ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

3 posters

Go down

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Empty நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Post by சிவா Thu Jun 12, 2014 5:12 pm


தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அறிக்கைவிட... பதிலுக்கு, ''காங்கிரஸையே ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்த சிதம்பரத்துக்கும் அவரது கோஷ்டிகளுக்கும் ஞானதேசிகனை விமர்சிக்க அருகதை இல்லை'' என்று ஞானதேசிகன் ஆதரவாளர்கள் அறிக்கை வெளியிட... தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு.

இந்த நிலையில்தான், 7-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ப.சிதம்பரம் கோஷ்டியினர் புறக்கணித்தாலும் கூட்டத்தில் சூடான விவாதங்களுக்குப் பஞ்சமில்லை.

கூட்டத்தைத் தொடங்கி வைத்த ஞானதேசிகன், ''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் தோல்வியைத் தழுவியது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் நம்முடைய வாக்கு 4.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வெறும் 30 நாள் அவகாசத்தில் தேர்தலைச் சந்தித்தோம். என்னை நீக்க வேண்டும் என்று சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பதவி நிரந்தரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். அறிக்கை மூலம் கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம். ஒன்று சேர்ந்து உழைப்போம்'' என்றார்.

சாருபாலா தொண்டைமான் (துணைத் தலைவர்), ''திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்றார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால், எதிர்பார்த்த ஓட்டுகள் விழவில்லை. திருச்சி தொகுதியில் பல கிராமங்களில் குடி தண்ணீர் இல்லை. அ.தி.மு.க வேட்பாளர் குமாரை பல இடங்களுக்குள் பிரசாரத்துக்கே விடவில்லை என்று செய்திகள் வந்தன. அவர், எப்படி ஜெயித்தார் என்பதே தெரியவில்லை. ஓட்டுகள் ஜம்ப்பிங் ஆகும் சூழ்ச்சி ஏதேனும் செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார்.

போட்டியிட்ட 39 பேரில் டெபாசிட் வாங்கிய கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் கூட்டத்துக்கு வரும்போது அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அவர் பேசுகையில், ''கன்னியாகுமரியில் எனது தோல்வி எதிர்பாராதது. மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் வேலையை குறைசொல்ல முடியாது. பணத்தை செலவு செய்ததிலும் நான் குறை வைக்கவில்லை. ஓட்டுப் பதிவுக்கு நான்கு நாட்கள் முன்பு வரை நான்தான் முன்னிலையில் இருந்தேன். ஆனால், தோல்வி ஏன் என்று புரியவில்லை. இனி வருங்காலங்களிலாவது ஒற்றுமையோடு உழைத்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம். ஜெயிப்போம்'' என்றார்.

தொட்டியம் ராஜசேகரன், ''பணம் பெற்றுக்கொண்டு அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஓட்டுப் பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரம் இருக்கிறது. அமெரிக்காவே ஓட்டுப் பதிவு எந்திரத்தை நம்பாமல் பேப்பர் பேலட் முறைக்கு சென்றுவிட்டது. எனவே, எந்திர ஓட்டுப் பதிவுமுறையைக் கண்டித்து வழக்குப் போட வேண்டும்'' என்றார்.

ராயபுரம் மனோ (வட சென்னை தலைவர்), ''தோல்விக்கு இன்னார்தான் காரணம் என்று குறை சொல்வதைவிட்டு வரும் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும். கட்சி நிர்வாகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மட்டுமே போடப்பட்டுள்ளனர். ஆனால், மற்ற நிர்வாகிகள் நியமிக்கப்படவே இல்லை. வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் 33 வட்டங்களும் வருகின்றன. குறைந்தபட்சம் இந்த இடங்களுக்காவது நிர்வாகிகளைப் போட அனுமதி தர வேண்டும். மாவட்ட கமிட்டியில் நிர்வாகிகளையே போடாமல் கட்சியை எப்படி வளர்ப்பது?'' என்று கேள்வி எழுப்பினார்.

புரட்சி மணி (கடலூர் மாவட்டத் தலைவர்), ''சிதம்பரம் ஆதரவாளரான வள்ளல்பெருமானும் கே.எஸ்.அழகிரியும் படுகேவலமாக 4-வது இடத்துக்கு போனது ஏன்? பொருளாதார புலி என்று சொல்லப்படும் சிதம்பரம்தான் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து கட்சியையும் தோற்கடித்தார். ஞானதேசிகன் தலைமையின் கீழ்தான் கட்சி வலுப்பெற்று வருகிறது. 'கட்சியில் சண்டை இல்லை; சட்டைகள் கிழியவில்லை’ என்று பத்திரிகைகளே பாராட்டுகின்றன'' என்று ஆவேசமாகப் பேசினார்.

கோஷ்டி சேர்ப்பதைத் தவிர்த்துவிட்டு ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய தருணம் இது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Empty Re: நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Post by சிவா Thu Jun 12, 2014 5:12 pm

39 பேரையும் அழைத்திருக்க வேண்டும்!

அருள் அன்பரசு (ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்), ''தேர்தல் தோல்வியை ஆராயவும் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் கூட்டப்பட்ட கூட்டத்தில் தேர்தலில் நின்ற வேட்பாளர்களுக்கு அழைப்பு இல்லை. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை மட்டுமே அழைத்து கூட்டம் போட்டுள்ளனர். தேர்தலில் நின்ற 39 பேரையும் அழைத்து, நிர்வாகிகள் ஒத்துழைப்பு எப்படி இருந்தது; குறைகள் என்னென்ன என்றெல்லாம் கேட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேர்தல் அன்று ஒரு சில வாக்குச்சாவடிகளுக்குச் சென்றேன். அங்கு காங்கிரஸ் பூத் ஏஜென்ட்களாக இருந்தவர்களுக்கு வேட்பாளராகிய என்னையே அடையாளம் தெரியவில்லை. கான்ட்ராக்ட் அடிப்படையில் பணத்தைக் கொடுத்து பூத் ஏஜென்ட் போட்டு மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றிவிட்டனர். எனவே, இனியாவது காலம் கடத்தாமல் கட்சியை வளர்க்கும் வேலையை செய்ய வேண்டும்'' என்றார்.


நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Empty Re: நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Post by M.M.SENTHIL Thu Jun 12, 2014 5:46 pm

எப்படியோ அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள் நாட்டை கெடுத்ததை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Empty Re: நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Post by rksivam Thu Jun 12, 2014 8:00 pm

நண்பர்களே வணக்கம்,

காங்கிரஸ் தோற்று போனதன் காரணம் அதன் தலைமையை தவிர மற்ற அனைவரும் என்று காங்கிரசார் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

மக்களை மீண்டும் முட்டாள்கள் என எடை போடுகின்றனர்.

சோனியா ராகுல், பிரியங்கா வதேரா போன்றோரின் ஆடம்பர வாழ்வு,
அவர்கள் செய்த அமர்க்களம்,
இன்று வரை இரட்டை குடியுரிமை ,
படிப்படிவில்லாத சோனியா தலைமை ஏற்க முடியவில்லை என்றால் இந்தியாவே நிர்மூலமாகும் என்கிற மாயை,
எத்தனையோ விதமான டியுஷன் வைத்தும் தோல்வி அடையும் ராகுல்,
ஐந்து நிமிடம் கோர்வையாக பேசமுடியாத அவர் இந்தியாவின் பிரதமராக பிரகடன படுத்தப்பட்டது,
குடும்பத்தாரின் பீரங்கி, ஹெலிகொப்டர், 2ஜி, DLF ஆசிய விளையாட்டு, போன்ற பல ஊழல்கள்.
இந்தியாவின் பாரம்பர்யத்தின் அறிவுக்குறைவு,
பல மாநிலங்களில் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்தது,
வரி விதிப்பை பற்றி கவலை படாதது,
பயங்கரவாதத்தை பற்றி கவலை படாதது,
காஷ்மீர், இலங்கை, பாங்ளா பிரச்சினைகளை வளர விட்டது, அது பற்றி ஒரு முடிவுக்கு வராதது,
வெகு காலமாக தொடர்ந்துவரும் பிரம்மபுத்திரா, கிருஷ்ணா,கோதாவரி, காவேரி முல்லைபெரியார் தொந்தரவுகள்,
லஞ்ச லாவண்யங்கள்,
மாநில அரசுகள் எந்த முடிவுக்கும் குடும்பத்தின் அனுமதி பெறவேண்டிய நிலை போன்ற பல வெறுப்பூட்டும் காரணங்களுக்கு சிதம்பரம் பொறுப்பல்ல,

அவர் தனியாக செய்தவை சில.

இந்த தேர்தலில் முக்கியமாக அவர்கள் தோற்றதன் காரணம் முகமதியர்கள்.

இந்துக்களால் அவர்களுக்கு ஆபத்து என்பது போன்ற பீதியை உருவாக்கி காங்கிரஸ் குளிர் காய்வது முஸ்லிம் மக்களுக்கே வெறுப்பை ஏற்ப்படுத்த ஆரம்பித்துவிட்டது , முகமதியர்களுக்கும் இந்துக்களை போன்ற வயிறு வியாபாரம் குடும்பம் உண்டே அவைகள் காங்கிரஸ் அரசை மிகப்பெரிய எதிரியாய் காட்டியது. ஓட்டை மாற்றிப்போட்டார்கள்.

காந்தி படேல் காங்கிரசுக்கு சேர்த்து வைத்த நல்ல பெயரை நேரு குடும்பத்தினர் அழித்தாகிவிட்டது .இனி காங்கிரசார் செய்ய வேண்டியது உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே,

ஆட்சிபீடத்தில் அறுபதாண்டு காலம் அட்டகாசம் செய்தவர்களுக்கு உழைப்பு மறந்து போயிருக்கும். இனி பொது மக்களுடன் சேர்ந்து உழைத்து வியர்க்க கற்றுக்கொள்ளட்டும் அதன் பிறகே காங்கிரஸ் வளரலாம்.

RK சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Empty Re: நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Post by சிவா Fri Jun 13, 2014 5:17 am

rksivam wrote:நண்பர்களே வணக்கம்,

காங்கிரஸ் தோற்று போனதன் காரணம் அதன் தலைமையை தவிர மற்ற அனைவரும் என்று காங்கிரசார் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

மக்களை மீண்டும் முட்டாள்கள் என எடை போடுகின்றனர்.

சோனியா ராகுல், பிரியங்கா வதேரா போன்றோரின் ஆடம்பர வாழ்வு,
அவர்கள் செய்த அமர்க்களம்,
இன்று வரை இரட்டை குடியுரிமை ,
படிப்படிவில்லாத சோனியா தலைமை ஏற்க முடியவில்லை என்றால் இந்தியாவே நிர்மூலமாகும் என்கிற மாயை,
எத்தனையோ விதமான டியுஷன் வைத்தும் தோல்வி அடையும் ராகுல்,
ஐந்து நிமிடம் கோர்வையாக பேசமுடியாத அவர் இந்தியாவின் பிரதமராக பிரகடன படுத்தப்பட்டது,
குடும்பத்தாரின் பீரங்கி, ஹெலிகொப்டர், 2ஜி, DLF ஆசிய விளையாட்டு, போன்ற பல ஊழல்கள்.
இந்தியாவின் பாரம்பர்யத்தின் அறிவுக்குறைவு,
பல மாநிலங்களில் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்தது,
வரி விதிப்பை பற்றி கவலை படாதது,
பயங்கரவாதத்தை பற்றி கவலை படாதது,
காஷ்மீர், இலங்கை, பாங்ளா பிரச்சினைகளை வளர விட்டது, அது பற்றி ஒரு முடிவுக்கு வராதது,
வெகு காலமாக தொடர்ந்துவரும் பிரம்மபுத்திரா, கிருஷ்ணா,கோதாவரி, காவேரி முல்லைபெரியார் தொந்தரவுகள்,
லஞ்ச லாவண்யங்கள்,
மாநில அரசுகள் எந்த முடிவுக்கும் குடும்பத்தின் அனுமதி பெறவேண்டிய நிலை போன்ற பல வெறுப்பூட்டும் காரணங்களுக்கு சிதம்பரம் பொறுப்பல்ல,

அவர் தனியாக செய்தவை சில.

இந்த தேர்தலில் முக்கியமாக அவர்கள் தோற்றதன் காரணம் முகமதியர்கள்.

இந்துக்களால் அவர்களுக்கு ஆபத்து என்பது போன்ற பீதியை உருவாக்கி காங்கிரஸ் குளிர் காய்வது முஸ்லிம் மக்களுக்கே வெறுப்பை ஏற்ப்படுத்த ஆரம்பித்துவிட்டது , முகமதியர்களுக்கும் இந்துக்களை போன்ற வயிறு வியாபாரம் குடும்பம் உண்டே அவைகள் காங்கிரஸ் அரசை மிகப்பெரிய எதிரியாய் காட்டியது. ஓட்டை மாற்றிப்போட்டார்கள்.

காந்தி படேல் காங்கிரசுக்கு சேர்த்து வைத்த நல்ல பெயரை நேரு குடும்பத்தினர் அழித்தாகிவிட்டது .இனி காங்கிரசார் செய்ய வேண்டியது உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே,

ஆட்சிபீடத்தில் அறுபதாண்டு காலம் அட்டகாசம் செய்தவர்களுக்கு உழைப்பு மறந்து போயிருக்கும். இனி பொது மக்களுடன் சேர்ந்து உழைத்து வியர்க்க கற்றுக்கொள்ளட்டும் அதன் பிறகே காங்கிரஸ் வளரலாம்.

RK சிவம்

அருமை சிவம்!


நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம் Empty Re: நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum