Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
4 posters
Page 1 of 1
திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டது என்பதற்கு ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு முன்னுதாரணம். காலங்காலமாக தமிழ் சினிமாவில் காதலை எத்தனையோ வழிகளில் காட்டியாகிவிட்டது இனி புதுமையாக இன்னொரு உலகிற்கு சென்று காட்டுவோம் என்ற கற்பனையில் இப்படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.
ஆனால் அவரது சிந்தனையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் இரண்டாம் உலகத்தை அடையத் தயாராகிவிட்டார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
வித்தியாசமான கதை வேண்டும், புதுமை வேண்டும் என்று தமிழ் சினிமா இயக்குநர்களைப் பார்த்து புலம்பித் தீர்த்த ரசிகர்களுக்காகவே , “இதோ இது தான் எனது படைப்பு… இது பிடிக்குதா என்று பாருங்கள்” என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ கொடுத்த அதே திமிரோடும், தைரியத்தோடும் ‘இரண்டாம் உலகம்’ கொடுத்துள்ள செல்வராகவனை நிச்சயம் பாராட்ட வேண்டும்.அதே நேரத்தில், தனது வித்தியாசமான சிந்தனைகளை படமாக்கும்போது ரசிகர்களுக்கு அதை புரியவைப்பதிலும் செல்வராகவன் அக்கறை காட்ட வேண்டும்.
அந்த வகையில், வித்தியாசமான கதை வேண்டி அலையும் சினிமா ரசிகர்களுக்கு ‘இரண்டாம் உலகம்’ நிச்சயம் நல்ல விருந்து…
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
கதைச் சுருக்கம்
இரண்டு உலகம் – இரண்டு கதைகள் – இரண்டிலும் காதல்…
முதல் உலகத்தில் தொடங்கும் கதையில், ஆர்யாவும், அனுஷ்காவும் சண்டையிட்டு பின் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்கும் சமயம் அனுஷ்கா இறந்து போகிறார்.
வழக்கமாக காதலி இறந்து போனவுடன் காதலனும் தற்கொலை செய்து கொள்வான் அல்லது பைத்தியமாக அலைவான். இது தான் வழக்கமாகத் தமிழ் சினிமா சொல்லும் பாணி. அதை சற்றே மாற்றி, கதை அவனை வேறு உலகத்திற்கு கொண்டு சென்றால் என்ன ஆகும்?
இன்னும் காதலே பிறக்காத அந்த உலகத்தில் இவனால் காதல் பிறந்தால் என்ன நடக்கும்?
அது தான் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் கதை…
என்ன குழப்பமாக இருக்கிறதா? கவலையே வேண்டாம்! படம் பார்த்த நிறைய பேர், என்ன கதை? என்று இன்னும் குழம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இரண்டு உலகம் – இரண்டு கதைகள் – இரண்டிலும் காதல்…
முதல் உலகத்தில் தொடங்கும் கதையில், ஆர்யாவும், அனுஷ்காவும் சண்டையிட்டு பின் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்கும் சமயம் அனுஷ்கா இறந்து போகிறார்.
வழக்கமாக காதலி இறந்து போனவுடன் காதலனும் தற்கொலை செய்து கொள்வான் அல்லது பைத்தியமாக அலைவான். இது தான் வழக்கமாகத் தமிழ் சினிமா சொல்லும் பாணி. அதை சற்றே மாற்றி, கதை அவனை வேறு உலகத்திற்கு கொண்டு சென்றால் என்ன ஆகும்?
இன்னும் காதலே பிறக்காத அந்த உலகத்தில் இவனால் காதல் பிறந்தால் என்ன நடக்கும்?
அது தான் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் கதை…
என்ன குழப்பமாக இருக்கிறதா? கவலையே வேண்டாம்! படம் பார்த்த நிறைய பேர், என்ன கதை? என்று இன்னும் குழம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
தொழில்நுட்பம்
முக்கால்வாசி படமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கையாகத் தெரியாமல் வண்ணமயமாக ஒரு புது உலகத்திற்கு சென்று பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக அவ்வப்போது வித்தியாசமான பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருப்பது போலவும், வேறு கிரகங்கள் மிக அருகே இருப்பது போலவும் காட்டியிருப்பது சிறப்பு.
ஆர்யா சிங்கத்துடன் சண்டையிடுவது போல் காட்டியிருக்கும் காட்சியிலும், அனுஷ்கா மிருகத்துடன் சண்டையிடும் காட்சியிலும் அது ‘கிராபிக்ஸ்’ என்று தெரிவதால் நமக்கு பிரமிப்பு குறைகிறது.
மற்றபடி, பனிப்பொழிவு, பூக்கள் மலர்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
நடிப்பு
அனுஷ்காவிற்கு 32 வயதாகிவிட்டது என்பதை அவரது முதிர்ச்சியான முகமும், உடலும் மேக்கப்பையும் மீறி காட்டிக்கொடுக்கிறது.
தோழிகளுடன் ஒன்றாக நிற்கும் காட்சிகளில் அனுஷ்காவிற்கு முன்னாள் அவர்கள் அனைவரும் கோழிக் குஞ்சுகள் போல் தெரிகிறார்கள்.
எங்கே நமீதா போல் அனுஷ்காவும் ஆகிவிடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்படப் போவது நிச்சயம்.
ஆனாலும் இரண்டாம் உலகத்தில் ‘வர்ணா’ கதாப்பாத்திரத்தில் வாழ்கிறார்.
ஆர்யா தனது வழக்கமான, கலகலப்பான அப்பாவி நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் இயக்குநரின் சொல் பேச்சை மீறாத செல்லப்பிள்ளையாக ஆர்யா இருப்பதால்,அவருக்கும் ஒரு சோடாபுட்டி கண்ணாடியை மாட்டிவிட்டு, காதல் கொண்டேன் தனுஷையும், 7G ரெயின்போ காலனி ரவிக்கிருஷ்ணாவையும் அவ்வப்போது நினைவு படுத்துகிறார் செல்வா.
ஆர்யா, அனுஷ்காவைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக நடிகர்கள் இல்லை. ஆர்யாவின் தந்தை கதாப்பாத்திரம், கடவுளாகக் கருதப்படும் வெள்ளைக்காரப் பெண், அனுஷ்காவின் தோழி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முக்கால்வாசி படமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கையாகத் தெரியாமல் வண்ணமயமாக ஒரு புது உலகத்திற்கு சென்று பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக அவ்வப்போது வித்தியாசமான பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருப்பது போலவும், வேறு கிரகங்கள் மிக அருகே இருப்பது போலவும் காட்டியிருப்பது சிறப்பு.
ஆர்யா சிங்கத்துடன் சண்டையிடுவது போல் காட்டியிருக்கும் காட்சியிலும், அனுஷ்கா மிருகத்துடன் சண்டையிடும் காட்சியிலும் அது ‘கிராபிக்ஸ்’ என்று தெரிவதால் நமக்கு பிரமிப்பு குறைகிறது.
மற்றபடி, பனிப்பொழிவு, பூக்கள் மலர்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
நடிப்பு
அனுஷ்காவிற்கு 32 வயதாகிவிட்டது என்பதை அவரது முதிர்ச்சியான முகமும், உடலும் மேக்கப்பையும் மீறி காட்டிக்கொடுக்கிறது.
தோழிகளுடன் ஒன்றாக நிற்கும் காட்சிகளில் அனுஷ்காவிற்கு முன்னாள் அவர்கள் அனைவரும் கோழிக் குஞ்சுகள் போல் தெரிகிறார்கள்.
எங்கே நமீதா போல் அனுஷ்காவும் ஆகிவிடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்படப் போவது நிச்சயம்.
ஆனாலும் இரண்டாம் உலகத்தில் ‘வர்ணா’ கதாப்பாத்திரத்தில் வாழ்கிறார்.
ஆர்யா தனது வழக்கமான, கலகலப்பான அப்பாவி நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் இயக்குநரின் சொல் பேச்சை மீறாத செல்லப்பிள்ளையாக ஆர்யா இருப்பதால்,அவருக்கும் ஒரு சோடாபுட்டி கண்ணாடியை மாட்டிவிட்டு, காதல் கொண்டேன் தனுஷையும், 7G ரெயின்போ காலனி ரவிக்கிருஷ்ணாவையும் அவ்வப்போது நினைவு படுத்துகிறார் செல்வா.
ஆர்யா, அனுஷ்காவைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக நடிகர்கள் இல்லை. ஆர்யாவின் தந்தை கதாப்பாத்திரம், கடவுளாகக் கருதப்படும் வெள்ளைக்காரப் பெண், அனுஷ்காவின் தோழி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
பெரும்பாலானவர்கள் படம் குறித்து எதிர்மறை கருத்துக்கள்,
விமர்சனங்களையே வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து செல்வராகவன் எப்படியெல்லாம் குமுறப்
போகிறாரோ தெரியவில்லை!
விமர்சனங்களையே வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து செல்வராகவன் எப்படியெல்லாம் குமுறப்
போகிறாரோ தெரியவில்லை!
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
இசை
இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜும், பின்னணிக்கு அனிருத்தும் இசையமைத்திருக்கிறார்கள். ‘என் காதல் தீ’, ‘மன்னவனே’, விண்ணைத் தாண்டி போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன. பாடல்கள் அனைத்தும் தனியாகத் தெரியாமல் கதையோடு சேர்ந்து வருகின்றன.
படத்தில் நம்மை ஈர்ப்பவை
“இந்த உலகம் காதலுக்காக மட்டும் தான் அசைந்து கொடுக்கும்- நீ உண்மையா காதலிச்சா அவளை நீ எங்க வேணாலும், எப்ப வேணாலும் பாக்கலாம்” – வசனம்…
“நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்” என்று கூறி கணவனுக்காக கண்கள் கலங்கும் இடங்களில் அனுஷ்காவின் நடிப்பு…
அப்பாவியாக அனுஷ்காவிடம் கெஞ்சுவதாக இருக்கட்டும், மல்யுத்த வீரன் போல் கட்டுடலோடு சண்டையிடும் இடங்களாகட்டும் ஆர்யா மிரட்டல்…
வசனங்கள் எதுவும் இல்லையென்றாலும், அமைதியான முகத்துடன் கடவுளாகவே தெரியும் வெள்ளைக்காரப் பெண்…
“மச்சான் கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டியே டா… எனக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா?” – பதட்டத்துடன் கேட்கும் ஆர்யாவின் நண்பர் ..
மொத்தத்தில் ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’ ஆனால் ரசிகர்கள் தான் அதை அனுபவிக்கத் தயாராக வேண்டும்.
- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்
இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜும், பின்னணிக்கு அனிருத்தும் இசையமைத்திருக்கிறார்கள். ‘என் காதல் தீ’, ‘மன்னவனே’, விண்ணைத் தாண்டி போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன. பாடல்கள் அனைத்தும் தனியாகத் தெரியாமல் கதையோடு சேர்ந்து வருகின்றன.
படத்தில் நம்மை ஈர்ப்பவை
“இந்த உலகம் காதலுக்காக மட்டும் தான் அசைந்து கொடுக்கும்- நீ உண்மையா காதலிச்சா அவளை நீ எங்க வேணாலும், எப்ப வேணாலும் பாக்கலாம்” – வசனம்…
“நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்” என்று கூறி கணவனுக்காக கண்கள் கலங்கும் இடங்களில் அனுஷ்காவின் நடிப்பு…
அப்பாவியாக அனுஷ்காவிடம் கெஞ்சுவதாக இருக்கட்டும், மல்யுத்த வீரன் போல் கட்டுடலோடு சண்டையிடும் இடங்களாகட்டும் ஆர்யா மிரட்டல்…
வசனங்கள் எதுவும் இல்லையென்றாலும், அமைதியான முகத்துடன் கடவுளாகவே தெரியும் வெள்ளைக்காரப் பெண்…
“மச்சான் கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டியே டா… எனக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா?” – பதட்டத்துடன் கேட்கும் ஆர்யாவின் நண்பர் ..
மொத்தத்தில் ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’ ஆனால் ரசிகர்கள் தான் அதை அனுபவிக்கத் தயாராக வேண்டும்.
- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
ஒரு தெலுங்கு படத்தில் கூட இதே போல தானே கதை வரும்
மாவீரன் படம் என்று நினைக்கிறன்
மாவீரன் படம் என்று நினைக்கிறன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
முதல் நாள் முதல் ஷோ ஆரம்பிக்கும் போது full ஆக இருந்த கூட்டம் படம் முடியும் போது எங்களையும் சேர்த்து 20 பேர் மட்டும் தான் இருந்தனர்.
இவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே
1. பெரிய பெரிய பறவைகளும் , மிக அருகே இருக்கும் கிரகங்களும் மட்டுமே போதும் "இரண்டாம் உலகம்" என்று ரசிகனை நம்மவைக்க என்று எண்ணியது சிரிப்பை வரவைத்தது.
2. வித்தியாசமான கதை என்று சொல்லுகிறார் , ஆனால் அதை 2:30 மணி நேரத்தில் சொல்லும்போது பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கும் தமிழகத்தில் அதை எந்த அளவிற்கு புரிந்துகொள்ளுவார்கள் / நம்மால் இதை எந்த அளவிற்கு திரையில் காமிக்க முடியும் என்று ஒரு சுய சோதனை செய்திருக்க வேண்டும்.
இவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே
1. பெரிய பெரிய பறவைகளும் , மிக அருகே இருக்கும் கிரகங்களும் மட்டுமே போதும் "இரண்டாம் உலகம்" என்று ரசிகனை நம்மவைக்க என்று எண்ணியது சிரிப்பை வரவைத்தது.
2. வித்தியாசமான கதை என்று சொல்லுகிறார் , ஆனால் அதை 2:30 மணி நேரத்தில் சொல்லும்போது பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கும் தமிழகத்தில் அதை எந்த அளவிற்கு புரிந்துகொள்ளுவார்கள் / நம்மால் இதை எந்த அளவிற்கு திரையில் காமிக்க முடியும் என்று ஒரு சுய சோதனை செய்திருக்க வேண்டும்.
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
இணையத்தில் ஒரு ரசிகரின் விமரிசனம்:
-
எனது 55 வயது வாழ்வில் முதன் முறையாக
திரையரங்கில் திரைப் படம் முடிந்தவுடன் மக்கள்
ஹோ எனக் கத்திகொண்டு திரையரங்கின்
வாசலைத்தேடி ஒருத்தரை ஒருத்தர் தாண்டிக்
கொண்டு ஓடிய காட்சி இன்றுதான் கண்டேன்.
அவ்வளவு அருமையான படம்.
சொந்த தயாரிப்பாக இருந்தால் செல்வரங்கனின்
அப்பன் காசு எள்ளுதான்
-
எனது 55 வயது வாழ்வில் முதன் முறையாக
திரையரங்கில் திரைப் படம் முடிந்தவுடன் மக்கள்
ஹோ எனக் கத்திகொண்டு திரையரங்கின்
வாசலைத்தேடி ஒருத்தரை ஒருத்தர் தாண்டிக்
கொண்டு ஓடிய காட்சி இன்றுதான் கண்டேன்.
அவ்வளவு அருமையான படம்.
சொந்த தயாரிப்பாக இருந்தால் செல்வரங்கனின்
அப்பன் காசு எள்ளுதான்
Re: திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’
முதல் நாள் அனுபவம் : இரண்டாம் உலகம்
ஆர்யா, அனுஷ்கா நடிக்க செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி.சினிமாஸ் தயாரித்திருக்கிறது.
முதல் உலகம் : ஆர்யாவை காதலிக்கிறார் டாக்டர் அனுஷ்கா. ஆர்யா காதலுக்கு மறுப்புச் சொல்ல, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவிக்கிறார். அனுஷ்காவின் காதலை புரிந்துக் கொள்ளும் ஆர்யா, அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். எதிர்பாராத விதமாக அனுஷ்கா இறந்து விடுகிறார். அதற்கு பிறகு ஆர்யா, என்னவாகிறார் என்பது இங்கு நடக்கும் கதை.
இரண்டாம் உலகம் : காதல் என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு உலகம். அங்கு அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திரிகிறார் ஆர்யா. அனுஷ்காவை அடைய நினைக்கும் ராஜாவிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறார். தான் ஆணுக்கு அடிமையில்லை என்பதால் ஆர்யாவை வெறுக்கிறார். அவர்களுக்குள் காதல் எப்படி மலர்கிறது என்பது இங்கு நடக்கும் கதை.
ஒருவன் உண்மையாக காதலித்தால், காதலிக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பான் என்று கூறியிருக்கிறார்கள். முதல் உலகத்திற்கும், இரண்டாம் உலகத்திற்கும் செல்வராகவன் காட்டியிருக்கும் வித்தியாசங்களை பாராட்டலாம். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ராம்ஜியின் ஒளிப்பதிவு தான். இரண்டு உலகத்தையும் வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா இரண்டு உலகத்திலும் வெவ்வேறு நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக இப்படத்தில் ஆர்யாவை விட, அனுஷ்காவிற்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கலக்கல். அனுஷ்காவை காப்பாற்ற சிங்கத்துடன் ஆர்யா மோதும் காட்சிகள் எல்லாம் குழந்தைகளின் உலகத்தில் ஹிட்டாகும். காட்சிப்படுத்திருக்கும் விதத்தோடு பாடல்களைப் பார்த்தால் நன்றாக இருக்கிறது. அதற்காக ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டலாம்.
2:40 மணி நேரம் படம் 'இரண்டாம் உலகம்'. மிகவும் பொறுமையாக கதையை நகர்த்தியிருக்கிறார் செல்வராகவன். அதனால் பார்ப்பவர்களுக்கு, படம் எப்போது முடியும் என்ற சலிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி, ’பின்னணி இசை அனிருத்தா?’ என்று கேட்க வைக்கிறது. அந்தளவிற்கு பின்னணி இசையில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. நிறைய காட்சிகளில், அடுத்து என்ன காட்சி வைக்கலாம் என்று செல்வராகவன் குழம்பியிருப்பது தெரிகிறது. பின்பாதியில், வசனங்களே இல்லாமல் நிறைய காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் செல்வராகவன் காட்டியிருக்கும் வித்தியாசமான உலகம், கிராபிக்ஸ் மிரட்டல் என்பதற்காக இரண்டாம் உலகத்திற்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்.
தி இந்து
ஆர்யா, அனுஷ்கா நடிக்க செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி.சினிமாஸ் தயாரித்திருக்கிறது.
முதல் உலகம் : ஆர்யாவை காதலிக்கிறார் டாக்டர் அனுஷ்கா. ஆர்யா காதலுக்கு மறுப்புச் சொல்ல, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவிக்கிறார். அனுஷ்காவின் காதலை புரிந்துக் கொள்ளும் ஆர்யா, அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். எதிர்பாராத விதமாக அனுஷ்கா இறந்து விடுகிறார். அதற்கு பிறகு ஆர்யா, என்னவாகிறார் என்பது இங்கு நடக்கும் கதை.
இரண்டாம் உலகம் : காதல் என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு உலகம். அங்கு அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திரிகிறார் ஆர்யா. அனுஷ்காவை அடைய நினைக்கும் ராஜாவிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறார். தான் ஆணுக்கு அடிமையில்லை என்பதால் ஆர்யாவை வெறுக்கிறார். அவர்களுக்குள் காதல் எப்படி மலர்கிறது என்பது இங்கு நடக்கும் கதை.
ஒருவன் உண்மையாக காதலித்தால், காதலிக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பான் என்று கூறியிருக்கிறார்கள். முதல் உலகத்திற்கும், இரண்டாம் உலகத்திற்கும் செல்வராகவன் காட்டியிருக்கும் வித்தியாசங்களை பாராட்டலாம். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ராம்ஜியின் ஒளிப்பதிவு தான். இரண்டு உலகத்தையும் வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா இரண்டு உலகத்திலும் வெவ்வேறு நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக இப்படத்தில் ஆர்யாவை விட, அனுஷ்காவிற்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கலக்கல். அனுஷ்காவை காப்பாற்ற சிங்கத்துடன் ஆர்யா மோதும் காட்சிகள் எல்லாம் குழந்தைகளின் உலகத்தில் ஹிட்டாகும். காட்சிப்படுத்திருக்கும் விதத்தோடு பாடல்களைப் பார்த்தால் நன்றாக இருக்கிறது. அதற்காக ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டலாம்.
2:40 மணி நேரம் படம் 'இரண்டாம் உலகம்'. மிகவும் பொறுமையாக கதையை நகர்த்தியிருக்கிறார் செல்வராகவன். அதனால் பார்ப்பவர்களுக்கு, படம் எப்போது முடியும் என்ற சலிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி, ’பின்னணி இசை அனிருத்தா?’ என்று கேட்க வைக்கிறது. அந்தளவிற்கு பின்னணி இசையில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. நிறைய காட்சிகளில், அடுத்து என்ன காட்சி வைக்கலாம் என்று செல்வராகவன் குழம்பியிருப்பது தெரிகிறது. பின்பாதியில், வசனங்களே இல்லாமல் நிறைய காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் செல்வராகவன் காட்டியிருக்கும் வித்தியாசமான உலகம், கிராபிக்ஸ் மிரட்டல் என்பதற்காக இரண்டாம் உலகத்திற்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்.
தி இந்து
Similar topics
» 300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!
» 1200 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்'
» தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் !
» தமிழ் சினிமாவிற்கு தயாராகும் வடிவேலு
» சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
» 1200 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்'
» தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் !
» தமிழ் சினிமாவிற்கு தயாராகும் வடிவேலு
» சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|