ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது

Go down

.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது Empty .தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது

Post by சிவா Fri Apr 18, 2014 12:29 am

ம.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது - வருத்தப்படுகிறார் புதிய கொ.ப.செ. அழகுசுந்தரம்

15 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் வலங்கை மானில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் அணித் தலைவராகப் பங்கேற்க நாஞ்சில் சம்பத்தை அழைத்திருந்தார் வலம்புரி ஜான். கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட, சம்பத்தால் அங்கே அனுப்பப்பட்டவர் க.அழகுசுந்தரம். அவர், இப்போது மீண்டும் நாஞ்சில் சம்பத்தின் நாற்காலியில்!

மாணவப் பருவத்தில் தி.மு.க. உறுப்பினர். ம.தி.மு.க. உதயமானதும் அதன் திருப்பரங்​குன்றம் நகரச் செயலாளர். சில ஆண்டுகள், கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைகோவோடு சிறையில் இருந்த எட்டுப் பேரில் ஒருவர். வெளியே வந்ததும் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உயர்ந்தவர். வழக்கறிஞர். 2008-ல் மதுரையில் நடந்த மண்டல மாநாட்டுக்​குத் தலைமை தாங்கியவர். இவர்தான் ம.தி.மு.க-வின் கொள்​கை விளக்க அணிக்கு புதிய செயலாளர்.

'சம்பத்துக்குப் பதில் நீங்கள்​தான் என்று முன்கூட்டியே முடிவெடுத்து வைத்​திருந்தாரா வைகோ?'

''ஆற்றொழுக்கைப் போன்ற இடையறாத தமிழக அரசியல் வரலாற்றில் 18 ஆண்டு​களைக் கடந்து 19-வது ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அடி​யெடுத்து​வைத்திருக்கிறது. மிக முக்கியமான கால கட்டத்தில், நான் இயக்கத்தின் கொள்கை விளக்கச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்கு, காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டி​ருக்கிறேன். சம்பத் போனபிறகுதான், கழக நிர் வாகிகளுடன் ஆலோசித்து தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.''

'உங்களது பிரசார இலக்கு என்ன?'

''தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, திராவிட இயக்க வரிசையில் மூன்றாவது இடத்தில் ம.தி.மு.க. இருக்கிறது. அதை முதல் இடத்துக்குக் கொண்டு​செல்வதற்காகத்தான் கரூர் மாநாட்டில் 'முன்னேறிச் செல், அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று வைகோ அறிவித்தார். முன்​னேறிச் செல்​வதற்​குரிய முதல் நடவடிக்​கையாக, வரும் 12-ம் தேதி நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 'பூரண மதுவிலக்கு... அதுவே எங்கள் இலக்கு’ என்ற நடைப்பயணத்​தைத் தொடங்க இருக்​கிறோம். 'திஸ் இஸ் அவர் ஃபைனஸ்ட் ஹவர்’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். இந்த உன்னதமான நேரத்தில், மக்கள் மன்றத்தில் எங்களுடைய இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக எடுத்துச்சொல்வதற்கு, இயக்கத்தில் உள்ள சொற்பொழிவாளர்களை எல்லாம் அரவணைத்துச் செல்வேன்.''

'ம.தி.மு.க. மேடைகளில் சுழன்ற சம்பத்துக்கு அ.தி.மு.க. மேடையில் எத்தகைய மரியாதைகள் கிடைக்கும்?'

''கொள்கையே இல்லாத ஒரு கட்சிக்கு, கொள்கை விளக்கத் துணைச் செயலாளராகப் போயிருக்கிறார் சம்பத். யானையே இல்லாத கோயிலுக்கு பாகன் ஆகி இருக்கிறார். 'அரிச்சந்திரன் வேஷம் போட்டால், சுடுகாடு காக்க வேண்டும்’ என்பது பழமொழி. அந்த வேலையைத்தான் அவர் அ.தி.மு.க-வில் செய்ய முடியும். எங்கள் ஜல்லிக்கட்டுக் காளை, அ.தி.மு.க-வின் அடிமாடாகி விட்டதே என்பதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.''

'நாஞ்சில் சம்பத்தை விமர்சிப்பதும் உங்கள் முக்கியப் பணியாக இருக்குமா?'

''ம.தி.மு.க-வில் இருந்து யார் விலகினாலும் வைகோ விமர்சனம் செய்ய மாட்டார். 'இது ஒரு தொடர் பயணம். எந்தப் பதவியும் இல்லாமல் தொடர்ந்து வருவது ரொம்பக் கஷ்டம். அது லட்சியவாதிகளால் மட்டுமே முடியும். என்னோடு இருந்துவிட்டு என்னைவிட்டுப் பிரிகிறவர்களை, கடந்த காலத்தில் அவர்கள் இயக்கத்துக்குச் செய்ததை மட்டுமே நினைத்துப் பார்ப்பேன்’ என்று சொல்லி விடுவார். அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், எங்கள் இயக்கத்தையோ, பொதுச்செயலாளரையோ அவர் வசைபாடினால், நான் பதிலடி கொடுக்க வேண்டியது வரும். அந்த வேலையை சம்பத் வைக்க மாட்டார் என்று நினைக் கிறேன்.''

'''வைகோ என்னை வளர்க்கவில்லை. நான்தான் வை​கோவை வளர்த்தேன்’ என்​கிறாரே சம்பத்?''

''உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்​டாய், பூங்கா ஒன்றில் சிந்தனை​யில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் முன்னால் ஒரு பந்து விழுந்தது. பின்னா​லேயே ஒரு சின்னக் குழந்தை தத்தித்​தத்தி வந்தது. குழந்தைக்கு உதவுவதற்காக அந்தப் பந்தை எடுத்துக் கொடுத்​தார் டால்ஸ்டாய். 'தாத்தா நாம விளையாடு​வோமா?’ என்று குழந்தை கேட்க, அவரும் விளையாடத் தொடங்கினார். அப்போது குழந்தையை அம்மா அழைத்தார். உடனே அது, 'எங்க மம்மி கூப்பிடுறாங்க, நான் வாரேன்’ என்று கிளம்பியது. விடைபெறும் தறுவாயில், 'நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று சொல், உங்க அம்மா சந்தோஷப்படுவாங்க’ என்று சொன்னார். உடனே பதிலுக்கு, 'என்னோட பந்து விளையாடினேன்னு நீ உங்க அம்மாகிட்ட சொல்லு. அவங்க சந்தோஷப்படுவாங்க’ என்றது குழந்தை. 18 வருஷமாக ம.தி.மு.க-வை வளர்த்ததே நான்தான் என்று சம்பத் சொல்வது இப்படித்தான் இருக்கிறது.

தீப்பெட்டியும் தீக்குச்சியும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. 'நீயும், நானும்தானே உரசிக் கொள்கிறோம். ஆனால், அந்த உராய்வில் நான் மாத்திரம் எரிந்து கருகிப்போகிறேன். நீ அப்படியே இருக்கிறாயே?’ என்று கேட்டது தீக்குச்சி. 'என்னை எல்லாப் பக்கமும் பார். சமமாகவே இருக்கிறேன். ஆனால், உன் தலையிலே கொஞ்சம் கனம். அதனால்தான் உரசிய மாத்திரத்தில் நீ எரிந்துபோகிறாய்’ என்றது தீப்பெட்டி. சம் பத்துக்கும் இது பொருந்தும். நாவால் வளர்ந்து நாவால் கெட்டுப்போனவர் சம்பத். இனியாவது நாவடக்கத்தோடு இருக்கட்டும்!''

- கே.கே.மகேஷ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum