ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_m10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10 
VENKUSADAS
படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_m10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_m10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10 
VENKUSADAS
படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_m10படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

3 posters

Go down

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Empty படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Post by சாமி Thu Mar 27, 2014 3:44 pm

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! JRYIpxyTSgGWWugiKszU+xchi_1812641h.jpg.pagespeed.ic.LQe5UP1tUg
சுடலைமாடன் கோயில் தெரு நம் பார்வைக்கு குறுகலாக இருப்பது. ஆனால் அந்தத் தெருவின் தோற்றத்தைத் தகர்த்துக்கொண்டு ஒரு விசாலமான மனிதர் அந்தத் தெருவின் கடைக் கோடியில் இருந்தார். திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் (தி.க.சி) என்ற ஆளுமையே அவர்; வந்தாரை வரவேற்றுவிட்டால் நேரமும் காலமும் போவதுதெரியாமல் அப்படி ஒரு பேச்சு இருக்கும் அவரிடம். நீங்கள் அவர் வீட்டுக்குள் கால் வைக்கும்போது ஒருவேளை காலை 8 மணியாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் அவர் அன்றைய பெரும்பாலான நாளிதழ்களையும் நேற்று மாலையில் வாங்கிய இலக்கிய இதழ்களையும் படித்துமுடித்துவிட்டு ‘அந்த’ ஓரமாகத் தூக்கிவைத்திருப்பார். படித்ததில் பிடித்தது குறித்து ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தன் கைப்படவே ஒரு நாலணா கடுதாசி எழுதிக்கொண்டும் இருக்கலாம்; இன்றைய பேச்சு அநேகமாக அதிலிருந்துதான் தொடங்கும். அவர் எல்லோரிடமும் பேசுவதற்காகத்தான் பிறந்திருக்கவேண்டும்; அதை ஒரு தவமாக செய்தார். நவீன இலக்கியத்தின் அசுரத்தனமான வேகத்துக்கு ஈடுகொடுத்து சதாசர்வ காலமும் அவரும் அதன் கூடவே ஓடிவந்தார்.

6 வயதில் தந்தையையும் 7 வயதில் தாயையும் இழந்த தி.க.சிவசங்கரனை காந்திய நூல்களும் நூலகங்களும் தனிமையின் கொடுவெளியிலிருந்து கைதூக்கிவிட்டன. அந்த வரம் நேற்றுவரை அவரோடு இருந்தது. காந்தியத்தில் தொடங்கி மார்க்ஸீயத் துக்குள் நுழைந்து கடைசிவரை அங்கேயே கால்தரித்து நின்றுவிட்டார். கம்யூனிஸ்டுகளுக்கு ஆதர்சமான சோவியத் யூனியன் சரிந்து வீழ்ந்த போதும் கொஞ்சமும் சிதைவுறாத மனவுறுதியோடு, சொல்லப்போனால் இன்னும் அதிக துடிப்போடு நிமிர்ந்து நின்றார்.

அவரும் 1945-ல் ஒரு வங்கி ஊழியர். அப்படியொரு பொன்னான வாழ்க்கைக்குள் அவர் இலக்கிய ஆர்வத்தைக் கைவிட்டு தானுண்டு, தன் குடும்பமுண்டு என்று ஒதுங்கி யிருக்கலாம். ஆனால் இலக்கிய ஆர்வம் அவரை உந்திக்கொண்டு போனது.

அது தமிழகத்தின் பெரும் இலக்கிய ஆளுமைகளோடு அவரை இணைந்து செயல்படச் செய்தது. ஏற்கெனவே நெல்லை மண்ணுக்குத் தாமிரவருணி நிலவளம் தந்ததுபோல நவீன இலக்கியச் செழுமையை பாரதியும் புதுமைப்பித்தனும் தந்தார் கள். அதனால் தி.க.சி. பார்த்த இடங்க ளிலும் சென்ற இடங்களிலும் இலக்கிய ஆர்வத்தால் உந்தப்பட்ட பலரும் அவரைச் சூழ்ந்துவந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவரும் பல இலக்கிய ஆர்வலர்களோடும் இலக்கிய அமைப் புக்களோடும் தொடர்ந்த நட்புறவில் இருந்தார். தி.க.சி. ஆரம்பத்தில் சிறுகதைகளை எழுதினார்; பின்னர் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். அந்த வகையில் சீன நாவலான ‘வசந்த காலத்திலே’ கவனம் பெற்றது. மேலும் 5 மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. பின்னர் தமிழ் இலக்கியப் போக்குகளை அறிந்த நிலையில் ஒரு விமர்சகராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

அவரால் உத்வேகம் பெறாத தற்கால படைப்பாளிகள் மிகக் குறைவு. தன்னுடைய வங்கிப் பணியை விட்டு விட்டு சோவியத் நாடு இதழ்ப் பணியை சென்னையிலிருந்து செய்யும் போதே தாமரை இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல் பட்டார். அவர் பொறுப்பில் வெளியான ‘தாமரை’யின் 100 இதழ்கள் இன்றளவும் இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த மதிப்பிற்குரியதாக இருக்கின்றன. மாநிலத்தின் அனைத்து இலக்கிய ஆளுமைகளோடும் நல்ல நட்புறவை வகுத்துக்கொண்டார்.

2000-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தி.க.சியைப் பற்றிய ‘21.இ சுடலைமாடன் கோயில் தெரு- திருநெல்வேலி டவுன்’ என்கிற எஸ். ராஜகுமாரன் இயக்கிய ஆவணப் படமும் அவர் பெருமை பேசும்.

அடுத்த இரண்டு நாள்களில் 90-ம் அகவைக்குள் நுழையவிருந்த தி.க.சி ஏதோ கவனத்தில் வானு லகம் போய்விட்டார்; இந்த முறை மட்டும் அவர் இலக்கு திசைமாறிவிட்டது!. THEHINDUTAMIL
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Empty Re: படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Post by சாமி Thu Mar 27, 2014 4:52 pm

விமர்சன வித்தகர் தி.க.சி. - dinamani

நெல்லை நகரம் தந்த இலக்கியவாதிகளில் தி.க.சி. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரனும் ஒருவர். 1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் பிறந்து 25.03.2014 வரை ஜீவித்த இந்த மனிதரை சந்திக்காத தமிழக இலக்கியவாதிகளும் கிடையாது; பத்திரிகையாளர்களும் கிடையாது.

நெல்லை தந்த மற்றொரு படைப்பாளியான வல்லிக்கண்ணன் தி.க.சி.யின் இலக்கிய வழிகாட்டி. மணிக்கொடி வ.ரா.வின் பாணியைப் பின்பற்றி எழுதிய தி.க.சி., பாரதி மீது மாளாக் காதல் கொண்டவர்.

நெல்லையில் தனது பள்ளிப் படிப்பினைத் தொடங்கிய இவர், மாணவப் பருவத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். அதன்பின்னர் இடதுசாரி இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவா தொடங்கிய பொழுது, அதில் பங்கு கொண்டார். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பொழுது தி.க.சி. அதனை வரவேற்றார். அவர் தன்னை ஒரு குறுகலான நம்பிக்கை வளையத்துக்குள் அடைத்துக் கொள்ளவில்லை.

அந்தக் காலத்தில் நெல்லையில் முற்போக்கான சிந்தனையுள்ளவர்களைக் காண வேண்டும் என்றால் நெல்லை ரயில் நிலையம் அருகே இயங்கிக் கொண்டிருந்த "நெல்லைப் புத்தக நிலைய'த்தில் காணலாம். மாலை சுமார் ஐந்து மணிக்குப் பின்னர் பல இலக்கியவாதிகள், பேராசிரியர்கள் சந்தித்து உரையாடும் இடமாக அந்த இடம் விளங்கியது. இந்தப் புத்தக நிலையத்தை தி.க.சி.யும், சிந்துபூந்துறை அண்ணாச்சி சோ. சண்முகம் பிள்ளையும் இணைந்து நடத்தினர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் தோன்றுவதற்கு முன்னரே ரஷ்ய, சீன இலக்கிய நூல்களை இப்புத்தக நிலையத்தார் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.

இந்தப் புத்தக நிலையத்தில்தான் தி.க.சி., சோ.சண்முகம் பிள்ளை, பேரா. நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் சந்தித்து உரையாடுவது வழக்கம். இக்கால கட்டத்தில்தான் ரகுநாதனின் "சாந்தி' என்ற மாத இதழும் வெளிவந்தது. இதிலும் தி.க.சி. பங்கு பெற்றார்.

சொந்த வாழ்க்கைக்கான பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வங்கியில் தி.க.சி. பணியாற்றினார். ஆனால் அது நீடிக்கவில்லை. 1962ஆம் ஆண்டு வங்கிப் பணியை ராஜிநாமா செய்தார். மூர்த்தி என்பவர் மூலம் "சோவியத் நாடு' பத்திரிகையின் துணை ஆசிரியராக சேர்ந்து பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் (1965-1972) "தாமரை' ஆசிரியராகவும் பண்யாற்றினார். இது சற்று சிரமமான பணி. பகல் முழுவதிலும் சோவியத் நாடு பத்திரிகையில் பணியாற்ற வேண்டும். மாலை நேரத்திலும், காலையிலும், "தாமரை'க்கான கதை, கட்டுரைகளை சரிபார்க்க வேண்டும்.

அலுவலகம் என்பது ஒரு மேசை, நாற்காலி ஆகியவற்றோடு முடிந்துவிடும். ஏ.சி. கிடையாது, மின்விசிறி கிடையாது, மங்கிய விளக்கொளியில் இந்தப் பணியினைச் செய்ய வேண்டும்.

இந்தச் சூழலில்தான் "தாமரை' ஆசிரியராக அக்காலத்தில் இயங்கினார். இதே காலகட்டத்தில் "தீபம்', "கணையாழி', "கண்ணதாசன்', "எழுத்து', "இலக்கியவட்டம்', "சுபமங்களா', "செம்மலர்', "வானம்பாடி' ஆகிய இதழ்களுக்கும் தி.க.சி உதவியுள்ளார்.

தி.க.சி.க்கு புதுமைப்பித்தனைத் தெரியும். அவரது இறுதிக் காலத்தில் தி.க.சி. உதவியுள்ளார். ஜெயகாந்தனுடன் பழக்கம் உண்டு. கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

தி.க.சி. ரகுநாதனுடனும் பேரா. நா. வானமாமலையுடனும் நெருங்கிப் பழகியவர். ஜீவாவுடன் பழகியவர். இவர்கள் சகோதர பாசத்துடன் பணியாற்றியவர்கள். முதல் மூவரும் ஆழ்ந்த படிப்பாளிகள், கொள்கையாளர்கள். அந்தக் காலத்தில் இவர்களைக் "கொள்கைக் கோமாளிகள்' என சிலர் கிண்டல் செய்வார்கள். தி.க.சி. அவ்வாறு அல்லர்.

அவர் இலக்கியக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து விமர்சனம் எழுதியவர் அல்லர். அவர் ஒரு பரந்த படைப்பாளி. மேல்நாட்டு இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் ரசித்துப் படித்தவர். இது நடைமுறை அனுபவம் சார்ந்தது. பாரதி பற்றியும், புதுமைப்பித்தன் பற்றியும் பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அவை தீர்க்கமானவை; ஆணித்தரமானவை. அனுபவ அறிவு மூலமாகவே பல விஷயங்களைக் கற்றுத் தெரிந்துகொண்டு, கொள்கையாளர்களுக்குச் சமமாக உயர்ந்தவர் தி.க.சி.

தி.க.சி. என்ற இந்த மனிதர் தொடர்புகொள்வதில் வல்லவர். ஒரு கதை அல்லது கட்டுரை வந்தால் அதனை உடனே பாராட்டுவார். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் செய்வார். பல மணி நேரம் உரையாடுவதிலும் வல்லவர். அவரிடம் சென்று உரையாடிவிட்டு வரும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

தி.க.சி. ஒரு சிறந்த மனித நேய வாதி. நெல்லையின் 10 சுடலைமாடன் கோயில் தெரு இனி தி.க.சி. இல்லாமலேயே இருக்கும். ஆனால் இலக்கிய நண்பர்கள் மனதில் தி.க.சி. என்றும் வாழ்வார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Empty Re: படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 4:53 pm

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! IiiNRppNTHin1qjveiF1+dead
-
ஈகரை சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Empty Re: படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Post by சாமி Sun Mar 30, 2014 1:31 pm

விமர்சனமும் கரிசனமும்

தி.க.சி. என்று அறியப்படும் திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் (89) மூத்த இலக்கியச் செயற்பாட்டாளர். திருநெல்வேலி இலக்கிய வட்டத்தின் முக்கியப் பெயர்.

வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் இவரது சகாக்கள். முற்போக்கு இலக்கியவாதிகளின் பிசிறில்லாத வழிகாட்டி. பிரபஞ்சன், கந்தர்வன், வண்ணநிலவன், பூமணி போன்ற சாதனை படைத்த எழுத்தாளர்கள் பலருக்கும் ‘தாமரை’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மேடை அமைத்துத் தந்தவர்.

72 ஆண்டுக் கால இலக்கிய அனுபவத்தை உடைய அவரது மறைவு எண்ணற்ற எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் பெரிய இழப்பு.

அடிப்படையில் மனிதத்தன்மை வற்றிப் போகாத ஊற்றுக்கண்ணாக திகழ்ந்த அவருடன் மிக நெருக்கமாகக் கடைசிக் காலம் வரையில் உடனிருந்தவர் திருநெல்வேலி டவுனில் உள்ள மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பொ. வள்ளிநாயகம். அவர் தி.க.சி.யுடனான தனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

2004-ம் ஆண்டில் திருநெல்வேலி டவுனில் உள்ள சுடலைமாடன் தெருவுக்குக் குடிபுகுந்தோம். இளசை அருணாசலமும் உடையார்பட்டி இசக்கி அண்ணாச்சியும் தி.க.சி. இருக்கும் தெருவிலேயே வீடு கிடைத்துவிட்டதே என்று சந்தோஷப்பட்டார்கள்.

எனக்கும் தி.க.சி. ஐயாவுக்கும் அப்போது அவ்வளவு தொடர்பில்லை. ஏனெனில் வாசிப்பு என்ற விஷயத்தில் என் வீட்டில் அண்ணன் நெல்லை நாயகம்தான் நூலகத்தையும் புத்தகங்களையும் அதிகம் பயன்படுத்துவார். கலை இலக்கியவாதிகளின் அறிமுகமும் தொடர்பும் எனது துறை சார்ந்ததால் எனக்கும் பின்னர் ஏற்பட்டது.

ராமையா பிள்ளை புத்தகக் கடையிலும் லேனா பேப்பர் மார்ட்டிலும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டபின் தி.க.சி.யுடன் தொடர்பு அதிகமாயிற்று. அதிலிருந்து கடைசிவரை என்னைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே பாவித்தார்.

2006 வாக்கில் தி.க.சி.யின் மனைவி தெய்வானை அம்மாளுக்கு உடல்நலம் குறைந்தபோதிலிருந்து தினம் அவரது வீட்டுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவரது அறையிலிருந்து அவர் எழுதுவதும், நான் வரைவதும் பேசுவதுமாய்த் தொடர்ந்தது. அவரது மனைவியைப் பார்க்க வரும் குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் என்னை அதிகம் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

தெய்வானை அம்மாள் இறந்த பிறகும் தி.க.சி., 21 இ, சுடலைமாடன் தெருவிலேயே குடியிருக்க முடிவுசெய்தார். நானும் அதே தெருவில் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தி.க.சி.யுடன் இருப்பது என்பது வாடிக்கையானது. எழுத்து வேலை, வாசிப்பு வேலை, தொலைபேசித் தொடர்பு வேலை எனப் பிரித்துப் பிரித்து தினமும் செய்துகொண்டிருந்தார். வீட்டுக்கு வருகைதரும் நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கி, அவர்களது பணியை விசாரித்து, விமர்சித்து, தேவைப்பட்டால் மீண்டும் சந்திக்கச் சொல்வார். இப்படியான தி.க.சி.யின் பணிகளுக்குள் எனக்கும் ஒரு பங்கு உருவானது.

காலை மாலை தவிர பகலில் தபால் போட மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வருவது தி.க.சி.யின் வழக்கம். மிகவும் தேவைப்பட்டால் தவிர தொலைபேசி செய்ய மாட்டார். வீட்டுக்கு வருகின்ற இதழ்களில் கட்டுரைகளை சில நேரங்களில் வாசிக்கச் சொல்லிக் கேட்டதுண்டு. எந்த நபர் வந்தாலும் வேலை ஏதாவது செய்துகொண்டிருந்தால் ஒரு நிமிடம் இருங்களேன் என்று அமரவைத்துவிட்டு எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு வந்தவர்களிடம் வந்த விஷயம் பற்றி விவாதிக்கவோ பேசவோ அமர்ந்துவிடுவார். வந்தவர்கள் திரும்பும்போது வாசல்வரை வந்து வழி அனுப்புவார்.

அநேகமாக வருகின்ற எழுத்தாளர்கள் அனைவரும் அவர் பேசுவதைத்தான் கேட்க வருவர். ஆனால் பேச வந்தவர்களிடம் விஷயத்தைத் தெளிவாகச் சொல்லச் சொல்லித் தன் கருத்தையும் தீர்க்கமாக சொல்லுவார்.

தனது குருநாதர் வல்லிக்கண்ணன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். வல்லிக்கண்ணன் பிறந்த நாளில் நான் வரைந்த ஓவியத்தை தி.க.சி. தனது வீட்டில் மாட்டி வைத்துவிட்டார். அதை வருவோரிடம் காண்பித்து மகிழ்வதும் உண்டு.

தி.க.சி.யின் பரந்த உலகம் ஒரு தனியான அறையில் இருந்து தொடங்கி எங்கும் வியாபித்துக் கிடந்தது. வருகைதரும் அனைவரிடமும் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏதாவது ஒரு ஊக்கத்தை அளிப்பதை அவர் தவறவிடுவதில்லை. ஒவ்வொரு படைப்பாளியும் தன்னைச் சந்தித்த பின் சிறு முன்னேற்றமாவது அடைந்துகொள்ள வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தவர் தி.க.சி. அவரது விமர்சனத்தில் அந்தக் கரிசனம் இருந்தது. அதனால்தான் தமிழகம் எங்குமிருந்தும் 21 இ, சுடலைமாடன் தெருவைத் தேடி எழுத்தாளர்களும் கவிஞர்களும் வந்து தங்களைப் புதுப்பித்துக் கொண்டனர்.

தி.க.சி. மூன்று விஷயங் களை எழுத்தாளர்களிடம் வலியுறுத்துவார். அறம், அழகியல், அறிவியல். ஒருவர் எல்லாக் காரியங்களிலும் சாதிக்க முடியாது. ஆனால் ஏதோ ஒன்றைச் சாதிக்காமல் ஒரு படைப்பாளி சென்று விடக்கூடாது என்பதுதான் தி.க.சி.யின் எதிர்பார்ப்பாகக் கடைசிவரை இருந்தது.

கேட்டு எழுதியவர்: அ.அருள்தாசன் - thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Empty Re: படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Post by Dr.S.Soundarapandian Wed May 28, 2014 4:24 pm

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! 103459460 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Empty Re: படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum