Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்
2 posters
Page 1 of 1
கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்
பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன.
ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டுவிடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டியுள்ளது.
வீட்டில் இருக்கும் நச்சு
குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, அறையணிகள், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்கத் தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைஃபீனைல் ஈதர்கள் (பி.பி.டி.இ.) பயன்படுத்தப்படுகின்றன.
இவை உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழி குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியைப் பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.
வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை - நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.
குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன.
பாதரச ஆபத்து
அனல் மின் நிலையங்களில் இருந்தும் சில தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் பாதரசம் கடலில் கலந்து மீன் போன்ற கடல் உணவுகள் மூலம் தாயை அடைந்து, பின் சிசுவை அடைகிறது. இந்தப் பாதரசம் மூளை வளர்ச்சியையும் மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கிறது.
பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதாலும் குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகார்பன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.
புற்றுநோயை உருவாக்கும் பலபடி குளோரினேற்ற பைஃபீனைல்களின் (பி.சி.பி.) பயன்பாடு அமெரிக்காவில் 1976லேயே தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த வேதிப்பொருள் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த இந்த நச்சுப்பொருள், சுற்றுச்சூழலில் காலம் காலமாகப் படிந்து நிலைபெற்றுவிட்டதால், உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் மூலம் கருவிலுள்ள குழந்தையை அடைகிறது.
இதைப் போலவே டி.டி.டி., குளோர்டேன் போன்ற என்றைக்கோ தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் சுற்றுச்சூழலில் நிலைபெற்றுவிட்டதால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலையும் வந்தடைந்து பாதிப்பை உருவாக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் ஆர்வலர்
ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டுவிடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டியுள்ளது.
வீட்டில் இருக்கும் நச்சு
குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, அறையணிகள், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்கத் தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைஃபீனைல் ஈதர்கள் (பி.பி.டி.இ.) பயன்படுத்தப்படுகின்றன.
இவை உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழி குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியைப் பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.
வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை - நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.
குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன.
பாதரச ஆபத்து
அனல் மின் நிலையங்களில் இருந்தும் சில தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் பாதரசம் கடலில் கலந்து மீன் போன்ற கடல் உணவுகள் மூலம் தாயை அடைந்து, பின் சிசுவை அடைகிறது. இந்தப் பாதரசம் மூளை வளர்ச்சியையும் மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கிறது.
பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதாலும் குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகார்பன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.
புற்றுநோயை உருவாக்கும் பலபடி குளோரினேற்ற பைஃபீனைல்களின் (பி.சி.பி.) பயன்பாடு அமெரிக்காவில் 1976லேயே தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த வேதிப்பொருள் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த இந்த நச்சுப்பொருள், சுற்றுச்சூழலில் காலம் காலமாகப் படிந்து நிலைபெற்றுவிட்டதால், உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் மூலம் கருவிலுள்ள குழந்தையை அடைகிறது.
இதைப் போலவே டி.டி.டி., குளோர்டேன் போன்ற என்றைக்கோ தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் சுற்றுச்சூழலில் நிலைபெற்றுவிட்டதால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலையும் வந்தடைந்து பாதிப்பை உருவாக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் ஆர்வலர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்
» கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்
» கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
» கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்
» கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|