ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

2 posters

Go down

வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி Empty வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Post by சாமி Thu Apr 03, 2014 9:37 pm

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இதற்குப் பதிலாக வங்கிகள் அளிக்கும் பிற சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். இது அபராத கட்டணத்தை விட கூடுதல் சுமையாக வாடிக்கையாளர்களுக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டபோதிலும் இது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் எனும்போது, வங்கிகள் அளிக்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று அர்த்தம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் குறைந்தபட்ச தொகை அளவை வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பராமரிக்கும்போது வங்கிச் சேவையைத் தொடரலாம் என்று ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ள தையும் வங்கியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அபராதம் விதிக்க வேண்டாம் எனும்போது அதைவிடக் கூடுத லாக பிற சேவைகளுக்கு வாடிக்கை யாளர்கள் செலுத்த வேண்டியிருக் கும் என்று பெயர் குறிப்பிட விரும் பாத தனியார் வங்கியின் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்று என சில தனியார் வங்கிகள் வலியுறுத்துகின்றன.

இவ்விதம் வைக்கப்பட்டுள்ள தொகைக்கு குறைந்தபட்சம் 4 சதவீத வட்டி மூலம் ரூ.400 கிடைக்கும். இதற்கு ஈடாக ஆண்டு முழுவதும் வாடிக் கையாளர்களுக்கு காசோலை சேவை இலவசமாக வழங்கப் படுகிறது. மேலும் அவர் ஏடிஎம் பரிவர்த்தனை செய்ய முடியும். அத்துடன் வங்கிக் கணக்கில் உள்ள விவர அறிக்கையும் (ஸ்டேட் மென்ட்) அளிக்கப்படுகிறது. இத் தகைய சேவையை அளிக்க வேண்டுமெனில் வங்கிகளிடம் குறைந்தபட்சம் அவர் ரூ. 30 ஆயிரம் பராமரிக்க வேண்டும்.

வாடிக்கையாளர் நலன் முக்கி யம் என ஆர்பிஐ கருதினால், பிற சேவைகளுக்குக்கட்டணம் வசூ லிப்பதை தடுக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வகை யில் கட்டணம் செலுத்தத் தொடங் கினால், அது அபராதத் தொகை யைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். செயல்படுத்தப்படாத சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகை பராமரிக்கப் படவில்லை என்பதற்காக அபரா தம் விதிக்கக்கூடாது என்றால், அதற் குப் பதிலாக பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தான் அர்த்தம் என்று அவர் விளக்கம் அளித்தார்.

பிற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆர்பிஐ ஆராய்ந்து வருவதாக இந்திய வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் லாபகரமாக செயல் பட வேண்டுமென்றால் எத்தகைய சேவையையும் இலவசமாக அளிக்க முடியாது. ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் வசூலித் தாக வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். இதற்கு வாடிக் கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 20 ஆயிரம் பராமரிக்க வேண்டும் என்று மற்றொரு தனியார் வங்கித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத நிலை யில் அபராதம் விதிக்க வேண் டாம் என்று ரிசர்வ் வங்கி தெளிவு படத் தெரிவித்துள்ளது. இத்தகைய கணக்குகளை வைத்துள்ள வாடிக் கையாளர்கள் வங்கியிடமிருந்து ஒரு சில சேவைகளைத்தான் பெற முடியும் என்பது தெளிவான விஷயம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஆர். காமத் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் தனியார் வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ள லாம். குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வங்கிக் கணக்குக ளுக்கு குறிப்பிட்ட சில சேவையை மட்டும் அளிக்கலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இத்தகைய கணக்குகளுக்கு ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது போன்ற வற்றை தீர்மானித்துக் கொள்ள லாம். குறைந்தபட்ச சேவை அளிக்கலாம் என்பது எவை, எவை என்று ஆர்பிஐ விரிவாக விளக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார பிரிவின் தலைவர் சௌம்ய காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கிகளைக் கருத்தில் கொண்டே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரி கிறது. தனியார் வங்கிகள்தான் மிக அதிக அளவில் அபராதம் விதிப்ப தாக பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவை ஈடுகட்டவே வங்கிகள் இத்தகைய அபராதத்தை விதிக்கின்றன.

ஒரு வங்கிக் கணக்கில் ரூ. 100 இருப்பு இருந்தாலும் அந்தக் கணக்கை நிர்வகிக்க வேண்டி யுள்ளது. இந்தத் தொகைக்கு 4 சதவீதம் வட்டி அளிக்க வேண்டும். இதைத் தவிர வேறு பரிவர்த்தனை இருக்காது. கம்ப்யூட்டர் புழக் கத்துக்கு வந்தபிறகு இதுபோன்ற கணக்குகளைப் பராமரிக்கும் செலவு குறைந்துள்ளது. இருப் பினும் இது வங்கிகளுக்கு செலவு தான். இதுபோன்ற வங்கிக் கணக்கு களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பதற்காகத்தான் அபராதம் விதிக்கப்படுகிறது என்று பொதுத் துறை வங்கியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத் தில் கொண்டு இத்தகைய அபராதத் தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதி லாக கடன் வாங்கியவர்கள் முன் கூட்டியே திரும்ப செலுத்தும்போது சுழற்சி அடிப்படையிலான வட்டி விகிதத்தைக் கணக்கிட்டு எவ்வித அபராதமும் விதிக்காமல் வசூலிக் கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

வங்கிகளில் கடன் பெற்றவர் கள் முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்துவதில் வங்கிகளுக்குத் தான் நஷ்டம். ஆனால் பணம் திரும்பக் கிடைப்பது என்பது சாதகமான அம்சம். முன்கூட்டியே செலுத்துவது மோசமான முடி வல்ல. அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல. இவ்விதம் அபராதம் விதிப்பது பணத்தை திரும்ப செலுத்துவோர் மன நிலையில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இத்தகைய முன் தேதியிட்டு கடனை திரும்ப செலுத்தும் நடவடிக்கையை வங்கிகள் வரவேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

புளோட்டிங் ரேட் எனப்படும் சுழற்சி அடிப்படையிலான வட்டி விகிதம் சில கடன்களுக்கு அளிக்கப்படுகிறது. சிறு, நடுத்தர தொழில்களுக்கு சுழற்சி அடிப்படையிலான வட்டி வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு முன் தேதியிட்டு பணத்தை திரும்ப செலுத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் தனி நபர் கடன்களுக்கு நிரந்தர வட்டி வசூலிக்கப்படுகிறது. (thehindu)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி Empty Re: வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Post by krishnaamma Fri Apr 04, 2014 6:38 pm

//வங்கிகளில் கடன் பெற்றவர் கள் முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்துவதில் வங்கிகளுக்குத் தான் நஷ்டம். ஆனால் பணம் திரும்பக் கிடைப்பது என்பது சாதகமான அம்சம். முன்கூட்டியே செலுத்துவது மோசமான முடி வல்ல. அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல. இவ்விதம் அபராதம் விதிப்பது பணத்தை திரும்ப செலுத்துவோர் மன நிலையில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இத்தகைய முன் தேதியிட்டு கடனை திரும்ப செலுத்தும் நடவடிக்கையை வங்கிகள் வரவேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.//

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப கட்டணம்!
» எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி: மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு
» சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்..
» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum