ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

3 posters

Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by சிவா Sat Dec 28, 2013 5:43 pm

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! 1524811_603266146413153_1658720133_n

புதுக்கோட்டை: சுடுகாட்டில் தான் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வருவேன் என அமைச்சரும், பழைய பேருந்து நிலையத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என பொதுமக்களும் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுக்கோட்டைக்கு வந்த ஜெயலலிதா கந்தர்வக்கோட்டையில் தான் தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை துவக்கி வைத்தார். அப்போதே நான் ஆட்சிக்கு வந்தால் இங்கு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருவேன் என வாக்குறுதியும் தந்து விட்டுப்போனார்.

இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுப்ரமணியன் ஆதி திராவிட நலத்துறை அமைச்சரானார். கடந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக இரண்டு கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர். அதிலிருந்தே பிரச்னையும் தொடங்கி விட்டது.

நம்மிடம் பேசிய அங்கமுத்து என்பவர், ''கந்தர்வக்கோட்டையில முதல்வர் பஸ் ஸ்டாண்ட் கட்டனும்னு நிதி ஒதுக்கி இருக்காங்க. ஆனா இப்ப இருக்குற இடத்தில அதை கட்டாததோட கந்தர்வக்கோட்டை பஞ்சாயத்தை தாண்டி அக்கச்சிப்பட்டி பஞ்சாயத்துல கட்டப்போறதா சொல்றாரு அமைச்சர். இப்ப அமைச்சர் சொல்ற இடம் மழைக்காலங்கள்ல வெள்ளம் தேங்கி நிக்கிற இடம்.

கீரனூர் தொடங்கி கந்தர்வக்கோட்டை வரைக்கும் உள்ள ஊர்ல வெள்ளம் போனா இப்ப பஸ் ஸ்டாண்ட் கட்டப்போற இடத்துக்கு பக்கத்துல ஓடுற காட்டாத்துல தான் ஓடும். இந்த பகுதியை ஒட்டி குடியிருக்குறவங்கள்லாம் வெள்ள காலங்கள்ல வெளில போயிருவாங்க. அது மட்டுமில்லாம இவங்க பார்த்துருக்குற இடத்துக்கு பக்கத்துல செட்டியூரணின்னு ஒரு குளம் இருக்கு. அந்த குளத்துல தான் இந்த பகுதி மக்கள்லாம் குளிப்பாங்க. இங்க பஸ் ஸ்டாண்ட் வந்தா அதுவும் பிரச்னையாகிடும்'' என்றார்.

தொடர்ந்த மதன் கிருஷ்ணமூர்த்தி என்பவர், ''இப்ப பார்த்திருக்கிற இடம் ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம். ஏற்கனவே இன்னுமொரு இடத்தை அமைச்சரே பார்த்தாரு. அந்த இடம் அரசு பொறம்போக்கு இடம் தான். ஆனாலும் ஏனோ இந்த இடத்துல தான் பேருந்து நிலையத்தை கட்டுவோம்னு அமைச்சர் பிடிவாதமா இருக்காரு. அந்த இடத்துக்கு பக்கத்துல அனைத்து ஜாதியினருக்குமான ஐந்து சுடுகாடுகள் இருக்கு. அதோட அந்த பகுதியில தான் மாட்டுக்கறி விக்கிறாங்க. மார்க்கெட் கழிவெல்லாம் கொண்டு வந்து கொட்டுறாங்க.

இப்ப தஞ்சாவூர்ல இருந்து மதுரை, காரைக்குடின்னு நெடுந்தூரம் போற பேருந்துகள் பஸ் ஸ்டாண்ட்ல மட்டும் தான் நிப்பாட்டுவாங்க. இப்ப ஊரைவிட்டு ஒரு கிலோமீட்டர் தூரத்துல பஸ் ஸ்டாண்ட்டை கட்டினாங்கன்னா மறுபடி ஊருக்குள்ள வர வேறு வாகனத்தை தேடனும். அதனால இப்ப பஸ் ஸ்டாண்ட் இருக்குற இடத்துக்கு பக்கத்துல அம்மாகுட்டைனு ஒரு குளம் இருக்கு. இந்த குளத்தை யாரும் பயன்படுத்தாததால மலம் ஜலம் கழிச்சி அசிங்கப்படுத்தி சாக்கடையாக்கிட்டாங்க. அதனால அந்த குளத்தை தூர்த்து புதிய பேருந்து நிலையத்தை அங்க கட்டுங்கன்னு பலர் அமைச்சர் கிட்ட சொன்னாங்க.

ஆனால் அது நீர் நிலை பொறம்போக்கு அந்த இடத்துல கட்டிடம் கட்ட முடியாதுன்னு அமைச்சர் மறுத்துட்டார். இந்த குட்டை இருக்குற இடத்தை வகைமாற்றம் செய்யலாம்னும் சொல்றாங்க. அப்படி செஞ்சி இங்கேயே கட்டினாங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்'' என்றார்.

அடுத்து பேசிய புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர், ''இப்ப பேருந்து நிலையம் கட்ட பார்த்திருக்கிற இடம் ஒரு காலத்துல இந்த பகுதி தி.மு.க. சேர்மனா இருந்த அடைக்கலம் செட்டியாருடைய நிலம். அந்த இடத்துக்கு பக்கத்துல சுடுகாடுகள் இருந்ததால அந்த இடத்தை விற்க முடியல. அதை பயன்படுத்தி தஞ்சாவூரை சேர்ந்த பரசுராமன் என்பவர் இந்த இடம் பதினைந்து ஏக்கரையும் குறைந்த விலைக்கு வாங்கிட்டார். இப்ப புதிய பேருந்து நிலையம் கட்டப்போறாங்கன்னு சொன்ன உடனே அமைச்சரை ரகசியமா சந்திச்சி பேசியிருக்காரு.

அவர் குடுத்த ஐடியாபடி அந்த பதினைந்து ஏக்கர் நிலத்துல நாலு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்துக்கு இலவசமா எழுதி குடுத்துருக்கார் பரசுராமன். அந்த பத்திரத்துல நான் கொடுக்கும் இடத்தில் பேருந்து நிலையம் தான் கட்டனும்னு எழுதியிருக்கு. முதல்வர் கந்தர்வக்கோட்டையில தான் பேருந்து நிலையம் கட்டித்தர்றதா சொன்னாங்க. அதுக்கு தான் நிதியும் ஒதுக்கி இருக்காங்க.

ஆனா அமைச்சரோட சுயலாபத்துக்காக அக்கச்சிப்பட்டிங்கிற பஞ்சாயத்துல பேருந்து நிலையத்தை கட்ட முயற்சி செய்றாரு. அமைச்சர்கிட்ட கேட்டா இந்த ஊருல பொறம்போக்கு இடம் இல்லன்னு சொல்றாரு. ஆனா கந்தர்வக்கோட்டையில 49/9, 307/1, 206 ஆகிய சர்வே நம்பர்கள்ல பொறம்போக்கு இடம் இருக்கு. மக்களுக்காக தான் திட்டம் என்கிறத அமைச்சர் மறந்து செயல்படுறார்'' என்றார்.

இவர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் சுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அந்த ஊருல வேற இடமே இல்லை. அந்த இடம் கூட நாங்களாக எழுதி கேட்டு வாங்கி இருக்கிறோம். அவர்கள் கூறுவது போல் அந்த இடத்தில் சுடுகாடே இல்லை என்றவரிடம், பரசுராமனின் இட மதிப்பை கூட்டும் உள்நோக்கத்தோடுதான் அரசுக்கு இலவசமாக எழுதி கொடுத்திருப்பதாக சொல்கிறார்களே என்றோம்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அவரோட இடத்தை அவர் எவ்வளவுக்கு வேண்ணாலும் விக்கட்டும். அதைப்பத்தி பிரச்னை இல்லை. நீர் நிலை பொறம்போக்குல கட்ட முடியாது. வேற இடமும் இல்லை. அதனால்தான் அந்த இடத்தை தேர்வு செய்து இருக்கிறோம்'' என்றார்.

வீ.மாணிக்கவாசகம் @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty Re: சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by T.N.Balasubramanian Sun Dec 29, 2013 4:25 pm

பேருந்திற்கும் சுடுகாட்டிக்கும் எப்போதும் சம்பந்தம் உண்டு என்று கூறாமல் கூறுகிறாரோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty Re: சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by Muthumohamed Sun Dec 29, 2013 4:31 pm

அமைச்சருக்கு எதுக்கு இந்த வீண் வாசி



சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Mசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Uசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Tசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Hசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Uசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Mசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Oசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Hசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Aசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Mசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Eசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty Re: சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» ஹைடெக் மாற்றத்துக்காக மூடப்படவிருக்கிறது மதுரை பெரியார் பேருந்து நிலையம்!
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
» வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum