Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 1 of 81
Page 1 of 81 • 1, 2, 3 ... 41 ... 81
உலகச் செய்திகள்!
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
![உலகச் செய்திகள்! Bus-accidentre-212](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/bus-accidentre-212.jpg)
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
![உலகச் செய்திகள்! Bus-accidentre-212](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/bus-accidentre-212.jpg)
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகச் செய்திகள்!
சிங்கப்பூரில் அரசு இணையதளத்தை முடக்கிய வாலிபர் கைது
சிங்கப்பூரில் பிரதமர் லீ, ஜனாதிபதி டோனி தான் ஆகியோரின் இணையதளத்தில் ஊடுருவி கடந்த வாரம் முடக்கினர். இந்நிலையில் டவுன் கவுன்சில் இணையதளமும் முடக்கப்பட்டது. இச்சம்பவத்தை யட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஜேம்ஸ் ராஜ்(35) என்பவரை கைது செய்தனர்.
பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ, ஜனாதிபதி டோனி தான் ஆகியோரின் இணையதளத்தில் ஊடுருவி கடந்த வாரம் முடக்கினர். இந்நிலையில் டவுன் கவுன்சில் இணையதளமும் முடக்கப்பட்டது. இச்சம்பவத்தை யட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஜேம்ஸ் ராஜ்(35) என்பவரை கைது செய்தனர்.
பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
Re: உலகச் செய்திகள்!
பாக். தீவிரவாத இயக்க தலைவரின் மகன் சுட்டுக்கொலை; இந்திய தூதரக தாக்குதலில் தொடர்புடையவர்
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் செயல்படும் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி. இவருடைய மூத்த மகன் நசிரூதின் ஹக்கானி நேற்று இரவு இஸ்லாமாபாத் அருகே உள்ள பராகாஹூ என்ற இடத்தில் மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ஆனால் போலீசார் இந்த சம்பவத்தை உறுதி செய்ய மறுத்து விட்டனர்.
கொல்லப்பட்ட நசிரூதின் ஹக்கானி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைக்கு எதிராகவும், காபூல் நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர். மேலும் ஹக்கானி அமைப்பின் முக்கிய பேச்சுவார்த்தை பணிகளில் ஈடுபட்டு வந்தவர். முன்பு வடக்கு வசிரீஸ்தான் பகுதி ஹக்கானி தீவிரவாத இயக்கத்தில் அதிக ஈடுபாடு வைத்திருந்தார். ஏற்கனவே ஜலாலுதீனின் 3 மகன்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் செயல்படும் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி. இவருடைய மூத்த மகன் நசிரூதின் ஹக்கானி நேற்று இரவு இஸ்லாமாபாத் அருகே உள்ள பராகாஹூ என்ற இடத்தில் மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ஆனால் போலீசார் இந்த சம்பவத்தை உறுதி செய்ய மறுத்து விட்டனர்.
கொல்லப்பட்ட நசிரூதின் ஹக்கானி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைக்கு எதிராகவும், காபூல் நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர். மேலும் ஹக்கானி அமைப்பின் முக்கிய பேச்சுவார்த்தை பணிகளில் ஈடுபட்டு வந்தவர். முன்பு வடக்கு வசிரீஸ்தான் பகுதி ஹக்கானி தீவிரவாத இயக்கத்தில் அதிக ஈடுபாடு வைத்திருந்தார். ஏற்கனவே ஜலாலுதீனின் 3 மகன்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
Re: உலகச் செய்திகள்!
ரூ.15 லட்சத்துக்கு கற்பை விலை பேசும் பெண்
![உலகச் செய்திகள்! Ladies-9re51](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/ladies-9re51.jpg)
ரஷிய ஏல இணையதளம் மூலம் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது கற்பை ரூ.15 லட்சத்துக்கு (24,600 டாலர்) விலை பேசினார். அவர் தனது பெயரை ஷாதுனிகா என்று குறிப்பிட்டு, பணம் அவசரமாக தேவைப்படுகிறது. அதனால் என்னுடைய உயர் மதிப்பிற்குரிய பொருளை (கன்னித்தன்மை) விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
அதோடு தன்னுடைய கன்னித்தன்மை குறித்த சான்றிதழுடன் ஓட்டலில் வந்து சந்திப்பேன் என்று முகவரியும் பதிவு செய்திருக்கிறார்.
இந்த அழைப்பை ஏற்று ஒருவர் ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் (27,700 டாலர்) தருவதாக பேரமும் பேசி விட்டார்.
இது பற்றி இந்த இளம்பெண் வசிக்கும் பகுதி போலீசார் கூறுகையில், அவர் சட்டத்தை மீறியதாக தெரியவில்லை என்கிறார்கள்.
![உலகச் செய்திகள்! Ladies-9re51](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/ladies-9re51.jpg)
ரஷிய ஏல இணையதளம் மூலம் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது கற்பை ரூ.15 லட்சத்துக்கு (24,600 டாலர்) விலை பேசினார். அவர் தனது பெயரை ஷாதுனிகா என்று குறிப்பிட்டு, பணம் அவசரமாக தேவைப்படுகிறது. அதனால் என்னுடைய உயர் மதிப்பிற்குரிய பொருளை (கன்னித்தன்மை) விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
அதோடு தன்னுடைய கன்னித்தன்மை குறித்த சான்றிதழுடன் ஓட்டலில் வந்து சந்திப்பேன் என்று முகவரியும் பதிவு செய்திருக்கிறார்.
இந்த அழைப்பை ஏற்று ஒருவர் ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் (27,700 டாலர்) தருவதாக பேரமும் பேசி விட்டார்.
இது பற்றி இந்த இளம்பெண் வசிக்கும் பகுதி போலீசார் கூறுகையில், அவர் சட்டத்தை மீறியதாக தெரியவில்லை என்கிறார்கள்.
Re: உலகச் செய்திகள்!
காரில் சென்ற போது ஈரான் மந்திரி சுட்டுக்கொலை
![உலகச் செய்திகள்! Safdar-Rahmat-1110Abadi](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/Safdar-Rahmat-1110Abadi.jpg)
ஈரான் நாட்டில் தொழில்துறை துணை மந்திரியாக இருந்தவர் சப்தார் ரஹ்மத் அபாடி. இவர் நேற்று இரவு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றான். அதில் அவரது தலை, மார்பில் குண்டுகள் துளைக்க அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மந்திரி பயணம் செய்த காருக்குள் 2 குண்டுகளை கண்டெடுத்தனர். மந்திரியுடன் காரில் சென்ற நபரே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
![உலகச் செய்திகள்! Safdar-Rahmat-1110Abadi](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/Safdar-Rahmat-1110Abadi.jpg)
ஈரான் நாட்டில் தொழில்துறை துணை மந்திரியாக இருந்தவர் சப்தார் ரஹ்மத் அபாடி. இவர் நேற்று இரவு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றான். அதில் அவரது தலை, மார்பில் குண்டுகள் துளைக்க அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மந்திரி பயணம் செய்த காருக்குள் 2 குண்டுகளை கண்டெடுத்தனர். மந்திரியுடன் காரில் சென்ற நபரே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Re: உலகச் செய்திகள்!
![உலகச் செய்திகள்! 73LB1mrcS6mD8lXcEKEN+Screen+shot+2013-11-05+at+10.03.44+AM](https://www.filepicker.io/api/file/73LB1mrcS6mD8lXcEKEN+Screen+shot+2013-11-05+at+10.03.44+AM.png)
-
கன்னித்தன்மை ஏலம் அயல்நாட்டில் சகஜமான ஒன்றாகி
விட்டது...!
-
ஏற்கனவே இம்மாதிரி வந்த செய்திகள்:
-
For example, 22-year-old American Natalie Dylan
has netted a $3.7 million offer in 2009 and
an Italian model was selling hers for 1m Euros in 2008.
This 18-year-old girl Lera is making headlines in Russia
right now after she posted these....
-
![உலகச் செய்திகள்! UBI3ovrGTde7cOOZW2QM+lera_01](https://www.filepicker.io/api/file/UBI3ovrGTde7cOOZW2QM+lera_01.jpg)
Read more at http://acidcow.com/girls/13578-russian-girl-wants-to-sell-her-virginity-for-5000.html#50o2eX066kc9OOuB.99
Re: உலகச் செய்திகள்!
கம்போடியாவில் சிவன் கோவில் அருகே உள்ள நிலம்: தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
பாங்காக்: தாய்லாந்து-கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள, 9ம் நூற்றாண்டை சேர்ந்த, சிவன் கோவில் அருகே உள்ள நிலம், கம்போடியா நாட்டுக்கே சொந்தமானது'என, சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கம்போடியா நாட்டில், அங்கோர்வாட் என்ற இடத்தில் மிகப்பெரிய இந்துக்கோவில் உள்ளது. இந்த கோவிலை, "யுனெஸ்கோ' அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதே போல, கம்போடியாவில், ஐந்து, இந்து கோவில்கள் உள்ளன. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில், ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த, சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி சண்டையிட்டு கொண்டன. 1962ம் ஆண்டிலிருந்து, இந்த பிரச்னை நீடித்தது.
இதனால், இப்பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பு கருதி வெளியேறி விட்டனர். இருநாட்டு ராணுவமும், கோவிலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டன. இந்த வழக்கை, சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது. இரு நாட்டு ராணுவமும், இந்த கோவிலிருந்து வெளியேறும் படி, சர்வதேச நீதிமன்றம், கடந்த ஆண்டு, உத்தரவிட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். "இந்த சிவன் கோவில், கம்போடியாவுக்கு தான் சொந்தம்' என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், சிவன் கோவிலையொட்டியுள்ள, 4.6 சதுர கி.மீ.,பரப்பளவுள்ள இடத்துக்கு, தாய்லாந்து தொடர்ந்து உரிமை கோரியது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய சர்வதேச நீதிமன்றம், "சர்ச்சைக்குரிய,4.6 சதுர கி.மீ., பரப்பளவுள்ள நிலமும், கம்போடியாவுக்கே சொந்தம்' என, உத்தரவிட்டுள்ளது.
பாங்காக்: தாய்லாந்து-கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள, 9ம் நூற்றாண்டை சேர்ந்த, சிவன் கோவில் அருகே உள்ள நிலம், கம்போடியா நாட்டுக்கே சொந்தமானது'என, சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கம்போடியா நாட்டில், அங்கோர்வாட் என்ற இடத்தில் மிகப்பெரிய இந்துக்கோவில் உள்ளது. இந்த கோவிலை, "யுனெஸ்கோ' அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதே போல, கம்போடியாவில், ஐந்து, இந்து கோவில்கள் உள்ளன. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில், ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த, சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி சண்டையிட்டு கொண்டன. 1962ம் ஆண்டிலிருந்து, இந்த பிரச்னை நீடித்தது.
இதனால், இப்பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பு கருதி வெளியேறி விட்டனர். இருநாட்டு ராணுவமும், கோவிலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டன. இந்த வழக்கை, சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது. இரு நாட்டு ராணுவமும், இந்த கோவிலிருந்து வெளியேறும் படி, சர்வதேச நீதிமன்றம், கடந்த ஆண்டு, உத்தரவிட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். "இந்த சிவன் கோவில், கம்போடியாவுக்கு தான் சொந்தம்' என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், சிவன் கோவிலையொட்டியுள்ள, 4.6 சதுர கி.மீ.,பரப்பளவுள்ள இடத்துக்கு, தாய்லாந்து தொடர்ந்து உரிமை கோரியது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய சர்வதேச நீதிமன்றம், "சர்ச்சைக்குரிய,4.6 சதுர கி.மீ., பரப்பளவுள்ள நிலமும், கம்போடியாவுக்கே சொந்தம்' என, உத்தரவிட்டுள்ளது.
Re: உலகச் செய்திகள்!
புயலால் சிறை சேதம்: கைதிகள் தப்பி ஓட்டம்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில், புயலில் சேதமடைந்த சிறையிலிருந்து, கைதிகள் தப்பி ஓடி விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், சமீபத்தில் தாக்கிய பயங்கர புயலால், 10 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. எதிர்பார்த்ததை விட, 350 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் காற்றால், லெய்டி என்ற மாகாணம், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாண தலைநகர் டக்ளோபானில், உள்ள சிறையும், புயலால் சேதமடைந்தது. இதை பயன்படுத்தி, சிறையில் இருந்த, 600 கைதிகளில், பெரும்பாலானவர்கள் தப்பி ஓடி விட்டனர். தப்பிய கைதிகளை தடுக்கும் முயற்சியில், அங்கிருந்த போலீசார், துப்பாக்கியால் சுட்டும் பலனில்லை. புயல் நிவாரண பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளதால், தப்பிய கைதிகளை தேட முடியாத நிலை உள்ளது. "புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ள நகரில், தப்பிய கைதிகள் எங்கு சென்று தங்குவார்கள்; எதை சாப்பிடுவார்கள்'என, கவலைப்படுகிறார் சிறை அதிகாரி.
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில், புயலில் சேதமடைந்த சிறையிலிருந்து, கைதிகள் தப்பி ஓடி விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், சமீபத்தில் தாக்கிய பயங்கர புயலால், 10 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. எதிர்பார்த்ததை விட, 350 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் காற்றால், லெய்டி என்ற மாகாணம், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாண தலைநகர் டக்ளோபானில், உள்ள சிறையும், புயலால் சேதமடைந்தது. இதை பயன்படுத்தி, சிறையில் இருந்த, 600 கைதிகளில், பெரும்பாலானவர்கள் தப்பி ஓடி விட்டனர். தப்பிய கைதிகளை தடுக்கும் முயற்சியில், அங்கிருந்த போலீசார், துப்பாக்கியால் சுட்டும் பலனில்லை. புயல் நிவாரண பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளதால், தப்பிய கைதிகளை தேட முடியாத நிலை உள்ளது. "புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ள நகரில், தப்பிய கைதிகள் எங்கு சென்று தங்குவார்கள்; எதை சாப்பிடுவார்கள்'என, கவலைப்படுகிறார் சிறை அதிகாரி.
Re: உலகச் செய்திகள்!
பீர் பாட்டிலில் லட்சுமி, விநாயகர் படம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், பீர் பாட்டிலில், விநாயகர் மற்றும் லட்சுமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளதற்கு, அந்நாட்டின், இந்திய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து கடவுள்களின் படங்களை, பல்வேறு பொருட்களின் மீது, வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சிடுவது, அடிக்கடி சர்ச்சை ஏற்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் நீச்சல் உடையில், லட்சுமி படம் அச்சிடப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள, மதுபான நிறுவனம், பீர் பாட்டிலில், விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இதற்கு, ஆஸ்திரேலிய இந்தியர் சங்க தலைவர், யாது சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மலிவான விளம்பர நோக்கோடு, இந்து கடவுள்களின் படங்களை, பீர் கம்பெனி அச்சிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்து கடவுள்களை கேலிக்குரிய பொருளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. பீர் பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள இந்த படங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, யாது சிங் கூறினார். பீர் நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகையில், "இந்திய உணவு, சுவை கொண்ட பானம் என்பதால் தான், அந்த நாட்டின் கடவுள்களின் பெயர்களை அச்சிட்டோம்; கடவுள்களை அவமதிக்கும் நோக்கோடு இதை வெளியிடவில்லை' என்றனர்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், பீர் பாட்டிலில், விநாயகர் மற்றும் லட்சுமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளதற்கு, அந்நாட்டின், இந்திய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து கடவுள்களின் படங்களை, பல்வேறு பொருட்களின் மீது, வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சிடுவது, அடிக்கடி சர்ச்சை ஏற்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் நீச்சல் உடையில், லட்சுமி படம் அச்சிடப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள, மதுபான நிறுவனம், பீர் பாட்டிலில், விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இதற்கு, ஆஸ்திரேலிய இந்தியர் சங்க தலைவர், யாது சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மலிவான விளம்பர நோக்கோடு, இந்து கடவுள்களின் படங்களை, பீர் கம்பெனி அச்சிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்து கடவுள்களை கேலிக்குரிய பொருளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. பீர் பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள இந்த படங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, யாது சிங் கூறினார். பீர் நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகையில், "இந்திய உணவு, சுவை கொண்ட பானம் என்பதால் தான், அந்த நாட்டின் கடவுள்களின் பெயர்களை அச்சிட்டோம்; கடவுள்களை அவமதிக்கும் நோக்கோடு இதை வெளியிடவில்லை' என்றனர்.
Re: உலகச் செய்திகள்!
தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தர்ணா
இலங்கையில் நடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் சிங்கள ராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு தமிழர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் அவர்கள் அபகரித்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இல்லாத வேளையில், ராணுவத்தினர் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டின் முதல் பிரதமராக யாழ்ப்பாணம் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை ராணுவத்தினர் நிறுத்தக்கோரி நூற்றுக்கணக்கானோர் யாழ்ப்பாணத்தில் 5 நாள் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து வடக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவுன்சிலர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியதாவது:-
யாழ்ப்பாணம் வடக்கு செக்டர் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்கள் அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள வீடுகளை ராணுவம் இடித்து அழித்து வருகிறது. இப்பகுதியில் தமிழர்களின் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிக்கும் ராணுவத்தின் நடவடிக்கையை நிறுத்த வேண்டி நாங்கள் இங்கு 5 நாள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம். நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் சிலரும் நீதிமன்றத்தில் இதுகுறித்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையில் நடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் சிங்கள ராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு தமிழர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் அவர்கள் அபகரித்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இல்லாத வேளையில், ராணுவத்தினர் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டின் முதல் பிரதமராக யாழ்ப்பாணம் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை ராணுவத்தினர் நிறுத்தக்கோரி நூற்றுக்கணக்கானோர் யாழ்ப்பாணத்தில் 5 நாள் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து வடக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவுன்சிலர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியதாவது:-
யாழ்ப்பாணம் வடக்கு செக்டர் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்கள் அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள வீடுகளை ராணுவம் இடித்து அழித்து வருகிறது. இப்பகுதியில் தமிழர்களின் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிக்கும் ராணுவத்தின் நடவடிக்கையை நிறுத்த வேண்டி நாங்கள் இங்கு 5 நாள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம். நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் சிலரும் நீதிமன்றத்தில் இதுகுறித்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Page 1 of 81 • 1, 2, 3 ... 41 ... 81
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 1 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|