ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் செல்வங்கள்: மண்

2 posters

Go down

தமிழ்ச் செல்வங்கள்: மண் Empty தமிழ்ச் செல்வங்கள்: மண்

Post by சாமி Sun 26 Jan 2014 - 22:54

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 1 - புலவர் இரா.இளங்குமரன்

கையில் எடுக்கிறான்; துகள் துகளான புழுதி; பூழ்தியும் அது பூதியும் அது. பூ எனவும் ஆம். இவையெல்லாம் சொல்லியல் நெறிமுறைகள். துகள் - தூள் ஆவது எப்படி?

இரு குறில் ஒரு நெடில் ஆகியது; பொருள் மாறவில்லை. விழுது - வீழ்து ஆவது எப்படி? இரு குறில் நெடிலானது; ஆனால், இரண்டாம் எழுத்தின் ஒற்று நீங்காமல் நின்றது. அதனால், வீழ்து ஆயது. புழுதி பூழ்தி ஆனது அப்படித்தான்.

பொழுது "போழ்து' ஆகிப் "போதும்' ஆகிவிடவில்லையா? எப்பொழுது வந்தார்? எப்போழ்து வந்தார்? எப்போது வந்தார்? ஒரு பொழுது மூவடிவாகிவிட்டதே!

"எப்போதும் வென்றான்' ஒருவன் வீறு; அவன் ஊர்ப் பெயராய் நிலைத்துள்ளதே! புழுதிக்கு மீண்டும் வருவோம். புழுதியில் மழை பெய்கிறது; அல்லது தண்ணீர் விடுகிறோம். புழுதி ஒன்று சேர்ந்து மண்ணாகப் படிகிறதே! மண்ணைக் குழைவாக்கி விடுகிறோம். மண்ணைக் குழைவாக்கி வெயிலில் காய்ந்து - நன்றாகக் காய்ந்தால் கட்டியாகிவிடுகிறதா? குழைந்த மண்ணைக் கலம் வனைவார் பானை, குடம், சட்டி, மூடி என வனைந்து உலர வைத்ததுடன் விட்டுவிடுகிறார்களா? சூளையில் இட்டுச் சுட்டுப் பொசுக்கிக் கட்டமைப்புச் செய்ததுடன் நின்றார்களா?

பச்சை அல்லது ஈரமண்ணாக வனையும் போதே, எத்தனை வரி? எத்தனை கோலம்? எத்தனை ஓவியம்? எத்தனை எழுத்து? -

என நெஞ்சப் பதிவை நிலைப்பதிப்பு ஆக்கிவிடுகிறார்களே! மண்கலப் பெயர் "மண்டை'யாயிற்றே இதே உத்திதானே, செங்கல் கட்டளை! மண்ணைக் குழைக்க - கட்டளையில் வைத்து அழுத்திச் செறிக்க - வெயிலில் காயவிட - சூளையில் வேகவைக்க - அம்மண் கல்லாகிவிட்டதே! அதன் வண்ணச் சிறப்பால் "செங்கல்' ஆகிவிட்டதே! சுடுமண்ணாம் செங்கல்தானே, ""சுடுமண் ஓங்கிய நெடுநிலை மாடம்''

சுடுமண்தானே கலங்கள்! சுடுமண்தானே சுவர்! சுடுமண்தானே தெய்வ உருக்கள்! சுடுமண்தானே கோட்டை கொத்தளம்! புழுதியா இது? செறிவின் - திண்மையின் - கட்டமைவின் - மூலம் அல்லவோ! அதனால்தானே, ""மண் திணிந்த நிலன்'' என்று நம் புறநாநூற்றுப் பாட்டன் கூறினான்.

மண் செறிவு - மட்செறிவு; மண் பானை - மட்பாணை; மண் தாழி - மட்டாழி; மண் குடம் - மட்குடம் என வல்லினம் வர, மெல்லினத்தையும் வல்லினம் ஆக்கும் புணர்ச்சியிலும் புலப்படுத்தினானே! புழுதி மண்ணா இந்த மண்? பொன் மண் அல்லவா!

தொடர்வோம்...


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச் செல்வங்கள்: மண் Empty Re: தமிழ்ச் செல்வங்கள்: மண்

Post by சாமி Sun 2 Feb 2014 - 18:40

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 2

மண்ணின் வளம் முழுவதும் உலகம் கண்டு கொண்டதா? ஒரு பகுதியாவது கண்டு கொண்டதா? எத்தனை அறிவர்கள் தோன்றி ஆய்ந்தாலும் கணக்கிட முடியாமல் தோற்றே போவர். நீரில் நாம் நடாமல், நிலத்தில் இருக்கும் இடம் தெரியாமல், புதைந்து கிடந்த தாமரை, ஆம்பல், கொட்டி என்பவை தாமே முளைத்து, நீர்மேலே இலையும் பூவும் தேனும் பூம்பொடியும் வண்டும் ஈயும் ஒருசேரக் காண்கிறோமே!

மண்ணுள் புதையுண்டு கிடந்த கிழங்குதானே, அவற்றின் மூலம்! தாமரைக்குளம், தாமரைத் தடாகம், அல்லி (ஊர்ப்பெயர்) இலஞ்சி (ஊர்ப்பெயர்) ஆக விளங்கவில்லையா? இலக்கிய வாணர்களைக் கொள்ளை கொள்ளவில்லையா? ஓவியர்களை வண்ணம் தீட்ட வைக்கவில்லையா? சிற்பிகளையும் விட்டுவைத்ததா? "சிற்றண்ணல் வாயில்' சான்று இல்லையா? நீரின் அளவு நிமிர்ந்தும், படிந்தும் நமக்குக் காட்சிதரும் அளவு, வாழ்வியல் அளவாம் உள்ளத்து அளவு காட்டுவது இல்லையா?

""வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு''

""நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தாம்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு''

என்பவை நினைவில் எழுமே! நீரில் பிறங்கிய மலர்தான் தாமரை. மருதநில வளமாம் அது, ""பூவெனப் படுவது பொறிவாழ் பூவே'' எனச் சிறப்புப் பெற்றாலும், மல்லிகை, முல்லை மணம் அதற்கு உண்டா? அல்லி, குவளை ஆயவற்றுக்கு உண்டா? இல்லை! நீர்ப்பூவாம் அவை, நிலப்பூ மணத்தை ஒட்டவில்லை! எட்டவும் இல்லை!

காய், கனி, பிஞ்சு, பிருக்கு எனவும் வித்து, கொட்டை எனவும் வளப்பயன் உண்டா? இல்லையே! ஏன்? மண்ணில் இருந்து கிளம்பும் மண்+அம்=மணம் அதற்கு இல்லாமை, இயற்கைப் படைப்பாளி வைத்த ஒழுங்கு முறை அல்லவா!

மழை பெய்கிறது; எங்கோ பெய்கிறது! மணம் இங்கே வந்துவிடுகிறது அல்லவா? விண்ணும் மண்ணும் கலந்த மணம்தானே அது! நீரில் மணமில்லை! மண்ணில் மணம் இருந்தது. இரண்டும் கலந்தன; மண்ணின் மணத்தை வெளிப்படுத்தியது. வளி உதவியது; நம் மூக்கின் மூன்றாம் அறிவுக்கு வேலை தந்துவிட்டது!

மண்ணில் வளரும் பூவின் நறுமணம், நீரில் கிளரும் பூவுக்குக் குன்றிய அளவு அமைந்ததும், நீரற்ற காலத்து நிலத்தாயின் வயிற்றில் கிடந்து, நீர்வரக் கிளர்ந்து, தன் பிறவி வனப்பையும் பொலிவையும் தேன் கொடையையும் இனப்பெருக்கப் பூம்பொடியையும் தந்து, பொருட்டு என்னும் அளவில் நின்றது. நிலத்தில் பிறந்த கொடியின் மணம், மண்ணில் பிறந்ததால் பெருகியது. மண்+மணம்=மணம் ஆய அரிய "பெயர் சூட்டு விழா'வைப் பெற்றது. - தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச் செல்வங்கள்: மண் Empty Re: தமிழ்ச் செல்வங்கள்: மண்

Post by myimamdeen Sun 2 Feb 2014 - 18:52

தமிழ்ச் செல்வங்கள்: மண் 103459460 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

தமிழ்ச் செல்வங்கள்: மண் Empty Re: தமிழ்ச் செல்வங்கள்: மண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum