ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரையில் படுப்பது தவறா?

2 posters

Go down

தரையில் படுப்பது தவறா? Empty தரையில் படுப்பது தவறா?

Post by சிவா Sat Mar 08, 2014 12:37 am

'கட்டாந்தரையில் படுத்தால், உடலில் சக்தி குறைந்துவிடும் என்கிறார் என் அம்மா. எனக்கு வெறும் தரையில் படுத்தால் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் சித்தர்கள், யோகிகள் எல்லோருமே தரையில்தான் படுத்தனர். இதற்கு விளக்கம் தர இயலுமா?''

டாக்டர் ஆர்.கணேசன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், உடுமலைப்பேட்டை.

''பொதுவாக மனித உடலானது பல வளைவுகளையும் நெளிவு சுளிவுகளையும் உள்ளடக்கியது. அதிலும் நமது முதுகுத் தண்டுவடம் S வடிவத்தில் அமைந்திருக்கும். நாம் தரையில் படுத்து உறங்கும் நேரத்தில் அது தன்னை நேராக்கிக் கொள்ள முயற்சி செய்யும். இது நமக்கு அசவுகர்யத்தை அளிக்கும். ஆனால், அதே நேரத்தில் நாம் மெத்தையில் படுக்கும்போது தண்டுவடத்தின் வளைவுகள் ஏற்படுத்தும் வெற்றிடம் மெத்தையால் நிரப்பப்படும். இதனால், ஒரு நிம்மதியான சவுகரியமான உணர்வு ஏற்படும். முதுகு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளும்.

பழங்கால மக்கள் தரையில் படுத்து மட்டுமே பழகி இருந்ததால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால், புதிதாக இதை முயற்சி செய்வோருக்கு முதுகுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே புதிதாகத் தரையில் படுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

சிறு வயது முதல் தரையில் படுத்துப் பழக்கப்பட்டு அது வசதியாகவும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக இதே பழக்கத்தை தொடரலாம். எனினும் பெட் ஷீட் போன்று ஏதாவது ஒரு துணியை விரித்துப் படுப்பது தரையின் குளுமையில் இருந்து பாதுகாப்பதோடு உடலையும் சற்று நேராக வைத்திருக்க உதவும்.''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தரையில் படுப்பது தவறா? Empty Re: தரையில் படுப்பது தவறா?

Post by சிவா Sat Mar 08, 2014 12:38 am

''என் இரண்டு உள்ளங்கைகளிலும் கை விரல்களின் ஓரங்களிலும் பாதங்களில் வருவதுபோல் பித்தவெடிப்பு வந்துள்ளது. கறுத்து சொரசொரப்பாகி எரிச்சலை ஏற்படுத்தி வரும் இப்பிரச்னைக்குத் தீர்வுதேடி தோல் சிகிச்சை நிபுணரைச் சந்தித்தும் பயனில்லை. கையில் பித்தவெடிப்பு வருவதற்கு என்ன காரணம்? எப்படிக் குணப்படுத்துவது?''

டாக்டர் சி.மகாலிங்கம், தோல் சிகிச்சை நிபுணர், கடலூர்.

''நம் உடலில் எங்கெல்லாம் அழுத்தம் அதிகமாகிறதோ... அங்கெல்லாம் அழையா விருந்தாளியாக வெடிப்பும் வந்துவிடும். பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் எண்ணெய்ப் பசை குறைவதால் தோல் சுருங்கிக்கொண்டே வந்து, ஒருகட்டத்தில் உதிர்ந்துவிடும். சில சமயங்களில் இந்தத் தோல் உரியாமல் தடித்துப்போவதால், நடக்கும்போது குதிகால் தரையில் வேகமாக இடித்து வெடிப்பு ஏற்படும். நுனிப்பாதத்தில் அதிக அழுத்தம் இறங்கும்போதும், கால் விரல்களைச் சுற்றிலும் வெடிப்பு உண்டாகும். இதேமுறையில்தான் உள்ளங்கை மற்றும் விரல்களிலும் வெடிப்பு ஏற்படுகிறது. உள்ளங்கையை ஊன்றி எழுந்திருப்பதாலும், அதிக பாரத்தைத் தூக்குவதாலும் வெடிப்பு உண்டாகி தொந்தரவை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க, குளித்தவுடன் ஈரம் காய்வதற்குள் கை, கால்களில் தாராளமாக எண்ணெய் தடவிக்கொள்ளலாம். நார்ச்சத்து உள்ள பொருட்களையும் தண்ணீரையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிக அளவு எண்ணெய்ப் பசை உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. தினமும் நல்ல தண்ணீரில் கொஞ்சம் உப்புப் போட்டு, டாக்டர் கொடுக்கும் மருந்தினைக் கலக்கி, அதில் 15 நிமிடம் உள்ளங்கை மற்றும் விரல்களை அலசி வெடிப்பினுள் உள்ள அழுக்கினை அகற்றினாலே விரைவில் குணம் கிடைக்கும்.''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தரையில் படுப்பது தவறா? Empty Re: தரையில் படுப்பது தவறா?

Post by சிவா Sat Mar 08, 2014 12:38 am

''எனக்கு ஆண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர்தான் குழந்தை கவிழ்ந்து படுக்கவே ஆரம்பித்தது. இன்னும் தவழ ஆரம்பிக்கவில்லை. இதனால் குழந்தை உடலில் குறை ஏதும் இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. தயவு செய்து விளக்குங்களேன்...''

டாக்டர் மு.சரவணன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மதுரை.

''பொதுவாக 3 முதல் 11 மாதங்களுக்குள் குழந்தை கவிழ்ந்து படுப்பது நிகழல£ம். அதேபோன்று, குழந்தைகளுக்குத் தவழும் திறன் 9 முதல் 12 மாதங்களுக்குள் ஏற்படும். இதில் ஆண்குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை தவழ ஆரம்பிக்கலாம். வெறும் மாதங்களை மட்டுமே எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற விஷயங்களைத் தீர்மானிக்க முடியாது.ஒவ்வொரு மாதமும் குழந்தையின் உடல் எடை மற்றும் உடல் அசைவுகளில் முன்னேற்றத்தைக் கண்காணித்து வர வேண்டும். பொதுவாக 10 மாதக் குழந்தைகள் 8 முதல் 12 கிலோவுக்குள் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளின் உடல் அசைவுகளில் முன்னேற்றம் பெறுவதற்குப் பெற்றோர்கள் நிறைய மெனக்கெட வேண்டும். தனிமையில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களால் நிறைய நேரம் செலவிடப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் உடல் நல முன்னேற்றத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். குழந்தைகளைப் பின்புறம் இருந்து கூப்பிட்டுத் திரும்பவைப்பது, தாய்மைக் குரலில் கொஞ்சிப் பேசிச் சிரிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஒன்பது மாதம் முதல் ஒன்றே முக்கால் வயதுக்குள் குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும். அப்போது சற்று தூரத்தில் நின்று அழைப்பது, சத்தம் எழுப்பும் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி உற்சாகப்படுத்துவது போன்ற செயல்கள் நல்ல பலனைத் தரும்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகச் சிறந்த ஊட்டச்சத்து. பால் குடிப்பதை மறந்தவுடன் வீட்டில் அன்றாடம் செய்யும் உணவு வகைகளிலேயே ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளைக் கொடுத்துவந்தால் போதும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தரையில் படுப்பது தவறா? Empty Re: தரையில் படுப்பது தவறா?

Post by ஜாஹீதாபானு Sat Mar 08, 2014 2:35 pm

அனைத்தும் பயனுள்ள பகிர்வு நன்றி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தரையில் படுப்பது தவறா? Empty Re: தரையில் படுப்பது தவறா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum