ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!

2 posters

Go down

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை! Empty உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!

Post by krishnaamma Fri Mar 21, 2014 9:07 pm

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை! 8Y5WB0MhRhyy8cjO2AD1+danvandiri2

பதினாறு வகையான செல்வங்கள், பலப் பலவிதமான வசதிகள் என்று எல்லாமும் கிடைத்திருந்தாலும் அத்தனையையும், அனுபவிக்க வேண்டுமானால் பிணி இல்லாத உடலும், குறைவில்லாத ஆயுளும் அவசியம்.குறை ஏதும் இல்லாத நிறைவாழ்வு வாழ கும்பிட வேண்டிய கடவுள்ல முக்கியமானவர், தன்வந்திரி. புராணங்கள் அவரை மருத்துவக்கடவுள்னே சொல்லுது. எல்லா வகையான மருந்துகளுக்கும் அவரே அதிபதி.

மகாவிஷ்ணுவே உலகத்துல எல்லாமுமாக இருக்கறதாகச் சொல்லுவாங்க. ஒவ்வொண்ணுலயும் வெவ்வேற வடிவத்துல இருக்கற எம்பெருமான், மருந்துகள் எதுவானாலும் அதுல தன்வந்திரி அம்சத்துல நிறைஞ்சிருக்கிறதா விஷ்ணு புராணம் சொல்லுது.
பாற்கடல் கடையப்பட்ட சமயத்துல அதுலேர்ந்து அமுத கலசத்தை எடுத்துக்கிட்டு வெளிப்பட்டவர்தான் தந்வந்திரி பகவான். ஒரு கையில் அமுதம் நிரம்பிய கலசம் எடுத்துக்கிட்டு வந்த இவர், தன்னோட மற்ற மூன்று கைகள்ல மருந்துக் கலவம், மூலிகைச் செடிகள், அட்டைப் பூச்சி இவற்றை ஏந்திவந்தாராம். மற்ற எல்லாம் சரி, அட்டைப்பூச்சி எதுக்கு?

பகவானோட கையில இருக்கிற அட்டைப்பூச்சிக்கு ஜலவ்ஹான்னு பேர். சாதாரணமா அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சும்னு தெரிஞ்சிருக்கும். பெருமாபாலான நோய்கள் வரக் காரணம் ரத்தம் கெட்டுப் போவதுதான்னு சொல்வாங்க. அதோட, ஆறாத ரணங்கள், நாட்பட்ட காயங்கள், ரத்தக்கட்டுகள்ல கெட்ட ரத்தம் இருக்கும்.

வேண்டாத அந்தக் கெட்ட ரத்தத்தை இந்த அட்டைப் பூச்சி உறிஞ்சி எடுத்துக்கிட்டு, நல்ல ரத்தம் உருவாகக் காரணமாக இருக்கும். அதனால உடல்நலம் சீக்கிரமே சீராகும் என்பது ஐதிகம். சுஸ்ருதர்தான் ஆயுர்வேத மருத்துவத்தோட ஆரம்பக்கர்தான்னு சொல்வாங்க. பல நூறு வருடங்களுக்கு முன்பே அவர் அறுவை சிகிச்சையெல்லாம்கூட செய்திருக்கார். அந்த சமயத்துல ரத்தம் உறைஞ்சுடாம பாதுகாக்கவும், தீய ரத்தத்தை உறிஞ்சி எடுக்கவும் அட்டைப் பூச்சிகளைத்தான் பயன்படுத்தினா பண்டைக்கால மருத்துவக் குறிப்புகள்ல ஆதாரம் இருக்கு.
கரங்கள்ல என்ன ஏந்திவந்தால்தான் என்ன, பகவானோட கருணைப் பார்வை பட்டாலே போதுமே, எந்த வியாதியாக இருந்தாலும் விலகி ஓடிடும் இல்லையா?தட்சனோட சாபத்தால பிறை நிலவா, குறை மதியா தேய்ஞ்சுகிட்டு இருந்த சந்திரன், சிவபெருமானோட அறிவுரைப்படி பாற்கடல்ல முழுகிட்டு, அது கடையப்பட்ட சமயத்துல மறுபடியும் முழுநிலவா தோன்றினானாம்.

மகாலட்சுமி, தன்வந்திரி, சந்திரன் மூணு பேரும் பாற்கடல்ல இருந்து தோன்றியவங்க. அதனாலதான் வெள்ளிக்கிழமைகள்ல மருந்து சாப்பிடத் தொடங்கக் கூடாது. (அதாவதுநீண்டகாலம் எடுத்துக்க வேண்டிய சிகிச்சைக்காக மருந்து, மாத்திரை சாப்பிடறதை வெள்ளிக் கிழமையில ஆரம்பிக்கக்கூடாது). அமாவாசை, பௌர்ணமின்னு சந்திரனோட தொடர்புடைய நாட்கள்ல பிணிகளின் தாக்கம் அதிகமா இருக்கும்னெல்லாம் ஜோதிட ரீதியாகவும்கூட சொல்லப்படும். நிலவுக்கும், நோய்களுக்கும், மனநிலைக்கும் சம்பந்தம் இருக்குன்னு அறிவியல் அறிஞர்கள்கூட சொல்றாங்க.எத்தகைய உடல்நலக் குறைவாக இருந்தாலும், குலதெய்வம், விநாயகர், இஷ்டதெய்வத்தைக் கும்பிட்டுட்டு தன்வந்திரியை நம்பிக்கையோட பூஜித்தா, விரைவிலேயே நிவாரணம் கிட்டும் என்பது நிச்சயம்.

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை! 3B5DsXVuS96TJSzuLt4T+bhagwan_dhanwantari

ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்வுக்கு அருளக்கூடிய தன்வந்திரியை எப்படி பூஜிக்கிறது?
தன்வந்திரி பூஜையை செய்ய வியாழக்கிழமை ஏற்ற நாள். மகா விஷ்ணுவோட அம்சம் என்பதால புதன் கிழமையும் செய்யலாம். இவருக்கு உகந்த நிவேதனம் பால்பாயசம், வெண்ணெய், அர்ச்சிக்க உகந்தது துளசி, குங்குமம், சந்தனம்.
பொதுவா தன்வந்திரி பூஜை செய்யறதால உடல்நலம் சீராகும் என்பதால யாருக்காவது உடல் நலம் சரியில்லாத சமயத்துல நாள், கிழமை பார்க்காம அவங்களுக்காக செய்யலாம். அதேசமயம் வருடம் ஒருமுறை தொடர்ந்து ஏழு வாரம் இந்த பூஜையை செய்யறதால உங்க குடும்பத்தல உள்ளவங்க ஆரோக்யம் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். இந்த பூஜையை எந்த மாதமானாலும் தொடங்கலாம். ஆனால், வளர்பிறையில் நல்லதொரு திதி தினத்தில அமையக்கூடிய புதன்கிழமையில ஆரம்பிக்கணும்.

(வடநாட்டுல இதை தீபாவளி சமயத்துல ஐப்பசி மாதத்துல ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செய்யற வழக்கம் இருக்கு).
அன்றைய தினம் அதிகாலைல எழுந்து நீராடிட்டு குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் முன்னால நெய்தீபம் ஏற்றி வைத்து மனதாரக் கும்பிடுங்க (தன்வந்திரி பூஜை செய்யற அன்னிக்கு விளக்கை நெய்விட்டு ஏத்தறது நல்லது. இயலாதபட்சத்துல நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்).பூஜையறையில சுத்தமான இடத்துல ஒரு கோலம் போட்டு, அதன்மேல நல்ல மணைக்கட்டை ஒன்றைப் போடுங்க. மணையிலும், கோலம் போடணும். இந்தக்கோலங்களை அரிசி மாவால போட்டு, மஞ்சள் தூளை நடுவுல தூவறது நல்லது.

மணையில நடுவுல சின்னதா ஒரு நுனிவாழை இலையை, நுனி வடக்கு பக்கம் இருக்கறமாதிரி போட்டு, அதன் நடுவுல கொஞ்சம் நெல்லை பரப்புங்க. சுத்தமான பித்தளை அல்லது செம்புக் கலசத்தை அந்த நெல்லுக்கு நடுவுல வையுங்க.
நல்ல தண்ணீரை அந்த செம்புல பாதியளவுக்கு ஊற்றுங்க. கொஞ்சமா பச்சை கற்பூரம், ஒரு துளி ஜாதிபத்திரி, சில துளசி இலைகளை செம்பு நீர்ல போடுங்க.

வழக்கமா கலசத்து மேல மாவிலையும் தேங்காயும் வைப்பாங்க. ஆனா இந்த பூஜையில தேங்காயோட தாமரை மலரையும் வைக்கிறது நல்லது. அதிலும் அந்தத் தாமரை மலரோட தண்டு கொஞ்சம் நீளமானதா இருந்து, அதை செம்பின் உள்ளே இருக்கற நீரைத் தொடர மாதிரி வைக்கிறது இரட்டிப்பு நல்லது.

இப்படி அமைக்கப்பட்ட கலசத்துக்கு அமிர்தகலசம்னு பேர். கலசத்தை அமைச்சதும், செம்புக்கு சந்தன குங்குமம் இட்டு, கொஞ்சம் பூப்போடுங்க.

இந்த அமைப்புக்கு முன்னால ஒரு வெற்றிலையில மஞ்சளால சிறு பிள்ளையார் பிடிச்சு வைச்சு அவருக்கும் பொட்டுவெச்சு பூ போடுங்க.

"பிள்ளையாரப்பா, எந்தத் தடையும் இல்லாம இந்த பூஜையை செய்து முடிக்க அருள்புரியணும்'னு வேண்டிக்கிட்டு தெரிஞ்ச பிள்ளையார் துதியைச் சொல்லுங்க. தூப தீபம் காட்டி, சிறிதளவு வெல்லம் அல்லது அவல் நிவேதனம் செய்யுங்க.
அடுத்ததா, தன்வந்திரி பகவானை மனதார கும்பிட்டு, நீங்க அமைச்சிருக்கிற அமிர்த கலசத்துல எழுந்தருளும்படி வேண்டிக்குங்க.
ஓம் அலைகடல் உதித்தாய் போற்றி
ஓம் அருள்நிறை தெய்வம் போற்றி
ஓம் விஷ்ணுவின் வடிவே போற்றி
ஓம் அமுதகலசக் கரத்தோய் போற்றி
ஓம் நாரணன் உருவே போற்றி
ஓம் நலம் யாவும் தருவாய் போற்றி
ஓம் மூலிகைக் கரத்தாய் போற்றி
ஓம் முதன்மை வைத்தியனே போற்றி
ஓம் தண்ணொளி தெய்வம் போற்றி
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

அப்படின்னு பதினொரு முறை சொல்லுங்க.
அடுத்ததா,

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நமஹ


இந்தத் துதியை பதினொரு தடவை சொல்லுங்க.

அல்லது, வாசுதேவனின் வடிவானவரே, அமுத கலசம் ஏந்தியவரே, எல்லாப் பிணிகளையும் போக்குபவரே, தன்வந்திரியே உம்மை வணங்குகிறேன்.இந்த தமிழ் அர்த்தத்தை மனதார பதினொரு தடவை படியுங்க. தன்வந்திரி துதிகள் ஏதாவது தெரிஞ்சா அவற்றையும் சொல்லுங்க.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம்னு உங்களால இயன்ற தூபம் காட்டுங்க. அடுத்து கற்பூர தீபம் காட்டிட்டு பால்பாயசம் அல்லது வெண்ணெய் நிவேதனம் செய்யவும்.

இப்போ மறுபடியும் தன்வந்திரி பகவானை மனதார கும்பிட்டு, "கலசத்துல தங்கி இருக்கும் தன்வந்திரி பகவானே, இப்போதிலிருந்து எங்க வீடு முழுக்க உங்க அருள் வியாபிச்சு இருக்கணும். வந்த நோய் தீரவும், இனி எந்தப் பிணியும் வாட்டாம இருக்கவும் பரிபூரணமா அருளணும்!' என்று வேண்டிக்குங்க.

அதுக்கப்புறம் அமிர்த கலச அமைப்பை லேசாக வடக்குப் பக்கம் நகர்த்துங்க. பூஜை முடிஞ்சுது.கலசத்துல இருக்கற தீர்த்தத்தை உங்க வீட்டுல இருக்கற எல்லோரும் சிறிதளவு உட்கொள்ளுங்க. தலையிலும் தெளிச்சுக்குங்க. மீதத்தை வீடு முழுக்க லேசா தெளிச்சுட்டு, கடைசியா ஏதாவது செடி இருந்தா அதுல ஊற்றுங்க. அல்லது கால்படாத இடத்துல ஓரமா ஊற்றிடுங்க. கலச செம்பை அப்படியே கவிழ்த்து வைச்சுடுங்க. மறுநாள்தான் அதைத் துடைத்தோ, கழுவியோ எடுத்து வைக்கணும். தாமரையை வாசல் படிமேல் சொருகி வைக்கலாம்.

இந்த பூஜையை தொடங்கறதுக்குதான் நல்ல திதி, தினம் பார்க்கணும். பிறகு அடுத்தடுத்து வர்ற ஏழு புதன், அல்லது வியாழக்கிழமைகள்ல இந்த பூஜையை செய்யுங்க. பெண்களால முடியாத சூழல் வந்தா குடும்பத்துல உள்ள யாராவது செய்யலாம். உடல்நலக் குறைபாடு உள்ளவங்க யாருக்காகவாவது இந்த பூஜையை செய்தா, ஒரே ஒருமுறை எந்த தினத்துல வேணும்னாலும் செய்து, அந்த தீர்த்தத்தை உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு சிறிது கொடுக்கலாம்.முக்கியமான விஷயம், தன்வந்திரி பூஜை செய்யும் தினத்துல உங்களால இயன்ற அளவு ஏழை நோயாளிகள் யாருக்காவது உதவறதுதான். வாராவாரம் முடியலைன்னாலும் ஏழாவது வாரம் மட்டுமாவது உதவுங்க. உங்க குடும்பம் ஆனந்தமா, ஆரோக்யமா இருக்கும்!

- காசிவாசி குருஸ்ரீ காளிதாஸ் மகரிஷி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை! Empty Re: உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!

Post by விஸ்வாஜீ Sat Mar 22, 2014 8:19 am


காலை வணக்கம்,எனக்கு தேவையான பதிவு

நன்றி அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum