ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

4 posters

Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue Jan 14, 2014 8:42 pm

ஓராயிரம் சென்ரியூ !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் .

இயற்கையைப் பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் பிரச்சனைகளைப் பாடுவது சென்ரியூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு இந்த நூல் சென்ரியூ எழுதி உள்ளார் .

ஹைக்கூ ,சென்ரியூ எப்படி அழைத்தாலும் உள்ளடக்கம் கருத்து மின்னல் இருந்தால் நன்று .படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வலைகளை, எண்ண அலைகளை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் .சில நேரங்களில் சில வழக்குகளின் தீர்ப்புகள் கடைசி நம்பிக்கையும் பொய்க்கும் விதமாக வந்து விடுகின்றன .அந்த ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ள சென்ரியூ.

அடித்து துவைத்தேன்
வெளுக்கவில்லை
நீதிதேவதையின் கண்கட்டி !

நாடறிந்த குற்றவாளி சாமியார் விடுதலையான நிகழ்வை நினைவூட்டிய சென்ரியூ.

பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க ?
நீதிமன்றங்கள் !

பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார் .வரதட்சணைக் கொடுமையைப் பற்றியும் எழுதி உள்ளார் . மணமகன் விலை நிர்ணயத்திற்குத்தான் பட்டப் படிப்புகள் பயன்படுகின்றன என்ற உண்மையையும் உணர்த்திடும் சென்ரியூ .

மருத்துவ படிப்பு
வரதட்சணை வேண்டாம்
மருத்துவமனை மட்டும் !

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதலுக்கும் பொய்யான கவிதை அழகு .என்று நினைத்து பொய்யாக கற்பனைக் கவிதை வடிக்கும் கவிஞர்கள் மிகுதி .அதனை உணர்த்திடும் சென்ரியூ .

காதல் கவிதைக்கு
அறிவே இல்லை
பொய் பேசுகின்றன !

பழமொழிகளை பொன்மொழிகளை ஒட்டியும் ,வெட்டியும் கவிதை படைப்பது ஒரு யுத்தி .அந்த யுத்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். பகுத்தறிவு சிந்தனையும் விதைத்து உள்ளார் .ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் .பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வரும் அவலம் உணர்த்துகின்றார்

கொடுத்து கொண்டேயிருக்கிறது
கூரையைப் பிய்த்து தெய்வம்
கூரை வீடானுக்குத் துன்பம் !

எள்ளல் சுவையுடன் உள்ள சென்ரியூ .நன்று

விலங்கு வதை கூடாது
கண்டு கொள்ளவில்லை
மயில் மேல் முருகன் !

படிக்கும் வரிகளை வாசகர் மனதில் காட்சிப் படுத்தி கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அந்த வகையில் வடித்துள்ள சென்ரியூ .

புயல் இல்லை
கப்பல்கள் தரை தட்டியது
காகிதக் கப்பல்கள் !

இயற்கையை பாடுவது ஹைக்கூ இந்த நூல் முழுவதும் சென்ரியூ என்று அறிவித்து ஓராயிரம் சென்ரியூ தலைப்பிட்டு உள்ளார் . அவர் அறியாமலே அவர் இலக்கணப்படி ஹைக்கூவும் உள்ளது .

போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம் !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நல்ல படிப்பாளி அவரிடம் ஒரு வேண்டுகோள் இனி வரும் படைப்பில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .ஆங்கிலச் சொல் கலந்துள்ள சென்ரியூகள் .

எதற்கு நாற்காலி ?
ஷ்டெச்சர்
வீல்சேர் போதும் !

வியர்வைக் கொட்டுகிறது
சாப்ட்வேர் என்ஜினியருக்கு
மின்சார துண்டிப்பு !

படித்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தவிப்பை உணர்த்தும் சென்ரியூ நன்று .

எந்த வேலைக்கு தயார்
மவுனம் சம்மதம்
முதுகலைப் பட்டதாரி !

வாக்களிக்க பணம் வாங்கும் அவலத்தை தொற்று நோயாய் பரவி விட்ட கேவலத்தை உணர்த்தும் சென்ரியூ நன்று .

உங்கள் ஓட்டு
எங்கள் ஓட்டு
ஐ நுறு ஆயிரத்திற்கே !


அங்கதச் சுவையுடன் அரசியல் குறித்த விமர்சனம் மிக நன்று .

வாலாட்டி சாப்பிட்டு
தெருவையே கடிக்கிறது
அரசியல் !

நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை விதைக்கும் தாராளம் ஏராளம் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு படைத்ததற்காகப் பாராட்டுக்கள் . இனி படைக்கப் போவதற்காக வாழ்த்துக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Tue Jan 14, 2014 9:58 pm

அருமையான விமரிசனம் இரா இரவி அவர்களே.
கவி அருவி சென்ரியுக்கள் , சிறுக கூறி , யோசிக்க வைக்கும் வரிகள்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Apr 10, 2014 9:59 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by valluvanraja Fri Apr 11, 2014 3:26 am


போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம்
வாழ்க தமிழ் இவர்கள் உன்னை விட்டுவைத்தால்


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Fri Apr 11, 2014 5:00 pm

valluvanraja wrote:[link="/t107506-topic#1057665"]
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம்
வாழ்க தமிழ் இவர்கள் உன்னை விட்டுவைத்தால்

தட்டச்சு செய்யும் போது sevvaanam தட்டச்சு செய்வதற்கு பதிலாக sevaanam என்று தட்டச்சு செய்ததால் வந்துள்ள பிழை. தவறிய V யை we மன்னிப்போம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by ஜாஹீதாபானு Fri Apr 11, 2014 6:22 pm

T.N.Balasubramanian wrote:[link="/t107506-topic#1057763"]
valluvanraja wrote:[link="/t107506-topic#1057665"]
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம்
வாழ்க தமிழ் இவர்கள் உன்னை விட்டுவைத்தால்

தட்டச்சு செய்யும் போது sevvaanam தட்டச்சு செய்வதற்கு பதிலாக sevaanam என்று தட்டச்சு செய்ததால் வந்துள்ள பிழை. தவறிய V யை we மன்னிப்போம்.

ரமணியன்

சூப்பர் பதில் ஐயா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓராயிரம் சென்ரியூ !  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !  நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பனித்துளியில் பனைமரம் ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
» மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum