ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

3 posters

Go down

மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Empty மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

Post by சாமி Thu Mar 27, 2014 10:00 pm

ஊரே கூடி கோயில் கட்டினால் பக்தி மணக்கும்; பள்ளிக்கூடம் கட்டினால் கல்வி சிறக்கும். இந்த வரிசையில், மக்களின் நோய் தீர்க்க ஒரு ஊரே கைகோர்த்து மருத்துவமனை கட்டியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது

திருப்பூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊத்துக்குளி. கிராமத்தில், ஊர் மக்களே சேர்ந்து மருத்துவமனை கட்டி, அதற்கு மக்கள் மருத்துவமனை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அரசின் உதவியையோ, தொண்டு நிறுவனங்களின் உதவியையோ நாடாமல், தங்களது உழைப்பில் கிடைத்த வருமானத்தைச் சேர்த்து அந்த மருத்துவமனையை நிர்மாணித்திருக்கிறார்கள்.

நுழைவாயிலில் பசுமையான மரங்கள். வளாகம் முழுக்க சுத்தமும் நேர்த்தியும் என ஒரு தனியார் மருத்துவமனை போல் ஹைடெக்காக காட்சியளிக்கிறது மக்கள் மருத்துவமனை. இதற்கான முதல் முயற்சியை எடுத்து, முனைப்போடு செயலாற்றியவர் ராணுவ வீரர் முருகசாமி.

நான் இந்திய ராணுவத்துல கடந்த 15 வருஷமா பணியாற்றிக்கிட்டு வர்றேன்.ஒவ்வொரு வருஷமும் விடுமுறையில ஊருக்கு வந்துட்டுப் போவேன். எங்க ஊத்துக்குளி கிராமத்துல 3,000 குடும்பங்களும், சுற்றியுள்ள கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் குடியிருக்கோம். எங்க உடம்புக்கு ஏதாவது நோய்நொடின்னா ஊத்துக்குளியில இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் போவோம். அரசு ஆஸ்பத்திரியில போதிய டாக்டர்களும், ஸ்பெஷல் வார்டுகளும் இல்லாததால மக்கள் எல்லோரும் அவசர ஆபத்துன்னா எந்நேரமா இருந்தாலும் திருப்பூர், ஈரோடு, கோவையிலுள்ள அரசு மருத்துவனைகளுக்குப் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டுச்சி. நோயாளிகளை ஏத்திக்கிட்டு இப்படி நீண்டதூர மருத்துவமனைகளுக்குப் போறதால பல உயிரிழப்புகள் நடந்திருக்கு.

ஊருக்கு வரும்போதெல்லாம் இதைப் பார்த்து பலமுறை வேதனைப்பட்டிருக்கேன். கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாசம் ஊருக்கு வந்தப்போ அரசின் உதவியை நாடாமல், மக்களே சேர்ந்து மக்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டுனா என்னன்னு மனசுல யோசனை வந்துச்சி. தாமதிக்காம என்னோட எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்தேன். மருத்துவமனையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக அதை நாமே கட்டலாம் என்று நோட்டீஸ் அடித்து, ஜனவரி 26 குடியரசு தினத்தன்னைக்கி எல்லோருக்கும் கொடுத்தேன். படிக்கச் சொல்லி, விருப்பத்தை போன்ல சொல்லுங்கன்னு சொல்லிட்டு நான் லீவு முடிஞ்சி ராணுவத்துக்கு கிளம்பிட்டேன்.

என்னோட யோசனை பிடிச்சதாலயும் மருத்துவமனையின் தேவையை உணர்ந்ததாலயும், ஊத்துக்குளியைச் சேர்ந்த பல பேர் போன் பண்ணி ஆதரவு தெரிவிச்சாங்க.அதைத் தொடந்து மே மாசம் திரும்பவும் ஊருக்கு வந்து கிராம மக்களை ஒன்று திரட்டி விவாதிச்சோம். அந்தக் கூட்டத்துல ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டுக் கட்டலாம்னு முடிவுபண்ணி ஒத்துமையோட செயல்ல இறங்கினதாலதான் இன்னைக்கு மக்கள் மருத்துவமனையை உருவாக்க முடிஞ்சது" என்று பூரிப்புடன் பகிர்ந்துகொண்டார் முருகசாமி.

மக்கள் மருத்துவமனையின் சேர்மன் மகாலட்சுமி தொடர்கிறார்: ஆஸ்பத்திரி கட்டலாமுன்னு முடிவெடுத்தபிறகு ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர். ஜீவானந்தத்திடம் ஆலோசனை கேட்டோம். அவரின் வழிகாட்டுதலின் பெயரிலேயே நாங்க செயல்பட ஆரம்பிச்சோம். பலதரப்பட்ட மக்கள் வாழும் எங்க கிராமத்துல பொருளா தாரத்தில் ஓரளவு வசதி படைத்த 120 பேர் ஒன்று சேர்ந்து ஆளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்ன்னு மருத்துவமனைக்காகப் பணம் போட்டோம். சில மாசத்துலேயே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துச்சி. அந்தப் பணத்தை மக்கள் மருத்துவமனை அறக்கட்டளை என்ற பெயரிலேயே வங்கியில் போட்டோம்.

பிறகு எங்ககிட்ட சேர்ந்த பணத்துல முதற்கட்டமா மருத்துவமனை கட்ட, 65 சென்ட் நிலத்தை 65 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, கட்டிட வேலைகளை ஆரம்பிச்சோம். மருத்துவமனை முழுமையடைய ஒரு வருஷமாச்சி. இடைப்பட்ட நாட்கள்ல எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் வந்துடக்கூடாதுன்னு, எல்லோரும் ஒத்துமையா ஆர்வத்தோட ஈடுபட்டோம். தேசத்தந்தை காந்தியடிகள் கிராமப்புறங்கள்தான் இந்தியாவின் உயிர்நாடின்னு சொன்னாரு. அதற்கேற்ப காந்திஜியின் நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி, 2012-ஆம் ஆண்டு மக்கள் மருத்துவமனையை பொதுமக்களின் சேவைக்காக அர்ப்பணித்தோம். இது மக்களே சேர்ந்து மக்களுக்காக உருவாக்கியது என்பதால் மக்கள் மருத்துவமனை என்றே பெயரிட்டோம்" என்று பெருமிதப்பட்டார் சேர்மன் மகாலட்சுமி.

நிர்வாகத் திறமையும், ஏற்கெனவே ஆற்றியுள்ள சமூகப் பங்களிப்பும்தான் மகாலட்சுமியை சேர்மனாக தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் என்கிறார்கள் மற்ற செயற்குழு உறுப்பினர்கள். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைக் கவனிக்க 24 மணி நேரமும் 4 டாக்டர்கள் மற்றும் 10 நர்ஸ் டீம், நோயாளிகள் தங்கி மருத்துவம் பார்ப்பதற்காக 30 படுக்கைகள் வசதி, பெண்களுக்கான பிரசவ வார்டு, தனித்தனியாக ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, ஸ்கேனர் மற்றும் எக்ஸ்ரே வசதி, ரத்தப் பரிசோதனைக் கூடம், ஆம்புலன்ஸ் வசதி என்று பல வசதிகள் இங்கே உள்ளன. பிரபல மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறப்பு டாக்டர்கள் வாரம் தோறும் வருகை தருகின்றனர்.

இவர்களுக்கான விசிட்டிங் கட்டணத்தை மக்கள் மருத்துவமனை சார்பிலேயே கொடுக்கறோம். மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நோயாளிகளுக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவும், அரசுக்கு வரி கட்டுதல் போன்ற செலவுகளுக்காகவும் நோயாளிகளிடம் 50 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றுக்கொள்கிறோம். இப்ப ஒரு நாளைக்கு 50 முதல் 90 நோயாளிகள் வரை வந்து போறாங்க. இது எங்க கிராம மக்களோட கூட்டு முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாவே பார்க்கறோம். ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு எத்தனை நோயாளிகள் வந்தார்கள், என்னென்ன தேவைகள் உள்ளன, செய்யப்படவேண்டிய வசதிகள், வரவு, செலவுக் கணக்குகள் என்று அனைத்துத் தகவல்களையும் கிராம மக்கள் முன்னிலையிலேயே செயற்குழுக் கூட்டம் நடத்தி பகிர்ந்துகொள்கிறோம்.

மருத்துவமனை கட்டிடப் பொறுப்பை ஏற்று உரிய காலத்தில் சிறப்பாகக் கட்டிமுடித்த பழனிச்சாமி, சின்னச்சாமி, ஈஸ்வரன் ஆகியோருக்கும், இன்றுவரை எங்கள் மருத்துவமனைக்கு கவுரவ ஆலோசகராக இருந்துவரும் மருத்துவர் ஜீவானந்தத்துக்கும் எங்க கிராம மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்று நெகிழ்கிறார், மக்கள் மருத்துவமனையின் செயற்குழு உறுப்பினரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான நடேசன்.

இங்கே சிகிச்சை பெற வந்த கல்யாணி கூறுகையில் இங்க வந்தா மருந்து, மாத்திரை டாக்டர் ஃபீஸ் எல்லாத்துக்கும் சேர்த்தே 50 ரூபாய்தான் ஃபீஸ் வாங்குறாங்க. தனியார் மருத்துவமனைகளில் ஒருநாள் பெட் வாடகையே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆகும். ஆனா, மக்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஒருநாள் பெட் வாடகை வெறும் 100 ரூபாய்தான். இந்த மருத்துவமனை கட்டினதால இந்த ஊர் மக்கள் மட்டுமில்ல... இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் நிம்மதியா இருக்குங்க" என்றார்.

மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை ஒன்றுசேர்ந்து நிரூபித்திருக்கிற ஊத்துக்குளி மக்கள் தென்னகத்திற்கே உதாரண மனிதர்கள் அல்லவா? (பூ. சர்பனா - புதியதலைமுறை)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Empty Re: மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

Post by சிவா Fri Mar 28, 2014 9:13 am

மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! 3838410834 மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! 3838410834 மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! 3838410834 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Empty Re: மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

Post by DERAR BABU Fri Mar 28, 2014 10:59 am

ஆஹா அருமை அருமை .மக்களே வாழ்த்துக்கள் .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Empty Re: மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum