ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர்

Go down

மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Empty மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர்

Post by சிவா Mon Jun 09, 2014 6:35 pm


தன் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய மனிதர்களைப் பற்றி மன நெகிழ்வோடு பேசுகிறார் நட்சத்திர எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

அப்பா ராதாகிருஷ்ணன்: மிக இளம் வயதிலேயே எனக்குள் பெரிய தாக்கம் ஏற்படத்திய முதல் மனிதர். ஸ்கூல் படிப்பை முடித்த கையோடு, வாழ்க்கையில் சொந்தக் காலில் நிற்பதை தன் லட்சியமாகக் கொண்டு சொந்தமாக வியாபாரம் தொடங்கியவர் அவர். எதையும் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு, மிக நேர்த்தியாகச் செய்து முடிகிற அவருடைய திறமையை இன்று நினைத்தாலும்கூட எனக்கு பிரமிப்பு ஏற்படும். எப்போதும் சிரித்த முகத்தோடு அவர் கஸ்டமர்களை கவனிக்கும் முறை, பிசினஸ் என்பதை மீறிய நட்பு இவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து பார்த்தவன். பள்ளிக்கூட மாணவனாக இருந்த சமயத்திலேயே, நான் அவருக்கு உதவியாகக் கடையில் வேலை பார்த்திருக்கிறேன். "வாழ்க்கையில் மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் நேர்மை' என்பது அவரது அசைக்க முடியாத கருத்து. பிள்ளைகளை மிகுந்த பாதுகாப்போடு பொத்திப் பொத்தி வளர்க்கிற இன்றைய தலைமுறைப் பெற்றோரிடமிருந்து அவர் முற்றிலும் மாறுபட்டவர். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் "மேய போகிற மாடு புல்லை கட்டிக்கிட்டாப் போகும்?' என்பதுதான். வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழப் பழகவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் என் தந்தை.

ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் டயஸ்: திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் 1974 முதல் 1977 வரை ஹாஸ்டலில் தங்கி பி.ஏ. படித்த மாணவன் நான். அப்போது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர்தான் ஃபாதர் டயஸ். ரொம்பக் கண்டிப்பானவர். தினமும் காலையில் ாறு மணிக்கு மொத்த ஹாஸ்டலையும் ஒரு ரவுண்டு அடிப்பார். ஹாஸ்டல் அறைகளின் கதவுகளில் சிறிய திறப்பு இருக்கும். அதன் மூலமாக ஆறு மணிக்குப்பிறகும் தூங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களின் பட்டியலை எடுத்துவிடுவார். அதன்பிறகு அவர்கள் அனைவருக்கும் அழைப்பு வரும். பத்து பைசா அபராதம் செலுத்தச் சொல்லுவார்.

மாணவர்களுக்கு அந்த பத்து பைசா பெரிய விஷயமில்லை என்றாலும், வார்டனின் ஆஃபீஸ் முன்னால் கியூவில் நிற்கிற போது, மற்ற மாணவர்கள் "அட. தூங்கு மூஞ்சிகளா!' என்று ஒரு லுக் விடுவார்களே, அதுதான் பெரிய அவமானமாக இருக்கும். பத்து பைசா அபராதம் கட்டும்போது, வார்டன் சொல்லும் "நேரத்தின் அருமை' பற்றிய அட்வைஸ் அப்போது எல்லோருக்குமே ரொம்பவே கசப்பாக இருந்தது. ஆனால் அதன் பின் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக உள்ளதற்காக இன்றளவும் நான் அவருக்கு மானசிகமாக நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

மாமனார் ஆர். முத்து நாராயணன்: திருச்சியில் வழக்கறிஞராக இருந்தவர். பெரியாரின் தொண்டர். லட்சியப் பிடிப்பு கொண்ட மனிதர். அவரோடு மிக நெருக்கமாக பழகும் அரிய வாய்ப்பைப் பெற்ற அதிஷ்டசாலி. அவரை நான் ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும், பெரியாரைப் பற்றி, பல அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பேசுவார். பெரியøாப் பற்றி அவர் சொல்லுகிற ஒவ்வொரு விஷயமும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட பெரியார் பற்றி தகவல்களையும், அனுபவங்களையும் தொகுத்து, நான் "பெரியர் ஒரு தீவிரவாதி' என்ற ஒரு புத்தகம் எழுதினேன். தன் கண்களை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் அவர், தனது கண்களை இலங்கையில் நடைபெற்ற போரில் கண்களை இழந்த தமிழக்குத்தான் பொறுத்தப்பட வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல தன் மறைவுக்கு பிறகு, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குத் தன்னுடைய உடலை தானம் செய்வதாக உறுதி மொழியளித்திருக்கிறார். எனக்குள்ளே அவரது தாக்கம் முன்னைவிட இப்போது பலமடங்கு அதிகரித்திருப்பதை நான் உணர்கிறேன்.

சத்குரு ஜக்கி வாசுதேவ்: ஆரம்ப காலத்தில் சத்ரு ஜக்கி வாசுதேவ் அவர்களே 13 நாட்களுக்கு நடத்தும் ஈஷா யோகா வகுப்புகளில் கலந்து கொண்டேன். அவரது உரைகளைக் கேட்டு, ஈஷா யோகா கற்றுக் கொண்டது முதல், அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கம் அளவில்லாதது. அதன் காரணமாகத் தான், அடுத்த நிலை பயிற்சி வகுப்பிற்கு சென்று பயனடைந்தேன். வாழ்க்கை குறித்த தெளிவான பார்வை எனக்கு ஏற்படுவதற்கு வித்திட்டவர் அவர். ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை எனக்குள்ளே ஏற்படுத்தியவர் அவர்.

- எஸ். சந்திர மௌலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum