ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

+2
சிவா
சாமி
6 posters

Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by சாமி Wed Mar 26, 2014 9:48 pm

அண்மையில் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வயலார் ரவி, வளைகுடா நாடுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் இருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சிறையில் இருப்பவர்களை மீட்பது தொடர்பான அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என உறுப்பினர்கள் முன்பே கவலை தெரிவித்திருந்தனர்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளம், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அரபு நாடுகளில் வேலைக்குச் சென்றால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு பல லட்சங்களை செலவழித்து செல்கின்றனர்.

விசா பெற்று அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரின் பாஸ்போர்ட், அவர் அந்நாட்டு விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே, விசா அளித்த நிறுவனத்தால் அல்லது விசா அளித்த நபரால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் அவருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை அங்கு வேலை செய்யும் காலம் வரை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். விசா காலமோ, அல்லது பணிக்காலமோ முடிந்து மீண்டும் சொந்த நாட்டுக்கு அவர் திரும்பும்போதுதான், அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும்.

விசா, மருத்துவப் பரிசோதனை, விமான டிக்கெட் என குறைந்தது ரூ.1.50 லட்சம் செலவு செய்து வேலைக்குச் செல்வோர் அந்நாட்டில் சந்திக்கும் முதல் பிரச்னை மொழிப் பிரச்னைதான். ஹிந்தி, மலையாளம், ஆங்கில போன்ற மொழி அறிவு இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவர் அங்கு பணி செய்வது கடினம்.

மொழி அறிவு, வேலையின் தன்மை போன்றவற்றில் பழக்கம் ஏற்பட்டு தொய்வில்லாமல் வேலையில் ஈடுபட குறைந்தது 6 மாதம் வரை மிகுந்த சிரமங்களை அனுபவிக்க வேண்டும். பல லட்சங்களை செலவழித்து அந்நிய நாட்டுக்கு சென்றவர் தனது உழைப்பின் மூலம் வீட்டுக்கு பணம் அனுப்ப பல மாதங்களாகும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சம்பளம் வழங்கியதாக பணியாளர்களிடம் ஒப்புகைக் கடிதம் பெற்றுவிடும் நிறுவனங்கள், முறையாக சம்பளம் வழங்குவதாக அந்நாட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். ஆனால், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்வோருக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.

தொழிற்கல்வி பயின்றவர், பட்டம் பெற்றவர்கள் வளைகுடா நாடுகளில் கௌரவமான வேலையில் அமர்த்தப்படுவர். சாதாரண கடைநிலை ஊழிய வேலைக்குச் செல்வோரின் நிலை பரிதாபத்துக்கு உரியது. அந்நிறுவனம் கொடுக்கும் அனைத்துப் பணிகளையும் அவர் நிறைவேற்ற வேண்டும். அங்கு தனியார் நிறுவனங்களில் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியினை, பணியில் அமர்த்தப்படும் கடைநிலை ஊழியர்கள் குறைந்தது 6 மாதம் செய்ய வேண்டும்.

கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்துகின்றன. அரபு நாடுகளில் சாலைப் பராமரிப்பு போன்ற பணிகளில் அமர்த்தப்படுவோரில் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.

வளைகுடா நாடுகளில் பணியில் உள்ளவர்களில் 70 சதவிகிதம் பேர் சாதாரண கடைநிலை ஊழியராகவே பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடைநிலை ஊழியருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ரூ.12,500. தங்குமிடம் மட்டும் இலவசம். உணவு போன்ற பிற செலவுகளை சிக்கனமாக கையாண்டால்கூட ரூ.5 ஆயிரம்தான் மீதம் கிடைக்கும். குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்தால்தான் தன்னிறைவு பெற முடியும்.

மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க அந்நிய நாட்டுக்கு சென்றுதான் வேலை செய்ய வேண்டுமா? சொந்த நாட்டில் உழைப்பை செலுத்தி உயரும் சிந்தனை நம்மிடம் இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற அவலநிலையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. - சா. ஷேக் அப்துல்காதர் - dinamani
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty Re: வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by சிவா Thu Mar 27, 2014 7:25 am

மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் 8 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது, கடந்த மாதம் அவருக்கு தண்டனை காலம் முடிந்துவிட்டது, ஆனால் இந்திய தூதரகம் இதுவரை அவர் இந்தியா செல்ல எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நமது தூதரகங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் வெளிநாட்டில் உள்ள முதலாளிகள் சம்பளம் கொடுப்பதில்லை என்று பேச இவர்களுக்கு அருகதை இல்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty Re: வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by அருண் Thu Mar 27, 2014 2:00 pm

அங்கும் மட்டும் இல்ல சிவா! அண்ணா! எல்லா நாடுகளிலும் ஒரு பேருக்கு தான் செயல்படுகிறது. எம்பசி மூலம் வேலை ஆகும் என்று போனால் நடக்கவே நடக்காது.

சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவதை மேல் என்று சொல்வார்கள் அது போல தான் நடந்து கொண்டு இருக்கிறது.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty Re: வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by உதயசுதா Thu Mar 27, 2014 4:22 pm

இருக்கிறதை வித்து அதுக்கு மேலெ கடன் வாங்கி இங்க வந்து வேலை பார்க்க பறக்காதீங்க என்று சொன்னால் எவன் கேக்குறான். அவனவனுக்கு இங்கு வந்து கஸ்டபடும்போதுதான் தெரியும்.

ஊருல இருந்த நிலத்தை வித்து மேலும் 1 லட்சம் கடன் வாங்கி ஏஜன்ட் கிட்ட கொடுத்து இங்க வந்து 12 மணி நேரத்துக்கு 800 திர்ஹாம்ஸ் வாங்கும் மடையன்களை பார்க்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருது. இவன் வாங்குற 800 திர்ஹாம்ஸ்ல 300 திர்ஹாம்ஸ் இவனோட செலவுக்கே போய்டும். மீதி இருக்கிற 500 திர்ஹாம்ஸ்ல இவன் கடனை அடைப்பானா இல்லை குடும்பத்துக்கு பணம் அனுப்புவானா? நம்ம ஆளுக திருந்தாத வரை யாரை சொல்லியும் எந்த பயனும் இல்லை


வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Uவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Dவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Aவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Yவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Aவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Sவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Uவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Dவேண்டாம் வெளிநாட்டு மோகம்! Hவேண்டாம் வெளிநாட்டு மோகம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty Re: வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 4:40 pm

உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்...
-
கொசு அடிக்கிற பேட் கூட சீனாவிலிருந்துதான் வர
வேண்டும் என்ற நிலை....!
-
சாண் ஏறினால் முழம் சறுக்குகிற கதையாக இங்கு
உள்ளது..
-
ஐ.டி.ஐ. படித்து பிட்டர், டர்னர், வெல்டர் படிப்பு
படித்தவர்களுக்கு சிறு தொழிற்சாலைகளில்
வழங்கப்படும் ஊதியம் மிக குறைவு...
-
கைத்தொழில் செய்யும் வேலையாட்கள் பெறும்
ஊதியத்தில் பெரும்பங்கு குடி பழக்கத்துத்து போய்
விடுகிறது...
-
விலையில்லா இலவசங்கள் வழங்கி மக்களை
திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்...!
-
நல்லது நடக்கும் நம்பிக்கையில் காலங்கழிப்பவர்கள்
பலர்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty Re: வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by krishnaamma Thu Mar 27, 2014 6:59 pm

//விலையில்லா இலவசங்கள் வழங்கி மக்களை
திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்...!//


இது ரொம்ப நிஜம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேண்டாம் வெளிநாட்டு மோகம்! Empty Re: வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum