Latest topics
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சுby ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள்
2 posters
Page 1 of 1
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள்
கையறுநிலை
அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா எனும் பாடல் ஒரு திரைப்படத்தில் சோகமயமான சூழலிலும் பாடப்படும் இந்தப்பாடல் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பிரதிபலிப்பு.
“அற்றைத்திங்கள் அவ்வெண்ணி லவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும்
பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம்
எந்தையும் இலமே” (112)
இந்தப்பாடல் பாரி மகளிர் பாடியது. இது கையறுநிலை எனும் துறையைச் சேர்ந்தது.
கடையேழு வள்ளல்களில் ஒருவனாம் பாரியை மூவேந்தர்களும் சேர்ந்து போர் செய்து வீழ்த்தினர்.(!) அவனது புதல்விகள் இருவரும் புலவர் கபிலரின் பாதுகாப்பில் இருந்தனர். அவர் தந்தையைப் போல் சிந்தித்தார் செயல்பட்டார். அவர்களுக்கு மணம் செய்து வைக்க முயற்சித்தார். அதை தமது கடமையாக எண்ணினார் கபிலர். அவரது பாடல்கள் பல கையறு நிலைப்பாடல்தான்.
பொதுவாக புலவர்கள் மன்னர்களைப் பாடி பரிசில்கள் பெற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். கைகொடுக்கும் வள்ளல்கள். புரவலர்கள். அவர்கள் இல்லை எனில் அதாவது இறந்துபடின் புலவர்கள் நிலை என்னாகும்? நமது வாழ்வுக்கு என்ன செய்வது என்று கையைப்பிசைந்து கொண்டு நிற்கும் ஆதரவற்ற நிலைதான் கையறுநிலை.
புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் ‘பாராமலே’ கொண்டிருந்த நட்பு பார் போற்றும் தன்மையது. சோழன் வடக்குநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்க நினைத்தபோது பிசிராந்தையாரும் வருவார். அவருக்கும் இடம் போட்டு வையுங்கள் என்று கூறினானாம். அவ்வாறே பிசிராந்தையாரும் எவ்விதப் பிசிறுமின்றி நடந்து கொண்டார் என்பதை படிக்கும் போதே நம் கண்கள் பனிக்கும். அவரைப் போல் இன்னொரு உயிர் நண்பரான உறையூர்ப் பொத்தியார் என்பவரும் வடக்கிருந்தாராம். அவர் பாடியதும் கையறு நிலை பாடல்தான் (புறநானூறு217)” அன்னோனை இழந்த இவ்வுலகம் என்னாவது கொல்? அளியதுதானே!” அத்த கையவனை இழந்த சோழ தேசம் எவ்வாறு துன்பங்களுக்கு இரையாகுமோ? அதுவே இரக்கத்தைத் தருகின்றது என்பது பாடலின் பொருள்.
சோழன், பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்ததை கண்ட கண்ணகனார் பாடிய பாடலும் (218) கையறு நிலையை சேர்ந்ததுதான். இதுபோல நிறைய உண்டு.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை குடவாயில் நல்லாதனார் பாடிய பாடல் பின்வருமாறு கூறுகிறது. ஒல்லையூர் நாட்டிலே இளைய வீரர்கள் கண்ணிசூடாராயினர். வளையணியும் மங்கல மகளிரும் மலர் கொய்யாராயினர். பாணனும் மலர் சூடானாயினன். பாடினியும் மலர் அணியாளாயினள். வலிய வேலோனான சாத்தன் இறந்ததனால், இவ்வாறு யாவரும் நல்லணி துறந்திருக்கும் வேளையிலே முல்லையே நீமட்டும் பூக்கின்றாயோ?
“முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?’’ (புறம் 242)
இவையெல்லாம் மன்னர்கள், வள்ளல்கள், புரவலர்கள் இறந்ததையொட்டிப் பாடியவை. ஆனால் ஒரு மன்னன் தன் மனைவி இறந்ததற்கு இரங்கிப் பாடிய பாடல் படித்திருக்கும் வாய்ப்பு அபூர்வம்.
சேரமான் கோட்டம்பலத்திலே துஞ்சிய மாக்கோதை, அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அதாவது பட்டத்தரசி இறந்துவிட்டாள்.
யாங்குப் பெரிதுஆயினும், நோய்
அளவு எனைத்தே
உயிர் செகுக் கல்லா மதுகைத்து
அன்மையின்
கள்ளிபோகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளை
விறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல்; என் இதன்
பண்பே (புறம் 245)
கள்ளி வளர்ந்த புறங்காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின் கண், அழற் பாயலிலே அவளைக் கிடத்தினேன். அம்மடவாள் போய்விட்டாள். என் துயரம் எவ்வளவு பெரிதாயினும் என் உயிரையும் போக்கி அவளுடன் சேர்க்கும் வலியற்றதாயிற்றே. அவள் இறந்தும் யான் வாழ்கின்றேனே? இதன் பண்பு தான் என்னே? என்று அவளோடு தானும் இணைந்து உயிர்விடவில்லையே எனக் காதலால் வாடுகிறான் சேரமன்னன்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி வழக்கிலே குற்றமுடையவன் தான்தான் எனத் தெரிந்ததும் அரியணையிலிருந்து நிலத்தில் வீழ்ந்து உயிர் விட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அவன் இறந்ததுமே ‘கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்று கூறி அவனது மனைவி கோப்பெருந்தேவி அப்போதே உயிர்விட்டாள் என்றும் அது மேலும் கூறுவதை நாம் அறிந்து இருக்கிறோம் அல்லவா? அந்தக் காட்சிக்கு மாறுதலானது அல்லவா இது.
நன்றி - தீக்கதிர்
செந்தில் முருகன்- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|