Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
நிகழ்நிலை நிர்வாகிகள்
போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
4 posters
Page 1 of 1
போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
‘போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!’
கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
சில நாட்களுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருந்தபோது, த்ரிஷாவின் 31-வது பிறந்தநாள் பற்றிய ஜெயச்சந்திர ஹாஸ்மியின் போஸ்ட், நம்மை வெகுவாக ஈர்த்தது. அதை அப்படியே அவள் விகடனுக்கு கட்டுரையாக்கித் தரும்படி கேட்டோம். இதோ அந்தக் கட்டுரை..!
சில நாட்களுக்கு முன், நடிகை த்ரிஷாவின் 31-வது பிறந்தநாள் வந்தது. இதையொட்டி ஃபேஸ்புக்கில் போடப்பட்ட பெரும்பாலான பதிவுகள், 'த்ரிஷா ஆன்ட்டி ஆயாச்சு’ என்பதையே மீண்டும் மீண்டும் சுட்டின. இதே ஃபேஸ்புக்கில் சிலநாட்களுக்கு முன் அஜீத்தின் 43-வது பிறந்தநாள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு முன் ரஜினியின் 63-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அடுத்த மாதம் விஜய்யின் 40-வது பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் குவியும்.
நடிப்புக்கு வயது என்றுமே தடையில்லை என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அது நாயகனுக்கு மட்டும் செல்லும் என்பது, நாயக வழிபாட்டின் வெளிப்பாடு. நடிகன், தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்படுவதும், வயதும் கவர்ச்சியும் இருக்கும்வரை மட்டும் நடிகைகள் ரசிக்கப்படுவதும், பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமே!
ரஜினி, கமலுக்கும், விஜய், அஜீத்துக்கும் ஆகாத வயதா... த்ரிஷாவுக்கு ஆகிவிட்டது? இதுபோன்று ஒரு கதாநாயகி, ஒரு பெண், அவள் உடல் சார்ந்து மட்டுமே ரசிக்கப்படும் அவலமான ரசனையை குறை சொல்லும்முன், இதற்கெல்லாம் அடிப்படையான தமிழ் சினிமாவில், பெண்கள், நாயகிகள், எப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்று பார்ப்பதும் மிக அவசியம்.
நகைச்சுவை, பாடல், கதை என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெண் என்பவள், தமிழ் சினிமாவில் எவ்வளவு கீழ்த்தரமாக சித்திரிக்கப்படுகிறாள் என்று நம் காலத்திய படங்களைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் தெரியும்.
சமீபகால சினிமாவில், காதலிகளைத் திட்டிப் பாடும் பாடல்கள்தான் 'டிரெண்ட்’. அதை முட்டாள்தனமான வரிகளுடன் ஒரு பாட்டாக்கிவிட்டால், படம் ஹிட்டாகிறதோ இல்லையோ, அந்தப் பாடல் நிச்சயம் ஹிட். படத்துக்கு விளம்பரத்தையும் தேடித் தந்துவிடும். ஆனால், இதுபோன்ற பாடல் வரிகளுக்கும், படத்தில் அது வரும் சூழலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
உதாரணத்துக்கு 'கொலவெறி’ பாடல். காதலி வெளிநாட்டுக்குப் போகிறேன் என்று சொல்வாள். இத்தனைக்கும் காதலோடுதான் சொல்வாள். காதல் வேண்டாம் என்றுகூட சொல்லமாட்டாள். ஆனால், காதலன் பீச்சுக்குப் போய், அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள், தன்னை விட்டுப் போய்விட்டாளென 'ஒய் திஸ் கொலவெறி’ பாடுவான்.
'ஏழாம் அறிவு’ படத்தில் 'யம்மா யம்மா’ பாடல் மெலடியில் காதலிகளைத் திட்டுகிறது. படத்தில் அதுவரையிலான காட்சிகளில் அந்தப் பெண் காதல் என்ற நோக்கில் நாயகனிடம் பழகியிருக்கக்கூட மாட்டாள். நாயகனே தவறாகப் புரிந்துகொண்டு, 'பெண்களின் காதல் கைக்குட்டை போல’ என்று தத்துவம் உதிர்ப்பான்.
இவற்றைவிட இன்னொரு அற்புதப் பாடல், 'மயக்கம் என்ன’ படத்தின் 'அடிடா அவள’ பாடல். படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் அதுவரையில் காதலே வந்திருக்காது. ஆனால்... என் காதல் போச்சு, கண்ணீர்தான் மிச்சம், காதலி என்னென்ன சூது செய்தாள் என்றவாறே அப்பாடல் முழுவதும் எழுதப்பட்டிருக்கும்.
இன்னொரு அருவருக்கத்தக்க பாடல், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பாடல். ஒரு பெண்ணை நாயகன் சைட் அடிப்பான். நன்றாக கவனியுங்கள்... சைட் மட்டும்தான் அடிப்பான். அதில் எங்கும் காதலே இருக்காது. அந்தப் பெண் இவனை காதலிப்பது போல் எந்த ஒரு சமிக்ஞையும் தந்திருக்கவே மாட்டாள். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் என்று கேள்விப்பட்டவுடன், 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா’ என்று அறிவுபூர்வமான பாடலைப் பாடுவான் நாயகன்.
ஒரு பெண், ஒருவனைக் காதலிக்காமல் போவதால் மட்டுமே, அவள் தவறானவளாகி விடுவாளா? படம் பார்க்கும் ரசிகனைத் தங்களுக்கு வெகு கீழே, சொல்லப்போனால் முட்டாளாகவே நினைத்திருக்கும் சூழலில்தான் இதுவெல்லாம் நடக்கும். இதில் கொடுமை என்னவென்றால், காதலில் வெற்றி பெற்றவனும் இதுபோன்ற பாடல்களுக்கு, வசனங்களுக்குக் கைதட்டுகிறான்.
பெண்கள் மீதான இந்த ஏளனத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அத்தனை இளைஞர்கள் மனதிலும் விதைத்து, கல்லாப்பெட்டியை நிரப்பியபடியே இருக்கிறது சினிமா. முன்புபோல இப்போதெல்லாம் 'லவ் ஃபெயிலர்’ என்பது ஓர் உணர்வுப் பிரச்னையாக இல்லாமல், 'பிரேக் அப்’ என்பது சமூக அந்தஸ்தாகவே சித்திரிக்கப்படுகிறது. அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்த வரிகளெல்லாம், எத்தகைய வன்மையான, எள்ளலான உணர்வை அவர்கள் தோழிகளின் மேல் ஏற்படுத்தும்..!
சினிமாவில் வருவதுபோலவே தங்கள் கல்லூரி வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை, ஊர் வாழ்க்கை, நண்பர்களுடனான வாழ்க்கை என்று அனைத்தையும் கட்டமைத்து வாழும் ஆசை இங்கே பரவலாக இருக்கிறது. இந்நிலையில் பெண்களை தவறாக சித்திரிக்கும் இந்தப் போக்கு, நிஜ வாழ்விலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தூண்ட ஒரு காரணியாக அமைந்துவிடக்கூடும்.
சொல்லப்போனால், இதுதான் வன்மையான ஆபாசம். பெண்கள் தொப்புள் தெரிந்தாலோ, ஸ்லீவ்லெஸ் போட்டபடி வந்தாலோ, 'கலாசாரம் பாழாப்போச்சே’ என்று அதை வெட்டச் சொல்லும் சென்ஸார் போர்டின் காதுகளுக்கும் கண்களுக்கும் இதெல்லாம் போகாதா? ஒரு பெண்ணை எவ்வளவு கேவலமாகத் திட்டியும் உங்களால் வசனம் எழுதி, அப்படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலையில்தான் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை இருக்கிறதா? இதுவே அரசியல், சாதி பற்றி பேசும் ஒரு படத்தை இங்கே வெளியிட்டுவிட முடியுமா?
ரசிகனுக்கு என்ன பிடிக்குமோ... அதை கொடுப்பது நல்ல கலை அல்ல. என்ன தேவையோ, அதைப் பிடிக்கும் விதத்தில் கொடுப்பதுதான் சிறந்த கலை. எப்படி ஸ்டார் வேல்யூ, ஹீரோயின் இடுப்பு, காமெடி, சண்டை என்று இதெல்லாம் வணிக சினிமாவின் வெற்றிக் கூறுகளாக நிறுவப்பட்டதோ, அதேபோல் காதலிகளை, பெண்களை... காதலில் கல்தா கொடுப்பவர்களாக, ஏமாற்றிக் கூடுதாவுபவர்களாக காட்டுவதும் ஒரு கூறாகவே நிறுவப்பட்டு வருகிறது. இன்றுவரை அது வெற்றிபெற்றும் வந்திருக்கிறது என்றால், அது எவனோ ஒருவன் சினிமா திரை வழியாக நம்மேல், நம் அம்மா, அக்கா, தங்கைகள் மேல், நம்மைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் துப்பிக்கொண்டிருக்கும் எச்சில்தான்.
இதை துடைக்கக்கூட கைதூக்காமல், கைதட்டிக் கொண்டிருக்கிறோம்... இத்தனை நாளாக. இனியாவது பதிலுக்குத் துப்புவோமே... 'போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்’ என்று!
விகடன்
கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
சில நாட்களுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருந்தபோது, த்ரிஷாவின் 31-வது பிறந்தநாள் பற்றிய ஜெயச்சந்திர ஹாஸ்மியின் போஸ்ட், நம்மை வெகுவாக ஈர்த்தது. அதை அப்படியே அவள் விகடனுக்கு கட்டுரையாக்கித் தரும்படி கேட்டோம். இதோ அந்தக் கட்டுரை..!
சில நாட்களுக்கு முன், நடிகை த்ரிஷாவின் 31-வது பிறந்தநாள் வந்தது. இதையொட்டி ஃபேஸ்புக்கில் போடப்பட்ட பெரும்பாலான பதிவுகள், 'த்ரிஷா ஆன்ட்டி ஆயாச்சு’ என்பதையே மீண்டும் மீண்டும் சுட்டின. இதே ஃபேஸ்புக்கில் சிலநாட்களுக்கு முன் அஜீத்தின் 43-வது பிறந்தநாள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு முன் ரஜினியின் 63-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அடுத்த மாதம் விஜய்யின் 40-வது பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் குவியும்.
நடிப்புக்கு வயது என்றுமே தடையில்லை என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அது நாயகனுக்கு மட்டும் செல்லும் என்பது, நாயக வழிபாட்டின் வெளிப்பாடு. நடிகன், தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்படுவதும், வயதும் கவர்ச்சியும் இருக்கும்வரை மட்டும் நடிகைகள் ரசிக்கப்படுவதும், பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமே!
ரஜினி, கமலுக்கும், விஜய், அஜீத்துக்கும் ஆகாத வயதா... த்ரிஷாவுக்கு ஆகிவிட்டது? இதுபோன்று ஒரு கதாநாயகி, ஒரு பெண், அவள் உடல் சார்ந்து மட்டுமே ரசிக்கப்படும் அவலமான ரசனையை குறை சொல்லும்முன், இதற்கெல்லாம் அடிப்படையான தமிழ் சினிமாவில், பெண்கள், நாயகிகள், எப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்று பார்ப்பதும் மிக அவசியம்.
நகைச்சுவை, பாடல், கதை என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெண் என்பவள், தமிழ் சினிமாவில் எவ்வளவு கீழ்த்தரமாக சித்திரிக்கப்படுகிறாள் என்று நம் காலத்திய படங்களைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் தெரியும்.
சமீபகால சினிமாவில், காதலிகளைத் திட்டிப் பாடும் பாடல்கள்தான் 'டிரெண்ட்’. அதை முட்டாள்தனமான வரிகளுடன் ஒரு பாட்டாக்கிவிட்டால், படம் ஹிட்டாகிறதோ இல்லையோ, அந்தப் பாடல் நிச்சயம் ஹிட். படத்துக்கு விளம்பரத்தையும் தேடித் தந்துவிடும். ஆனால், இதுபோன்ற பாடல் வரிகளுக்கும், படத்தில் அது வரும் சூழலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
உதாரணத்துக்கு 'கொலவெறி’ பாடல். காதலி வெளிநாட்டுக்குப் போகிறேன் என்று சொல்வாள். இத்தனைக்கும் காதலோடுதான் சொல்வாள். காதல் வேண்டாம் என்றுகூட சொல்லமாட்டாள். ஆனால், காதலன் பீச்சுக்குப் போய், அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள், தன்னை விட்டுப் போய்விட்டாளென 'ஒய் திஸ் கொலவெறி’ பாடுவான்.
'ஏழாம் அறிவு’ படத்தில் 'யம்மா யம்மா’ பாடல் மெலடியில் காதலிகளைத் திட்டுகிறது. படத்தில் அதுவரையிலான காட்சிகளில் அந்தப் பெண் காதல் என்ற நோக்கில் நாயகனிடம் பழகியிருக்கக்கூட மாட்டாள். நாயகனே தவறாகப் புரிந்துகொண்டு, 'பெண்களின் காதல் கைக்குட்டை போல’ என்று தத்துவம் உதிர்ப்பான்.
இவற்றைவிட இன்னொரு அற்புதப் பாடல், 'மயக்கம் என்ன’ படத்தின் 'அடிடா அவள’ பாடல். படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் அதுவரையில் காதலே வந்திருக்காது. ஆனால்... என் காதல் போச்சு, கண்ணீர்தான் மிச்சம், காதலி என்னென்ன சூது செய்தாள் என்றவாறே அப்பாடல் முழுவதும் எழுதப்பட்டிருக்கும்.
இன்னொரு அருவருக்கத்தக்க பாடல், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பாடல். ஒரு பெண்ணை நாயகன் சைட் அடிப்பான். நன்றாக கவனியுங்கள்... சைட் மட்டும்தான் அடிப்பான். அதில் எங்கும் காதலே இருக்காது. அந்தப் பெண் இவனை காதலிப்பது போல் எந்த ஒரு சமிக்ஞையும் தந்திருக்கவே மாட்டாள். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் என்று கேள்விப்பட்டவுடன், 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா’ என்று அறிவுபூர்வமான பாடலைப் பாடுவான் நாயகன்.
ஒரு பெண், ஒருவனைக் காதலிக்காமல் போவதால் மட்டுமே, அவள் தவறானவளாகி விடுவாளா? படம் பார்க்கும் ரசிகனைத் தங்களுக்கு வெகு கீழே, சொல்லப்போனால் முட்டாளாகவே நினைத்திருக்கும் சூழலில்தான் இதுவெல்லாம் நடக்கும். இதில் கொடுமை என்னவென்றால், காதலில் வெற்றி பெற்றவனும் இதுபோன்ற பாடல்களுக்கு, வசனங்களுக்குக் கைதட்டுகிறான்.
பெண்கள் மீதான இந்த ஏளனத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அத்தனை இளைஞர்கள் மனதிலும் விதைத்து, கல்லாப்பெட்டியை நிரப்பியபடியே இருக்கிறது சினிமா. முன்புபோல இப்போதெல்லாம் 'லவ் ஃபெயிலர்’ என்பது ஓர் உணர்வுப் பிரச்னையாக இல்லாமல், 'பிரேக் அப்’ என்பது சமூக அந்தஸ்தாகவே சித்திரிக்கப்படுகிறது. அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்த வரிகளெல்லாம், எத்தகைய வன்மையான, எள்ளலான உணர்வை அவர்கள் தோழிகளின் மேல் ஏற்படுத்தும்..!
சினிமாவில் வருவதுபோலவே தங்கள் கல்லூரி வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை, ஊர் வாழ்க்கை, நண்பர்களுடனான வாழ்க்கை என்று அனைத்தையும் கட்டமைத்து வாழும் ஆசை இங்கே பரவலாக இருக்கிறது. இந்நிலையில் பெண்களை தவறாக சித்திரிக்கும் இந்தப் போக்கு, நிஜ வாழ்விலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தூண்ட ஒரு காரணியாக அமைந்துவிடக்கூடும்.
சொல்லப்போனால், இதுதான் வன்மையான ஆபாசம். பெண்கள் தொப்புள் தெரிந்தாலோ, ஸ்லீவ்லெஸ் போட்டபடி வந்தாலோ, 'கலாசாரம் பாழாப்போச்சே’ என்று அதை வெட்டச் சொல்லும் சென்ஸார் போர்டின் காதுகளுக்கும் கண்களுக்கும் இதெல்லாம் போகாதா? ஒரு பெண்ணை எவ்வளவு கேவலமாகத் திட்டியும் உங்களால் வசனம் எழுதி, அப்படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலையில்தான் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை இருக்கிறதா? இதுவே அரசியல், சாதி பற்றி பேசும் ஒரு படத்தை இங்கே வெளியிட்டுவிட முடியுமா?
ரசிகனுக்கு என்ன பிடிக்குமோ... அதை கொடுப்பது நல்ல கலை அல்ல. என்ன தேவையோ, அதைப் பிடிக்கும் விதத்தில் கொடுப்பதுதான் சிறந்த கலை. எப்படி ஸ்டார் வேல்யூ, ஹீரோயின் இடுப்பு, காமெடி, சண்டை என்று இதெல்லாம் வணிக சினிமாவின் வெற்றிக் கூறுகளாக நிறுவப்பட்டதோ, அதேபோல் காதலிகளை, பெண்களை... காதலில் கல்தா கொடுப்பவர்களாக, ஏமாற்றிக் கூடுதாவுபவர்களாக காட்டுவதும் ஒரு கூறாகவே நிறுவப்பட்டு வருகிறது. இன்றுவரை அது வெற்றிபெற்றும் வந்திருக்கிறது என்றால், அது எவனோ ஒருவன் சினிமா திரை வழியாக நம்மேல், நம் அம்மா, அக்கா, தங்கைகள் மேல், நம்மைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் துப்பிக்கொண்டிருக்கும் எச்சில்தான்.
இதை துடைக்கக்கூட கைதூக்காமல், கைதட்டிக் கொண்டிருக்கிறோம்... இத்தனை நாளாக. இனியாவது பதிலுக்குத் துப்புவோமே... 'போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்’ என்று!
விகடன்
Re: போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
சிவா wrote:ரசிகனுக்கு என்ன பிடிக்குமோ... அதை கொடுப்பது நல்ல கலை அல்ல. என்ன தேவையோ, அதைப் பிடிக்கும் விதத்தில் கொடுப்பதுதான் சிறந்த கலை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
இதில் சிலபல கருத்துகளில் எனக்கும் உடன்பாடே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» நீங்களும் உங்க வேலையும்....
» திரையரங்கும் சினிமாவும்
» போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» நீங்களும் உங்க வேலையும்....
» திரையரங்கும் சினிமாவும்
» போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|