ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!

Go down

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Empty இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!

Post by சாமி Sun Jan 12, 2014 1:05 pm

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! / கோ. சரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணி மேரி கல்லூரி, சென்னை / தினமணி

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவரும், தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவரும், முழுமைக்கும் உரை எழுதியவரும் இளம்பூரணரே! "உரையாசிரியர்' என்ற பொதுப்பெயரை சிறப்புப் பெயராகப் பெற்றவர். இத்தகு சிறப்பு வாய்ந்த இளம்பூரணரை ஒரு திறனாய்வாளர் என்று கூறுவது மிகவும் பொருந்தும்.

திறனாய்வாளருக்குரிய பண்புகள்
திறனாய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ""பொதுவாக அழகியல் உணர்வு, கலை இலக்கியத்தை இரசிக்கக்கூடிய, அனுபவிக்கக்கூடிய திறன் இவை திறனாய்வாளனுக்குரிய அடிப்படையான பண்புகள். இலக்கியத்தைப் பற்றியும் பரந்த உலகியல் வாழ்வு பற்றியும் பொதுவான அறிவும், அந்த - அல்லது இதனை ஒத்த பொருள்கள் பற்றிய ஆழமான அறிவும், சரியான புலனுட்பமும், எதிர்கொள்பவற்றில் குறிப்பிடத்தக்கவை கண்டால் அவற்றை பளிச்செனப் பற்றிக்கொள்ளும் துடிப்பான ஆற்றலும், எதிர்வினை நிகழ்வதில் வேகமும், உள்ளார்ந்த அறிவின் கூர்மையும், எதனையும் வகுத்தும் தொகுத்தும் பொதுமைப்படுத்தியும் வேறுபடுத்தியும் பார்க்கின்ற பக்குவமும் திறனாய்வாளனுக்கு வேண்டப்படுகிற பண்புகள்'' எனத் "திறனாய்வுக்கலை' என்ற தம் நூலில் தி.சு. நடராசன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பண்புகள் இளம்பூரணர் உரையில் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

சொற்பொருளறிவு
தொல்காப்பிய நூற்பாக்களில் உள்ள புரியாத, கடுமையான சொற்களுக்கு இளம்பூரணர் தமது உரையில், "குயின் என்பது மேகம்', "அழனென்பது பிணம்', "காரகமென்பது கரடி', உரன் என்பது அறிவு', "எழில் என்பது அழகு', "வியப்பென்பது தம்மைப் பெரியராக நினைத்தல்', "அலராவது சொல்லுதல்' "மூங்கா என்பது கீரி', "நவ்வி என்பது புள்ளிமான்' எனப் பல அருஞ்சொற்களுக்குத் தேவையான இடங்களில் பொருள் கூறி விளக்கிச் செல்வதிலிருந்து அவருடைய சொற்பொருளறிவு வெளிப்படுகிறது.

கணக்கியலறிவு
கணித அறிவில் சிறந்த கணக்காயனார், கணிமேதாவியார் முதலிய புலவர் பலர் வாழ்ந்த இலக்கிய உலகில் இளம்பூரணரும் தமது உரையில் கணக்கியல் அறிவினைப் பதிவு செய்யுள்ளார். இதனை, மாத்திரைக்கு இலக்கணம் கூறும்போது (எழுத்து-7) நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைப் பற்றிக் கூறுவதிலிருந்தும் (எழுத்து-437), எண்ணுப் பெயரொடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணரும் புணர்ச்சி பற்றிக் கூறும்போது கழஞ்சு, தொடி, பலம் போன்ற நிறைப்பெயரையும் கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு போன்ற அளவுப் பெயர் களையும் குறிப்பிடுவதிலிருந்து அவரது கணக்கியலறிவு புலப்படுகிறது.

வானியலறிவு
மழை, வெப்பம், காற்றழுத்தத்தாழ்வு, புயல் போன்றவற்றைப் பற்றி இன்று வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து கணித்துக் கூறுகின்றனர். ஆனால், இளம்பூரணர் அன்றே தம் உரையில் கோள்நிலை, மழைநிலை பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார். இதனை, புறத்திணையியலில் வாகைத்திணை பற்றிய நூற்பாவில் "மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்' (பொருள்-74) என்பதற்கு, அறிவன் என்றால் "கணியன்' என்றும், மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதல்' என்பதற்குப் பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன் வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்' என்று இளம்பூரணர் கூறும் உரை விளக்கத்திலிருந்து அவரது வானியல் அறிவையும் அறிந்துகொள்ள முடிகிறது.

அறிவியலறிவு
"பரத்தையின் பால் பிரிந்த தலைவன், தலைவிக்குப் பூப்பு நேரும் காலத்தை அறிந்தவுடனே தன் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்(பொருள்-185). பூத்தோன்றி மூன்று நாள் கழித்துப் பின்பு பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியைவிட்டுப் பிரியாமல் உறைதல் வேண்டும். ஏனெனில், அது கருத்தோன்றும் காலம்' என்கிறார்.

கலையுணர்வு
கலைகளிலும் இளம்பூரணருக்கு ஈடுபாடு உண்டு என்பதை, அகத்திணையியலில் பிரிவின்கண் தலைமகனுக்குக் கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில் (பொருள்-44) "வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு' என்பதற்கு, "வாயான் வகுத்தப் பக்கமாவது ஓதுதல், கையான் வகுத்தப் பக்கமாவது படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும்' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது கலையுணர்வை அறிய முடிகிறது.

மேற்கண்டவற்றிலிருந்து இளம்பூரணரின் பல்துறை சார்ந்த அறிவும், உலகியல் அறிவும் தெளிவாகப் புலப்படுகிறது. இதன் வழி "இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே' என்ற முடிவுக்கு நாம் வரலாம்.


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum