Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தமெல்லாம் சிவமயம்! என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே!
Page 1 of 1
சித்தமெல்லாம் சிவமயம்! என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே!
பிறவிகளில் மானிடப் பிறவி மகத்தானது! மானிடனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற இறைத் தொண்டு செய்தும், இறை நாமத்தை ஜபித்தும் இறைவனின் பாதத்தை அடைய வேண்டும். சீர்படுத்தாமல் விடப்பட்ட சிவாலயங்களைச் சீர்படுத்திப் பராமரித்தும், சிவாலய குடமுழுக்குக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தும் சிவத் தொண்டு செய்து வருகிறார் கந்தசாமி சிவனடியார். ''கடந்த 37 வருடங்களாக இப்படிச் சிவத்தொண்டு செய்து வருவதை என் பிறவிக் கடமையாகவே நினைக்கிறேன்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் இவர்.
இடுப்பில் காவி வேஷ்டி, தோளில் துண்டு, கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் திருநீறு... இதுதான் கந்தசாமி சிவனடியாரின் தோற்றம். மாதச் சம்பளம் வந்ததும் முதல் வேலையாக கோயிலுக்கென எண்ணெய் பாக்கெட், ஊதுவத்தி, சூடம் என வாங்கி, பை பையாக எடுத்துக்கொண்டு, தனது டூ வீலரில் கோயில் கோயிலாகச் செல்கிறார்.
இவர் செல்லும் கோயில்கள் யாவும் வழிபாடுகளோ, ஒரு வேளை பூஜையோ நடைபெறாத, விளக்கேற்றக்கூட வசதி இல்லாத ஆலயங்கள்!
'கோயில் ஒரு சுடுகாடு
கொல் புலித்தோல் நல்லாடை
தாயுமில்லை தந்தையுமில்லை
அவர் ஒரு தான்தோன்றியவன்
- என்ற மாணிக்கவாசகரின் கருத்துக்கள்தான் எனக்கு வழிகாட்டி.இறைவன் தந்த இந்த உயிரை, இந்த உடலை இறைவனுக்கே அர்ப்பணித்து, தொண்டு செய்து, இறைவனின் பாதத்தை அடைய வேண்டும். அதற்காகத்தான் சதா சர்வ காலமும் சதாசிவத்தையே, தென்னாடுடைய சிவனையே நினைச்சுக்கிட்டிருக்குது என் மனசு'' என்கிறார் கந்தசாமி சிவனடியார்.
திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அத்தனை சிவனடியார்களுக்கும் கந்தசாமியின் தொண்டும் இறைநாட்டமும் தெரிந்திருக்கிறது. எனவே, எங்கேனும் சிவாலயம் சிதிலமடைந்தோ, பராமரிப்பின்றியோ இருந்தால், உடனே கந்தசாமிக்குத் தகவல் வந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, நண்பர்களின் உதவியுடனும், அந்த ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் கோயிலைப் புனரமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிடுவார் கந்தசாமி. தன் 12-வது வயதில் இருந்து இறைத் தொண்டு செய்து வரும் கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிகிறார்.
''எனக்குச் சொந்த ஊர், திருச்சி பக்கத்துல உள்ள லால்குடிதான். அங்கே, என் சின்ன வயசுல, கோயில்ல ஸ்வாமி புறப்பாட்டின் போது, அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வார் அப்பா வைத்தி லிங்கம். அப்பா பக்கத்துல நின்னுக்கிட்டு அத்தனை விஷயங்களையும் உன்னிப்பா பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுதான் என்னையும் அப்பாவைப் போலவே கடவுள் பணிக்குத் தள்ளிக்கொண்டு வந்து விட்டிருக்குன்னு தோணுது.
சின்ன வயசுலயே, ஊரைச் சுத்தி இருக்கிற சிவன் கோயில்களுக்குப் போய், உழவாரப் பணிகள் செய்வோம். அன்னிக்கு சிறிய அளவில செஞ்ச உழவாரப் பணி, இப்ப கோயில் திருப்பணி, கும்பாபிஷேக விழானு ஆகியிருக்கு. அவ்ளோதான்!'' என்று மலர்ந்த முகத்துடன் சொல்கிறார் கந்தசாமி சிவனடியார்.
''சிதிலம் அடைந்த கோயிலைப் பற்றி அன்பர்களும் நண்பர்களும் சொல்லுவாங்க. உடனே, அந்தக் கோயில் பத்தின புராண- புராதன விஷயங்களைச் சேகரிப்பேன். பிறகு ஊர்மக்கள்கிட்ட, 'உங்க ஊர்ல இப்படி சிதிலம் அடைஞ்சிருக்கிற கோயிலோட பெருமைகள் தெரியுமா?’னு கேட்டு, எல்லாத்தையும் விவரமா, விளக்கமா சொல்வேன். கடவுளுக்குத் தொண்டு செய்வது பத்தியும், அதனால நம்ம வாழ்க்கைல ஏற்படக்கூடிய நல்ல நல்ல மாற்றங்கள் பத்தியும் சொல்வேன்.
திருப்பணிக்கு நன்கொடை தரும் சிவநேசச் செல்வர்களை ஊர் ஊராத் தேடிப் போய், கோயில் பத்தி சொல்லி, நிதி திரட்டி, திருப்பணி வேலைகளைத் தொடங்குவோம். சனி, ஞாயிறு, கல்லூரி விடுமுறைன்னு எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அந்த நேரம் மொத்தமும் சிவபெருமானுக்குத்தான்! ஒரு கோயிலை எடுத்துக்கிட்டு திருப்பணிகளைத் தொடங்கினோம்னா, அதிகபட்சம் ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்திடுவோம்'' என்கிறார் கந்தசாமி. இவரின் தன்னலமற்ற தொண்டுள்ளத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் பலர், இவரின் இறைப் பணிக்குக் கணிசமாகவே உதவி செய்து, ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
திருச்சி அருகே உள்ள களமாவூரில், பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற நாமத்தை சூட்டி, அங்கே ஒரு கோயிலையும் கட்டியுள்ளார் கந்தசாமி சிவனடியார். தினமும் இங்கே பூஜைகள் செய்து, இங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிகக் கதைகள் சொல்லி வருகிறார்.
''குறிப்பா, கோயில் பற்றிய பெருமைகளைச் சொல்லி, கோயிலை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும், எதற்காகப் பாதுகாக்க வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லி வருகிறேன். சிவாகமப் பயிற்சிக்குச் செல்லும் மாணவர்கள் பலரின் செலவை நானே ஏத்துக்கறேன். தவிர, ஒவ்வொரு கோயிலுக்கும் 3 கிலோ எண்ணெய், திரி, தீப்பெட்டினு நண்பர்களின் உதவியோடு கொடுத்துட்டிருக்கேன். ஏதோ, என்னால முடிஞ்ச இறைத் தொண்டு!'' என்று சொல்லிப் புன்னகைக்கிறார் கந்தசாமி சிவனடியார்.
விகடன்
இடுப்பில் காவி வேஷ்டி, தோளில் துண்டு, கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் திருநீறு... இதுதான் கந்தசாமி சிவனடியாரின் தோற்றம். மாதச் சம்பளம் வந்ததும் முதல் வேலையாக கோயிலுக்கென எண்ணெய் பாக்கெட், ஊதுவத்தி, சூடம் என வாங்கி, பை பையாக எடுத்துக்கொண்டு, தனது டூ வீலரில் கோயில் கோயிலாகச் செல்கிறார்.
இவர் செல்லும் கோயில்கள் யாவும் வழிபாடுகளோ, ஒரு வேளை பூஜையோ நடைபெறாத, விளக்கேற்றக்கூட வசதி இல்லாத ஆலயங்கள்!
'கோயில் ஒரு சுடுகாடு
கொல் புலித்தோல் நல்லாடை
தாயுமில்லை தந்தையுமில்லை
அவர் ஒரு தான்தோன்றியவன்
- என்ற மாணிக்கவாசகரின் கருத்துக்கள்தான் எனக்கு வழிகாட்டி.இறைவன் தந்த இந்த உயிரை, இந்த உடலை இறைவனுக்கே அர்ப்பணித்து, தொண்டு செய்து, இறைவனின் பாதத்தை அடைய வேண்டும். அதற்காகத்தான் சதா சர்வ காலமும் சதாசிவத்தையே, தென்னாடுடைய சிவனையே நினைச்சுக்கிட்டிருக்குது என் மனசு'' என்கிறார் கந்தசாமி சிவனடியார்.
திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அத்தனை சிவனடியார்களுக்கும் கந்தசாமியின் தொண்டும் இறைநாட்டமும் தெரிந்திருக்கிறது. எனவே, எங்கேனும் சிவாலயம் சிதிலமடைந்தோ, பராமரிப்பின்றியோ இருந்தால், உடனே கந்தசாமிக்குத் தகவல் வந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, நண்பர்களின் உதவியுடனும், அந்த ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் கோயிலைப் புனரமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிடுவார் கந்தசாமி. தன் 12-வது வயதில் இருந்து இறைத் தொண்டு செய்து வரும் கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிகிறார்.
''எனக்குச் சொந்த ஊர், திருச்சி பக்கத்துல உள்ள லால்குடிதான். அங்கே, என் சின்ன வயசுல, கோயில்ல ஸ்வாமி புறப்பாட்டின் போது, அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வார் அப்பா வைத்தி லிங்கம். அப்பா பக்கத்துல நின்னுக்கிட்டு அத்தனை விஷயங்களையும் உன்னிப்பா பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுதான் என்னையும் அப்பாவைப் போலவே கடவுள் பணிக்குத் தள்ளிக்கொண்டு வந்து விட்டிருக்குன்னு தோணுது.
சின்ன வயசுலயே, ஊரைச் சுத்தி இருக்கிற சிவன் கோயில்களுக்குப் போய், உழவாரப் பணிகள் செய்வோம். அன்னிக்கு சிறிய அளவில செஞ்ச உழவாரப் பணி, இப்ப கோயில் திருப்பணி, கும்பாபிஷேக விழானு ஆகியிருக்கு. அவ்ளோதான்!'' என்று மலர்ந்த முகத்துடன் சொல்கிறார் கந்தசாமி சிவனடியார்.
''சிதிலம் அடைந்த கோயிலைப் பற்றி அன்பர்களும் நண்பர்களும் சொல்லுவாங்க. உடனே, அந்தக் கோயில் பத்தின புராண- புராதன விஷயங்களைச் சேகரிப்பேன். பிறகு ஊர்மக்கள்கிட்ட, 'உங்க ஊர்ல இப்படி சிதிலம் அடைஞ்சிருக்கிற கோயிலோட பெருமைகள் தெரியுமா?’னு கேட்டு, எல்லாத்தையும் விவரமா, விளக்கமா சொல்வேன். கடவுளுக்குத் தொண்டு செய்வது பத்தியும், அதனால நம்ம வாழ்க்கைல ஏற்படக்கூடிய நல்ல நல்ல மாற்றங்கள் பத்தியும் சொல்வேன்.
திருப்பணிக்கு நன்கொடை தரும் சிவநேசச் செல்வர்களை ஊர் ஊராத் தேடிப் போய், கோயில் பத்தி சொல்லி, நிதி திரட்டி, திருப்பணி வேலைகளைத் தொடங்குவோம். சனி, ஞாயிறு, கல்லூரி விடுமுறைன்னு எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அந்த நேரம் மொத்தமும் சிவபெருமானுக்குத்தான்! ஒரு கோயிலை எடுத்துக்கிட்டு திருப்பணிகளைத் தொடங்கினோம்னா, அதிகபட்சம் ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்திடுவோம்'' என்கிறார் கந்தசாமி. இவரின் தன்னலமற்ற தொண்டுள்ளத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் பலர், இவரின் இறைப் பணிக்குக் கணிசமாகவே உதவி செய்து, ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
திருச்சி அருகே உள்ள களமாவூரில், பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற நாமத்தை சூட்டி, அங்கே ஒரு கோயிலையும் கட்டியுள்ளார் கந்தசாமி சிவனடியார். தினமும் இங்கே பூஜைகள் செய்து, இங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிகக் கதைகள் சொல்லி வருகிறார்.
''குறிப்பா, கோயில் பற்றிய பெருமைகளைச் சொல்லி, கோயிலை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும், எதற்காகப் பாதுகாக்க வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லி வருகிறேன். சிவாகமப் பயிற்சிக்குச் செல்லும் மாணவர்கள் பலரின் செலவை நானே ஏத்துக்கறேன். தவிர, ஒவ்வொரு கோயிலுக்கும் 3 கிலோ எண்ணெய், திரி, தீப்பெட்டினு நண்பர்களின் உதவியோடு கொடுத்துட்டிருக்கேன். ஏதோ, என்னால முடிஞ்ச இறைத் தொண்டு!'' என்று சொல்லிப் புன்னகைக்கிறார் கந்தசாமி சிவனடியார்.
விகடன்
Similar topics
» தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத்
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது
» எல்லாம் சிவமயம்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது
» எல்லாம் சிவமயம்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|