ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்கப்பட்ட புரட்சி!

Go down

ஒடுக்கப்பட்ட புரட்சி! Empty ஒடுக்கப்பட்ட புரட்சி!

Post by சாமி Sun Mar 30, 2014 2:16 pm

ஊரின் பொது இடத்தில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் இறுகிக் காணப்படுகின்றன. நடுநாயகமாக நின்றிருந்தவனின் கையில் ஒரு செப்பேடு பளபளக்கிறது. அனைவரின் கண்களும் செப்பேட்டையே இமைக்காமல் பார்க்கின்றன. அதை அவன் தன் கைகளால் உடைக்கத் தொடங்குகிறான். செப்பேடு முறியத் தொடங்க, சுற்றி நின்றவர் களின் கண்களில் ஆசுவாசம் பெருகுகிறது. ஆர்ப்பாட்டமும் கூச்சலும் இல்லாமல் செப்பேட்டினைச் சிதைத்தவர் தன் கடமை நிறைவேறியதுபோல் நகருகிறார். அரசனின் அதிகாரம் சிதைக்கப்பட்டு மண்ணில் துண்டுகளாகக் கிடந்தது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற காலம் 7ஆம் நூற்றாண்டு. இடம் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகில் உள்ள திருமங்கலக்குறிச்சி. செப்பேட்டைச் சேதப் படுத்தி அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவன் மறவர் குலத் தலைவன் கம்பலை. அவன் எதிர்த்த அரசன் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன்.

மன்னர்கள் தங்கள் ஆட்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் தாங்கள் வழங்கும் தானங்களையும் பதிவு செய்து வைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி உள்ளனர். செய்திகளை பனை ஓலையிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதிந்து வைத்துள்ளனர். சில நேரங்களில் ஒரே செய்தியை மூன்றிலும்கூட பதிவு செய்துள்ளனர். அப்படிப்பட்ட அரசனின் முத்திரை பதித்த ஒரு செப்பேட்டைத்தான் கம்பலை உடைத்தெறிகிறார்.

அரசனை எதிர்க்கக் காரணம் என்ன?

தங்களுக்குச் சொந்தமான நிலங்களை சோமாயாஜு என்ற ஒரு பிராமணருக்குத் அனுமதி இல்லாமல் நிலதானம் வழங்கியதை எதிர்த்து, அதற்குரிய ஆவணமான செப் பேட்டைச் சிதைத்தார் கம்பலை.

இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

கி.பி.676 - இல் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்போது கம்பலை அந்தச் செப்பேட்டை மறக்கேடு (செப்பேட்டை அழிப்பது அல்லது சிதைப்பதற்குப் பெயர் மறக்கேடு) செய்ததால் இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு 100 ஆண்டுகள் கழித்து, அந்தச் செய்தி மாறாமல், பின்னர் வந்த பாண்டிய அரசர்களால் எழுதப்பட்டிருக்கலாம். எனவே கம்பலையின் காலம் கி.பி.576 ஆக இருக்கலாம்.

சோமாயாஜு பற்றியும் செப்பேடு விவரிக்கிறது. காவிரிக்கரையைச் சேர்ந்த அவர் வளமான பெருமருதூரைச் சேர்ந்தவர். ஆனால் கம்பலையின் எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. எல்லாப் புரட்சியாளர்களையும் போலவே கம்பலையும் ஆயுத பலத்தால் அடக்கப்பட்டார். (thehindutamil)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum