Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
3 posters
Page 1 of 1
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
மேற்குத் தொடர்ச்சி மலையில், குற்றாலம் பகுதியில் கைக்கெட்டான் கொம்பு என்ற சிகரத்திலிருந்து உற்பத்தியாகி வரும் அழகிய ஆறு, கரும்பால் நதி.
தற்போது கருப்பா நதி என அழைக்கப்படும் அதன் கரையில் அமைந்துள்ள கவின்மிகு தலம், கடையநல்லூர். ஆதியில் அர்ஜுனபுரம், இந்திரபுரி என்றெல்லாம் இது வழங்கப்பட்டது.
கருப்பா நதியின் கரையில் அமைந்துள்ள பகுதிகள் காளகேதாரவனம் எனப்பட்டன. அதன் ஒரு பகுதி வில்வவனமாகக் காட்சியளித்தது. அங்கு சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் கடைகாளீஸ்வரர். காளகேதாரநாதர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
"அர்ஜுனபுரம் தலபுராணம்' என்னும் வடமொழி நூல் மூலம் இக்கோயிலின் வரலாறை அறிந்துகொள்ளலாம்.
தேவர்களும் அசுரர்களும் மரணம் அடையாதிருக்க, கிருதயுகத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது அதனை திருமால் மோனிகி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் பகிர்ந்துகொடுத்தார். அதனால் கோபம் கொண்ட அசுரர்கள் தேவர்களிடம் போர் தொடுத்தனர்.
அதில் தோல்வியடைந்த அசுரர்களுக்கு பிருகு முனிவரின் மனைவி க்யாதி அடைக்கலம் தந்து உதவினாள். இவ்விஷயத்தை திருமாலிடம் சென்று தெரிவித்தான் இந்திரன். இதைக்கேட்டு வெகுண்ட மகாவிஷ்ணு, அவளை சுதர்சன சக்கரத்தால் சிரச்சேதம் செய்தார்.
மனைவியை இழந்ததால் பிறகு முனிவர் பித்துப் பிடித்து அலைந்தார். அவர் நைமிசாரண்யம் வழியே செல்லும்போது அங்குள்ள முனிவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, மந்திர ஜபங்களினால் நீராட்டி சுயஉணர்வு அடையச் செய்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி விந்தியமலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டினார்.
அப்போது, "பூவுலகத்தில் காளகேதார லிங்கத்தை பூஜித்து வழிபட்டால் உன் பித்தம் நீங்கி ஞானம் பெறுவாய்' என்று அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி இங்கு வந்து ஈசனை வழிபட்டு குணமடைந்தார்.
பிருகு வழிபட்ட காளகேதார லிங்கம், பிறகு மண்ணுள் புதையுண்டு போனது. காலம் நகர்ந்தது. கலியுகம் வந்தது. பக்தர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்ட பரமேஸ்வரன், முனிவர் உருவில் இங்கு வந்தார். இப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தன் தாகம் தீர்க்க வேண்டினார். அவர்கள் கடைகால் எனப்படும் மூங்கில் பாத்திரத்தில் பால் ஊற்றித் தந்தனர்.
அவர்கள் சென்ற பிறகு, மண் மூடியிருந்த சுயம்பு லிங்கத்தின் மேல், தான் பால் அருந்திய கடைகாலை கவிழ்த்துச் சென்றுவிட்டார் முனிவர்.
சிறிது நேரத்திற்குப் பின் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மீண்டும் அங்கு வந்து கடைகாலை எடுக்க முயன்றபோது, அது பூமியிலேயே ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் சிறிதுகூட அதை அசைக்க முடியாததால், கோடரியால் வெட்ட அங்கிருந்து "குபுக்'கென்று ரத்தம் பீறிட்டது.
பயந்துபோன அவர்கள், இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஜெயத்சேன பாண்டியனிடம் இதுகுறித்து முறையிட்டனர்.
பார்வைக் குறைபாடுடைய மன்னனான அவன் அங்கு சென்று கடைகாலை தொட்டுப் பார்த்தபோது, ஓர் ஆச்சரியம் நடந்தது. அவனுக்கு முழுமையாக பார்வை கிட்டியது.
மெய் சிலிர்த்துப் போன மன்னன், "கண்கொடுத்த கடைகாலீஸ்வரா!' என மனமுருகி வேண்டி நிற்க, பூமியிலிருந்து காளகோரநாதர், கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார்.
அப்போது, "எனக்கு ஆலயம் எழுப்புங்கள். இங்கு வந்து என்னை வழிபடுவோரைக் காத்தருள்வேன்!' என்று அசரீரி வாக்கு எழுந்தது.
அதன்படி ஆலயம் அமைத்து, கடைகாலீஸ்வரரை பிரதிஷ்டை செய்து, கோயிலைச் சுற்றி ஊரையும் நிர்மாணம் செய்தார், பாண்டிய மன்னன். அக்காலத்தில் கடைகால்நல்லூர் என அழைக்கப்பட்ட தலம், பின்னர் மருவி கடையநல்லூர் ஆனது.
கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோபுர வாசலில் பஞ்சமுக விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானும் அருள்கின்றனர்.
உள்ளே நுழைந்து அதிகார நந்தி, சூரியன், சந்திரன், பலிபீடம், கொடிமரம், நந்தியை தரிசித்து முடித்தால் முன்மண்டபம், அதில் விநாயகர், நால்வர், நடராஜர் உட்பட ஆலய உற்சவ மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
அதையடுத்து கருவறை. இறைவன் கடைகாலீஸ்வரர் சுயம்பாலான லிங்கத்திருமேனி. இவரை தரிசிப்போருக்கு பார்வைக் குறைபாடு நீங்குதல், மனநல பாதிப்பிலிருந்து விடுதலை, இழந்த பொருள் திரும்பக் கிடைத்தல் ஆகிய நற்பலன்கள் கிட்டுகிறதாம்.
இறைவி கரும்பால் மொழியம்பாள் என்ற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறாள். அவள் பேச்சு கரும்புச்சாறு போல் இனிக்கும் தன்மையுடையது என்பதால் இப்பெயராம். அம்மனுக்கு தினமும் இரவு 8 மணியளவில் பள்ளியறை பூஜை நடக்கிறது.
இங்குள்ள நடராஜர் சன்னதிக்கு அடியில் பழங்காலத்தைச் சேர்ந்த பாதாளச் சுரங்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரகார வலம் வரும்போது கிருஷ்ணர், விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, நாகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் அருள்கின்றனர். இத்தலத்தில் சனிபகவான் ராகு-கேதுக்களுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. அருகே நாகலிங்க மரமும் உள்ளது.
ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 4.30 - 6 இங்கு ராகு கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் பலன்பெற்று பலனடைந்தோர் ஏராளம் என்கின்றனர்.
சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாள், துர்க்கைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் குமார சஷ்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல விருட்சம் வில்வம். கோயில் வளாகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட வில்வமரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரத்தின் இலையும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வடிவில் இருப்பது அதிசயம்!
ஒரு காலத்தில் மாசி மக மகோற்சவம் தேரோட்டத்துடன் இத்தலத்தில் சிறப்பாக நடைபெற்றதாம். ஐம்பது வருடமாக நடைபெறாமல் இருந்த இந்த உற்சவத்தை மீண்டும் தொடங்குவதற்கு சிவனடியார்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
எங்கே இருக்கு: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவில், கடையநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் கடைகாலீஸ்வரர் கோயில் உள்ளது.
எப்படிச் செல்வது: மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் உள்ளது. பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
-மு.வெங்கடேசன்.
தற்போது கருப்பா நதி என அழைக்கப்படும் அதன் கரையில் அமைந்துள்ள கவின்மிகு தலம், கடையநல்லூர். ஆதியில் அர்ஜுனபுரம், இந்திரபுரி என்றெல்லாம் இது வழங்கப்பட்டது.
கருப்பா நதியின் கரையில் அமைந்துள்ள பகுதிகள் காளகேதாரவனம் எனப்பட்டன. அதன் ஒரு பகுதி வில்வவனமாகக் காட்சியளித்தது. அங்கு சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் கடைகாளீஸ்வரர். காளகேதாரநாதர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
"அர்ஜுனபுரம் தலபுராணம்' என்னும் வடமொழி நூல் மூலம் இக்கோயிலின் வரலாறை அறிந்துகொள்ளலாம்.
தேவர்களும் அசுரர்களும் மரணம் அடையாதிருக்க, கிருதயுகத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது அதனை திருமால் மோனிகி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் பகிர்ந்துகொடுத்தார். அதனால் கோபம் கொண்ட அசுரர்கள் தேவர்களிடம் போர் தொடுத்தனர்.
அதில் தோல்வியடைந்த அசுரர்களுக்கு பிருகு முனிவரின் மனைவி க்யாதி அடைக்கலம் தந்து உதவினாள். இவ்விஷயத்தை திருமாலிடம் சென்று தெரிவித்தான் இந்திரன். இதைக்கேட்டு வெகுண்ட மகாவிஷ்ணு, அவளை சுதர்சன சக்கரத்தால் சிரச்சேதம் செய்தார்.
மனைவியை இழந்ததால் பிறகு முனிவர் பித்துப் பிடித்து அலைந்தார். அவர் நைமிசாரண்யம் வழியே செல்லும்போது அங்குள்ள முனிவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, மந்திர ஜபங்களினால் நீராட்டி சுயஉணர்வு அடையச் செய்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி விந்தியமலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டினார்.
அப்போது, "பூவுலகத்தில் காளகேதார லிங்கத்தை பூஜித்து வழிபட்டால் உன் பித்தம் நீங்கி ஞானம் பெறுவாய்' என்று அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி இங்கு வந்து ஈசனை வழிபட்டு குணமடைந்தார்.
பிருகு வழிபட்ட காளகேதார லிங்கம், பிறகு மண்ணுள் புதையுண்டு போனது. காலம் நகர்ந்தது. கலியுகம் வந்தது. பக்தர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்ட பரமேஸ்வரன், முனிவர் உருவில் இங்கு வந்தார். இப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தன் தாகம் தீர்க்க வேண்டினார். அவர்கள் கடைகால் எனப்படும் மூங்கில் பாத்திரத்தில் பால் ஊற்றித் தந்தனர்.
அவர்கள் சென்ற பிறகு, மண் மூடியிருந்த சுயம்பு லிங்கத்தின் மேல், தான் பால் அருந்திய கடைகாலை கவிழ்த்துச் சென்றுவிட்டார் முனிவர்.
சிறிது நேரத்திற்குப் பின் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மீண்டும் அங்கு வந்து கடைகாலை எடுக்க முயன்றபோது, அது பூமியிலேயே ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் சிறிதுகூட அதை அசைக்க முடியாததால், கோடரியால் வெட்ட அங்கிருந்து "குபுக்'கென்று ரத்தம் பீறிட்டது.
பயந்துபோன அவர்கள், இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஜெயத்சேன பாண்டியனிடம் இதுகுறித்து முறையிட்டனர்.
பார்வைக் குறைபாடுடைய மன்னனான அவன் அங்கு சென்று கடைகாலை தொட்டுப் பார்த்தபோது, ஓர் ஆச்சரியம் நடந்தது. அவனுக்கு முழுமையாக பார்வை கிட்டியது.
மெய் சிலிர்த்துப் போன மன்னன், "கண்கொடுத்த கடைகாலீஸ்வரா!' என மனமுருகி வேண்டி நிற்க, பூமியிலிருந்து காளகோரநாதர், கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார்.
அப்போது, "எனக்கு ஆலயம் எழுப்புங்கள். இங்கு வந்து என்னை வழிபடுவோரைக் காத்தருள்வேன்!' என்று அசரீரி வாக்கு எழுந்தது.
அதன்படி ஆலயம் அமைத்து, கடைகாலீஸ்வரரை பிரதிஷ்டை செய்து, கோயிலைச் சுற்றி ஊரையும் நிர்மாணம் செய்தார், பாண்டிய மன்னன். அக்காலத்தில் கடைகால்நல்லூர் என அழைக்கப்பட்ட தலம், பின்னர் மருவி கடையநல்லூர் ஆனது.
கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோபுர வாசலில் பஞ்சமுக விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானும் அருள்கின்றனர்.
உள்ளே நுழைந்து அதிகார நந்தி, சூரியன், சந்திரன், பலிபீடம், கொடிமரம், நந்தியை தரிசித்து முடித்தால் முன்மண்டபம், அதில் விநாயகர், நால்வர், நடராஜர் உட்பட ஆலய உற்சவ மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
அதையடுத்து கருவறை. இறைவன் கடைகாலீஸ்வரர் சுயம்பாலான லிங்கத்திருமேனி. இவரை தரிசிப்போருக்கு பார்வைக் குறைபாடு நீங்குதல், மனநல பாதிப்பிலிருந்து விடுதலை, இழந்த பொருள் திரும்பக் கிடைத்தல் ஆகிய நற்பலன்கள் கிட்டுகிறதாம்.
இறைவி கரும்பால் மொழியம்பாள் என்ற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறாள். அவள் பேச்சு கரும்புச்சாறு போல் இனிக்கும் தன்மையுடையது என்பதால் இப்பெயராம். அம்மனுக்கு தினமும் இரவு 8 மணியளவில் பள்ளியறை பூஜை நடக்கிறது.
இங்குள்ள நடராஜர் சன்னதிக்கு அடியில் பழங்காலத்தைச் சேர்ந்த பாதாளச் சுரங்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரகார வலம் வரும்போது கிருஷ்ணர், விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, நாகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் அருள்கின்றனர். இத்தலத்தில் சனிபகவான் ராகு-கேதுக்களுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. அருகே நாகலிங்க மரமும் உள்ளது.
ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 4.30 - 6 இங்கு ராகு கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் பலன்பெற்று பலனடைந்தோர் ஏராளம் என்கின்றனர்.
சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாள், துர்க்கைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் குமார சஷ்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல விருட்சம் வில்வம். கோயில் வளாகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட வில்வமரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரத்தின் இலையும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வடிவில் இருப்பது அதிசயம்!
ஒரு காலத்தில் மாசி மக மகோற்சவம் தேரோட்டத்துடன் இத்தலத்தில் சிறப்பாக நடைபெற்றதாம். ஐம்பது வருடமாக நடைபெறாமல் இருந்த இந்த உற்சவத்தை மீண்டும் தொடங்குவதற்கு சிவனடியார்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
எங்கே இருக்கு: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவில், கடையநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் கடைகாலீஸ்வரர் கோயில் உள்ளது.
எப்படிச் செல்வது: மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் உள்ளது. பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
-மு.வெங்கடேசன்.
Re: ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
பகிர்வுக்கு மிக்க நன்றி தல. இது போல பழமையான சிவன் கோவில்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும்
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராகு-கேது பரிகார தலங்கள்
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
» ராகு-கேது பரிகாரத் தலங்கள் !
» ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
» ராகு-கேது பரிகாரத் தலங்கள் !
» ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|