ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_m10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10 
Dr.S.Soundarapandian
நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_m10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10 
heezulia
நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_m10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10 
i6appar
நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_m10நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்!

Go down

நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்! Empty நிர்வாண பூஜை. சிக்கிய ஜெ. பேரவை செயலாளர்!

Post by சிவா Tue Jun 24, 2014 4:37 pm


பாலியல் புகாரில் சிக்கி பதவி இழக்கும் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் கணேசமூர்த்தி. இவர் மீதான புகார் வினோதமானது. தோஷ பரிகாரத்துக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ததாக சிக்கலில் மாட்டி கைதாகியிருக்கிறார்.

ராமநாபுரம் மாவட்டத்தில் உள்ள புனித தலங்களில் ஒன்று தேவிப்பட்டினம். இங்கு கடலுக்கு நடுவே அமைந்துள்ள நவகிரகங்களை வழிபட்டால் கிரக தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கே தோஷம் கழிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதற்கென அர்ச்சகர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஜெ. பேரவையைச் சேர்ந்த கணேசமூர்த்தி. அவர்மீது கிளம்பிய புகார், அவரது கிரகத்தைப் பாதித்துவிட்டது.

கணேசமூர்த்தி மீது புகார் கொடுத்த கற்பூரசுந்தரம் என்பவரிடம் பேசினோம். ''தோஷம் கழிப்பதற்காக தேவிப்பட்டினம் வருபவர்களுக்கு உதவ இங்கே யாத்திரைப் பணியாளர் சங்கம் உள்ளது. இதில் என் அப்பா உறுப்பினராக இருக்கிறார். வெளியூரில் உள்ள ஜோதிடர்கள், அவர்களிடம் வரும் பக்தர்களை தோஷம் தீர்க்க எங்களிடம் அனுப்புவார்கள். நாங்கள் அவர்களுக்கு புரோகிதர்களை ஏற்பாடு செய்துகொடுத்து உதவுவோம்.

அப்படித்தான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் பழனியப்பன் கடந்த 14-ம் தேதி ஒரு பக்தரை குடும்பத்துடன் எங்களிடம் அனுப்பி வைத்தார். அவர், 'எனது மகளுக்கு தொப்புள் கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்துள்ளது. எனவே, அந்த தோஷத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். அப்பா ஊரில் இல்லாததால், நான் அவர்களை கணேசமூர்த்தியிடம் அழைத்துச் சென்றேன். இரவு 8 மணிக்கு மேல் நவபாஷணத்தில் பூஜை நடத்திய கணேசமூர்த்தி, அன்று இரவே அனுப்பிவிட்டார்.

மறுநாள் எங்களைத் தொடர்புகொண்ட அந்த பக்தர், 'பரிகாரம் செய்ய வந்த எனது மகளின் ஆடைகளைக் களைந்து நிர்வாண நிலையில் பூஜை செய்தார். பூஜை முடியும்போது என் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். பூஜை முடிந்து வந்தபோது, என் மகள் மயக்க நிலையிலேயே இருந்தார். அவர் மயக்கம் தெளிந்த பிறகுதான் நடந்தவற்றைச் சொன்னார்’ என்று வேதனையோடு அழுதார். போலீஸில் புகார் கொடுக்கச் சொல்லி அவரிடம் சொன்னேன். 'வேண்டாங்கய்யா... எங்க குடும்ப மானம் போயிடும். வாழப்போற பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க. அந்தப் பாவி பயகிட்ட இனி எந்தப் பொண்ணையும் அனுப்பாதீங்க...’னு அழுதார்.

நான் நேராக கணேசமூர்த்தியிடம் சென்று சண்டை போட்டேன். கணேசமூர்த்தி பற்றி அதன் பிறகு விசாரித்தபோதுதான் அவர் தோஷம் கழிக்க வரும் பல பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது தெரிந்தது. குடும்ப மானம் போய்விடும் என்பதால், எந்தப் பெண்ணும் கணேசமூர்த்தி மீது புகார் கொடுப்பது இல்லை. இதுவே அவருக்கு சாதகமாகிவிட்டது. இனியும் இதுபோன்ற ஆட்களை விட்டுவைக்கக் கூடாது என்றுதான் அவர் மீது புகார் செய்தேன்'' என்று சொன்னார்.

கணேசமூர்த்தி உறுப்பினராக உள்ள அர்ச்சகர் சங்கத்தின் தலைவர் அழகர்சாமியிடம் பேசினோம். ''12 பேர் எங்கள் சங்க உறுப்பினர்கள். வாரத்துக்கு ஆறு பேர் என ஷிஃப்ட் முறையில் தோஷப் பரிகார பூஜைகளில் ஈடுபடுவோம். காலையில் தொடங்கி இரவு 7 மணிக்கு வரைதான் பூஜை நடத்துவோம். ஆனால் கணேசமூர்த்தி, விதிகளுக்கு மாறாக 8 மணிக்கு பூஜை நடத்தியிருக்கிறார். எங்களை நம்பி வரும் பக்தர்களுக்கு எந்த ஒழுக்கக்கேடான சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். கணேசமூர்த்தியை எங்கள் சங்கத்தில் இருந்தும் நீக்கியிருக்கிறோம்'' என்றார் நிதானமாக.

கணேசமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரது சகோதரர் மகேஸ்வரனிடம் பேசினோம். ''இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த என் தம்பி மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். என் தம்பியின் அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காத சிலரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். என் தம்பி குற்றமற்றவன் என்பதை நிரூபிப்போம்'' என்று சொன்னார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் பேசியபோது, ''புனிதத் தலங்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்துள்ளோம். பக்தர்கள் தங்கும் விடுதிகளைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம். பெண்களுக்கு இதுபோல பிரச்னைகள் வரும்போது, அவர்கள் தாராளமாக எங்களிடம் புகார் செய்யலாம். அவர்களைப் பற்றிய ரகசியம் காக்கப்படும்'' என்றார்.

பிரச்னைகள் தீர பரிகாரம் தேடி வரும் பக்தர்களுக்கு மேலும் பிரச்னையைக் கொடுக்கலாமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum