ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்து கொள்வது ஏன்?

4 posters

Go down

திருமணம் செய்து கொள்வது ஏன்? Empty திருமணம் செய்து கொள்வது ஏன்?

Post by சிவா Sat Nov 02, 2013 1:57 am

மணம் என்ற சொல்லுக்கு வாசனை என்பது பொருள். இது திருமணம் என்பதனால் மற்ற மணங்கள் எல்லாம் வெறும் மணம் என்று ஆகிவிடும். அனைத்து திருமணங்களும் பெண்கள் பெயரில்தான் வரும். வள்ளி திருமணம், சீதா கல்யாணம், பார்வதி திருமணம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், திரௌபதி கல்யாணம் என்று பெண்கள் முன் வைத்தே திருமணங்கள் நடைபெறுகின்றன.

பெண்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

திருமணம் செய்து கொள்வது என்பது மக்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல. வருகின்ற விருந்தினரைப் பேணுவதற்காகவும்தான் என்கின்றன தமிழ் இலக்கியங்கள்.

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு' என்கிறார் வள்ளுவர் பெருந்தகை.

ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனியாக இருந்தால் அவர்களிடம் உணவுக்குப் போக மாட்டார்கள். "பெண்கள் தனித்திருக்கின்ற இடத்தில் நாம் இருந்து உணவு செய்ய மாட்டோம்' என்று திருவெண்காட்டு நங்கையிடம் பைரவ அம்சமாக வந்து சிவபெருமான் கூறியதாகவும் பின்னர் கணபதீச்சரம் கோயிலில் ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார் என்றும் பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

அன்பே வடிவான கண்ணகி, கோவலன் மாதவி வீட்டிலிருந்து மனம் மாறி வரும்பொழுது கணவனது காலில் விழுந்து, அழுது தொழுது, "செல்வம் போனதென்று நான் சிந்தை நோகவில்லை. தாங்கள் என் அருகில் இல்லாமையால் நம் வீட்டுக்கு விருந்தாளிகள், ஞானிகள், பெரியவர்கள் எவரும் வரவில்லை. இத்தனைக் காலம் நம் வீட்டில் விருந்தோம்பல் நடக்கவில்லை' என்று கலங்கிச் சொல்வது போல் இளங்கோவடிகள்.

"அறவோர்க் களித்தாலும் அந்தனர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை'

என்று சிலப்பதிகரத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்வது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என்பது விளங்குகிறது.

கருத்தொருமிப்பு - திருமண வாழ்வில் முக்கியம்!

கணவனும் மனைவியும் ஒன்றையே நினைக்க வேண்டும். ஒன்றையே செய்ய வேண்டும். காட்சி எதுவாயினும், இரண்டு கண்களும் ஒன்றையேதான் பார்க்கும். ஒரு கண் ஒரு பக்கமும் மற்றொரு கண் இன்னொரு பக்கமும் பார்க்க முடியாது. அது போல, கணவனும் மனைவியும் ஒன்றையே நினைத்து ஒன்றையே செய்ய வேண்டும்.

"காதல் மலையாளும் காதலனும் மாறின்றித்/தீதில் ஒரு கருமம் செய்பவே - ஓதுகலை/எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல் தான்/கண்ணிரண்டும் ஒன்றையே காண்'

இவ்வாறாக நன்னெறி கருத்தொற்றுமைக்கு இலக்கணம் சொல்கிறது.

இன்றைய காலகட்டங்களில் கணவன், மனைவியைம், மனைவி கணவனையும் அடக்கி ஆள எண்ணுகிறார்கள். இதனால் பிரிவினை அதிகமாகிறது. கணவன் மனைவிக்கும் அந்நோன்யம் வர வேண்டுமானால், ஒருவருக்கொருவர் அன்பினால் அரவணைக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இருவருக்குமிடையே பாசத்தோடு கூடிய நேசமும் இருக்க வேண்டும். மனைவி ஒரு சிறு தவறு செய்தால் கூட அதைப் பெரிது படுத்தாமல், "நீ பெரிய இடத்துப் பெண், நீ மனைவியாக வருவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ? நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன்' என்பது போன்ற இனிய வார்த்தைகள் பேசி மனைவியின் உள்ளத்தைத் தன்பால் ஈர்ப்பது கணவனின் இல்லறக் கடமைகளுள் இன்றையமையாதது. அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த இல்லத்தரசியை குடும்பத் தலைவன் ஆனுசரித்து நடக்க வேண்டும். "காதலில் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்' என்று ஒளவையார் பாடுகிறார். எனவே கருத்தொருமிப்பு அவசியமானது.

திருமணச் சடங்கில் ஹோமம் வளர்ப்பது ஏன்?

திருமணச் சடங்குகளில் ஹோமம் வளர்ப்பது மிக முக்கியம். அனைத்துக்கு அக்னியே சாட்சி. சீதா பிராட்டியார், "நீ உலகுக்கொரு சாட்சி' என்று கூறுகிறார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லை என்றால் உயிர் நிலை பெற முடியாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஹோமப்புகை ஆயுளை வளர்க்கும். இல்லறத்தை நல்லறமாக்கும்.

- மு ஜெயலட்சுமி, சென்னை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணம் செய்து கொள்வது ஏன்? Empty Re: திருமணம் செய்து கொள்வது ஏன்?

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 02, 2013 2:10 pm

மனைவி கையில மாட்டிக் கிட்டு படாத பாடு படத்தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

திருமணம் செய்து கொள்வது ஏன்? Empty Re: திருமணம் செய்து கொள்வது ஏன்?

Post by பாலாஜி Sat Nov 02, 2013 2:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:மனைவி கையில மாட்டிக் கிட்டு படாத பாடு படத்தான்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருமணம் செய்து கொள்வது ஏன்? Empty Re: திருமணம் செய்து கொள்வது ஏன்?

Post by Muthumohamed Sat Nov 02, 2013 7:15 pm

கண்டிப்பா செய்து ஆகணும்



திருமணம் செய்து கொள்வது ஏன்? Mதிருமணம் செய்து கொள்வது ஏன்? Uதிருமணம் செய்து கொள்வது ஏன்? Tதிருமணம் செய்து கொள்வது ஏன்? Hதிருமணம் செய்து கொள்வது ஏன்? Uதிருமணம் செய்து கொள்வது ஏன்? Mதிருமணம் செய்து கொள்வது ஏன்? Oதிருமணம் செய்து கொள்வது ஏன்? Hதிருமணம் செய்து கொள்வது ஏன்? Aதிருமணம் செய்து கொள்வது ஏன்? Mதிருமணம் செய்து கொள்வது ஏன்? Eதிருமணம் செய்து கொள்வது ஏன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

திருமணம் செய்து கொள்வது ஏன்? Empty Re: திருமணம் செய்து கொள்வது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum