ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்?

2 posters

Go down

இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Empty இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்?

Post by சிவா Mon Mar 24, 2014 6:15 pm

தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் சுப.உதயகுமாரன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக அறியப்பட்ட இவர், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 18-ம் தேதியே தன் தந்தை பரமார்த்த லிங்கத்தையும் மனைவி மீராவையும் நாகர்கோவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, தனது தேர்தல் அறிக்கையை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் வெளியிடச் செய்தார்.

குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''வரும் 29-ம் தேதி உதயகுமாரன் இடிந்தகரையில் இருந்து வெளியேறி அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரசாந்த் பூஷண் தலைமையில் நாகர்கோவிலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார். அன்றுதான் உதயக்குமாரன் காவல் துறையால் கைது செய்யப்படுவாரா... இல்லையா என்பது தெரியும்'' எனச் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதுகுறித்து உதயகுமாரனின் மனைவி மீராவிடம் பேசினோம். ''இடிந்தகரை கிராம மக்களின் ஆதரவு எங்களுக்குப் பெரும்பான்மையாக இருக்கிறது. உளவுத் துறையும் மற்றக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலரும்தான், போராட்டக் குழுவினர் அரசியலில் இறங்கியதை எதிர்த்தும் போராட்டக் குழு இரண்டாக உடைந்து விட்டதாகவும் விதவிதமான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள். எங்களுக்கு அரசியல் வழியைக் காட்டியதே அங்குள்ள மக்கள்தான். போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லவே மக்களின் ஆதரவோடு அரசியலில் இறங்கியிருக்கிறோம். ஒவ்வொரு தரப்பு மக்களுடனும் நீண்ட நாட்கள் பேசி அவர்களோட கருத்துகளையும் கேட்டு, பெரும்பான்மை மக்கள் எடுத்த முடிவின் அடிப்படையில்தான், என் கணவர் அரசியலில் இறங்க முடிவெடுத்தார். முதலில் நானும் அவரும் அரசியல் வேண்டாம் என்றுதான் இருந்தோம். இந்த மூன்று ஆண்டு கால மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாததால்தான், இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதிகாரத்தில் பங்கெடுத்துக் குரல் கொடுக்கத்தான் அரசியல் பிரவேசம். மற்றபடி எந்தக் காரணமும் இல்லை.

கூடங்குளத்தை விட்டு வெளியில் வரும் அவரைக் கைதுசெய்தால் கஷ்டம்தான். இதுவரை எல்லாம் நல்லமுறையாகத்தான் நடந்துவருகிறது. இனியும் நல்லதாகத்தான் அமையும். அதனால, அவர் கைதாவார் என்ற கெட்டதை சிந்தித்துப்  பார்க்கவில்லை'' என்றார்.

ஒருவேளை உதயகுமாரன் கைது செய்யப்பட்டால் ஆம் ஆத்மி எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷிடம் கேட்டோம். ''நாகர்கோவிலில் உதயகுமாரன் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது கைதுசெய்யப்பட முயன்றால், கட்சியின் சட்ட வல்லுநர்களை வைத்து அதைத் தடுத்து எங்கள் வேட்பாளருக்கு அரணாக இருப்போம். மேலும் பிரசாந்த் பூஷண் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்செய்ய வாய்ப்புகள் உள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் என்பதால், அன்று எந்தவித கைது நடவடிக்கையையும் எதிர்கொண்டு, வேட்புமனுத் தாக்கல் சிக்கல் இன்றி முடியும்'' என்றார்.

இதுகுறித்து நாகர்கோவில் வழக்கறிஞரும் மனித உரிமைகள் பாதுகாப்பு இலவச சட்ட உதவி மைய நிறுவனருமான கிரினிவாசப் பிரசாத், ''குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது உதயகுமாரனுக்கு சாதகமாக உள்ளது. மத்திய அரசு ஒரு சட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒருவர் கொடூரக் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாகும். உதயகுமாரன் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது. மத்திய அரசின் இந்த சட்டப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, அவரது அரசியல் பிரவேசத்துக்குப் பாதகமாக அமையும். மற்றபடி அவர் தேர்தலில் போட்டியிடத் தடை ஏற்படும் வாய்ப்பு குறைவுதான். ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக அரசுக்கு  உச்ச நீதிமன்றம், 'கூடங்குளம் போராட்டம் என்பது பொதுமக்கள் போராட்டம். தமிழக அரசு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மற்றபடி, உதயகுமாரன் இடிந்தகரையில் இருந்து வெளியேறும்போது கைது செய்யப்படுவாரா என்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது'' என்றார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளில் என்ன நடக்குமோ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Empty Re: இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்?

Post by விஸ்வாஜீ Tue Mar 25, 2014 1:01 pm

இந்த எலக்ஸன் பயங்கரமான நிகழ்ச்சிகள் நடக்கும் போல
காத்திருப்போம் என்ன நடக்கிறது என்று பார்க்க
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum