Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்
4 posters
Page 1 of 1
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடலை வழங்குகிறார் நிதி ஆலோசகர் ஹரிணி.
பெரும்பாலும், 27 வயதிலிருந்து அதிகபட்சமாக 32 வயதிற்குள் திருமணம் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது. தங்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து திருமணத்தை முடிப்பதுபோல், வருங்காலத்திற்கும் சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்து சேமித்தால் உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாகும்.
பட்ஜெட் போடுங்கள்!
இதுவரை தனக்கும், தனது பெற்றோருக்குமான தேவையைப் பூர்த்தி செய்து வந்த வாழ்க்கை, இனி புதிய திசையை நோக்கி நகரும் காலகட்டமிது. சரியான திட்டமிடல் இருந்தால்தான் இந்த காலகட்டத்தில் வாழ்க்கை சுமூகமாகச் செல்லும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறவர்களாக இருந்தால், இருவரும் உட்கார்ந்து மாத வருமானம் எவ்வளவு? எவ்வளவு செலவாகும்? எதிர்காலத் தேவை என்ன? என்பதை எல்லாம் பேசி, குடும்பத்திற்கான திட்டத்தை தீட்ட வேண்டும்.
முதலில், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். புதுசாக கல்யாணம் ஆன சோக்கில் தாம்தூமென்று செலவு செய்யாமல், பட்ஜெட் போட்டு செலவு செய்தால்தான் வரவு என்ன, செலவு என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்கு இருந்தாலும், குடும்பச் செலவை சமாளிக்க ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் எடுத்துக் கொள்வது நல்லது. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை சரியான முறையில் கையாள வேண்டும். வெளிநாடு செல்ல கடன், புது மனைவிக்கு புது கார் வாங்க கடன் என இப்போதே இறங்கிவிட வேண்டாம்.
அவசரத் தேவைக்கு..!
இப்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிவது அதிகரித்து வருகிறது. கூடவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு தாவுவதும் வழக்கமாகி விட்டது. அதனால், திடீரென வேலையை விடும்படி வந்துவிட்டால் அடுத்த வேலை கிடைக்கும் வரையில் குடும்பத்தை நடத்த பணம் தேவைப்படும். தவிர, திடீர் செலவுகளையும் சமாளிக்க வேண்டியதிருக்கும். அதற்காக மாதத்தில் 15% வரை சேமிக்க வேண்டும். இதனை லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வந்தால், இதுபோன்ற அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ்!
தகுந்த ஆலோசனை இல்லாமல் யூலிப் போன்ற திட்டங்களில் பணத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் முதலீடும், காப்பீடும் தனித்தனி யாக இருக்க வேண்டுமே தவிர, இரண்டும் ஒரே திட்டத்தில் இருப்பது சரியாகாது. எனவே, யூலிப் போன்ற திட்டங்களில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை நம்பி பணத்தைப் போட வேண்டாம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும், எடுத்திருக்கா விட்டாலும் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். தவிர, உங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்கிற்கு கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு டேர்ம் பாலிசி எடுப்பது அவசியம். இது உங்களுக்குப் பிறகு குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்.
பங்கு முதலீடு!
பங்கில் முதலீடு செய்ய சரியான தருணம் இது. மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் எனில் 5,000 ரூபாய்க்கு பங்கில் முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யும் முதலீடு நீண்ட காலத்திற்கானது என்பதால் இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. போன்ற நல்ல பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம். இதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் மியூச்சுவல் ஃபண்டிலும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் கட்டி வரலாம்.
ரியல் எஸ்டேட்!
வீடு வாங்குவதில் அவசரம் காட்டத் தேவை யில்லை. திருமணம் முடிந்து இரண்டு, மூன்று வருடங்கள் டெப்ட் ஃபண்டில் சேமித்த பிறகு வீடு வாங்க அல்லது இடம் வாங்கி வீடு கட்டும் வேலையில் இறங்கலாம். கையில் ஓரளவுக்குப் பணமிருந்தால் வங்கிக் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புண்டு. இதற்காக முழுப் பணத்தையும் சேர்த்த பிறகே வீடு வாங்குவேன் என்று காத்திருக்கத் தேவையில்லை.
இந்த சமயத்தில் கொஞ்சம் முதலீட்டை தங்கத்தில் போட்டு வைப்பது நல்லது. நகையாகவோ காயினாகவோ வாங்காமல் கோல்டு இ.டி.எஃப். மற்றும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
குழந்தைகளுக்கான சேமிப்பு!
ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ முடிந்த வரை சீக்கிரமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக் காகவும் இப்போதிருந்தே சேமிக்க ஆரம்பியுங்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். கணவன் - மனைவி என இருவரும் முடிந்த தொகையை வருடத்திற்கு பி.பி.எஃப்.-பில் முதலீடு செய்யலாம்.
ஒய்வுகாலத் திட்டம்!
இளமைக் காலத்தில் சம்பாதித்த பணம் முதுமையிலும் கை கொடுக்க இப்போதிருந்தே திட்டமிடுவது அவசியம். 30 முதல் 58 வயது வரை சேமிக்கும் சேமிப்பு அதன்பிறகு வாழும் முதுமைக் காலம் முழுமைக்கும் உதவியாக இருக்கும். ஓய்வுகால சேமிப்பிற்குப் பங்கு முதலீடு மற்றும் டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 50,000 ரூபாய் வரை இந்த இரண்டிலும் முதலீடு செய்தால் முதுமைக் காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும்.
உங்கள் முதலீட்டை தபால் நிலைய ஆர்.டி., வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், தங்கம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யும்போது எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: விகடன்
Re: புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்
மிக, மிக அற்புதமான், அத்தியாவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்
-
தங்க நகை முதலீடு என்பது வேஸ்ட்டான சமாச்சாரம்..!
-
ஆசைக்கு தேவையான நகை வாங்கலாம், ஆனால்
சேமிப்பு நோக்கில் வாங்குவது அபத்தமானது..
-
நகையாக வாங்கும்போது 8 கிராம் நகைக்கு ஒரு கிராம்
சேதாரரம் என்ற கணக்கில் பில் போடுவார்கள்...
-
ஒரு கிராம் 2800 விலையில் வாங்கிய 8 கிராம் நகை
சேதாரம் சேர்த்து சுமார் ரூ 25,200 ஆகிறது...
-
இந்த தொகையை நீங்கள் வங்கியில் செலுத்தினால்
ஓராண்டுக்கு கூட்டுவட்டி மூலமாக சுமார் 2500 ரூபாய்
வட்டி கிடைக்கும்...
-
எனவே வாங்கிய நகை ஓராண்டில் கிராம் ஒன்றுக்கு
ரூ 250 வீதம் உயர்ந்தால்தான் உண்மையான லாபம்
என்பதாக அர்த்தம்..
-
மாற்றுக் கருத்துள்ளவர்கள் அவர்கள் கருத்தினை
தெரிவிக்கலாம்...
தங்க நகை முதலீடு என்பது வேஸ்ட்டான சமாச்சாரம்..!
-
ஆசைக்கு தேவையான நகை வாங்கலாம், ஆனால்
சேமிப்பு நோக்கில் வாங்குவது அபத்தமானது..
-
நகையாக வாங்கும்போது 8 கிராம் நகைக்கு ஒரு கிராம்
சேதாரரம் என்ற கணக்கில் பில் போடுவார்கள்...
-
ஒரு கிராம் 2800 விலையில் வாங்கிய 8 கிராம் நகை
சேதாரம் சேர்த்து சுமார் ரூ 25,200 ஆகிறது...
-
இந்த தொகையை நீங்கள் வங்கியில் செலுத்தினால்
ஓராண்டுக்கு கூட்டுவட்டி மூலமாக சுமார் 2500 ரூபாய்
வட்டி கிடைக்கும்...
-
எனவே வாங்கிய நகை ஓராண்டில் கிராம் ஒன்றுக்கு
ரூ 250 வீதம் உயர்ந்தால்தான் உண்மையான லாபம்
என்பதாக அர்த்தம்..
-
மாற்றுக் கருத்துள்ளவர்கள் அவர்கள் கருத்தினை
தெரிவிக்கலாம்...
Re: புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்
அருமையான பதிவு
, கண்டிப்பா திருமணம் ஆனவுடன் இதை கடைபிடிக்கணும்M.M.SENTHIL wrote:மிக, மிக அற்புதமான், அத்தியாவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
Re: புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்
ராஜா wrote:அருமையான பதிவு, கண்டிப்பா திருமணம் ஆனவுடன் இதை கடைபிடிக்கணும்M.M.SENTHIL wrote:மிக, மிக அற்புதமான், அத்தியாவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
நான் கடைபிடிக்கிறேன் தல, ஆனாலும் மாசம் இருபதாயிரம் ரூபா கடன் வாங்க வேண்டிய நிலை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» குடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே!
» நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா??
» புதிதாக திருமணமான ஜோரி - 'ஓவர் செல்லம்' உங்களுக்கு ஆகாது!
» புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்!
» பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
» நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா??
» புதிதாக திருமணமான ஜோரி - 'ஓவர் செல்லம்' உங்களுக்கு ஆகாது!
» புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்!
» பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|