ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளில் "கற்றல்' சிந்தனைகள்!

Go down

திருக்குறளில் "கற்றல்' சிந்தனைகள்! Empty திருக்குறளில் "கற்றல்' சிந்தனைகள்!

Post by சாமி Wed Jan 01, 2014 9:39 pm

'கற்றல்' என்பது கல்விக் கொள்கையின்படி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வாகும். இக்கல்வியை ஒருவன் இறக்கும் வரை தொடர்ந்து கற்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

"யாதானும் நாடாமால் ஊராமால் என்றொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு'' (397)

என்று சிந்தித்துள்ளார். மேலும், கற்றல் என்பதை, "அறியாமை' உள்ளது என்பதை "அறியும்' நிகழ்வாகும் என்கிறார். இதை, சிற்றின்ப நோக்கில் வைத்து, தலைவன்-தலைவியின் இடை வினை இன்ப நிகழ்வின் மூலம் காமத்துப்பாலில்,

"அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு'' (1110)

என்பதன் மூலம் தலைவியிடம் இன்பம் நுகரும் தலைவனுக்கு ஒவ்வொரு கணமும் அனுபவிக்கப்படும் சிற்றின்பமானது எவ்வாறு உள்ளது எனின், ஏற்கெனவே, அதாவது, ஒரு கண நேரத்திற்கு முன்பு அனுபவித்த இன்பம் பொய்த்துவிட்டது. காரணம், அதனைக் காட்டிலும் நிகழ்காலத்தில் அனுபவிக்கப்படும் இன்பமானது புதுமை பயப்பதாக உள்ளது என்னும் கருத்தை கற்றலோடு வைத்து சிந்தித்துள்ளார் வள்ளுவர்.

இக்குறட்பாவில், "அறிதோறும் அறியாமை' என்னும் சொற்றொடரை கல்வியியல் கொள்கையாக்கி, தமிழ்ச் செய்யுள் இலக்கண வழக்கின்படி, "உவமை' ஆக்கியுள்ளார். ""உவமை என்பது உள்ளுங்காலை உயர்ந்ததன் மேற்றே'' என்பதற்கொப்ப கையாண்டுள்ளார். அதாவது, மேற்சுட்டிய குறட்பாவில் இடம்பெறும் குறளுக்கு தலைவன், தலைவியின் சிற்றின்ப அனுபவத்தை உவமேயமாகவும், கல்விக் கொள்கையை உவமையாகவும் சித்திரித்துள்ளார்.

திருக்குறளில் "கற்றல்' என்பது செவிச்செல்வத்தால் "கேட்டல்' என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. இதை,

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி'' (356)


எனும் குறளில், "கற்றீண்டு' என்ற சொல்லுக்கு, "தேசிகர்பால் கேட்டல்' என்ற உரையினை வகுத்துச் செல்கிறார் உரையாசிரியர் பரிமேலழகர்.

கற்பதில் தெளிவு
ஒருவர் கற்பதை தெளிவாகக் கற்க வேண்டும். தெளிவு என்பது தாம் கற்றவற்றை கற்றவாறே பிறருக்குப் புலப்படுத்தவும் வேண்டும். கற்பதோடு அல்லாமல் கற்றபடி நிற்க வேண்டும் என்ற உண்மையை 391-ஆவது குறளில் கூறியுள்ளார். மேலும், "கற்பவை' என்ற சீர் மூலம் காலத்திற்கேற்றாற் போல கல்வி நிலையில் மாறும் எனும் கருத்தினை கற்பவை என்பதன் மூலம் விளக்குகிறார். இது, தற்போது கல்வியாளர்களால் கூறப்படும் "மாற்றம் என்பது மாறாதது' எனும் கல்விக் கொள்கைக்கு அரண் சேர்ப்பதாக உள்ளது.

மேலும், தாம் கற்றவற்றை பிறருக்கு விளங்கும் வண்ணம் எடுத்துச்சொல்லவும் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், கற்றவற்றால் யாதொரு பயனும் இல்லை. இதை, ஓர் அழகிய உவமையின் மூலம் வள்ளுவர் கையாளுகிறார். அதாவது, "மலர்' என்றால் "வாசம்' வீசவேண்டும். அவ்வாறு வாசம் வீசாத மலர் கொத்துக் கொத்தாக மலர்வதால் என்ன பயன்? என்பதை,

"இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்'' (650)


என்பதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். ஐம்புலப் பயிற்சி மூலம் கல்வி நடைபெற வேண்டும் என்று புரொபல் முதலிய கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்த புலப்பயிற்சிக் கல்வி மூலம் கற்றல் சிறப்பாக நடைபெறும் என்பது ஆங்கில வழி (அ) மேலை நாட்டுக் கல்வியாளர்களின் கொள்கை. இக்கொள்கையை, திருவள்ளுவர் முன்பே, காமத்துப்பாலில் வைத்து சிந்தித்துள்ளார்.

கற்றல் என்பது, தாம் கற்றவற்றை, கற்றவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் புலப்படுத்த வேண்டும் என்பதை, 722-ஆவது குறள் வாயிலாக "கற்றல்' எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

""கல்வி அறிவு பெற்ற ஒரு மனிதனின் சிறப்பான பண்பு, அவன் எப்பொழுதும் பொது நன்மை குறித்துக் கருதலேயாகும்'' என்று (நூல்: கல்வியின் கருத்தியல் அடிப்படைகள், பக்.42) குறிப்பிடப்படுகிறது. இக்கருத்தினை வள்ளுவர் "கல்வி' அதிகாரத்தில், குறள் 399-இல் சிந்தித்துள்ளார். இதன் மூலம் கற்றல் கொள்கையுடன் அதன் பயனையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

கற்றல் என்பது கேட்டல் மூலமாகவும் நடைபெறும். அதாவது, கேள்விச் செல்வத்தின் மூலம் திருவள்ளுவர் பல கற்றல் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
- சீனி. நந்தகுமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். / நன்றி-தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum