ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் செய்திகள்

2 posters

Go down

முருகன் செய்திகள் Empty முருகன் செய்திகள்

Post by சிவா Thu Nov 14, 2013 3:23 am

செந்தமிழ்க் கடவுள் சேயோன் முருகனின் பெயரில் அமைந்த மூவெழுத்துக்குமே தனிச்சிறப்பு உண்டு. அது, மூன்றும் தமிழின் மூவினங்களில் அமைந்தவை என்பதுதான். (மு-மெல்லினம், ரு-இடையினம், கா-வல்லினம்)

* வடநாடுகளில் முருகனை கார்த்திக் என்றே அழைக்கிறார்கள். அங்கே வேழமுகன், வேலவனின் தம்பியாகக் கருதப்படுகிறார். அங்குள்ள கதைகளின்படி பிள்ளையாருக்கு இரு மனைவியர் உண்டு. முருகன் பிரம்மச்சாரியாக கூறப்படுகிறார்.

* சுப்பையா, சுப்பராயலு, சுப்புடு, சுப்பண்ணா என்றெல்லாம் முருகனை அழைக்கிறார்கள் ஆந்திர, கர்னாடக மக்கள்.

* முருகன் பாம்புகளின் தலைவன் என்று கருதும் பழக்கம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களிடம் நிலவுகிறது. பாம்பினைக் கண்டால் சாம்பிாரணி தூபம் போட்டு "சுப்பண்ணா ஓடிப்போ' என்று சென்னால் தீங்கு ஏதும் செய்யாமல் ஓடிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

* பிரம்மசாரி, கிருஹஸ்தன், சன்யாசி என்ற மூன்று திருக்கோலங்களிலும் காட்சிதரும் தெய்வம், முருகன் மட்டுமே.

* பரமபாகவதன், பரம வைஷ்ணவன், பரம மகேஸ்வரன், பரம பிராம்மண்யன் இவையெல்லாம் பல்லவர் காலத்தில் முருகனுக்கு வழங்கிய பெயர்கள். மாமல்லன் அமைத்த குடைவரைகளில் யானை மீதமர்ந்துள்ள முருகனைக் காணலாம்.

*இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலுமே திருமுருகனின் அவதாரச் சிறப்பும் தீரமும் கூறப்பட்டிருக்கிறது.

* செந்தில்வேலன், சூரனை வதைத்த பின்னர் தணிகைமலையில் ஓய்வெடுத்தார் என்பது தெரிந்திருக்கும். அவர் தாரகாசுரனை வதம் செய்த பிறகு தன் சினம் தணித்த தலம் எது தெரியுமா? கர்னாடகாவில் உள்ள சுப்ரமண்யா. குக்கே சுப்ரமண்யா என்றழைக்கப்படும் இத்தலத்தில் புற்றின்மீதே அமர்ந்திருக்கிறார் முருகன். அருகில் உள்ள மலை, குமார பர்வதம். ஆறு குமாரதாரா.

* கடவுளரில் கந்தனைப் பற்றியே அதிக அளவில் பழமொழிகள் இருக்கின்றன. இதோ சில...

வேலை வணங்குவதே வேலை.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை.

வயலூரான் துணை இருக்க அயலூரான் தேவையா?

கவிதைக்குக் கம்பன்; கருணைக்கு கந்தன்.

கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

வேலிருக்க வினையில்லை; மயிலிருக்க பயமில்லை.

* மேருமலையைச் சுற்றிவந்த நவக்கிரகங்களை, தன் தலைநகரான மகேந்திரபுரியை சுற்றிவந்து தூய்மை செய்யும்படி அடிமைப்படுத்தினான் சூரபத்மன். முருகன் அவனை அழித்து நவகோள்களுக்கும் விடுதலை அளித்ததால், கந்தனை வணங்குவோரை எந்த கிரகமும் வருத்தாது.

* கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அரசு புரிந்த மன்னர்கள் போரில் வெற்றி பெற அருளும் போர்க்கடவுளாகப் போற்றினர். தங்களின் தலைநகருக்கு மயூரம் என்றே பெயரிட்டு முருகனையே காவல் தெய்வமாக இருத்தி வணங்கினர்.

* மாமல்லபுரத்தருகே உள்ள சாளுவன் குப்பத்தில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் கோயில், 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சங்ககாலத்துக் கட்டடக்கலைக்கு நிகராக செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது வடிவேலனின் கருவறை. வாயிலில் நெடிய வேல் ஒன்று ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்டு உயர்ந்து நிற்கிறது. முருகன் வழிபாடு பண்டை காலத்திலேயே இருந்ததை உணர்த்துவதாக இக்கோயில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

* கந்தனை மணக்கக் காத்திருந்த திருமாலின் மகள்களான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியுமே தெய்வானை, வள்ளியாகப் பிறந்தனர். இருவரில் தெய்வானை தேவர்கோன் வாகனமான ஐராவதத்திற்கும், வள்ளி வள்ளிமலையில் திரிந்த மானின் வயிற்றிலும் பிறந்தனர். தேவயானையை இந்திரனும், வள்ளியை வேடர் தலைவனான நம்பிராஜனும் வளர்த்தனர். எனவே தெய்வானையை யானை மகள் என்றும், வள்ளியை மான் மகள் என்றும் கூறுவது மரபு.

* கிராமப்புற தெய்வமாக விளங்கும் பச்சை அம்மன் பார்வதியின் அம்சம் என்பது ஐதீகம். பச்சையம்மனுக்குத் துணையாக வந்த தோழியருள் கங்கையும் வள்ளியும் உண்டு. கங்கையே காத்தாயி என்ற பெயரில் முருகனை மடியில் இருத்தியபடி காட்சி தருகிறாள். வள்ளி, வனக்குறத்தியாக தனி சன்னதியில் இருப்பாள். வள்ளியை முத்துக்குறத்தி, ஞானக்குறத்தி என்றும் அழைக்கின்றனர். பச்சையம்மன் திருவிழாவின்போது வள்ளி திருமணமும் நடத்தப்படுவது மரபாக இருக்கிறது.

* காளிதாசரின் குமாரசம்பவம், முருகனின் அவதாரத்தினை முழுமையாக விவரிக்கிறது.

* சுடராக இருந்த சுப்ரமண்யனை கங்கையே சுமந்து சென்றாள் என்பதால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயர் உண்டு. மகாபாரதத்தில் வரும் பீஷ்மர், கங்கையின் மகன் என்பதால் அவரையும் காங்கேயன் என்று அழைப்பர். பார்வதியின் சேய் என்பதால், சேயோன் என்ற பெயரும் கந்தனுக்கு உண்டு.

* புராணங்களின்படி வேலவனின் பன்னிரு கரங்களில் ஐந்தாவது மற்றும் ஆறாவது கரங்களே வேலைப் பிடித்துச் சுழற்றுகின்றனவாம். இது அஞ்சுதலைப் போக்கி ஆறுதலைத் தருபவன் முருகன் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகச் சொல்வர்.

* தந்தையை வேண்டித் தவமிருந்த முருகனுக்கு அன்னை பார்வதியே காவலிருந்தாள். மாகாளியாக வடிவெடுத்துக் காவலிருந்த அவள் கீழ்வேளூர் என்னும் அதே தலத்தில் அஞ்சுவட்டத்து அம்மன் என்ற திருப்பெயருடன் இன்றும் காட்சியளிக்கிறாள்.

* வயலூரில் ஆட்சி செய்யும் வடிவேலனை, திருமணமானவர்கள், குடும்பத்துடன் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அங்கே சுவாமி, அம்பாளை வணங்கிய பிறகு சுப்ரமண்யனை வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கை. வாரியார் சுவாமிகள் இத்தலத்து முருகனையே குருவாக ஏற்றார்.

* சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனாரிடம் முறையிடச் சென்றபோது அவர் தவத்தில் ஆழ்ந்து இருந்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகே அவரது தவம் கலைந்தது. தேவர்கள் தம் துயரைச் சொன்னதும் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ஈசன். அதன் சுடரே ஆறுமுகனின் அவதாரத்திற்குக் காரணமானது. தேவர்கள் இறைவன் முன் காத்திருந்த ஐந்து நாட்களும் தரிசித்த நாளும் சேர்ந்த ஆறு தினங்களே சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் ஆறு நாட்கள். கந்தசஷ்டி, சூரசம்ஹார தினம் மட்டும் அல்ல. ஆறுமுகனின் அவதார தினமும் அதுவே.

* சக்திதரன், பாலசுவாமி, ஸ்கந்தன், கஜவாகனன், சரவணபவன், தேவசேனாபதி, சுப்ரமண்யன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், தாரகாரி, வள்ளி கல்யாணசுந்தரன், சேனானி, பிரமமசாஸ்தா, கிரௌஞ்சபேதன், சிகிவாகனன் ஆகிய இந்தப் பதினாறு பெயர்களையும் சொல்லி முருகனை வணங்கினால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்கிறது கந்தபுராணம்.

-காளிதாசன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருகன் செய்திகள் Empty Re: முருகன் செய்திகள்

Post by amirmaran Thu Nov 14, 2013 2:51 pm

கார்த்திகை மாதம் நெருங்கும் நேரத்தில் நல்ல தகவல்...


அன்புடன் அமிர்தா

முருகன் செய்திகள் Aமுருகன் செய்திகள் Mமுருகன் செய்திகள் Iமுருகன் செய்திகள் Rமுருகன் செய்திகள் Tமுருகன் செய்திகள் Hமுருகன் செய்திகள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum