ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?

3 posters

Go down

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...? Empty எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?

Post by Powenraj Sat Mar 29, 2014 7:22 pm

வீட்டுல் ஒரு நிகழ்ச்சி வந்தால் விருந்தினரை கவனிக்க நல்ல உணவை சமைத்து கொடுப்பது அவசியம். அப்படி கவனிக்கும் ஆர்வத்தில் சமைக்கலாம் என்று உங்கள் உணவு பொருட்களை திறக்கும் போது அவை கெட்டு போயிருந்தால் எப்படி இருக்கும்? அதை தவிர்க்க டிப்ஸ் தேவை. வெளியூர் பயணங்களிலும், மலிவான விலையில் கிடைக்கின்றது என்றும் நிறைய வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாம் பொருட்களை வாங்கி விடுகின்றோம்.

ஆனால் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு நம்முள் இருப்பதில்லை. உணவு பொருட்களை வாங்குவதை விட அவற்றை எப்படி பராமரிப்பது என்ற அறிவே மிகவும் தேவையானது. பூச்சி பிடித்த அல்லது காலாவதியான உணவுகளை ருசியாக சமைத்து கொடுப்பதால் நம் வீட்டு மக்களுக்கு நாம் விஷத்தை சமைத்து கொடுப்பது போன்றதாகும்.

சிலர் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலோ உறைய வைத்தாலோ போதுமானது என்று நினைத்து பல நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் அதுவும் கெடுதியானது என்பதை அறிவதில்லை. குளிரூட்டப்பட்ட உணவேயானாலும் அதற்கும் சில விதிகள் உண்டு. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை பயன்படுத்தி விட வேண்டும். குளிர்சாதன பெட்டியை நிரப்புவதில் கவனம் கொள்ளாமல், அதில் வைக்கும் உணவுகளை சரியான நேரத்தில் பயன்படுத்தும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

இறைச்சி, கடல் உணவு போன்றவறை மிகவும் கவனாமக சமைக்க வேண்டும். அதோடு அவற்றை பாதுகாப்பதில் அதை விட கவனம் தேவை. அவற்றை வாங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் உண்ண வேண்டும். இல்லையென்றால் உணவு விஷமாக மாறி பல்வேறு உபாதைகள் நேரும் என்பதை மறக்கக்கூடாது. அப்படி நாள் கடந்து விட்டால் கண்ணை மூடி கொண்டு தூக்கி வீச வேண்டும்.

இதோ இங்கே உங்களுக்காக உணவை வாங்கிய நாளிலிருந்து எத்தனை நாளுக்குள் பயன்படுத்த வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும் என்று டிப்ஸ் உள்ளது. இதை படித்து சுவையுடன் ஆரோக்கியத்தையும் உங்கள் வீட்டு நபர்களுக்கு கொடுங்கள்.
-
முட்டை
பச்சை முட்டை அதாவது சமைக்காத மெல்லிய ஓட்டைக் கொண்ட முட்டை தேதியிட்ட நாளிலிருந்து மூன்று அல்லது ஐந்து வாரங்களுக்கு வைத்திருக்க முடியும். வேகவைத்த கடினமான ஓட்டைக் கொண்ட முட்டையை ஒரு வாரத்திற்கு வைத்திருக்க முடியும். முட்டையை தண்ணீரில் போட்டால் அது மிதக்க வேண்டும். அப்படி மிதந்தால் அது நல்ல முட்டை. அதுவே உடைக்கும் போது நாற்றம் ஏற்பட்டால் அது கெட்ட முட்டை எனவே அதை உண்ண கூடாது.
-
கோழி போன்ற பறவை உணவுகள்
ஒரு முழு கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாள் வரை வைத்து பயன்படுத்தலாம். அதையே உறையவைத்தால் ஒரு வருடத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அதையே துண்டு போட்டு உறைய வைத்தால் ஒன்பது மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். சமைக்காத கோழி இறைச்சியை கழுவ கூடாது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அதில் இருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவானது மற்ற உணவுகளுக்கும், சமையல் தளத்திலும் பரவும் வாய்ப்புள்ளது. சூடு மட்டுமே இவ்வகை பாக்டீரியாக்களை அழிக்க முடியும். வெப்ப நிலை அளவில் 165 டிகிரி அளவிலான வெப்பநிலை கோழி இறைச்சிக்கான குறந்தபட்ச வெப்ப நிலையாகும்.
-
கடல் உணவு
தரமான மீனை இரண்டு நாளுக்குள் உணவாக உண்ணலாம். கொழுப்பு அதிகம் உள்ள மீன், அதாவது கானாங்கொளுத்தி போன்ற மீன்களை மூன்று நாட்களுக்கு ஐஸில் உறைய வைத்து உண்ண ஏதுவானது. நண்டு, பெரிய வகை இறாலான சிங்கி இறால் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாட்களுக்கு அல்லது மூன்று மாதங்களுக்கு வைத்து பயன்படுத்தினால் நல்லது. கடல் சிப்பி, இறால் போன்றவற்றை குளிரூட்டப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் உண்ண வேண்டும்.
-
சீஸ் (பாலாடைக்கட்டி)
மிருதுவான மற்றும் ஈரப்பதம் கொண்ட சீஸை திறக்காமல் இரண்டு வாரங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். கடினமான சீஸ் வகைகளை ஒரு வருடத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். மிருதுவான சீஸில் மோல்ட் இருந்தால், அதை தோசைக் கல்லில் போட்டால் போதும். அதுவே கடினமான சீஸில் மோல்டு இருந்தால், அந்த பகுதியை மட்டும் வெட்டிவிட்டு பின் பயன்படுத்தினால் போதுமானது.
-
பால், கீரீம் மற்றும் மற்ற பால் உணவுகள்
குளிர்சாதன பெட்டியில் வைத்த பாலை ஏழு நாட்களுக்குள் அருந்திவிட வேண்டும். பாலை கெடாமால் வைக்க அறையின் வெப்ப நிலையிலும், குளிர்சாதன பெட்டியின் கதவிலும் வைக்காமல் பார்த்து கொள்ளவும். பால் க்ரீமை உறைய வைத்தால் நான்கு மாதத்திற்குள்ளும் அப்படியே குளிர்சாதன பெட்டியில் வைத்தால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள்ளும் பயன்படுத்தி விட வேண்டும். வெண்ணெயை உறைய வைத்தால் ஒன்பது மாதத்திற்குள்ளும் அப்படியே குளிசாதன பெட்டியில் வைத்தால் இரண்டு மாதத்திற்குள்ளும் பயன்படுத்த வேண்டும்.
-
உறைய வைத்த உணவுகள்
உங்கள் நேரத்தின் பயனை உணவை உறைய வைப்பதில் காட்டாதீர்கள். குளிர்சாதன பெட்டியின் உறைய வைக்கும் பெட்டியில் பல உணவுகளை திணிக்கக் கூடாது. மேலும் அப்பெட்டியின் உறை நிலை பூஜிய நிலையில் இருக்க வேண்டும். சரியான உறைநிலையில் உணவை பத்திரமாக பாதுகாக்க முடியும்.
-
காய்கறிகள்
வேர் காய்களான பீட்ஸ், காரட் போன்ற காய்களை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் இரண்டு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதுவே வெள்ளரி, மிளகாய், மிளகு, தக்காளி போன்ற வற்றை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். சோளம், காளான் போன்ற மிருதுவான காய்களை குளிர்சாதன பெட்டியில் வைத்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உண்ண வேண்டும்.
-
பானங்கள்
மூடி திறக்கப்படாத ப்ரஷ் ஜூஸ்களை மூன்று வாரத்திற்குள் அருந்த வேண்டும் அதற்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அதை உறையவத்தால் 12 மாதத்திற்குள் பயன் படுத்த வேண்டும். சாதாரண சோடாவை ஒன்பது மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும் அதுவே டயட் சோடாவெனில் நான்கு மாதத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்தால் அதன் செயற்கை இனிப்பு காலாவதி ஆகிவிடும்.
-
சமையலுக்கு பயன்படும் எண்ணெய்
காய்கறி எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவை கெட்டு போகக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலை நீங்கள் அறிவீர்களா? காலாவதி ஆகிவிட்ட எண்ணெய்கள் உடலுக்கு தீங்கி விளைவிக்கும் என்பது முற்றிலும் உண்மையே. மூடி திறக்கப்படாத எண்ணெயை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். திறந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நான்கு அல்லது ஆறு மாதத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். எண்ணெயை வெப்பநிலை இல்லாத, இருட்டான பகுதியில் வைத்தாலோ அடுப்பின் மீதோ டிஷ் வாஷர் வைக்கும் இடத்தின் மீது வைக்காமல் இருந்தாலோ எண்ணெயின் நல்ல தன்மை குறையாமல் பார்த்து கொள்ள முடியும்.
-
மசாலா வகைகள்
நன்றாக அரைக்கப் பட்ட மசாலா வகைகளை மூன்று வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும். தாளிக்க மற்றும் அலங்கரிக்க பயன்படுத்தும் மசாலா பொருட்களை இரண்டு வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும். முழு மாசாலா பொருட்கள் மற்றும் விதைகளை நான்கு வருடத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். நீங்கள் மசாலா பொருட்களை வாங்கிய உடன் அதை கையில் வைத்து நசுக்கி பாருங்கள். வாசனை வந்தால் தரமானது இல்லையின்றால் தரம் அற்றது என்பதை உணர முடியும்.
-
சாஸ், ஜாம் வகைகள்
இவ்வகை பாட்டில் உணவுகளை பயன்படுத்தினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை பிரித்த உடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆறு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். தேன், ஜாம், சிரப் போன்றவற்றை குளிர செய்து எட்டு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...? Empty Re: எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?

Post by T.N.Balasubramanian Sat Mar 29, 2014 8:58 pm

நன்றி Powenraj . நல்ல தகவல்.

தேன், இதை குளிர செய்யக்கூடாது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...? Empty Re: எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?

Post by சிவா Sat Mar 29, 2014 9:57 pm

பயனுள்ள தகவல்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...? Empty Re: எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
» அழ வேண்டும் என்று தோன்றினால் எந்த பாடலை கேட்பீர்கள்?
» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
» யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை
» Facebook இல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா? (Country by Country)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum