ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்

2 posters

Go down

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Empty மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்

Post by சிவா Tue Jun 24, 2014 1:59 am


மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன. இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.

1. சாதனத்தினை பூட்டி வைக்க மறத்தல்: நம் சாதனத்தை லாக் செய்தல் பெரிய அளவில் பாதுகாப்பினை வழங்கப் போவது இல்லை என்றாலும், அதுவே நம் பாதுகாப்பு கட்டமைப்பில் முதல் படியாகும். இந்த லாக் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது வந்துள்ள ஐபோன் 5ல் தரப்பட்டுள்ள விரல் ரேகை பூட்டு முதல், சாதாரணமாக பின் (PIN) எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டு போடும் முறை வரை இருக்கலாம். இதனுடன் கூட நம் போன் தொலைந்து போனாலும், ரிமோட் கட்டுப்பாடு முறையில் அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்திடும் வழிமுறைகளையும் பின்பற்றலாம்.

2. அப்டேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்: நாம் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை நமக்கு வழங்கிய நிறுவனங்கள், அவற்றை மேம்படுத்துகையில், புதிய வசதிகள் தருவதோடு, அவற்றிற்கான பாதுகாப்பிற்கென புதிய வழிகளையும் அமைக்கின்றன. எனவே, அப்டேட் செய்திடவில்லை எனில், நம் அப்ளிகேஷன் புரோகிராம் மட்டுமின்றி, போனும் பாதுகாப்பற்ற நிலையை அடைகிறது.

3. அனுமதியற்ற சாதனத்தில் முக்கிய டேட்டா: அலுவலகப் பயன்பாட்டிற்கு எனத் தனியாகவும், சொந்த தொடர்புகளுக்கென தனியாகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், அலுவலகம் சார்ந்த முக்கிய ரகசிய தகவல்களை நம் சொந்த மொபைல் சாதனங்களில் ஸ்டோர் செய்திடுகிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வகை டேட்டாவினையும் தனித்தனியே, வெவ்வேறு சாதனங்களில் ஸ்டோர் செய்வதே பாதுகாப்பானது.

4.கேள்விக்குறியாகும் தகவல்களைத் திறப்பது: மொபைல் சாதனங்கள் மூலம் பயனாளர்கள் தேவையற்ற, நாகரிகமற்ற விஷயங்களைப் பெற முடியும். எஸ்.எம்.எஸ். வழி அனுப்பப்படும் மெசேஜ்கள் இவ்வகையில் நமக்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றன. ஸ்பாம் செய்திகளில் உள்ள லிங்க்குகள் இந்த அபாயங்களுக்கு வாசல்கள் ஆகும். எனவே, இத்தகைய செய்திகளில் தொற்றிக் கொண்டு வரும் லிங்க்குகளில் கிளிக் செய்து திறக்கவே கூடாது. நாம் ஏற்கனவே அறியாத, அறிந்துகொள்ள முடியாத லிங்க்குகள் இருந்தால், அவை கொண்டுள்ள செய்திகளை உடனடியாக அழித்துவிட வேண்டும். ஏனென்றால், பின் நாளில், நாம் அறியாமலேயே இவற்றில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ள நேரிடும்.

இதே போல, நிறுவனங்கள் இல்லாமல், தனி நபர்கள் தயாரித்து இலவசமாக வழங்கும் அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழக்கமும் மிகவும் ஆபத்தானது. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஆகிய தளங்களில் கூட இது போன்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இவற்றிலாவது ஓரளவிற்கு, சோதனை செய்யப்பட்டே புரோகிராம்கள் இதில் தரவிறக்கம் செய்வதற்குப் பதியப்படுகின்றன. இவ்வாறின்றி பிற தளங்களில் கிடைக்கும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிவு செய்திடும் முன் பலமுறை யோசித்து, சோதனை செய்து, இணையதளங்களில் அந்த புரோகிராம் குறித்த தகவல்களைத் தேடி அறிந்த பின்னரே, பாதுகாப்பு மற்றும் உண்மைத் தன்மை அறிந்த பின்னரே, அவற்றைப் பயன்படுத்த தரவிறக்கம் செய்திட வேண்டும்.

5. பணியாற்றும் நிறுவனக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல்: பல நிறுவனங்கள், தங்களின் அலுவலர்கள், தங்கள் நிறுவனம் குறித்த தகவல்களை, சமூக வலைத் தளங்களில் பதியக் கூடாது எனப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்கும். இவற்றைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். மறந்தும் கூட நாம் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களை, அவை எதுவாக இருந்தாலும், சமூக இணைய தளங்களில் பதியக் கூடாது. ஏனென்றால், இந்த இணைய தளங்களை இயக்குபவர்கள், நாம் தரும் தனி நபர் தகவல்களை மற்றவர்களுக்கு வழங்குவதனை உரிமையாகவே கொண்டிருப்பார்கள். இதனை அறியாமல் நாம் பிரச்னைக்குள்ளாகி விடுவோம்.

6.பொது இட வை-பி பயன்படுத்துதல்: உங்கள் மொபைல் போனில் நீங்கள் பெற்றிருக்கும் வை-பி தொடர்பினைப் பயன்படுத்தாமல், பொது இடங்களில் கிடைக்கும் வை-பி தொடர்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவை முற்றிலும் பாதுகாப்பானது என்பதனை உறுதி செய்து கொண்ட பின்னரே பயன்படுத்த வேண்டும். எல்லாரும் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிப் பயன்படுத்தும் வகையில் வை-பி இணைப்பு தரப்படுவதாக இருந்தால், அதனைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால், இணைப்பில் இருக்கையில், நம் மொபைல் போனில் உள்ள தகவல்களை, அதே நெட்வொர்க்கில் இயங்கும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மொபைல் சாதனங்களில் நாம் பின்பற்ற மறக்கும் நெறிமுறைகளாகும். மொபைல் சாதனங்கள் கையடக்க கம்ப்யூட்டர்களாக மாறியுள்ள நிலையில், இணையத்திற்கான திறவு கோல்களாக உருவெடுத்துள்ள நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் நாம் இவற்றிலும் பின்பற்றியாக வேண்டும்.

கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Empty Re: மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்

Post by M.M.SENTHIL Tue Jun 24, 2014 12:11 pm

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் 103459460 மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum