Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 25, 2024 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
3 posters
Page 1 of 1
திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
முழுமுதற் கடவுளான விநாயகரை ஆலயங்களில் யானை முகத்தோனாகவே தரிசிக்கிறோம். சற்று வித்தியாசமான வடிவில் நரமுக விநாயகராக திலதர்ப்பணப்புரியிலும், முகமில்லா விநாயகராக சித்தமல்லியிலும் தரிசிக்கலாம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்- திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார்.
யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது.
முதன்முதலில் உருவானவர் என்பதால் இவ்விநாயகர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலம் பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. திலம்- எள்; தர்ப்பணம்- இறந்தவர்களுக்குச் செய்யப்படும் பித்ருக் கடன்; புரி- தலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யச் சிறந்த இடம் என்பதால் இத்தலம் திலதர்ப்பணப்புரி என்று அழைக்கப்படுகிறது.
ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.
இவ்வாலயத்து ஈசன் முக்தீஸ்வரர்; இறைவி சொர்ணவல்லித் தாயார்.
ஸ்ரீராமர் தன் தந்தை தசரதருக்கும், தந்தைக்கு நிகராகத் தான் கருதிய ஜடாயுவுக்கும் இத்தலத்தில்தான் பிண்டம் இட்டார். தசரதர் அதை நேரில் பெற்றுக்கொண்டார் என்பதும், ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறி ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்தன என்பதும் வரலாறு. ஆலயத்தில் பிதுர் லிங்கங்களுக்கு நேராக, ஸ்ரீராமர் வலது காலை மண்டியிட்டு தர்ப்பணம் செய்யும் நிலையில் உள்ள சிலை ஒன்று உள்ளது.
இவ்வாலயத்தைப் பற்றி சிறப்பான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.
கோதாவரி நதிக்கரையில் உள்ள போகவதி நாட்டை நற்சோதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒருசமயம் நாரத முனிவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். மன்னன் நாரதரிடம், ""இப்பூவுலகில் எந்தத் தலம் மிகவும் சிறந்த புண்ணியம் வாய்ந்த தலம்?'' என்று கேட்டான்.
மன்னனே கண்டறிந்து கொள்ளட்டும் என்பதற்காக தலத்தின் பெயரைச் சொல்லாமல் நாரதர், ""எந்தத் தலத்தில் பித்ருக்கள் பிண்ட தானத்தை நேரில் தோன்றி பெற்றுக் கொள்கிறார்களோ அதுவே உத்தம புண்ணியத்தலம்'' என்று கூறினார். பின்னர் நாரதர் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்.
நாரதர் கூறியபடி நற் சோதி மன்னன் இந்திய நாட்டிலுள்ள பல தலங்களுக்கும் சென்று திலதர்ப்பணமும், பிண்ட தானமும் செய்துகொண்டு வந்தான். எந்த இடத்திலும் பித்ருக்கள் நேரில் வராத தால் மனம் வருந்திய மன்னன் தன் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்தான். அப்போது மன்னன் எதிரில் நாரதர் தோன்றி, ""நான் கூறிய புண்ணிய தலத்திற்கு அருகில் வந்துவிட்டாய்.
சில காத தூரத்திற்கு அப்பால் "திலதைப்பதி' என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று அரிசிலாற்றில் நீராடி, உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும் பிண்ட தானமும் செய்.
அவர்கள் உன் எதிரில் தோன்றி அவற்றை வாங்கி உண்பார்கள்'' என்று கூறினார்.
மன்னன் திலதைப்பதி சென்றான். அங்கு தவம் செய்துகொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசிபெற்றான். ஆலயத்திற்குச் சென்று இறைவன்- இறைவியை வணங்கினான்.
அமாவாசையன்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பித்தான். பித்ருக்கள் அவன்முன் தோன்றி, படைக்கப்பட்ட பிண்டத்தை ஏற்று உண்டு மகிழ்ந்து மன்னனுக்கு நல்லாசி வழங்கி மறைந்தனர். மன்னன் மனம் மகிழ்ந்தான்.
திலதர்ப்பணப்புரி தலத்திற்கு வந்து பித்ருசாபம், பித்ருதோஷம் போன்றவை நீங்க தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும், இத்தலத்தில் எப்போது வேண்டுமானாலும் பித்ருக்கடன் ஆற்றலாம்.
பார்வதிதேவி உருவாக்கிய திருமேனியின் தலையை சிவபெருமான் வெட்டியபிறகு உள்ள வடிவில் சித்தமல்லி என்ற தலத்தில் தலையில்லாத விநாயகராக அருள்பாலிக்கிறார்.
யானை முகத்தோனாகிய விநாயகரை மனித முகத்துடன்கூடிய வடிவில் திலதர்ப்பணப்புரி யிலும், தலை வெட்டப்பட்ட நிலையில் உள்ள வடிவில் சித்தமல்லியிலும் வழிபடலாம்.
-நன்றி நக்கீரன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்- திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார்.
யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது.
முதன்முதலில் உருவானவர் என்பதால் இவ்விநாயகர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலம் பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. திலம்- எள்; தர்ப்பணம்- இறந்தவர்களுக்குச் செய்யப்படும் பித்ருக் கடன்; புரி- தலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யச் சிறந்த இடம் என்பதால் இத்தலம் திலதர்ப்பணப்புரி என்று அழைக்கப்படுகிறது.
ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.
இவ்வாலயத்து ஈசன் முக்தீஸ்வரர்; இறைவி சொர்ணவல்லித் தாயார்.
ஸ்ரீராமர் தன் தந்தை தசரதருக்கும், தந்தைக்கு நிகராகத் தான் கருதிய ஜடாயுவுக்கும் இத்தலத்தில்தான் பிண்டம் இட்டார். தசரதர் அதை நேரில் பெற்றுக்கொண்டார் என்பதும், ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறி ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்தன என்பதும் வரலாறு. ஆலயத்தில் பிதுர் லிங்கங்களுக்கு நேராக, ஸ்ரீராமர் வலது காலை மண்டியிட்டு தர்ப்பணம் செய்யும் நிலையில் உள்ள சிலை ஒன்று உள்ளது.
இவ்வாலயத்தைப் பற்றி சிறப்பான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.
கோதாவரி நதிக்கரையில் உள்ள போகவதி நாட்டை நற்சோதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒருசமயம் நாரத முனிவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். மன்னன் நாரதரிடம், ""இப்பூவுலகில் எந்தத் தலம் மிகவும் சிறந்த புண்ணியம் வாய்ந்த தலம்?'' என்று கேட்டான்.
மன்னனே கண்டறிந்து கொள்ளட்டும் என்பதற்காக தலத்தின் பெயரைச் சொல்லாமல் நாரதர், ""எந்தத் தலத்தில் பித்ருக்கள் பிண்ட தானத்தை நேரில் தோன்றி பெற்றுக் கொள்கிறார்களோ அதுவே உத்தம புண்ணியத்தலம்'' என்று கூறினார். பின்னர் நாரதர் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்.
நாரதர் கூறியபடி நற் சோதி மன்னன் இந்திய நாட்டிலுள்ள பல தலங்களுக்கும் சென்று திலதர்ப்பணமும், பிண்ட தானமும் செய்துகொண்டு வந்தான். எந்த இடத்திலும் பித்ருக்கள் நேரில் வராத தால் மனம் வருந்திய மன்னன் தன் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்தான். அப்போது மன்னன் எதிரில் நாரதர் தோன்றி, ""நான் கூறிய புண்ணிய தலத்திற்கு அருகில் வந்துவிட்டாய்.
சில காத தூரத்திற்கு அப்பால் "திலதைப்பதி' என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று அரிசிலாற்றில் நீராடி, உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும் பிண்ட தானமும் செய்.
அவர்கள் உன் எதிரில் தோன்றி அவற்றை வாங்கி உண்பார்கள்'' என்று கூறினார்.
மன்னன் திலதைப்பதி சென்றான். அங்கு தவம் செய்துகொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசிபெற்றான். ஆலயத்திற்குச் சென்று இறைவன்- இறைவியை வணங்கினான்.
அமாவாசையன்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பித்தான். பித்ருக்கள் அவன்முன் தோன்றி, படைக்கப்பட்ட பிண்டத்தை ஏற்று உண்டு மகிழ்ந்து மன்னனுக்கு நல்லாசி வழங்கி மறைந்தனர். மன்னன் மனம் மகிழ்ந்தான்.
திலதர்ப்பணப்புரி தலத்திற்கு வந்து பித்ருசாபம், பித்ருதோஷம் போன்றவை நீங்க தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும், இத்தலத்தில் எப்போது வேண்டுமானாலும் பித்ருக்கடன் ஆற்றலாம்.
பார்வதிதேவி உருவாக்கிய திருமேனியின் தலையை சிவபெருமான் வெட்டியபிறகு உள்ள வடிவில் சித்தமல்லி என்ற தலத்தில் தலையில்லாத விநாயகராக அருள்பாலிக்கிறார்.
யானை முகத்தோனாகிய விநாயகரை மனித முகத்துடன்கூடிய வடிவில் திலதர்ப்பணப்புரி யிலும், தலை வெட்டப்பட்ட நிலையில் உள்ள வடிவில் சித்தமல்லியிலும் வழிபடலாம்.
-நன்றி நக்கீரன்
Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
இந்த முறை இந்தியா வந்தபோது இங்கு தான் எங்கள் அப்பாவுக்கு தர்ப்பணம் செய்தோம். காசி , ராமேஸ்வரம் , திரிவேணி சங்கமம் , கயா இந்த நான்கு தலங்களை காட்டிலும் மிக சிறப்பு வாய்ந்த தலம்.
முன்னோர்கள் நேரில் வந்து தர்ப்பணம் பெற்றுக்கொள்வதாக ஐதீகம், இங்கு ஒரு முறை செய்துவிட்டாலே அவர்கள் முக்தி அடைந்துவிடுவார்கள்.
மனித உருவில் இருக்கும் விநாயகர் வேறு எங்கும் பார்க்க முடியாது , அது இந்த தளத்தில் இன்னொரு சிறப்பு
முன்னோர்கள் நேரில் வந்து தர்ப்பணம் பெற்றுக்கொள்வதாக ஐதீகம், இங்கு ஒரு முறை செய்துவிட்டாலே அவர்கள் முக்தி அடைந்துவிடுவார்கள்.
மனித உருவில் இருக்கும் விநாயகர் வேறு எங்கும் பார்க்க முடியாது , அது இந்த தளத்தில் இன்னொரு சிறப்பு
Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
வாவ் ! விவரமாக எழுதி இருக்கீங்க ராஜா
ரொம்ப நன்றி , இந்த முறை எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும்போது இங்கும் சென்று வருகிறோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
மேற்கோள் செய்த பதிவு: 1037109நான் எழுதல அக்கா , காப்பி செய்து தான் போட்டேன் .... தினமும் இதை பற்றி விரிவா எழுதணும்னு நினைப்பேன் ஒவ்வொரு நாளும் தட்டி போய் கொண்டே இருந்தது , இன்று உங்க புண்ணியத்தில் பதிவிட்டு விட்டேன்krishnaamma wrote:வாவ் ! விவரமாக எழுதி இருக்கீங்க ராஜாரொம்ப நன்றி , இந்த முறை எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும்போது இங்கும் சென்று வருகிறோம்
![]()
Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
மேற்கோள் செய்த பதிவு: 1037112ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037109நான் எழுதல அக்கா , காப்பி செய்து தான் போட்டேன் .... தினமும் இதை பற்றி விரிவா எழுதணும்னு நினைப்பேன் ஒவ்வொரு நாளும் தட்டி போய் கொண்டே இருந்தது , இன்று உங்க புண்ணியத்தில் பதிவிட்டு விட்டேன்krishnaamma wrote:வாவ் ! விவரமாக எழுதி இருக்கீங்க ராஜாரொம்ப நன்றி , இந்த முறை எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும்போது இங்கும் சென்று வருகிறோம்
![]()
உங்க புண்ணியத்தில் நாங்க அந்த ஸ்தலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
கட்டாயம் சென்று வர வேண்டிய இடம். தகவல் அருமை தல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
மேற்கோள் செய்த பதிவு: 1037209கட்டாயம் சென்று வாருங்கள் எங்கள் தஞ்சாவூர் , நாகை , திருவாரூர் மாவட்டத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் பல கோவில்களின் சிறப்புகள் வெளியே தெரியாமலேயே இருக்கிறது.M.M.SENTHIL wrote:கட்டாயம் சென்று வர வேண்டிய இடம். தகவல் அருமை தல.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…
» பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில்
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…
» பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|