ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

2 posters

Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 1:44 pm


சாதிய படுகொலைகள் மற்றும் மோதல்களைத் தடுக்க சிறப்புப் புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவை அமைக்க வேண்டும் என ’எவிடென்ஸ்’ அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் மீது கடந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு திரும்புகையில் குண்டு வீசியதில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பழிக்குப்பழி வாங்க ஒரு கும்பல் காத்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை 7 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் முத்து விஜயன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, ஏழு பேர் கொலை சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிய தமிழக அரசு தற்போது முத்துவிஜயன் குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இது தொடர்பாக ’தி இந்து’வுக்கு பேட்டியளித்த ’எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது:

“ஐந்து லட்சமும் அரசு வேலையும் கொடுத்து பிரச்சினையை தற்காலிக மாகத்தான் முடிக்கப் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு இதுவல்ல. 2011-ம் ஆண்டு பரமக்குடியில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பழிக்குப் பழியாக ஆட்களை கொல்லும் சாதிய மோதல் கொலைகளும் தொடர் கதையாகிவிட்டது.

சாதிய மோதல்கள் தொடர்பான கொலை வழக்குகளில் குற்றப்பத்திரிகை முறையாக எழுதப்படுவதில்லை. வழக்குகளை நடத்துவதில் போலீசார் அக்கறை எடுத்துக் கொள்ளாததால் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. இனியாவது இது மாதிரியான சாதிய மோதல் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு அக்கறை எடுக்க வேண்டும். அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த சாதிய படுகொலை வழக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்த வழக்குகளின் இப்போதைய நிலை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக எடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சாதிய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சாதிய அமைப்புகளைத் தடை செய்யவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.

அடுத்தபடியாக, மத மோதல்களைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் இருப்பதுபோல் சாதிய மோதல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் சிறப்புப் புலனாய்வு மற்றும் செயலாக்கப் பிரிவுகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அது நிர்வாகம், நீதி, போலீஸ் சார்ந்த முக்கூட்டு அமைப்பாக இருக்க வேண்டும்.

இந்த முக்கூட்டு அமைப்பை உருவாக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கொடியங்குளம் கலவரத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தத் தருணத்திலாவது அந்த அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by ராஜா Sun Dec 08, 2013 1:47 pm

தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 1:48 pm

ராஜா wrote:தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
அவர் என்ன சாதி தல! சோகம் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by ராஜா Sun Dec 08, 2013 1:50 pm

சிவா wrote:
ராஜா wrote:தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
அவர் என்ன சாதி தல! சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1036870ஆஹா....... கிளம்பிட்டாய்ங்கடா ,

கைப்புள்ள இதுக்கு நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சினை தான் ஓடிடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 1:53 pm

ராஜா wrote:[ஆஹா....... கிளம்பிட்டாய்ங்கடா ,

கைப்புள்ள இதுக்கு நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சினை தான் ஓடிடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


எங்க சாதியா இருந்தா அவரை சாதிக் கட்சி தலைவராக்கி ஒரு கட்சியை ஆரம்பிச்சிடலாம் பாருங்க! அதுக்குத்தான் கேட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» கௌரவ கொலைகளைத் தடுக்க புதிய மசோதா: பிருந்தா காரத் வலியுறுத்தல்
» அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது - டிரம்ப் அரசுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
»  ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum