மீட்புப்பணிகள் கடந்த 5 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து யூகிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் பேர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் நேற்று விபத்து நடந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் விபத்து குறித்த தகவல் மைய அதிகாரிகளிடம் ‘‘எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த 9 பேரை காணவில்லை. அவர்கள் இந்த கட்டிடத்தில் தான் வேலை செய்தார்கள். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்’’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

உறவினர்கள் யாரும் இல்லை

உடனே அதிகாரிகள் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அடையாளம் தெரியாமல் வைக்கப்பட்டு இருந்த 20 உடல்களை காட்டினர். ஆனால் அதில் யாரும் தங்களுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

மேலும், ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சீமாத்தலம் என்பவரும், ‘‘தங்களது உறவினர்கள் சச்சிநாராயணன் (வயது 50), அவருடைய மனைவி ஜெயம்மா (40), வாலிபர் திருப்பதி ஆகிய 3 பேரையும் காணவில்லை, அவர்கள் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?’’ என்று தகவல் மைய அதிகாரிகளிடம் கேட்டார்.

அதிகாரிகள், அவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிணங்களை காண்பித்தனர். அதில் தங்களது உறவினர்கள் யாரும் இல்லை என்று சீமாத்தலம் கூறினார்.

மேலும் 30 பேர் சிக்கியிருக்கலாம்

இதையடுத்து உறவினர்களால் தேடப்பட்டு வரும் நபர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் தங்களது உறவினர்களை தேடி வருகின்றனர். இதனால் கட்டிட இடிபாடுகளில் மேலும் 30 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் விபத்து நடந்த கட்டிடத்திலேயே தங்கி பணியாற்றியதாகவும், 10–க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.

இதனால் அந்த குழந்தைகளின் கதி என்னவென்று தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிலும் துர்நாற்றம் பயங்கரமாக வீசுகிறது.

தற்போது வரை 50 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு உள்ளது. தரைத்தள கட்டிட இடிபாட்டு பகுதி இன்னும் அகற்றப்படவில்லை. எனவே அந்த இடிபாடு பகுதிகளை அகற்றம் செய்யும்போது மேலும் பல உடல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:41 am

மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் திணறல் ‘எங்கள் குடும்ப உறுப்பினர் இறக்கவில்லை, இடிபாடுகளில் சிக்கியிருப்பார்’ என கதறல்

சென்னையில் விபத்துக்குள்ளான கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் திணறுகின்றனர். ‘‘எங்கள் குடும்ப உறுப்பினர் இறக்கவில்லை, இடிபாடுகளில் உயிருடன்தான் சிக்கி இருக்க வேண்டும்’’ என்று அவர்கள் கதறுவது நெஞ்சைப் பிசைவதாக அமைந்துள்ளது

தீராத வேதனை

சென்னை கட்டிட விபத்து மீட்புப்பணி நேற்று தொடர்ந்து 5–வது நாளாக தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும் கூட இதில் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை, தொடர்கதையாக நீளுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை இரண்டு வகையாக பார்க்க முடிகிறது.

கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி 5 நாட்களாகி விட்டாலும்கூட தங்களது குடும்ப உறுப்பினர், தங்கள் அன்புக்குரிய உறவினர் உயிரோடு இருப்பார்கள் என்று பலரும் நம்புகிறார்கள். தங்களது பிரார்த்தனை வீண்போகாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதுவும் மிகப்பெரும் வேதனையாக அமைந்துள்ளது. காரணம், பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகி விட்டன.

47 உடல்கள்

சம்பவ இடத்தில் இருந்து நேற்று வரை 47 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிண அறையில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் 15–க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணும் நிலையில் இல்லை. அவர்களின் உற்றார், உறவினர்களாலும் உடல்களை அடையாளம் கண்டு கூற முடியவில்லை.

கட்டிட இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளார் என்று நம்பப்படுகிற சென்னை அருகேயுள்ள பெரியபணிச்சேரி கருப்பையா என்பவரின் குடும்ப உறுப்பினர் வேதனையுடன் கூறும்போது, ‘‘இடுபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கிடையாது. அடையாள அட்டை இருந்திருந்தால் அடையாளம் காண்பது எளிதாக இருந்திருக்கும். பல உடல்கள் அடையாளம் காண முடியாதபடிக்கு சிதைந்துவிட்டன. ஒருவரை அடையாளம் காண்பதற்கு ஒரு வழி கூட இல்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ள எங்கள் கருப்பையா, இன்னும் உயிருடன் இருப்பார், ஆஸ்பத்திரியில் பிண அறையில் அடையாளம் காண முடியாதபடிக்கு இருக்கிற உடல்களில் ஒன்றாக அவர் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இங்கே நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்று கண்ணீருடன் கூறினார்.

13 பேர் மாயம்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள்தான் சம்பவ இடத்தில் அதிகளவில் வேலை செய்து வந்தார்கள். இந்த நிலையில், அங்குள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ராஜம் மண்டல தாசில்தார் ராஜாராவ், விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர், ‘‘ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 பேர் இறந்து விட்டனர். இன்னும் 13 பேரை காணவில்லை. இறந்தவர்களின் உடல்களில் உள்ள உடைகளை வைத்துக்கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனென்றால் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் இறந்துவிட்டார் என்று தெரிகிறபோது, உடல் மீது பிளிச்சிங் பவுடர் தூவியபிறகுதான் வெளியே எடுக்கிறார்கள். இதன் காரணமாக உடையை வைத்தும் அடையாளம் காண முடியவில்லை’’ என்றார்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:41 am

மரபணு பரிசோதனை

அவர் மேலும் கூறும்போது, ‘‘இடிபாடுகளை முழுமையாக அகற்றியபின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தினால் உடல்கள் மீது மரபணு பரிசோதனை நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வோம். உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிற சிலர், இன்னும் தங்களுக்கு அன்பானவர்கள் இறந்திருக்க மாட்டார்கள். இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் சிக்கி இருப்பார்கள் என்று நம்புகிறார்கள்’’ என்று கூறினார்.

கட்டிடத்தின் கார் நிறுத்தும் இடத்திலும், முதல் தளத்தின் அடியிலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். அந்த பகுதியிலிருந்து பலர் மீட்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தகுந்தது.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:42 am

சுனாமி, தானே புயலுக்கு பின்னர் ‘சென்னை கட்டிட விபத்து மீட்புப்பணி 3–வது பெரிய சவாலாக அமைந்தது’ தேசிய பேரிடர் மீட்பு படை டி.ஐ.ஜி. பேட்டி

தீராத சோகம்

சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் வானளாவ கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 28–ந் தேதி இடிந்து விழுந்து, தமிழ்நாட்டில் தீராத சோகத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னையில் இப்படி ஒரு விபத்து நடந்தது இதுவே முதல் முறை என்றாலும், அதன் வடு காலமெல்லாம் நினைவில் நிற்கக்கூடிய அளவு அமைந்து விட்டது.

இதுவரை 47 பேரை பலிகொண்டுள்ள சம்பவ இடத்தில் நேற்று தொடர்ந்து 5–வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3–வது பெரிய சவால்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின்கீழ், இந்த படையினர் தெற்கு மண்டல டி.ஐ.ஜி. எஸ்.பி.செல்வன் தலைமையில் வந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் மீட்பில் காட்டிய தீவிரத்தை நேற்று 5–வது நாளிலும் அப்படியே அவர்கள் தொடர்ந்தனர்.

மீட்புப்பணி பற்றி டி.ஐ.ஜி. எஸ்.பி.செல்வன் கூறியதாவது:–

இடிந்து விழுந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கியுள்ளவர்களை மீட்பது என்பது எங்களுக்கு சவாலான பணியாக அமைந்துள்ளது. உலகையே அதிர வைத்த சுனாமி, தானே புயல் ஆகியவற்றுக்கு பிறகு இந்த கட்டிட மீட்பு பணி எங்களுக்கு 3–வது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

தூசு மண்டலம்

எங்கள் படையினர் 380 பேர் 10 அணிகளாக பிரிந்து, 28–ந் தேதியிலிருந்து ஓய்வு ஒழிச்சலின்றி, களைப்பின்றி மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் படையினர் இங்கு வந்து சேர்ந்தபோது ஒட்டுமொத்த பகுதியும் அடர்த்தியான தூசு மண்டலமாகத்தான் காட்சி அளித்தது.

இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறவர்களை உயிருடன் மீட்கப்படுவதை உறுதி செய்கிற விதத்தில் எங்கள் படையினர் ஓய்வின்றி, தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. நாங்கள் இந்த பணியை தொடங்கியபோது, எங்கிருந்து மீட்புப்பணியை தொடங்குவது என்பதே சவாலாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன சாதனங்கள்

இந்த படையின் தன்னார்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘எங்களைச் சுற்றிலும் மலைபோன்று இடிபாடுகள் கிடந்ததால் மீட்புப்பணியை எங்கிருந்து தொடங்குவது என்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. எங்கள் பணியில் நவீன தொழில்நுட்பம் கைகொடுத்தது. சிக்கியுள்ளவர்களை கண்டறிய உதவும் வி.எல்.சி. என்னும் அதிநவீன கேமரா எங்களுக்கு உபயோகமாக அமைந்தது. ஆனால் அவற்றையும் ஆரம்பத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஓரளவு இடிபாடுகளை அகற்றிய பின்னர்தான் அவற்றை நாங்கள் பயன்படுத்த முடிந்தது. காங்கிரீட் பலகைகளை அறுப்பதற்கு சங்கிலி வாள்களைப் பயன்படுத்தினோம். அவை இடிபாடுகளில் சிக்கியவர்கள், எங்களை உஷார்படுத்தவும், குரல் கொடுக்கவும் வசதியாக அமைந்தது’’ என்றார்.

மேலும், ‘‘வி.எல்.சி. கேமராக்களைப் போன்று ‘ஏர் லிப்டிங் பேக்’ என்னும் பைகளைப் பயன்படுத்தினோம். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள ஒருவரை கண்டுபிடிக்கிறபோது, அங்கே இந்த ஏர் லிப்டிங் பேக்கை வைப்போம். அது சிக்கியுள்ளவர்களை தூக்கி மேலே கொண்டு வர உதவிகரமாக இருக்கின்றன’’ என்று கூறினார்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:43 am

5 வது நாள் மீட்பு பணி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

சென்னையை அடுத்த போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 28-ந் தேதி நடந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக தீவிரமாக நடைபெற்றது.

நேற்று வரை 33 பேர் பிண மாக மீட்கப்பட்டனர். 27 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். இன்னும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது. அவர் களில் சிலர் உயிருடன் இருக்க லாம் என்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

மீட்புப்பணிகளை விரைந்து முடிப்பதற்காக 8 மாவட்டங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்புப் படை வீரர்கள் சென்னை வந்துள்ளனர். 20 மோப்பநாய் கள் உதவியுடன் இன்று 5-வது நாளாக மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள பிணங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவ தால் விபத்து நடந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புக்குழுவினர் அனை வருக்கும் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து இடிபாடு களை அகற்றி வருகிறார்கள்.

நேற்றிரவு 7 மணி நிலவரப்படி மொத்தம் 60 பேர் மீட்கப்பட்டிருந்தனர். இதில் 32 பேர் சடலமாகவும் 27 பேர் உயிருடனும் மீட்கப் பட்டிருந்தனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை வரை மேலும் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் உடல் நசுங்கி பிணமாக கிடந் தனர். இதனால் 11 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்தது. நேற்றிரவு பிணமாக மீட்கப்பட்ட 10 பேல் 8 பேர் ஆண்கள். 2பேர் பெண் கள்.

இந்த நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 4 பிணங்கள் மீட்கப்பட்டது. இதனால் இறந்தவர்களின் எண் ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 4 நாட்களில் 10 தளங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது முதல் தளமும், தரைத்தளமும் அகற்றப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தபோது தரைதளம் பகுதியில்தான் நிறைய தொழிலாளர்கள் சம்பளம் வாங்க நின்று கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. எனவே அவர்களில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும்.

மீட்புப்பணிகளை ஓரிரு நாட்களில் முடித்து விட வேண்டும் என்ற இலக்குடன் தற்போது கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் 2 நாளில் இடிபாடு களை அகற்றும் பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அதன்பிறகு இந்த விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவரும்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:44 am

3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தார் ‘‘மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ உயிர் தப்பிய ஒடிசா வாலிபரின் உருக்கமான பேட்டி

3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ என்றும் கட்டிட விபத்தில் உயிர் தப்பிய ஒடிசா வாலிபர் உருக்கமாக கூறினார்.

ஒடிசா வாலிபர்

ஒடிசா மாநிலம் கேந்திரபாலா அருகேயுள்ள ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் ராவ்(25). இவர் போரூரில் விபத்து நடந்த கட்டிடத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

விபத்து நடந்த போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்த அவர், 72 மணி நேரத்திற்கு பிறகு அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். தற்போது போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பிரகாஷ்குமார் ராவ் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

சிறுநீரை குடித்தேன்

கட்டிட விபத்து ஏற்பட்டபோது, நான் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்து கொண்டு இருந்தேன். கட்டிடம் சரிந்த நிலையில் நான் இருந்த அறையில் உள்ள ஒரு சிலாப்பில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக் கொண்டேன். இருட்டை தவிர வேறு எதுவும் என் கண்ணில் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உதவிக்காக காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூப்பிட்டபடியே இருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது வயிறு பசித்தது. நாக்கு உலர்ந்தது. ஆனால் உணவுக்கு வழியில்லை. தொண்டை காய்ந்து வரண்டு போன நிலையில் எனது சிறுநீரை நானே குடித்தேன்.

கண்கள் தானம்

உயிர் பிழைப்பேன் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது கடவுள் செய்த அதிசயம். இது எனக்கு மறுபிறவி.

உள்ளே இருந்த சமயத்தில் மேலே இருந்து மீட்புபணிகள் நடைபெற்றதை நான் நன்றாகவே உணர்ந்தேன். எனக்கு இது மறுபிறவி என்பதால் என்னுடைய கண்கள் இரண்டையும் தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன். என்னுடைய 2 கண்களும் நான் இறந்தபிறகு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

கண்மூடி கண் திறப்பதற்குள்...

விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மருதமுத்து(வயது 25) என்பவர் கூறியதாவது:–

சம்பவத்தன்று விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று இடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து கட்டிடத்தின் மேலிருந்து சிமெண்ட் துகள்கள் கொத்துக்கொத்தாக விழுந்தன.

கண்மூடி கண் திறப்பதற்குள் கட்டிடம் சரிந்து விழுந்தது. எனக்கு நினைவு வரும்போது மண் குவியலுக்கு அடியில் நான் குப்புற படுத்துக் கிடந்தேன். கை, கால்களை கூட அசைக்க முடியவில்லை. எங்கும் ஒரே இருட்டு.

எப்படி மீட்கப்பட்டேன்? எப்படி மருத்துவமனையில் வந்தேன்? எவ்வாறு தேறினேன்? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பிழைத்திருக்கிறேன் என்றால் அது கடவுளின் அருளால் தான். வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டேன். இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

2 தூண்களுக்கு நடுவில்...

ராமநாதபுரம் மாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி(53). விபத்து நடந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள மரக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். அவர் கூறுகையில், ‘‘கட்டிடம் சரிந்து எங்களது கடையின் மீது விழுந்தது. இதில் கடையின் 2 தூண்களுக்கு நடுவில் இடிபாடுகளுக்கிடையில் நான் சிக்கிக்கொண்டேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. தற்போது வரை பிழைத்தேன் என்பதை நான் நம்பவில்லை. ஒரு சின்ன சத்தத்தை கூட என்னால் தாங்கமுடியாத நிலையில் நான் இருக்கிறேன். கடவுளுக்கு நான் கூறுகிறேன்’’, என்றார்.

பசி பட்டினியுடன்...

மதுரை திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(23) என்பவர் கூறுகையில், ‘‘கட்டிட இடிபாடுகளுக்கிடையில் நாங்கள் பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் சொல்லி மாளாது. ஒரு ‘லிப்ட்’ அறுந்து விழுவது போன்ற பயங்கர சத்தத்துடன் கட்டிடம் சரிந்து விழுந்தது. அந்த காட்சியை என்னால் மறக்க முடியாது. பசி பட்டினியுடன் கட்டிட இடிபாடுகளில் மண்ணோடு மண்ணாக புதைந்திருந்ததை வாழ்நாள் முடியும் வரை மறக்க முடியாது. கடவுளின் ஆசியால் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’’ என்றார்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:44 am

தந்தையையும், தங்கையையும் என் கண் முன்னே பறிகொடுத்தேன் வாலிபர் கண்ணீர் பேட்டி

கட்டிட விபத்தில் எனது தந்தையையும், தங்கையையும் கண் முன்னே பறிகொடுத்தேன் என்று உயிர் தப்பியவர் கூறினார்.

துணியை எடுக்க சென்ற...

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிசிக்கி ஜோதி என்ற பெண் தனது கணவருடன் சென்னையில் தங்கி 11 மாடி கட்டிடத்தில் பணிபுரிந்தார். சம்பவம் நடந்த நேரத்திற்கு முன்பு மழை பெய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது கணவரிடம் காயப்போட்ட துணியை எடுத்து வருவதாக அந்த கட்டிடத்துக்கு அருகில் சென்றார். அவர் சென்ற அடுத்த 5 நிமிடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து பலியானார்.

கண் எதிரே நடந்தது

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம், கொட்டாபேரீஸ் பகுதியை சேர்ந்த மிசாலுசீனு (வயது 40), என்பவர் தனது மகன் லோகேஷ்(18), மகள் பவானி(14) ஆகியோருடன் மவுலிவாக்கத்தில் தங்கி இருந்து பணிபுரிந்தார். இவர் பலியானது குறித்து அவருடைய மகன் லோகேஷ் கூறியதாவது:–

கட்டிடம் இடிந்து விழுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. எனது அப்பாவும், நானும் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தோம். என்னுடைய சகோதரி தனியாக 11 மாடி கட்டிடத்தில் இருந்தாள். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது.

உடனே எனது அப்பா, அவள் பயந்து விடுவாள் நான் போய் அவளை அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அடுத்த 5 நிமிடத்தில் கட்டிடம் மளமளவென சரிந்து விழுந்துவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் என் கண் எதிரே எனது அப்பாவையும், என் சகோதரியையும் பறிகொடுத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:45 am


கட்டிட இடிபாடுகளில் கட்டிப்பிடித்த நிலையில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளிகள் பலர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்பு பணியின் 5 வது நாளான இன்று, கட்டிடத்தின் தரை தளத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டியபோது கட்டிப்பிடித்த நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சாவை கண்கூடப்பார்க்கும் போது, பயத்தில் இருவரும் ஒன்றாக கட்டிப்பிடித்தபடியே இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:46 am

11 பேரை உயிருடன் மீட்க உதவிய மோப்ப நாய்கள்

சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய பங்காக மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் 5 மோப்ப நாய்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மிகவும் குறுகலான இடிபாடுகளுக்கிடையே ஆட்கள் உள்ளனரா என்பதை கண்டறிய நாய்களுடன் அந்த குறுகிய இடிபாடுகளுக்குள் போலீசாரும் குறிப்பிட்ட தூரம் சென்று ஆட்கள் உயிருடனோ? பிணமாகவோ? இருக்கிறார்களா? என்று தேடினார்கள். ஆட்கள் இருப்பதை போல் உணர்ந்த போலீசார் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கி உள்ளவர்களை மீட்டுள்ளனர்.

இதுவரை நடந்த மீட்பு பணியில் ஜாக் என்ற மோப்ப நாய் 3 பேரை உயிருடனும், ஒருவரை இறந்த நிலையிலும், ஜீனா என்ற நாய் 2 பேரை உயிருடனும், 2 பேரை இறந்த நிலையிலும், ஓரி என்ற நாய் 2 பேரை உயிருடனும், ஒருவரை இறந்த நிலையிலும், ஜூலி என்ற நாய் 2 பேரை உயிருடனும், ஜான்சி என்ற நாய் 2 பேரை உயிருடனும் ஆக மொத்தம் 11 பேரை உயிருடனும், 4 பேரை இறந்த நிலையிலும் மீட்க மிகவும் பேருதவியாக இருந்தன.

மீட்பு குழுவினர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு ஊசிகள்

தொடர்ந்து 5–வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிருடனும், இறந்த நிலையிலும் மீட்கப்பட்டு வருகின்றனர். நாட்கள் அதிகரித்து செல்வதால் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒரு வித துர்நாற்றம் வீசத்தொடங்கி உள்ளது. இதனால் மீட்பு குழுவில் உள்ளவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க அடிக்கடி தடுப்பு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவ குழுவினர் அதிகளவில் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா Thu Jul 03, 2014 12:48 am

சற்றுமுன்னர் மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இப்பொழுது பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது!



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து Empty Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  வங்கதேச கட்டிட விபத்து: இறந்தோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது
» விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம்
» கட்டிட காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 லோடு மேன் ஜெயிலில் அடைப்பு
» கட்டிட பொறியாளருக்கு பயன்படும் சிவில் கால்குலேட்டர் 2.0
» கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum