Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
சம்மர் கூலர்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், இளநீர் - ஒரு கப், ஆரஞ்சு சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: தர்பூசணி, ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் உப்பு, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையை சிறிய துண்டு களாக்கிச் சேர்க்கவும். புதினாவால் அலங்கரித்து... குளிர வைத்தோ, ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பரிமாறவும்.
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், இளநீர் - ஒரு கப், ஆரஞ்சு சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: தர்பூசணி, ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் உப்பு, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையை சிறிய துண்டு களாக்கிச் சேர்க்கவும். புதினாவால் அலங்கரித்து... குளிர வைத்தோ, ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பரிமாறவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
சுரைக்காய் தோசை
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - புதினா - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, தோசை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும். தோசை மாவுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, புதினா, கொத்தமல்லி, சுரைக்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - புதினா - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, தோசை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும். தோசை மாவுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, புதினா, கொத்தமல்லி, சுரைக்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
பொரி தண்டாய்
தேவையானவை: பொரி - கால் கப், பாதாம், முந்திரி - தலா 5, கசகசா - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, பால் அல்லது கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பூசணி - வெள்ளரி விதை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - முந்திரி - சிறிதளவு.
செய்முறை: பொரி, பாதாம், முந்திரி, கசகசா, பூசணி - வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, மிளகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை பால் அல்லது தயிரில் கலந்து, சர்க்கரை, தேவையான நீர் சேர்த்து, நன்கு அடிக்கவும். பிறகு, அதைக் குளிர வைத்து எடுத்து... துருவிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.
தேவையானவை: பொரி - கால் கப், பாதாம், முந்திரி - தலா 5, கசகசா - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, பால் அல்லது கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பூசணி - வெள்ளரி விதை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - முந்திரி - சிறிதளவு.
செய்முறை: பொரி, பாதாம், முந்திரி, கசகசா, பூசணி - வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, மிளகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை பால் அல்லது தயிரில் கலந்து, சர்க்கரை, தேவையான நீர் சேர்த்து, நன்கு அடிக்கவும். பிறகு, அதைக் குளிர வைத்து எடுத்து... துருவிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
தேங்காய்ப்பால் கஞ்சி
தேவையானவை: புழுங்க லரிசிக் குருணை - ஒரு கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 8 பல், இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: புழுங்கலரிசிக் குருணை, பாசிப்பருப்பு, வெந்தயம், சீரகம், பூண்டு ஆகியவற்றை 2-ம் தேங்காய்ப்பால், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்த கஞ்சியுடன் தேவையான உப்பு, முதல் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
தேவையானவை: புழுங்க லரிசிக் குருணை - ஒரு கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 8 பல், இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: புழுங்கலரிசிக் குருணை, பாசிப்பருப்பு, வெந்தயம், சீரகம், பூண்டு ஆகியவற்றை 2-ம் தேங்காய்ப்பால், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்த கஞ்சியுடன் தேவையான உப்பு, முதல் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
பாஜ்ரா - மேத்தி ரொட்டி
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெந்தயக் கீரை இலைகள் - அரை கப், கோதுமை மாவு - கால் கப், சீரகம், ஓமம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். மேலே வெண்ணெய் தடவி பரிமாறவும்.
குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதில் கடலை மாவும் சேர்க்கலாம். கம்பு, வெந்தயக் கீரை இரண்டும் குளிர்ச்சியைத் தரும்.
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெந்தயக் கீரை இலைகள் - அரை கப், கோதுமை மாவு - கால் கப், சீரகம், ஓமம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். மேலே வெண்ணெய் தடவி பரிமாறவும்.
குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதில் கடலை மாவும் சேர்க்கலாம். கம்பு, வெந்தயக் கீரை இரண்டும் குளிர்ச்சியைத் தரும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
மணத்தக்காளி கீரை மண்டி
தேவையானவை: மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, அரிசி களைந்த நீர் - ஒரு கப், சீரகம், வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப்பால் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து, நறுக்கி வைக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் கீரையை சேர்த்து வதக்கி, அரிசி களைந்த நீரை ஊற்றி வேகவிட்டு... உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். கீரை வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
தேவையானவை: மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, அரிசி களைந்த நீர் - ஒரு கப், சீரகம், வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப்பால் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து, நறுக்கி வைக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் கீரையை சேர்த்து வதக்கி, அரிசி களைந்த நீரை ஊற்றி வேகவிட்டு... உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். கீரை வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
பாஜ்ரா கிச்சடி
தேவையானவை: கம்பு - ஒரு கப், பச்சைப் பயறு - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 2, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்க ரில் வைத்து குழைய வேகவிடவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, சீரகம், லவங்கம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, வேகவைத்த கம்பு - பச்சைப் பயறு கலவையில் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
தேவையானவை: கம்பு - ஒரு கப், பச்சைப் பயறு - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 2, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்க ரில் வைத்து குழைய வேகவிடவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, சீரகம், லவங்கம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, வேகவைத்த கம்பு - பச்சைப் பயறு கலவையில் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
பூசணி தயிர்ப்பச்சடி
தேவையானவை: பூசணித் துருவல் - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக் கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட் டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறி தளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பூசணித் துருவலில் இருந்து நீரைப் பிழியவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூசணித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக் கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
பூசணி, நாவறட்சியைப் போக்கும். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும்.
தேவையானவை: பூசணித் துருவல் - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக் கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட் டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறி தளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பூசணித் துருவலில் இருந்து நீரைப் பிழியவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூசணித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக் கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
பூசணி, நாவறட்சியைப் போக்கும். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
மாம்பழ ஸ்ரீகண்ட்
தேவையானவை: மாம்பழம் - ஒன்று, கெட்டித்தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய பாதாம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, மிக்ஸி யில் அடித்துக்கொள்ளவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, நீரை வடிக்கவும். ஒரு பாத்திரத் தில் மாம்பழ விழுது, கெட்டியாக உள்ள தயிர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, சிறிய கிண்ணங்களில் ஊற்றவும். மேலே பாதாம் துருவல், மாம்பழத் துண்டுகள் தூவி அலங்கரிக்கவும். குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கவும்.
தேவையானவை: மாம்பழம் - ஒன்று, கெட்டித்தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய பாதாம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, மிக்ஸி யில் அடித்துக்கொள்ளவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, நீரை வடிக்கவும். ஒரு பாத்திரத் தில் மாம்பழ விழுது, கெட்டியாக உள்ள தயிர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, சிறிய கிண்ணங்களில் ஊற்றவும். மேலே பாதாம் துருவல், மாம்பழத் துண்டுகள் தூவி அலங்கரிக்கவும். குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கவும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
கேரட் - பீட்ரூட் டிலைட்
தேவையானவை: பீட்ரூட், கேரட், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், புதினா - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒன்று, இளநீர் வழுக்கை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பீட்ரூட், கேரட், தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலு மிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். புதினாவை அரைத்து வடிகட்டி சேர்க்க வும். பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை சேர்த்துக் கலக்கிப் பரிமாற வும் (குளிரவைத்துக் கொடுத்தால் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்).
தேவையானவை: பீட்ரூட், கேரட், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், புதினா - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒன்று, இளநீர் வழுக்கை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பீட்ரூட், கேரட், தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலு மிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். புதினாவை அரைத்து வடிகட்டி சேர்க்க வும். பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை சேர்த்துக் கலக்கிப் பரிமாற வும் (குளிரவைத்துக் கொடுத்தால் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்).
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
» குளிர்ச்சி தரும் அதிர்ச்சி
» உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய்
» ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
» கோடைக்குக் குளிர்ச்சி தரும் பானங்கள்
» குளிர்ச்சி தரும் அதிர்ச்சி
» உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய்
» ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
» கோடைக்குக் குளிர்ச்சி தரும் பானங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|