ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

4 posters

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:01 pm



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:02 pm



ஒன்று சேர்தல்


கூட்டம் கூட்ட மாகவே
குருவி பறந்து சென்றிடும்.

குவியல் குவிய லாகவே
கொட்டிக் கற்கள் கிடந்திடும்.

கூறு கூறாய்ச் சந்தையில்
கொய்யாப் பழங்கள் விற்றிடும்.

குலைகு லையாய்த் திராட்சைகள்
கொடியில் அழகாய்த் தொங்கிடும்.

வரிசை வரிசை யாகவே
வாழை தோப்பில் நின்றிடும்.

மந்தை மந்தை யாகவே
மாடு கூடி மேய்ந்திடும்.

சாரை சாரை யாகவே
தரையில் எறும்பு ஊர்ந்திடும்.

நேரில் தினமும் பார்க்கிறோம்
நீயும் நானும் தம்பியே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:02 pm

பார் பார் !

தரையின் மேலே
தொட்டி பார்

தொட்டி மேலே
செடியைப் பார்

செடியின் மேலே
பூவைப் பார்

பூவின் மேலே
வண்டைப் பார்

வண்டின் மேலே
பளபளக்கும்

வர்ணம் உண்டு;
அதையும் பார் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:03 pm

அருமை நேரு

அருமை நேரு பிறந்தது

அலகா பாத்து நகரிலே
இளைஞர் நேரு படித்தது

இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது

தில்லி நகரம் தன்னிலே.
இன்று நேரு வாழ்வது

எங்கள்
பிஞ்சு
நெஞ்சிலே !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:14 pm

அ, ஆ

அ, ஆ என்றேனே.
அத்தை வீடு சென்றேனே.

இ, ஈ என்றேனே.
இட்டலி எட்டுத் தின்றேனே.

உ, ஊ என்றேனே.
உடனே காபி குடித்தேனே.

எ, ஏ என்றேனே.
ஏப்பம் நன்றாய் விட்டேனே.

ஐ என்று சொன்னேனே.
அங்கே நீட்டிப் படுத்தேனே.

ஒ, ஓ என்றேனே.
ஒருமணி சென்று எழுந்தேனே.

ஒள என்று சொன்னேனே.
ஆடிப் பாடிக் குதித்தேனே.

ஃ என்று சொன்னேனே.
அக்கக் காவெனச் சிரித்தேனே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:15 pm

பத்துப் பைசா பலூன்


பத்துப் பைசா விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்.
பலூன் ஒன்று வாங்கினேன்.
பையப் பைய ஊதினேன்.

பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது.
பந்து போல ஆனபின்
பலமாய் நானும் ஊதினேன்.

பலமாய் ஊத ஊதவே
பானை போல ஆனது.
பானை போல ஆனதைக்
காண ஓடி வாருங்கள் !

விரைவில் வந்தால்
பார்க்கலாம்.
அல்லது,

வெடிக்கும் சத்தம்
கேட்கலாம் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:15 pm

எங்கே செல்லலாம்?


சைக்கிள் ஏறிக் கொள்ளலாம்;
சைதாப் பேட்டை செல்லலாம்.

காரில் ஏறிக் கொள்ளலாம்;
காரைக் குடிக்குப் போகலாம்.

ரயிலில் ஏறிக் கொள்ளலாம்;
ராமேஸ் வரம் செல்லலாம்.

கப்பல் ஏறிக் கொள்ளலாம்;
கல்கத் தாவை அடையலாம்.


பறவைக் கப்பல் ஏறலாம்;
பாரிஸ் நகரம் போகலாம்.

மனோ ரதத்தில் ஏறலாம்;
வைய மெல்லாம் சுற்றலாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by M.M.SENTHIL Thu Dec 19, 2013 5:17 pm

குழந்தை கவிஞர் என்று அவரை அழைப்பதில் தவறில்லை. அனைத்தும் மிக அருமை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:23 pm

வாழைப் பழம்

வாழைப் பழத்தில் பல உண்டு
வகைவகை யான பெயர் உண்டு.

பூவன், மொந்தன், ரஸ்தாளி,
பேயன், நேந்திரம், மலைவாழை

என்றே வகைகள் பலஉண்டாம்.
எல்லாம் எனக்குப் பிடித்தவையே.

தினமும் மிகவும் நான்விரும்பித்
தின்பது வாழைப் பழமேதான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:24 pm

என்ன கொண்டு வந்தேன் ?

பழநி மலைக்குச் சென்று வந்தேன்;
பஞ்சா மிர்தம் கொண்டு வந்தேன்.

காசி நகரம் சென்று வந்தேன்;
கங்கை நீரைக் கொண்டு வந்தேன்.

திருப்ப திக்குச் சென்று வந்தேன்;
தித்திப்பு லட்டுக் கொண்டு வந்தேன்.

இராமேஸ் வரம் சென்று வந்தேன்;
என்ன நானும் கொண்டு வந்தேன் ?

ஊ...ஊ...ஊ
ஊ...ஊ...ஊ...
ஊது கின்ற சங்கில்
ஒன்று வாங்கி வந்தேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Back to top

- Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum