Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
2 posters
Page 1 of 1
மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
![மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் 9xpJCgHlTpuG2RedCsWw+70e86343-0213-4bc7-b27c-beecdeec92ad_S_secvpf.gif](https://www.filepicker.io/api/file/9xpJCgHlTpuG2RedCsWw+70e86343-0213-4bc7-b27c-beecdeec92ad_S_secvpf.gif.jpg)
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் எது என்றால் சுவாமிமலை என்று சட்டென்று பதில் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவன் உபதேசித்த திருத்தலம் எது என்றால், பலரும் திசை தெரியாதவர் போல் முழிக்கத்தான் செய்வார்கள்.
அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் கோவை மாட்டம் செஞ்சேரிமலையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவன் உபதேசித்த திருத்தலம் இது என்பதால் மிகவும் பழமையான திருத்தலம் என்றால் மிகையாகாது.
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானை தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.
ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கூறினார் பார்வதிதேவி.
''சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து, 'குமரா..! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.
நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவனின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப்பெருமான் பூலோகம் வந்தார்.
அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க.. 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
Re: மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
''செஞ்சேரி மலையின் உச்சியில் மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் கொண்டுள்ளார். மலைக்கு செல்லும் முன்பாக அடிவாரத்தில் வலதுபுறம் வினை தீர்க்கும் விநாயகரும், இடது புறம் ஞானதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர்.
அவர்களை தரிசித்து விட்டு மலையேறிச் செல்லும் வழியில் குழந்தை குமரர், இடும்பன், கன்னிமார் தெய்வங்களை தரிசனம் செய்யலாம். மலை உச்சியில் வீற்றிருக்கும் இறைவனைக் காண 285 படிகள் ஏறி செல்ல வேண்டும். கோவில் மேற்புறத்தில் நின்று பார்த்தால் சுற்றிலும் இயற்கை அன்னையின் அழகிய காட்சியை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.
கோவில் முன்பு நுழைந்தவுடன் கொடிமரத்தை தரிசித்து விட்டு முன்மண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால், மகா மண்டபத்திற்குள் மந்திரசித்தி விநாயகர், பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் ஆகியோர் கற்கோவிலில் அர்த்தமண்டபம், கருவறையுடன் காட்சி தருகின்றனர்.
மந்திரகிரி வேலாயுதசாமி அதைத் தொடர்ந்து சிவபெருமான் தனிச்சன்னிதியில் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதற்கு இடதுபுறம் மந்திரகிரி வேலாயுத சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார்.
பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும்.
ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
Re: மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
அது வலம் வருவது போல் காணப்படுவது தனிச்சிறப்பு. வள்ளியும், தெய்வானையும் தங்களது வலது கரத்தில் பத்மம் ஏந்தி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். நவக்கிரக சிறப்பு வேலாயுத சுவாமி சன்னிதி அருகில், சிவகாமி அம்மனுடன் வீற்றிருக்கும் நடராஜரை வழிபடலாம்.
வெளிப் பிரகாரத்தின் வடமேற்கில் மகாவிஷ்ணு சன்னிதி உள்ளது. அவர் தனது கையில் லிங்கத்தை ஏந்தி காட்சி தருகிறார். நவக்கிரக நாயகர்கள், பைரவ மூர்த்தியையும் தரிசனம் செய்யலாம். இந்த திருத்தலத்தில் உள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனை பார்த்தவாறு அமைந்துள்ளது. சூரியன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் இங்கு வந்து ஞானதீர்த்தத்தில் நீராடி சுவாமியை வழிபட்டு சென்றால் குணம் அடையும் என்பது ஐதீகம். அர்த்தஜாம பூஜையில் சுவாமிக்கு வைத்த நைவேத்திய பிரசாதத்தை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். விநாயகர், முருகப்பெருமான் ஆகியோர் திருத்தேர்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்கள். பவுர்ணமி, கந்தசஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், தமிழ் வருடப்பிறப்பு, ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கோவிலை சுற்றி வர கிரிவலபாதை இருப்பதால் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலமும் வருகிறார்கள். கோவையில் இருந்து செஞ்சேரிமலைக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. பொள்ளாச்சி- பல்லடம் சாலையில் செஞ்சேரிபுதூர் பிரிவு என்ற இடத்தில் இறங்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் செஞ்சேரிமலையை அடையலாம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்ரீ சுவாமி நாராயணன் அக்ஷார்தம் கோவில்
» மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
» பூட்டுப் பிரச்சனை: பத்மநாப சுவாமி கோவில் 6- வது பாதாள அறை திறப்பு ஒத்திவைப்பு
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
» மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
» பூட்டுப் பிரச்சனை: பத்மநாப சுவாமி கோவில் 6- வது பாதாள அறை திறப்பு ஒத்திவைப்பு
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|