Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
+4
சிவா
சதாசிவம்
Dr.S.Soundarapandian
பிஜிராமன்
8 posters
Page 1 of 2 • 1, 2
ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம். ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு ஒரு சிறு அன்பளிப்பையாவது கொடுத்துச் சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும்.
இந்தத் திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த அல்லது தங்களுக்கு பிடித்த புத்தகத்தை இந்த திரியில் பதியுங்கள் தங்களின் பதிவு மற்ற உறவுகளுக்கு தாங்கள் அந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததைப் போல் இருக்கட்டும்.
பதியும் முறை.
1.புத்தகத்தின் பெயர் எழுதுயவரின் பெயருடன் (இது உங்கள் பதிவின் தலைப்பாக இருக்கட்டும்)
2. முன்னுரை (இது அந்த புத்தகம் எதை பற்றி பேசுகிறது என்றும், எந்த வகையில் அந்த புத்தகம் உங்களை பாதித்தது அல்லது எந்த கருத்து உங்களக்கு பிடித்தது என்றும் தங்களின் குறுகத்தறித்த வரிகளில் எழுதவும். முடிந்தால் ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளை அந்த புத்தகத்தில் இருந்து எடுத்து காட்டலாம்)
3. முடிந்தால் அந்த புத்தகத்தின் மின்னூலை இங்கு பதியுங்கள்
* ஆளுக்கு ஒரு புத்தகம் என்பதால் ஒரு புத்தகத்தோடு நிறுத்த வேண்டும் என்றல்ல, தாங்கள் எத்தனை புத்தகத்தை வேண்டுமானாலும் பதியலாம்.
*இது தாங்கள் தங்களின் வாழ்க்கையில் என்றோ வாசித்த புத்தகத்தை மீண்டும் திருப்பி பார்க்க ஒரு வாய்ப்பைத் தருவதாக இருக்கட்டும்
* உறவுகள் தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் லைக் பொத்தான் மூலம் கூறவும், பதிவுகளில் வேண்டாம். இங்கு பதிவு என்றால் உங்களுடன் பயணித்த புத்தகம் பற்றியதாக இருக்கட்டும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கிறேன். பதிவருக்கு நன்றி கூறி பாராட்டியே ஆக வேண்டும் என்றால் அவரின் தனி மடலில் கூறி விடுங்கள்
*இந்த திரியை எனக்கு பிடித்த ஒரு புத்தகத்தோடு துவங்குகிறேன் கற்றோர் பலர் இருக்கும் இச்சபைதனில்
இந்தத் திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த அல்லது தங்களுக்கு பிடித்த புத்தகத்தை இந்த திரியில் பதியுங்கள் தங்களின் பதிவு மற்ற உறவுகளுக்கு தாங்கள் அந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததைப் போல் இருக்கட்டும்.
பதியும் முறை.
1.புத்தகத்தின் பெயர் எழுதுயவரின் பெயருடன் (இது உங்கள் பதிவின் தலைப்பாக இருக்கட்டும்)
2. முன்னுரை (இது அந்த புத்தகம் எதை பற்றி பேசுகிறது என்றும், எந்த வகையில் அந்த புத்தகம் உங்களை பாதித்தது அல்லது எந்த கருத்து உங்களக்கு பிடித்தது என்றும் தங்களின் குறுகத்தறித்த வரிகளில் எழுதவும். முடிந்தால் ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளை அந்த புத்தகத்தில் இருந்து எடுத்து காட்டலாம்)
3. முடிந்தால் அந்த புத்தகத்தின் மின்னூலை இங்கு பதியுங்கள்
* ஆளுக்கு ஒரு புத்தகம் என்பதால் ஒரு புத்தகத்தோடு நிறுத்த வேண்டும் என்றல்ல, தாங்கள் எத்தனை புத்தகத்தை வேண்டுமானாலும் பதியலாம்.
*இது தாங்கள் தங்களின் வாழ்க்கையில் என்றோ வாசித்த புத்தகத்தை மீண்டும் திருப்பி பார்க்க ஒரு வாய்ப்பைத் தருவதாக இருக்கட்டும்
* உறவுகள் தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் லைக் பொத்தான் மூலம் கூறவும், பதிவுகளில் வேண்டாம். இங்கு பதிவு என்றால் உங்களுடன் பயணித்த புத்தகம் பற்றியதாக இருக்கட்டும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கிறேன். பதிவருக்கு நன்றி கூறி பாராட்டியே ஆக வேண்டும் என்றால் அவரின் தனி மடலில் கூறி விடுங்கள்
*இந்த திரியை எனக்கு பிடித்த ஒரு புத்தகத்தோடு துவங்குகிறேன் கற்றோர் பலர் இருக்கும் இச்சபைதனில்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
அக்னிச்சிறகுகள் -திரு. ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
இப்புத்தகம் யாவரும் அறிந்ததே அறிமுகம் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
எனக்கு பிடித்த இரண்டு கருத்துகள் இப்புத்தகத்தில் இருந்து, ஒரு கெட்ட மாணவன் சிறந்த ஆசானிடமும், ஒரு சிறந்த மாணவன் ஒரு கெட்ட ஆசானிடமும் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பதும், ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவர் வெற்றி தோல்வி சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்
புத்தகம் தரவிறக்க : Agni Siragukal
தங்களின் பதிவுகளை தொடங்குங்கள் உறவுகளே
இப்புத்தகம் யாவரும் அறிந்ததே அறிமுகம் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
எனக்கு பிடித்த இரண்டு கருத்துகள் இப்புத்தகத்தில் இருந்து, ஒரு கெட்ட மாணவன் சிறந்த ஆசானிடமும், ஒரு சிறந்த மாணவன் ஒரு கெட்ட ஆசானிடமும் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பதும், ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவர் வெற்றி தோல்வி சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்
புத்தகம் தரவிறக்க : Agni Siragukal
தங்களின் பதிவுகளை தொடங்குங்கள் உறவுகளே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
[color:3db3=background: #ff0000]பயனுள்ள திரி தொடங்கியமைக்கு மிக்க நன்றி ராமன். புத்தகம் படிப்பது அரிதாகும் வரும் இவ்வேளையில் இதுபோன்ற பதிவுகள் மிகவும் அவசியம்.
சற்று வேலைப்பளு இருந்தும் தித்திக்கும் இப்பதிவில் என் பதிவை தங்களுக்கு அடுத்து பதிக்க விரும்புகிறேன்.
1997 களில் ஆனந்த விகடனில் வெளிவந்த லதா ரஜினிகாந்தின் கட்டுரைகளில் தொகுப்பாக வெளிவந்த "அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்" -பூம்புகார் பதிப்பகம் புத்தகத்தை பரிந்துரைக்க விரும்புகிறேன். நான் விரும்பி ரசித்து படித்த பல தொடர்களில் இதுவும் ஒன்று.
குழந்தை வளர்ப்பில் இந்தச் சமுதாயம், பெரியவர்கள், கல்விமுறை செய்யும் தவறுகளை நயமாக எடுத்துச் சொல்லும் புத்தகம் இது. என் நண்பர்களின் குழந்தைகள் பேசுவதில், கற்பதில் தாமதம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு நான் கூறும் முதல் அறிவுரை முதலில் நீங்கள் பாடம் படியுங்கள் குழந்தை வளர்ப்பது எப்படி என்று, பிறகு உங்கள் குழந்தையை படிக்கச் செய்யலாம். இப்புத்தகம் இதை அழகான கதைகளோடு மென்மையாக விளக்குகிறது.
என் வார்த்தைகளை விட இணையத்தில் இப்புத்தகம் குறித்த வார்த்தைகள். நன்றி omnibus .sasariri .com
இது குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் அன்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவிடாமல் செய்ய பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. அந்தக் குழந்தைகள் இவ்வுலகில் குழந்தைகளாகவே உலவ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பேசுகிறது புத்தகம்.
Winning is Everything" என்னும் முரட்டுக் கலாசாரத்தைத்தான் நம் பள்ளிகள் கடைபிடிக்கின்றன. பெற்றோரான நாமும் அதனையே விரும்புகிறோம். நம் பெயரை நம் பிள்ளைகள் நம் சொந்த பந்தங்களிடையே காப்பாற்ற வேண்டும் என்று நாம் அவர்களை வீட்டினில் சாட்டை கொண்டு விரட்டுகிறோம். கல்வித்துறையில் தம் பள்ளியின் பெயரை நிலைநிறுத்த அதே சாட்டையைக் கொண்டு நம் பிள்ளைகளை இன்னொரு பக்கம் நின்றுபள்ளிகள் விரட்டுகின்றன. இந்த இரண்டு சாட்டைச் சொடுக்கல்களுக்கு இடையே நம் பிள்ளைகள் தவிப்பது பற்றிய லட்சியம் நம் இருவருக்குமே இல்லை.
இப்படியே பேசிக் கொண்டே போனால்? இவற்றுக்கெல்லாம் என்னதான் விமோசனம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒரு மாற்று சிந்தனையை மாற்று வடிவக் கல்விமுறையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?
அவற்றைப் பற்றியெல்லாம்தான் பேசுகிறது “லதா ரஜினி” 1997’ஆம் வருடம் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்”. தலைப்பே புத்தகம் பற்றிப் பேசிவிடுகிறது. சமூகத்தில் நாம் அவர்களுக்குத் தரமறுக்கும் அந்தஸ்தைப் பற்றி சொல்லிவிடுகிறது
சற்று வேலைப்பளு இருந்தும் தித்திக்கும் இப்பதிவில் என் பதிவை தங்களுக்கு அடுத்து பதிக்க விரும்புகிறேன்.
1997 களில் ஆனந்த விகடனில் வெளிவந்த லதா ரஜினிகாந்தின் கட்டுரைகளில் தொகுப்பாக வெளிவந்த "அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்" -பூம்புகார் பதிப்பகம் புத்தகத்தை பரிந்துரைக்க விரும்புகிறேன். நான் விரும்பி ரசித்து படித்த பல தொடர்களில் இதுவும் ஒன்று.
குழந்தை வளர்ப்பில் இந்தச் சமுதாயம், பெரியவர்கள், கல்விமுறை செய்யும் தவறுகளை நயமாக எடுத்துச் சொல்லும் புத்தகம் இது. என் நண்பர்களின் குழந்தைகள் பேசுவதில், கற்பதில் தாமதம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு நான் கூறும் முதல் அறிவுரை முதலில் நீங்கள் பாடம் படியுங்கள் குழந்தை வளர்ப்பது எப்படி என்று, பிறகு உங்கள் குழந்தையை படிக்கச் செய்யலாம். இப்புத்தகம் இதை அழகான கதைகளோடு மென்மையாக விளக்குகிறது.
என் வார்த்தைகளை விட இணையத்தில் இப்புத்தகம் குறித்த வார்த்தைகள். நன்றி omnibus .sasariri .com
இது குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் அன்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவிடாமல் செய்ய பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. அந்தக் குழந்தைகள் இவ்வுலகில் குழந்தைகளாகவே உலவ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பேசுகிறது புத்தகம்.
Winning is Everything" என்னும் முரட்டுக் கலாசாரத்தைத்தான் நம் பள்ளிகள் கடைபிடிக்கின்றன. பெற்றோரான நாமும் அதனையே விரும்புகிறோம். நம் பெயரை நம் பிள்ளைகள் நம் சொந்த பந்தங்களிடையே காப்பாற்ற வேண்டும் என்று நாம் அவர்களை வீட்டினில் சாட்டை கொண்டு விரட்டுகிறோம். கல்வித்துறையில் தம் பள்ளியின் பெயரை நிலைநிறுத்த அதே சாட்டையைக் கொண்டு நம் பிள்ளைகளை இன்னொரு பக்கம் நின்றுபள்ளிகள் விரட்டுகின்றன. இந்த இரண்டு சாட்டைச் சொடுக்கல்களுக்கு இடையே நம் பிள்ளைகள் தவிப்பது பற்றிய லட்சியம் நம் இருவருக்குமே இல்லை.
இப்படியே பேசிக் கொண்டே போனால்? இவற்றுக்கெல்லாம் என்னதான் விமோசனம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒரு மாற்று சிந்தனையை மாற்று வடிவக் கல்விமுறையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?
அவற்றைப் பற்றியெல்லாம்தான் பேசுகிறது “லதா ரஜினி” 1997’ஆம் வருடம் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்”. தலைப்பே புத்தகம் பற்றிப் பேசிவிடுகிறது. சமூகத்தில் நாம் அவர்களுக்குத் தரமறுக்கும் அந்தஸ்தைப் பற்றி சொல்லிவிடுகிறது
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
மிகவும் அருமையான திரி துவங்கியுள்ளீர்கள் பிஜிராமன்! நான் அதிகம் படிப்பது எம்.எஸ் உதயாமூர்த்தி மற்றும் சுகிசிவம் புத்தகங்கள்!
நிறைய புத்தங்களைப் படித்துள்ளேன்! அவற்றில் குறிப்பிட்டு ஒரு புத்தகம் கூற வேண்டுமெனில் உடனடியாக இயலவில்லை! மீண்டும் நன்கு நினைபடுத்தி வேறொரு நாள் கூறுகிறேன்!
நிறைய புத்தங்களைப் படித்துள்ளேன்! அவற்றில் குறிப்பிட்டு ஒரு புத்தகம் கூற வேண்டுமெனில் உடனடியாக இயலவில்லை! மீண்டும் நன்கு நினைபடுத்தி வேறொரு நாள் கூறுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
அடுத்த நான் சொல்ல இருக்கும் புத்தகத்தின் பெயர்
"ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி" -
ஆசிரியர் - ரா கி ரங்கராஜன்
நர்மதா பதிப்பகம்.
Men are from mars , women are from venus என்ற ஆங்கிலப் புத்தகத்தை தழுவி எழுதிய மொழிபெயர்ப்பு புத்தகம் இது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் உளவியல், உணர்வுரீதியான பிரச்னையை கையாள இப்புத்தகம் நன்கு உதவும்..
திருமணப் பரிசாக இப்புத்தகத்தை பல நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன்.
ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கட்டுரைகளும் இடம் பெறாமல் போனாலும் அதன் சாரம்சத்தை ரா, கி ரா அழகாக வழங்கியுள்ளார்.
பருவ வயதில் இருக்கும் அனைவரும் படிக்கத் தகுதியான புத்தகம் இது.
"ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி" -
ஆசிரியர் - ரா கி ரங்கராஜன்
நர்மதா பதிப்பகம்.
Men are from mars , women are from venus என்ற ஆங்கிலப் புத்தகத்தை தழுவி எழுதிய மொழிபெயர்ப்பு புத்தகம் இது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் உளவியல், உணர்வுரீதியான பிரச்னையை கையாள இப்புத்தகம் நன்கு உதவும்..
திருமணப் பரிசாக இப்புத்தகத்தை பல நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன்.
ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கட்டுரைகளும் இடம் பெறாமல் போனாலும் அதன் சாரம்சத்தை ரா, கி ரா அழகாக வழங்கியுள்ளார்.
பருவ வயதில் இருக்கும் அனைவரும் படிக்கத் தகுதியான புத்தகம் இது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Dr. எம்.ஆர். காப்மேயர்
"அமெரிக்காவின் வெற்றிகர - வெற்றிமுறை ஆலோசகர்"
தமிழி மொழி பெயர்த்தவர்: பி.சி. கணேசன்
இந்த புத்தகத்தைப் பற்றி:
---- இந்த நூலை நீங்கள் வாங்கினால் போதும் உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
---- இந்நூலில் என்பது அத்யாயங்கள் உள்ளன
---- அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை
---- இன்னூலில் கூறப்படும் என்பது வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்
---- மாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்றால் இதோ என்பது வழிகள் உங்களுக்காகவே திறந்து கிடக்கின்றன.
(இந்த நூலை நான் ஒருமுறை கோயமுத்தூர் ஒரு வேலையாக சென்றபோது வாங்கினேன், மிக மிக அற்புதமான கருத்துக்கள் அடங்கிய நூல், இதே நூலை எனது நண்பர்கள் எட்டு பேருக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளேன், விஜயா பதிப்பகத்தில் வாங்கியதாக நினைவு).
"அமெரிக்காவின் வெற்றிகர - வெற்றிமுறை ஆலோசகர்"
தமிழி மொழி பெயர்த்தவர்: பி.சி. கணேசன்
இந்த புத்தகத்தைப் பற்றி:
---- இந்த நூலை நீங்கள் வாங்கினால் போதும் உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
---- இந்நூலில் என்பது அத்யாயங்கள் உள்ளன
---- அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை
---- இன்னூலில் கூறப்படும் என்பது வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்
---- மாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்றால் இதோ என்பது வழிகள் உங்களுக்காகவே திறந்து கிடக்கின்றன.
(இந்த நூலை நான் ஒருமுறை கோயமுத்தூர் ஒரு வேலையாக சென்றபோது வாங்கினேன், மிக மிக அற்புதமான கருத்துக்கள் அடங்கிய நூல், இதே நூலை எனது நண்பர்கள் எட்டு பேருக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளேன், விஜயா பதிப்பகத்தில் வாங்கியதாக நினைவு).
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
ஒரு சிறகு போதும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களும் வேலையைத் தேடி அலைகிறார்கள். ஒரு வேலைக்கு வேண்டிய ஆற்றல் என்னென்ன, ஒரு வேலையைப் பெறும் அளவுக்கு ஆற்றல்களை எளிதாக, சுலபமாக, அலட்டிக்கொள்ளாமல் வளர்த்துக் கொள்வது எப்படி, காம்படிட்டிவ் உலகத்தில் அதே ஆற்றலுடன் போட்டி போட்டுக்கொண்டு சக பந்தயக்காரர்கள் வந்தாலும் தாங்கள் ஒரு மாற்று அதிக பலத்துடன் வருவது எப்படி என்ற முன்னேற்ற வழிகளை நூல் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார். இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறார். உண்மை, நேர்மை ஆகியவற்றை விட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படைப் பண்புகளை விட்டு விடாமல் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கையை நூல் ஆசிரியர் ஊட்டுகிறார். அவர் ஏற்று நடத்திய பயிற்சிப் பாசறைகளில் இடம் பெற்ற கவர்ச்சியான போட்டிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கட்டுரையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது படிப்பதை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களும் வேலையைத் தேடி அலைகிறார்கள். ஒரு வேலைக்கு வேண்டிய ஆற்றல் என்னென்ன, ஒரு வேலையைப் பெறும் அளவுக்கு ஆற்றல்களை எளிதாக, சுலபமாக, அலட்டிக்கொள்ளாமல் வளர்த்துக் கொள்வது எப்படி, காம்படிட்டிவ் உலகத்தில் அதே ஆற்றலுடன் போட்டி போட்டுக்கொண்டு சக பந்தயக்காரர்கள் வந்தாலும் தாங்கள் ஒரு மாற்று அதிக பலத்துடன் வருவது எப்படி என்ற முன்னேற்ற வழிகளை நூல் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார். இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறார். உண்மை, நேர்மை ஆகியவற்றை விட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படைப் பண்புகளை விட்டு விடாமல் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கையை நூல் ஆசிரியர் ஊட்டுகிறார். அவர் ஏற்று நடத்திய பயிற்சிப் பாசறைகளில் இடம் பெற்ற கவர்ச்சியான போட்டிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கட்டுரையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது படிப்பதை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
-
-
-
செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப்
வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள்.
அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு
விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக்
கிரகத்தை அடைந்தார்கள்.
அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு
வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது;
அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப்
பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற
விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது.
செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும்
சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது
மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி
நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்து
விட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும்,
வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
-
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம்....
Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
மேற்கோள் செய்த பதிவு: 1076729ayyasamy ram wrote:
-
-
-
செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப்
வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள்.
அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு
விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக்
கிரகத்தை அடைந்தார்கள்.
அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு
வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது;
அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப்
பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற
விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது.
செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும்
சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது
மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி
நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்து
விட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும்,
வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
-
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம்....
இந்த புத்தகம் படித்திருக்கிறேன்..ரா.கி எழுத்துநடையில் படித்ததில்லை..ரா.கி-யின் இந்த புத்தகம் கிடைக்கும் முகவரி அறியத்தாருங்கள் நண்பர்களே..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,
» ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்!
» தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
» கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்
» ஆளுக்கு 2000 டாலர் டெளரி..ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்!
» ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்!
» தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
» கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்
» ஆளுக்கு 2000 டாலர் டெளரி..ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|